...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, August 15, 2014

தோழர் K .நாராயணன் அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 

தோழர் K .நாராயணன்(முன்னாள் மண்டல செயலர் ) அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 15.08..2014 அன்று மதுரையில் சிறப்பாக நடைபெற்றது .தோழர்கள் KVS (முன்னாள் பொது செயலர் ) A .வீரமணி (நிதிசெயலாளர் ) SK .ஜேக்கப்ராஜ் (மாநில உதவி செயலர் ) குமார் (மத்திய மண்டல செயலர் ) S .சுந்தரமுர்த்தி (மதுரை கோட்ட செயலர் ) ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 


 நமது கோட்டத்தின் சார்பாக நாராயணன் தபால் தலை தோழர்கள் KVS மற்றும் SS ஆகியோர் சேர்ந்து வெளியி ட்டனர்
                                                தோழர் SKJ  வாழ்த்து கவிதை 


 பல பேரால் மதுரை எரிக்கபட்டது --உன்னால் 
மட்டுமே அணைக்கப்பட்டது 
அனைவரையும் NFPE குள் இணைக்க முடிந்தது 
எங்களை ஒரே மேடையில் இருத்தவும் முடிந்தது 

மக்கள் தொடர்பு அதிகாரியாய் மிளிர் ந்தவன் நீ --NFPE இன் 
அறிவிக்கபடாத செய்தி தொடர்பாளனாய் 
தொடர்பவனும்  நீ 
வணிக நிர்வாகியாய் வலம் வந்தவன் நீ 
PTC மதுரைக்காக களம் கண்டவனும் நீ 

அதிகாரிகள் விரித்த அத்தனை சூழ்ச்சி 
வலைகளையும் அறுத்தவன் நீ 
அதிகாரங்களை தாண்டி மண்டல அலுவலகதிற்கு 
சென்று வந்தவன் நீ 

உன் பணி நிறைவு நாளில் 
உன்னை வாழ்த்தி பாடுகிறேன்-- ஒரு 
உண்மையை சொல்ல போகிறேன் 
நம் மண்டலம் எப்போதும் போர்க்களம் தான் 
நீ பொறுப்பேற்ற நாட்கள் எங்களுக்கு 
பொற்காலம் தான் 

இனி  மதுரையை யாராலும் எரிக்கவும்  முடியாது 
 எதிர்க்கவும்  முடியாது 
பீனிக்ஸ் பறவையாய் தோழர் களின்  எழுச்சி 
பீடு நடைபோடுவோம் ,ஒற்றுமையே  நம் சாட்சி 

பழுதான கதைகளை மறந்துவிட்டு 
வலுவான  இயக்கம் நடத்த 
வாருங்கள்  !  வரலாறு திரும்பட்டும்   

                                            வாழ்த்துக்களுடன் 
                                               SK .ஜேக்கப்ராஜ்         

0 comments:

Post a Comment