...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, May 1, 2014



                                மே தின வாழ்த்து !


உழைப்பாளர் நாளின் வரலாறு மிகவும் நீண்டதாகும். காலவரையரையின்றி அடிமைகளைப் போல வேலை வாங்கப்படுவதைக் கண்டித்து உலகின் பல்வேறு நாடுகளில் பல நூற்றாண்டுகளாக தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் 1889 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த ஆண்டின் ஜூலை 14&ஆம் தேதி பாரீசில் கூடிய உலகத் தொழிலாளர்கள் மே ஒன்றாம் தேதியை உலகத் தொழிலாளர் நாளாக அறிவித்தனர். இந்தியாவில் சென்னையில் தான் முதன்முதலில் தொழிலாளர் நாள் கொண்டாடப்பட்டது என்பதும், தமிழராகிய சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் தான் இதைக் கொண்டாடினார் என்பதும் தமிழர்களாகிய நமக்கு பெருமையாகும். உழைப்பாளர்களின் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்திய உழைப்பாளர் நாளை மே நாளாக கொண்டாடும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இன்று காலை பாளையம்கோட்டை மற்றும் திருநெல்வேலி தலைமை அஞ்சலகங்கள் முன்பு கொடியேற்றுவிழா நடைபெறும் .மாலை 6 மணிக்கு மே தின  சிறப்பு கூட்டம் திருநெல்வேலி HO வில் நடைபெறும் .அனைவரும் வருக !
                                                             வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப்ராஜ்                                                                            SK .பாட்சா  



0 comments:

Post a Comment