...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, October 14, 2014

                                      சிந்திக்க   ....   சிந்திக்க 

       09.10.2014 முதல்  15.10.2014 வரை தேசிய அஞ்சல் வாரம் கடைபிடிக்க பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள் .பல கோட்டங்களில் கோட்ட தலைமை இலக்குகளை எட்டுவதற்காக அஞ்சல் ஊழியர்களை மட்டும் குறிவைத்து தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள் .உதாரணம் 13.10.2014 அன்று philately தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கோட்டத்தில்  அனுப்ப பட்ட சுற்றறிக்கை 
    அனைவரும் ஒவ்வொரு philatelly கணக்கு தொடங்க வேண்டும் .தலா ஒரு my stamp கொடுக்க வேண்டும் என்று கட்டாய அறிவிப்பு இருக்கிறது .
                           பொதுவாக அஞ்சல் திட்டங்களை பொது மக்களிடம் கொண்டு செல்லத்தான் அஞ்சல் ஊழியர்கள் --ஆனால் மேலதிகாரிகள் கொடுக்கும் இலக்கை எட்டுவதற்காக கட்டாய படுத்தி ஊழியர்களிடம் வசூலிப்பது ஆரோக்கியமான செயல் அல்ல 
               அன்று e  போஸ்ட் பிடிக்க சொல்லி நமது ஊழியர்களிடம் 100 /200 என வாங்கியது ,அதை தொடர்ந்து 10 ரூபாய் கணக்கில் ஆளுக்கு 100 கணக்குகள் தொடங்க சொன்னது .300 ரூபாய்க்கு my ஸ்டாம்ப் போட சொல்வது ,200 ரூபாய்க்கு philatelly கணக்கு தொடங்க வற்புறுத்துவது.  NPS      கணக்கை யாரிடமாவது ஆரம்பிக்க சொல்வது .PLI /RPLI   பாலிசிகளை  நமது ஊழியர்களிடம் மேலும் ,மேலும் போட சொல்வது /போன்ற நடவடிக்கைகளை உயர் அதிகாரிகள் நிறுத்தி கொண்டு - அதற்காக இருக்கின்ற ME / ASP  அவர்களை வைத்து பிரிமியம் பணிகளை செய்வதுதான் நிரந்தர தீர்வாகும் .


 













--------------------------------------------------------------------------------------------------------------------

1 comment:

  1. We at Erode Division also received an instruction like that and action should be taken at circle level to avoid such things. We are only clerical people and not marketing people.

    ReplyDelete