...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, June 30, 2016

தோழர் A .பாலசுப்ரமணியன் APM பாளை & முன்னாள் கோட்ட செயலர் கோவில்பட்டி அவர்கள் பணிநிறைவு
சிலரை வாழ்த்தும் போதுதான் நினைக்க தோன்றும் --சிலரை 
நினைக்கும் போதே வாழ்த்த தோன்றும் --கண்ணதாசன் 

 நிறைகுடமே ! உந்தன்
நிறைவான குணத்தினால் --தடங்கல்கள் ஏதுமின்றி பணி
நிறைவு பெறுகிறா (ய் )ர் !
நிறம்மாறா செம்மலரே  --
நின் புகழ் நீடு வாழ்க !
ஆயிரத்தில் நீ தான் ஒருவன்
தத்துவார்த்தத்தை பையில் வைத்திருந்தாலும்
எதார்தத்தை கையில் எடுத்தவர்
அழைக்காமலே எல்லா
போராட்டங்களிலும் பங்கேற்றவர் --
நீக்கு போக்கு  தெரிந்தவர் --ஒருபோதும்
சாக்கு போக்கு சொல்லாதவர் --சபைகளில் 
அளவாய் பேசிவிட்டு அவர் செல்வார் --அடுத்து வருபவரை 
அதை குறித்துதான் பேச வைப்பவர்
கோபப்பட்டு பார்த்ததில் --எவரையும்
சாபமிட்டும் கேட்டதில்லை -அதிகாரிகளுக்கு
தூபம் போட்டும் பழக்கமில்லை -போராட்டத்தில்
லாப நட்டம் பார்த்ததில்லை
அடக்கம் அவர் அணிந்திருந்த அணிகலன்
புண்ணகை அவர் உபயோகித்த ஆயுதம்
கொள்கை அவர் உட்கொண்ட ஆகாரம்
மார்க்சியம் அவர் வாழ்க்கை
களங்கமில்லா உறவு --
கலப்படமில்லா நட்பு
கர்வம் இல்லா பேச்சு
கலக்கமில்லாத மனது -- 
கவலையில்லா வாழ்க்கை
தொடர நெல்லை NFPE வாழ்த்துகிறது --உன்
தொடர்பு தொடர விரும்புகிறது
                                    வாழ்த்துக்களுடன்
          SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை


                  

0 comments:

Post a Comment