...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, May 7, 2014

                        கோட்ட நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்!

ஒரு அலுவலகத்தில் இருந்து வேறு ஒரு அலுவலகத்திற்கு DEPUTATION உத்தரவு அனுப்பும் பொழுது தனி நபர் பெயர் போட்டு அனுப்பும் புதிய முறையை கோட்ட அலுவலகம் தவிர்க்க வேண்டும் என கோட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .இதனால் முறையாக பராமரித்து வந்த TURN REGISTER அர்த்தமற்றதாகி போய்விட வாய்ப்பு உள்ளது .மேலும் விடுப்பு கேட்டு காத்திருக்கும் ஊழியர்களின் எதிர்பார்ப்பும் ஏமாற்றத்தில் முடிகிறது .உதாரணமாக  நேற்று பாளையம்கோட்டையில் இருந்து பாளையம்கோட்டை கோர்ட்ஸ் அலுவலகத்திற்கு ஒரு தோழியர் பெயரை  குறிப்பிட்டு DEPUTATION உத்தரவு வந்ததாக தெரிகிறது .ஆனால் அந்த தோழியரோ வேறு ஒரு அலுவலகத்தில் DEPUTATION  இல் இருக்கிறார் .. தோழர் சுப்பிரமணியம் SPM COURTS அவர்கள் நேற்று மாலை வரை காத்திருந்து விரக்தியின் விளிம்பிற்கே சென்று விட்டார் .பெயர் போடாமல் DEPUTATION உத்தரவு வந்திருந்தால் நேற்று வரிசைப்படி வேறு ஒருவரை பாளையில் இருந்து DEPUTATION அனுப்பி இருப்பார்கள்.ஆகவே இனி வரும் நாட்களில் கோட்ட நிர்வாகம் பெயர் போட்டுஅனுப்பும்  DEPUTATION உத்தரவை தவிர்க்கும் படி கோட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .

                                                                                     தோழமையுடன் 
                                                                                      SK .ஜேக்கப்ராஜ்    
                                                                                    கோட்ட செயலர்              

0 comments:

Post a Comment