...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 16, 2016

 ஊதியக்குழு போராட்டத்தில் இணையும் SRMU 

             நாட்டில் இருக்கும் அங்கீகரிகப்பட்ட பெரிய சங்கமான சதன் ரயில்வே எம்ப்லாயீஸ் யு னியன் ( SRMU ) நேற்று (15.02.2016 0 சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ரயில்வே ஊழியர்களும் மத்தியஅரசு ஊழியர் மகாசம்மேளனத்துடன் இனைந்து ஏப்ரல் 11 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்கிறார்கள். .குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 26000 உள் ளிட்ட ஊதிய குழு பரிந்துரையில் மாற்றம் வேண்டும் என SRMU வலியுறுத்துகிறது.என அறிவித்துள்ளது.
 இது போராட காத்திருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் புது பலத்தை கூட்டியிருக்கிறது .
                 எப்படி மத்தியஅரசு ஊழியர்களின் 1960மற்றும் 1968 போராட்டம் திருப்பு முனையை ஏற்படுத்தியதோ அதே போல் ரயில்வே ஊழியர்களின் 1974 போராட்டத்தையும் யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது .08.05.1974 முதல் 27.02.1974 வரை 20  நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்தத்தை திரு ஜார்ஜ் பெர்னாண்டோ அவர்கள் தலைமை தாங்கினார்கள் .திருமதி .இந்திராகாந்தி அவர்கள் நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தார்கள் .சிறைத்தண்டனை .டிஸ்மிஸ் ,என்பது சர்வ சாதாரமாக இருந்தது ..இனிமேல் ரயில்வே தொழிலாளர்கள் எந்த போராட்டமும் நடத்த முன்வர மாட்டார்கள் என அரசாங்கம் மார்தட்ட தொடங்கியது .
     இதை எல்லாம் கடந்து இன்று நம்மோடு கைகோர்க்கும் SRMU சங்கத்தை வரவேற்போம் .
                                          காத்து கிடக்கும் வரை 
                                           நம் பெயரும் காற்று   என்றே 
                                          இருக்கட்டும் .
                                          புறப்படும் போது 
                                          .புயலென்று 
                                           புரிய  வைப்போம்   
                               வாழ்த்துக்களுடன்  SK .ஜேக்கப்ராஜ் 
--------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment