...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 20, 2015

வேலை செய்யும் ஊழியர்களுக்கு மேலும் வேலையை கொடு ! 
வேலை செய்யாத ஊழியர்களுக்கு சம்பளத்தை கொடு !

       
 இந்த வாக்கியம் அஞ்சல் துறையில் பிரசித்தி பெற்ற ஒன்று .
இன்று அஞ்சல் துறையில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் நாம் முதலாளிகள் கீழ் வேலை செய்யும் தொழிலாளியா என எண்ண தோன்றுகிறது .

         உதாரனமாக நமது நெல்லை கோட்டத்தில் எழுத்தர்கள் / தபால் காரர்கள் /GDS ஊழியர்கள் இவர்களுக்கு இலக்குகளை நிர்ணயித்து அரைமணி நேரத்திற்கு ஒரு email அனுப்பி உங்கள் TARGET என்னவாயிற்று ?என்று கேள்வி மேல் கேள்வி 

   தபால் காரர்கள் 100 SB கணக்குகள் RPLI 10 பாலிசிகள் (தலா 5  லட்சம்  )

 எழுத்தர்களும் குறிப்பாக SPM தோழர்கள் 300 SB கணக்குகள் ,BPM தோழர்கள் தலா 100 கணக்குகள் பிடித்து தர வேண்டுமாம் 

         நடப்பு நிதி ஆண்டிற்க்கான நமது இலக்கு 130380 கணக்குகள் தொடங்க வேண்டுமாம் . அனால் கடந்த டிசம்பர் வரை 25792 கணக்குகள் தான் தொடங்கப்பட்டுள்ளன .அதற்காக ஊழியர்களின் மேல் ஒரு அளவிற்கு மேல் நிர்பந்திப்பது ,சலுகைகளை காட்டி ஏமாற்றுவது ,சட்டத்தை காட்டி மிரட்டுவது என்ற இந்த போக்கை அனுமதிக்க மாட்டோம் .

      இந்த கொடுமைகளை களைய போராட்ட களம் மாநில அளவில் அஞ்சல் நான்கு ,அஞ்சல் மூன்று சங்கங்கள் சார்பாக அறிவிக்க பட்டுள்ளது .தோழர்கள் அனைவரும் நிர்வாகத்தின் இந்த போக்கை எதிர்த்து வலுவான இயக்கங்கள் நடத்த ஆதரவு தர கேட்டு கொள்கிறோம் 

26.01.2015 திருச்சியில் அனைத்து கோட்ட /கிளை செயலர்கள் கூட்டதில் முக்கிய முடிவுகளை எடுப்போம்  






0 comments:

Post a Comment