...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 20, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                             நெல்லை கோட்ட செய்திகள் 
புதிய எழுத்தர்கள் அனைவரும்( 25/25) நமது இயக்கத்தில் உறுப்பினர்களானார்கள் .இதன்மூலம் 100 சத வெற்றியை புதிய உறுப்பினர் சேர்ப்பில் நாம் பெற்றுள்ளோம் ..NFPE இயக்கத்தின் மேல் நம்பிக்கை வைத்து இணைந்துள்ள அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .
*இன்று தென்மண்டலத்தில் இருமாதந்திர பேட்டி நடைபெறுகிறது .நமது மாநிலசெயலர் தோழர் வீரமணி மற்றும் நமது மண்டல செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்கிறார்கள் .
நமது கோட்ட சங்கம் சார்பாக மண்டலச்செயலரின் கவனத்திற்கு கொண்டுசென்ற பிரச்சினைகள் 
1.MACP க்கன  கமிட்டி கடந்த 17.12.2019 அன்று நெல்லையில் கூடியது .அதனுடைய முடிவுகளை விரைந்து ஒப்புதல் கொடுக்க PMG அவர்களை வலியுறுத்த வேண்டும் .
2..நமது கோட்ட LSG ஊழியர்கள் 12 பேருக்கும் RE ALLOTMENT விரைந்து கிடைத்திட மண்டலநிர்வாகத்தை கேட்டிட வேண்டும் .
3.PSD OA இரண்டு பதவிகளுக்கான இடமாறுதல் விண்ணப்பங்கள் மண்டல அலுவலக ஒப்புதலுக்கு அனுப்பட்டுள்ளது .அதையும் விரைந்து கிடைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும் .
4.HSGII  பதவிஉயர்வு இடமாறுதல்களை விரைந்து வழங்கிடவேண்டும் .
---------------------------------------------------------------------------------------------------------------
மற்ற கோட்டங்களை ஒப்பிட்டுப்பார்க்கையில்  நமது நெல்லை கோட்டத்தில் ஆள்பற்றாக்குறை என்பது இப்பொழுது இல்லை என பெருமையோடு நாம் சொல்லிக்கொள்ளலாம் .கடந்த RULE 38 யில் 33 ஊழியர்க்ளும் இப்பொழுது பதவிஉயர்வில் 25 எழுத்தர்களும் கிடைத்திருப்பது வரலாற்று நிகழ்வாகும் .இந்தமுறை வேலைப்பளு அதிகமுள்ள வடக்கன்குளம் மூன்றடைப்பு  அம்பை பகுதியில் உள்ள இடங்கள் மற்றும் பழைய B கிளாஸ் அலுவலகங்கள் அனைத்தும் நிரப்பபடவாய்ப்புகள் உள்ளன .கோட்டநிர்வாகமும் தொழிற்சங்கங்களும் இணைந்து ஊழியர்களின் நலன்காக்க  செயல்பட்டு நெல்லை கோட்டத்தின் மான்பை காத்திடுவோம் .
-------------------------------------------------------------------------------------------------------------------
                                                       இந்த வார நிகழ்வுகள் 
*22.02.2020 மாலை மதுரையில் புதிய மாநிலச்சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டுவிழா 
*23.02.2020 ஞாயிறு விருதுநகர் கோட்டக்கிளை மற்றும் சிவகாசி கிளை இணைந்த மாநாடு சிவகாசியில் நடைபெறுகிறது .
நமது தலைவர்கள் KVS ,JR மற்றும் மாநிலசெயலர் ஆகியோர் பங்கேற்கின்றனர் 
நன்றி .தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

0 comments:

Post a Comment