...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, June 19, 2019

நெல்லையில் எழுச்சியோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் --
இளையோர் முதல் முதியோர் என ஆர்வத்தோடு கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் --கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
 ஊதியம் -ஓய்வூதியம் என Cycle Payment மற்றும் TA -GPF -CEA என 
OFF CYCLE PAYMENT இவைகள் கிடைப்பதில் நிலவும் காலதாமதத்தை கண்டித்து அஞ்சல் வாரியத்தின் கவனத்தை ஈர்க்க நாடுமுழுவதிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மாபெரும் வெற்றியை தந்தது .இனியாவது நிர்வாகம் சாக்கு போக்கு காரணங்களை சொல்லாமல் எல்லாம் உரிய நேரத்தில் கிடைத்திட வழி செய்திட வேண்டும் .இதனை ஒட்டி நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் T.அழகுமுத்து கோட்டத்தலைவர் அஞ்சல் மூன்று தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் அஞ்சல் நான்கு தோழர் G.கிருஷ்ணன் பொருளாளர் பென்சனர் சங்கம் கூட்டு தலைமை ஏற்று நடத்தி தந்தார்கள் .ஆர்ப்பாட்டத்திற்கு BSNL ஓய்வூதியர் சங்கத்தில் இருந்து தோழர் சம்மன்சு மற்றும் S.அருணாச்சலம் ஓய்வூதியர் சங்கத்தில் இருந்து தோழர்கள் உதவி செயலர் விஜயராஜா செயலர் சண்முகசுந்தரராஜா மற்றும் கிருஷ்ணன் அவர்களும் AIGDSU சங்க மாநில அமைப்பு செயலர் தோழர் ஞானபாலசிங் அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் SK .பாட்சா தோழர் புஷ்பா கரன் அவர்களும் அஞ்சல் மூன்றின் சார்பாக கோட்டத்தலைவர் T.அழகுமுத்து செயல்தலைவர் தோழர் N.கண்ணன் தோழர் வண்ணமுத்து மற்றும் ஜேக்கப் ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .இறுதியாக தோழர் சீனிவாசசொக்கலிங்கம் கோட்டத்தலைவர் நன்றி கூற ஆர்ப்பாட்டம் இனிதே நிறைவுற்றது .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                  

0 comments:

Post a Comment