...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, April 2, 2016

மீண்டும் தலை தூக்கும் நெல்லை கோட்ட அலுவலக தொ(ல் )லை பேசிகள் 

பொதுவாக மார்ச்சோடு டார்கெட் பிரச்சினை முடிவுக்கு வரும்.அதன்பிறகு ஒரு 10 மாதமாவது ஊழியர்கள் நெருக்கடி இல்லாமல் இருப்பார்கள் என்பது பழைய வழக்கம் . .அனால் இந்த ஆண்டு  ஏப்ரல் 1 ம் தேதியே புதிய  நெருக்கடியை கோட்ட அலுவலகத்தில் இருந்து கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் 
                                           நேற்றைய மெயில் 
Sir/Madam

​Please intimate number of NSC/KVP purchased and accounts opened by staff immediately to the email id tvldiv.dosb@gmail.com

 மேலும் தொலைபேசியில் ஒவ்வொரு அலுவலகத்தையும் அழைத்து எத்தனை கணக்குகள் .பத்திரங்கள் உங்கள் பெயரில்  தொடங்கி இருக்கிறீர்கள்   --
இல்லை என்றால் நாளைக்குள் போடவேண்டும் என்ற அதிகார தொனியோடு தொலைபேசி உரை முடிகிறது .( voice mail வசதியை நம் தோழர்கள் பயன்படுத்தவும் )
      இதனை தொடர்ந்து பாளையங்கோட்டையில் நேற்று ஒவ்வொரு ஊழியர்களிடமும் ரூபாய் 100 வசூலித்து NSC பத்திரம் வாங்கி கொடுக்க பலமான Canvassing நடக்கிறதாம்? ..
        அன்று இலக்குகளுக்காக 10 ரூபாய் RD கணக்கு தொடங்கி குட்டு பட்டது போதாதா ? இன்று 100 ரூபாய் NSC யா ?
  இது குறித்து நமது மாநில /மத்திய சங்கத்திற்கு  புகார்கள் அனுப்பி யுள்ளோம் .மேல்மட்ட அதிகாரிகள் ஏமாற கூடாது .ஆம் 
      வாடிக்கையாளர்களை விட்டுவிட்டு -ஊழியர்களிடமே எல்லாவற்றையும் 
விற்று விடலாம் என்பது ஆரோக்கியம்தானா ?
                              சிந்திப்பீர் !
                   வாழ்த்துக்களுடன்----  SK .ஜேக்கப்ராஜ் -------------------  

0 comments:

Post a Comment