...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, March 6, 2014

அன்பார்ந்த தோழர்களே !

நமது கோட்ட சங்கத்தின் 42 வது மாநாடு 23.3.2014 அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் தோழர் A .ஆதிமூலம் அவர்கள் தலைமையில் நடைபெறும் .நமது மாநாட்டிற்கு நமது துணை பொது செயலர் தோழர் 
N .சுப்ரமணியன்    JCM  Member ( Departmental  council ,New Delhi )  அவர்கள் கலந்து கொள்கிறார்கள் . 




 நேற்று 05.03.2014 நடைபெற்ற செயற்குழுவின் இதர முடிவுகள் 

1.உறுப்பினர்கள் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு மொத்தம் 206 உறுப்பினர்கள் என இறுதி செய்யப்பட்டது .

2.மாநாட்டு நன்கொடையாக உறுப்பினர்களிடம் குறைந்த பட்சம் ரூபாய் 100 வசூலிப்பது என தீர்மானிக்க பட்டது .

3.தலைமை அஞ்சலகங்களில் சிறு விடுப்பு கேட்டாலும் கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பும் சட்டத்தில் இல்லாத நடைமுறை ,மற்றும் SO களில் மருத்துவ விடுப்பு கேட்டாலும் ,விடுமுறையை 31.3.2014 க்கு 
பிறகு எடுங்கள் என்ற அறிவுறுத்தல் இவைகள் குறித்து கண்காணிப்பாளர் அவர்களிடம் சிறப்பு பேட்டி மூலம் விவாதிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது .பாரபட்சம் இன்றி விடுப்புகள் தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் . 

4.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் CBS முறையில் மேலும் இரண்டு கவுன்டர்கள் செயல்படவேண்டும் .

5.MIS பில்கள் பழைய அடிப்படையில் விரைந்து PASS பண்ணப்படவேண்டும்     
                                                         நன்றி  
                                                                   மாநாட்டு வாழ்த்துக்களுடன் 
                                                                            SK .ஜேக்கப்ராஜ் 
        

0 comments:

Post a Comment