...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, May 29, 2020

தோழியர் P குமாரி   DY போஸ்ட்மாஸ்டர் & தலைவர் NFPE NELLAI மகிளா கமிட்டி அவர்களின் பணிநிறைவு விழா

அன்றைய அஞ்சல் துறையின் 
அடிமைகளின் மற்றொருபெயர் RTP 
இன்றைய ED களைவிட 
எந்த விதத்திலும்  உயர்ந்தவர் இல்லை என்ற 
உத்தரவத்தோடு பணிக்கு அழைக்கப்பட்டவர்களுக்கு 
வைத்த பட்டப்பெயர் தான் அது 

தினக்கூலிக்காக கையேந்திய 
தொழிலாளிகளில் கொஞ்சம் 
வசதியானவர்  இவர்கள் 
அந்த வரிசையில் 
அவதரித்த அங்காள அம்மன் தான் 
எங்கள் குமாரி 

வெண்கல குரலும் 
வெளிர் சிரிப்புகள் மட்டுமல்ல 
இவரின் அணிகலன்கள் 

வெறும் சிரிப்புகளை வைத்தே 
அடையாளம் காணப்பட்ட நாட்களில் 
அவரின் சிரிப்பில் அர்த்தம் இருந்தது 
அது அழகின் சிரிப்பை விட 
அர்த்தமுள்ளது 

RTP என்றால் பேசக்கூடாது 
அலுவலகத்தில் சுதந்திரமாக திரிய கூடாது 
நிரந்தரம் குறித்து கேட்க கூடாது 
கொடுப்பதை வாங்கி கொள் -என்ற 
கருப்பு சட்டத்திற்கு 
எதிராக போராடிய பேரியக்கத்தில் 
அப்பொழுதே பங்கேற்றவர் 

இந்த சூழலில் தான் -தென்காசியில் இருந்து 
தினமும் வந்துசென்றதில் ஏற்பட்ட தாமதத்திற்காக 
கோபப்பட்ட அதிகாரியின்  கொடுமையை எதிர்த்து 
கொள்கை  முழக்கம் உங்களுக்காக ஒலித்தது 

அதன் பின்புதான் 
உழைக்கும் பெண்களுக்காக -ஒரு இயக்கம் 
நெல்லையில் இருக்கிறதென்றால் அதன் பெயர் 
NFPE என பின்னாளில் பேசப்பட்டது 
இன்னாளிளும் பேசப்படுகிறது 


அடுத்து வந்த மருத்துவ விடுப்பு போராடத்திலும் 
இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் நீங்களும் ஒருவர் 
ஆறுதல் சொல்ல சென்ற தலைவர்களுக்கோ பேரதிர்ச்சி 
அதே சிரிப்பு அதே உறுதி 
அதே துணிவு அதே அதிரவைக்கும் குரல் 

இந்த பின்னணியில் தான் 
NELLAI NFPE யின் மகிளா கமிட்டி தலைவர் 
மாநாடுகளில் எங்களுக்கான ஆதரவு 
போராட்ட காலங்களில் அபார பங்கேற்பு 


அ ச்சம் மடம் நாணம் தவிர்த்து -
மிச்சமிருந்த தயக்கத்தை தளர்த்தி 
தோழியர்களை ஓரணியில் திரட்டியவரே !
ஆண்டுக்கொருமுறை சங்கம் மாற சொல்லி 
வந்தவரை 
வந்தவழி வரை விரட்டியவரே !அவருக்கும் அவர் 
வந்த வழியின் வரலாற்றை புகட்டியவரே !

கோட்ட அலுவலகத்தில் பணியாற்றினாலும் 
தலைமை அஞ்சலகத்தில் இருந்தாலும் 
போராட்டதிற்கு  தலைமையேற்ற எங்கள் 
ஜான்சி ராணி -ராணி மங்கம்மாள்   நீ 

அன்றுவந்த சோதனை இன்றும் வந்தது 
நல்லெண்ணம் கொண்ட அதிகாரிகளால் 
நன்மையே வந்தது 
அச்சம் இல்லா அலட்சிய பார்வை 
இன்றும் நின்றது 

எவரெவர் ஓய்வு பெற்றாலும் வழக்கமாக 
சொல்லும் வார்த்தை வெற்றிடம் உண்டு என்று 
சத்தியமாக சொல்லுகிறோம் 
இங்கு வெற்றிடம் இல்லை
 வெற்றியின் இடம் பிறந்திருக்கிறது 
மகிளா கமிட்டி அல்ல -
மகளிர் ராணுவ பிரிவே -இங்கு 
மலர்ந்திருக்கிறது -வளர்ந்திருக்கிறது 

தோழியர்களை -இளந்தோழர்களை 
உற்சாக படுத்திய 
உருவாக்கிய எங்கள் குமாரியே 
உங்கள் பணி ஓய்வு காலங்கள் சிறக்க 
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் 
                                  நன்றி 
                                                             தோழமையுடன் 
                                                                SK ஜேக்கப் ராஜ் 
                                                                கோட்ட செயலர் 

















1 comment:

  1. Have a nice day.
    Madam KUMARY-Have a happy and peaceful retirement life.She is a woman captain in postal employees
    @NFPE TIRUNELVELI.
    K.PONNURAJ
    Retired P.A.TIRUNELVELI.H.O.
    30-5-20

    ReplyDelete