...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 14, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                       முக்கிய செய்திகள் 
*நமது கோட்டத்தில் புதியதாக தபால்காரராக தேர்ச்சிபெற்று பயிற்சியில் இருக்கும் ஐந்து ஊழியர்களுக்குஅவர்களுக்கான பணி உத்தரவுகள் இன்று  வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 
* சுழற்சி முறையில் பணிக்கு வராத ஊழியர்களிடம் முதலில் விடுப்பு விண்ணப்பிக்கவும் இரண்டாம் முறையும் பணிக்கு வராத ஊழியர்களுக்கு விதி 16 யின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் மும்பை மண்டல அதிகாரி உத்தரவிட்டுள்ளார் .
*அஞ்சல் துறையில் Group A and Group B (Gazetted) அதிகாரிகளின் இடமாறுதல்களை மறு உத்தரவு வரை நிறுத்திவைத்துள்ள நிலையில் மத்திய அரசன் Ministry of Housing and Urban Affairs  துறை நிர்வாக காரணங்களை தவிர இதர ஊழியர்க்ளுக்கு சுழல் மாறுதல் உத்தரவை ஏப்ரல் 2021 வரை நிறுத்திவைத்துள்ளது ..
*நாட்டில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும் அதனால் அஞ்சலகங்கள் தங்களது வேலைநேரத்தை வழக்கம்போல் செயல்படுத்தவும் கடலூர் கோட்ட அதிகாரி உத்தரவை பிறப்பித்துள்ளார் 
* நான்கு ஊழியர்களுக்கு கொரானா பாதிப்பினால் மூடப்பட்ட சென்னை திருவல்லிக்கேணி அஞ்சலக பட்டுவாடா மயிலாப்பூர் அஞ்சலகத்தில் வைத்து இயக்கப்படுவதாக சென்னை மண்டல அதிகாரி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள் .
*பொருளாதார நெருக்கடி என்ற போர்வையில் தொழிற்சாலைகளுக்கு  வேலைநேரத்தை அதிகரிக்கும் உ.பி மற்றும் மத்திய பிரதேச அரசுக்கு  வெகுஜனமேடைகளின் கூட்டமைப்பு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T .புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு -நெல்லை 

0 comments:

Post a Comment