...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, May 23, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                நெல்லை கோட்ட செய்திகள் 
*நேற்று சில நண்பர்களிடம் இருந்து ஓரிரு  செய்திகள் வந்தன .தபால்காரர் தோழர்களிடம் இன்று நீங்கள் யாரும் பட்டுவாடா செய்யவேண்டாம் தபால்களை கட்டிவையுங்கள் .IPPB கணக்கு தொடங்கினால் போதும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்க பட்டதாம் .உண்மையா ? பழையகாலங்களில் சில அதிகாரிகள் இப்படி சொன்னதுண்டு நீ OFFICE யை திறந்தாலும் சரி திறக்காவிட்டாலும் சரி உனக்கு நிர்ணயிக்கப்பட்ட கணக்கை பிடி அப்புறம் கணக்கை முடி ........அன்று SB க்காக மல்லுக்கட்டியவர்கள் இன்று IPPB க்காக .................
*இன்றைய காலகட்டத்தில் ஊழியர்களுக்கு இலாகா அடையாளஅட்டை என்பது அவசியமானது .பல ஊழியர்கள் அடையாளஅட்டை வேண்டும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .சிலர் விண்ணப்பித்தாலும் அவைகள் நிர்வாகத்தால் திருப்பப்படுவதாக கூறுகிறார்கள் .ஆகவே கோட்ட நிர்வாகமே ஒரு மாதிரி அடையாளஅட்டையை வெளியிட்டால் ஊழியர்கள் அதன் அடிப்படையில் அடையாள அட்டை விண்ணப்பிக்க உதவியாக இருக்கும் .
*நேற்றைய கருப்பு அட்டை இயக்கத்தில் பங்கேற்ற தோழர்கள் /தோழியர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .பல அலுவலகங்களில் இருந்து தங்களுக்கு பேட்ஜ் வரவில்லை என வருத்தப்பட்டார்கள் .இனி வருங்காலங்களில் இந்த குறைகள் முற்றிலும் களையப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூண்று நெல்லை 
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு 

0 comments:

Post a Comment