...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 31, 2015

           சவுக்கை காட்டி வேலை வாங்க மட்டும் தெரியுது --தொழிலாளி வயிறு பற்றி எரிவது தெரியலையா ?   சம்பளத்தை கொடுங்க சாமிகளா ! 

இந்த மாதம் சம்பளம் வாங்கும் தேதி 04.04.2015 என்பது நம்மை போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு ஒரு பெரிய சுமைதான் .பால் காரனிடம் சொல்ல முடி யுமா ? மளிகை கடை அண்ணாச்சியிடம் கெஞ்ச முடியுமா ?
CBS அலுவலகத்தில் சம்பளம் தாமதமாக வரும் என்று ? அதை கேட்டல் அவரும் சிரிப்பார் .கிம்பளம் வாங்குவோருக்கு சரி எத்தனை மாதம் கழித்து வந்தாலும் தாங்கும் சக்தியும் உண்டு --வாங்கும் சக்தியும் உண்டு .
இது அரசு உதவி பெறும் பள்ளிகளில் இப்படி நடப்பது உண்டு .பில் போட  ஆளில்லை ,தாளாளர் வெளியூர் சென்று  சென்று விட்டார் என்று சர்வசதாரனமாக நடப்பதுஉண்டு . .ஆனால் நமது அடிப்படை உரிமையான சம்பளம் /பென்ஷன் வாங்குவதையும் இன்போசிஸ்  தான் நிர்ணயிப்பதா !
   ஆந்திர மாநிலத்தில் AR முறையில் 01.04.2015 அன்று சம்பள பட்டுவாடா ,தமிழகத்திலும் 0104.2015 அன்று AR மூலம் சம்பள பட்டுவாடா நடைபெற மாநிலசங்கம் தீவிரம் 

ANOTHER LETTER FROM OUR CIRCLE UNION TO CPMG, TN FOR PAYMENT OF SALARY AND PENSION ON 01.04.2015 AS IN THE CASE OF ANDHRA CIRCLE

நம்முடைய கடிதம் போன்றே  ஆந்திர மாநிலச் செயலர்  கடிதம் அளித்துப் பேசியதில், ஆந்திர மாநிலத்தில்  எதிர்வரும் 1.04.2015 அன்று AR மூலம்  SALARY PAYMENT  மற்றும் PENSION - CASH  ஆக அளித்திட  இன்று மாலை உத்திரவு இடப்பட்டது. நமது மாநிலத்தில் CPMG  இல்லாத காரணத்தால்  இதுவரை முடிவு எடுக்கப்பட வில்லை . நிச்சயம் தொலைபேசியில் CPMG  அவர்களை தொடர்பு கொண்டு  இதற்கான உத்திரவை நாம் பெறுவோம்.

 .


0 comments:

Post a Comment