...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 18, 2014

                      நமது CPMG அவர்களுக்கு நன்றி !  நன்றி !

               நெல்லை கோட்டம் ,அம்பாசமுத்திரம் பகுதியில் 2010 ம் ஆண்டு நடந்த தலைமட்ட போராட்டத்தில்(ஒரு நாள் வேலை நிறுத்தம் ) கலந்துகொண்டதற்காக மூன்று தபால் காரர் தோழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் .அன்றைய SSP   இந்த மூன்று தோழர்களுக்கு ஒரு ஆண்டு ஊதிய  உயர்வை மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்தி வைத்தார்கள் .இந்த சூழ்நிலையில் மூன்று தோழர்களும் DPS அவர்களுக்கு மேல் முறையீடு செய்தார்கள் .அனால் அப்பீல் மனுக்கள் போன வேகத்தில் தள்ளுபடி செயப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது .இதற்கிடையில் இந்த மூன்று தோழர்களும் எழுத்தராக தேர்வு பெற்றிருந்தும் தண்டனைகாலம்  நிலுவையில்  இருப்பதை காரணம் காட்டி பதவி உயர்வை நிர்வாகம் நிறுத்தி வைத்திருந்தது . மனம் தளராத தோழர்கள் நமது CPMG அவர்களுக்கு மறு சீராய்வு பெட்டிசன் போட்டார்கள் .17.10 .2014 இன்று CPMG அவர்களால் இந்த மூன்று தோழர்களின் தண்டனை ஒரு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது என்ற நல்ல செய்தி நேற்று வந்தது .

         இந்த மூன்று தோழர்களையும் நெல்லை NFPE வாழ்த்துகிறது 

1.தோழர் சுப்ரமணியன் PA முனை ஞ்சிபட்டி    

2.தோழர் சின்னதுரை       PA திசையன்விளை 

3.தோழியர் செல்வ சுந்தரி PA  களக்காடு    
-----------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment