...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 4, 2020

                                              கோவை அழைக்கிறது !        
கோவை மாநாடு உன்னை அழைக்கிறது -
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நம்மை 
வரவேற்க காத்திருக்கிறது 

கேளிக்கைகளுக்காக அல்ல 
கோரிக்கைகளை வென்றெடுக்கவே 
கோவை  அழைக்கிறது 

கொள்கை  மறவர்களின் கோட்டமாம் 
கொங்கு மண்டலத்தின்  தலைமையிடமாய் 
கொலுவீற்றிருக்கும் கோவைக்கு புறப்படு என்  தோழா !

2000 யில் ஒரு மாநாடு 
20 ஆண்டுகளுக்கு பிறகு 
2020 யிலும் கோவையில் மாநாடு 
அன்றும் சார்பாளராய் -
இன்றும் சார்பாளராய் நானும் ....

பேரணி தொடங்கும் முன்பு 
ஓரணியாய் அணிவகுப்போம் 
அன்புத்தலைவர் KVS அரவணைப்பில் 
கொடுத்த பணியை  முடிப்போம் 

மாநிலச்செயலரும்  மாநாட்டு சூழலை 
அஞ்சல் முழக்கத்தில் முன்மொழிந்துள்ளார் 
அண்ணன் JR யும் ஆக்கப்பணிகளை 
அன்றுபோலவே இன்றும் அதே புன்னகையோடு ......

அஞ்சல் துறையில் வந்திறங்கும் 
அடுத்தடுத்த ஆபத்துகளை குறித்தும் 
தடுக்கவும் எடுக்கவும் வேண்டிய 
நடவடிக்கைகளை வடித்தெடுப்போம்  வா !

அரசுத்துறைகள் ஒவ்வொன்றாய் 
அழிவுப்பாதைக்கு இழுத்து செல்வதை  பார்த்தாயா ?   
தேரோட்டம்  கானவந்ததை போல 
தள்ளிநின்று வேடிக்கை பார்க்க   தான்   போகிறாயா ?  

   அடுத்தது யாரை அ லங்கரிக்க போகிறார்கள் என    
  ஆர்வத்தோடு ஆருடம் கேட்கிறாயா ?                                       
   இப்போது நமக்கில்லை என்று 
  எப்போதும் போல் இருக்க போகிறாயா ?                                      
  வந்தால் பார்த்துக்கொள்வோம் என்று
  வழக்கம் போல் விலகி தான் நிற்கிறாயா ?     
   
 ஆபத்து உனக்கில்லை என்றாலும்
 பாதுகாப்பாய் நீ இல்லை என்பதையாவது                                          
 உணரக்கூட மறுக்கிறாயா ?   
  கண்முன் நடப்பதை கூட
  கனவாகத்தான் நினைக்கிறாயா ?                                           
  படையெடுக்க வேண்டிய நேரத்திலா                                          
  பழம்பெருமையை பேசியே கடக்க போகிறாயா ?                                                                            
    தெருக்களில் உறைந்துகிடக்கும்
     தியாகிகளின் ரத்தத்தில் வெற்றி திலகமிடு                                          
    வேடிக்கைக்காரர்களுடனான 
    விவாதங்களை விட்டுவிட்டு                                         வேங்கைக்கூட்டத்தோடு வேட்டைக்கு புறப்படு     
                                                                                                      
  களைப்பை போக்கு -சங்கத்தின் மீதுள்ள
  சலிப்பை நீக்கு                                        
  சதியை முறியடி --உன்                                             
  விதியை நீயே நிர்ணயி !                                           
                                     
முன்னோர்கள் முன்னெடுத்த
 போராட்டத்தை நீயும் நடத்து                                           
  அடக்குமுறைகளை எதிர்த்து நிற்கும்                                      
  அமைப்புகளுக்கு தலைமை தாங்கு      

     வெகுஜன இயக்கத்தில் விரும்பி பங்கெடு
     அதிகார சாட்டையை சுழற்றுவோருக்கு   அச்சத்தை புகட்டு                ஆள்வோருக்கு அடிமை யாரும் இல்லை என்று
      ஆனந்த கூத்தாடு  
    
      தோற்பதில்லை தொழிற்சங்கம் என்பதை 
     தோழர்களின் உள்ளங்களில் உணர்த்து 
     தொழிலாளர்கள் எல்லாம் நம் சொந்தமென்று                    
      தோழமையை பழக்கு ! 

    வா கோவை அழைக்கிறது 
   கேளிக்கைகளுக்காக அல்ல --
   கோரிக்கைகளை வென்றெடுக்க வா !வா !
                                                                  --------S K .ஜேக்கப் ராஜ் -----------
                               


       

                                             
                               
                                         

                                           
                                             

                                             

0 comments:

Post a Comment