...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, February 15, 2020

அன்பார்ந்த தோழர்களே !
                      ஆட்சி மாறியது ! காட்சி மாறியது !
    பாளையம்கோட்டையில்  ஞாயிறு ஆதார் பணிசெய்யும் உத்தரவு ரத்துசெய்யப்பட்டுள்ளது .இது இன்றுமுதல் அமுலுக்குவருகிறது இது நமது ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ! 
சட்டத்திற்கு புறம்பாக இனி நிர்வாகம் எந்த முடிவுகளையெடுத்தலும் அதை முடிவுக்கு கொண்டுவருவது நமது .தொழிற்சங்க கடமையாகும் .என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது ..கடந்த ஜூலை மாத இறுதியில் நெல்லை கோட்ட நிர்வாகம் தன்னிச்சையாக இட்ட உத்தரவு தான் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதார் பணிசெய்ய ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர் .முதலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் .அடுத்து நமது மாநிலங்களவை உறுப்பினர் திருமதி விஜிலா சத்தியானந்த் அவர்கள் மூலம் CPMG அவர்கள் வரை பிரச்சினை கொண்டுசெல்லப்பட்தது .அதனை தொடர்ந்து  மாநிலச்சங்கம் மூலம் பிரச்சினை தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு இன்று முடிவுக்கு வந்துள்ளது .இனி வாரநாட்களில்  EXTENDED WORKINHOURS அடிப்படையில் காலை 08.00 முதல் மாலை 08.00 வரை தனிக்கவுன்டெர் மூலம் நடைபெறும் .
ஊழியர்களின் நலன் பேனுவதில் நமது NFPE என்றுமே தவறியதில்லை என்பதற்கு இது மாபெரும் சாட்சி .இந்த போராட்டத்தில் நம்மோடு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தோழர்களுக்கும்  அமைப்புகளுக்கும் குறிப்பாக மாநில சங்கத்திற்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .
தோற்றதில்லை !தோற்றதில்லை ! தொழிற்சங்கம் தோற்றதில்லை !
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment