...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, February 11, 2016

அன்பார்ந்த தோழர்களே !  
            கடந்த 02.02.2016 அன்று ஊதியக்குழு சம்பந்தமாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அஞ்சல் துறை சார்பாக எந்த அதிகாரிகளும் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமான விசயம் .மேலும் துறை வாரியான மாற்றங்கள் இருந்தால் அதை சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒப்புதலுடன் இரண்டு வாரத்துக்குள் அனுப்பவேண்டுமாம்.நமது துறை சார்பாக நியமிக்கப்பட்ட அதிகாரி டெல்லிக்கு வெளியே இருப்பதால் நம் துறை சார்ந்த கோரிக்கைகள் சேர்க்கப்படுமா என்பதே சந்தேகம் தான் .இதற்கு இடையில் மத்திய அரசு ஊழியர்களின் போராட்ட அறிவிப்புக்கு பிறகு அதே நாட்களில் அஞ்சல் சம்மேளனங்களும் இயக்கங்களை நடத்த சொல்லியிருக்கிறது .
 இது நம் கோரிக்கைகளில் அரசின் கவனம்  எவ்வளவு தூரம் திரும்பும் என்பது சிந்திக்கவேண்டியது .
                       அஞ்சல் சம்மேளனங்களின் இயக்கங்கள்    

11.03.2016 கோட்ட அளவில் ஆர்ப்பாட்டம்(இதே நாளில் ம .அ .ஊ .சார்பாக ஆர்ப்பாட்டம் )
15.03.2016 கோட்ட அளவில் தர்ணா 
06.4.2016   மாநில அளவில் தர்ணா 
11.04.2016  வேலைநிறுத்தம் .(இதே நாளில் ம .அ .ஊ .சார்பாக போராட்டம்  )
           இது நமது அஞ்சல் பகுதி கோரிக்கைகளை நீர்த்து போக செய்யாதா ?
இது கடலில் கலந்த பெருங் காயத்திற்கு சமமாகாதா ? 
         மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் வேறு --அஞ்சல் பகுதி ஊழியர்களின் இலக்கா சம்பந்தப்பட்ட பிரச்சினை வேறு என்பதை உணர வேண்டாமா ?
                                                                    வாழ்த்துக்களுடன்  SKJ 
--------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment