...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, June 11, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                 கோடை வெயில் தணிந்து நேற்று முதல் இதமான காற்று -மிதமான மழை என நமது(நெல்லை )  ஊரும் உள்ளமும் குளிர தொடங்கிவிட்டது .வழக்கத்தை விட இந்த ஆண்டு அக்கினி தனது கோர முகத்தை காட்டியிருந்தது .எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு -எல்லாருக்கும் நல்  விடியல் உண்டு என்ற உன்னத கோட்பாட்டின் அடிப்படையில் உறுதியோடு பயணிப்போம் .
                                                    முக்கிய செய்திகள் 
   பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக வளாகத்திற்குள் அலுவலக குடியிருப்பு கட்ட வேண்டும் என்ற நமது கோரிக்கை  
துளிர்க்க ஆரம்பித்துள்ளது .சென்றவாரம் திருச்சியில் இருந்து வந்த AE (CIVIL) அவர்கள் இது குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் .
1.VM சத்திரத்தில் உள்ள குடியிருப்புகளை போல ஊழியர்கள் குடியிருக்காமல் இருந்திடக்கூடாது .இருக்கின்ற சுமார் 40 சென்ட் இடத்தில அடுக்குமாடி திட்டத்தில் சுமார் 40 வீடுகள் என்றால் குறைந்தபட்சம் 50 ஊழியர்களாவது அங்கு குடியிருக்க தயாராகவுள்ளார்கள் என்பதனை உறுதிப்படுத்தவேண்டும் .குடிநீர் பிரச்சினை தட்டுப்பாடில்லாமல் தடையின்றி கிடைத்திட உறுதிப்படுத்திடவேண்டும் போன்ற கருத்துக்களை POSITIVE ஆக  சொல்லிவிட்டு சென்றுள்ளார்கள் .கோட்ட அலுவலகத்தில் இருந்து PROPOSAL சென்றவுடன் நாமும் நமது பங்கிற்கு தீவிர முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்  .
                                     CGHS  திட்டத்தை மூன்று மாவட்டங்களுக்கு விரிவு படுத்த வேண்டும் என்ற நமது புதிய கோரிக்கை எழுந்துள்ளது .ஏன் அதை குறிப்பிட்ட 8 கிலோ மீட்டர் தூரத்திற்குள் சுருக்கவேண்டும் .திருநெல்வேலி கன்னியாகுமரி தூத்துக்குடி மாவட்டங்கள் ( நம்மை பொறுத்தவரை திருநெல்வேலி -நாகர்கோவில் -தூத்துக்குடி -கோவில்பட்டி கோட்டங்கள் ) என விரிவு படுத்தினால் அனேக ஊழியர்கள் மத்தியஅரசு ஓய்வூதியர்கள் பயன்பெற முடியும் .இதையும் முக்கிய கோரிக்கையாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பாக எடுக்கவிருக்கிறோம் .
                                                  இதர செய்திகள் 
பணியின் போது GDS ஊழியர்கள் இறந்தால் அவர்களது குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு வேலை விரைந்து வழங்கிட நமது CPMG அலுவலகம் 14.04.2019 அன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது .அதன்படி இறந்த ஊழியர்களின் குடும்பத்தில் உள்ள தகுதி உள்ள ஒருவருக்கு 15 நாட்களுக்குள் காலியாக உள்ள இடத்தை குறிப்பிட்டு அவர்களிடம் விருப்பமனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது .
         
                     நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா  கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment