...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 18, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                        முக்கிய செய்திகள் 
*மதுரை அஞ்சல் பயிற்சி மையத்தில் Google Meet Web application மூலம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடக்கம் .கோட்டங்கள் தங்களது கோட்டத்தின் சார்பாக பயிற்சிக்கு ஊழியர்களை பரிந்துரைக்கும் .அதன் அடிப்படையில் அந்த ஊழியர் தனது செல் அல்லது லேப்டாப் 
   உதவியுடன்      Google Meet Web application  என்கின்ற செயலியை பதிவிறக்கம் செய்து விட்டு பயிற்சியில் பங்கேற்கவேண்டும் .
 முதலாவதாக இன்று SB CLAIM குறித்த பயிற்சிகள் நடப்பதாகவும் அதற்காக ஒரு கோட்ட அலுவலக ஊழியர் NOMINATE செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது  .
*ஊரடங்கிற்கு இடையிலேயும் மத்திய அரசு தனது தனியார்மய கொள்கையை அனைத்துத்துறைகளிலும் அமுல்படுத்திட துடிக்கிறது .இது குறித்து மத்திய அரசுஊழியர்கள் மகா சம்மேளனம் விடுத்த அறிக்கையில் வருகிற 22.05.2020 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்திட அழைப்புவிடுத்துள்ளது .
*IPPB கணக்குகளை பிடிக்கச்சொல்லி நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடிகளை கண்டித்து நமது சம்மேளனம் 16.05.2020 அன்று நமது இலாகா முதல்வர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தலமட்ட அதிகாரிகள் IPPB AEPS என்கின்ற பெயரில் ஊழியர்களை துன்புறுத்தும் போக்கை கைவிடவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது ..
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
T.புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு -நெல்லை 

0 comments:

Post a Comment