...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, August 20, 2013

3 DAYS BRAVERY STRIKE AT CHENNAI GPO AGAINST SINGLE BATCH DELY SYSTEM

சென்னை GPO  அலுவலகத்தில் கடந்த 14.08.2013 அன்று   SINGLE  BATCH  DELIVERY  அறிமுகப் படுத்த உத்திரவிட்டதை எதிர்த்து  அஞ்சல் நான்கு தோழர்கள்  உடனடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். உடனடியாக ஊழியர்களைத் திரட்டி  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.  இதில் அஞ்சல் மூன்றின் மாநிலத் தலைவர் தோழர். J . ஸ்ரீ வெங்கடேஷ்  கலந்து கொண்டார்.  உரிய ஆலோசனைகளையும் வழங்கினார்.  மறுநாள் விடுமுறை தினமாதலால், மூன்றாவது   நாளாக   16.08.2013 அன்றும்  வேலை நிறுத்தம் தொடர்ந்தது. 

14.08.2013 மற்றும் 16.08.2013 ஆகிய இரு தினங்களும், PMG, CCR  அவர்களுடன் நடை பெற்ற தொடர்  பேச்சு வார்த்தைகள்   தோல்வியில் முடிந்தன . பேச்சு வார்த்தைகளில்  NFPE  அஞ்சல் மூன்றின் சார்பாகவும் சம்மேளனத்தின் சார்பாகவும்  சம்மேளன உதவிப் பொதுச் செயலர் தோழர். S . ரகுபதி கலந்து கொண்டார். வேலை நிறுத்தம் 17.08.2013 அன்றும் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. 

இதனால் , PMG, CCR  அவர்கள் நேரிடையாக  CHENNAI  GPO  விற்கு வந்து  DELIVERY  HALL  இல் ஊழியர் சங்கப் பிரதிநிதகளுடன் நேரடிப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். 
இந்தப் பேச்சு வார்த்தையிலும் எந்த வித முன்னேற்றமும் இல்லாததால், உடன்   NFPE /FNPO  அஞ்சல் மூன்று சங்கங்களின் சார்பாக உச்ச கட்ட கண்டன ஆர்ப்பாட்டமும் , தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பிரச்சினை தீர்க்கப்பட வில்லையானால் மறுநாள் முதல்  அஞ்சல் மூன்றும்  வேலை நிறுத்தத்தில் இறங்குவது என்ற முடிவும் எட்டப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதன் அடிப் படையில்  சென்னை நகரம் முழுவதும் இந்த வேலை நிறுத்தம் விரிவு படுத்தப்படும் என்றும் நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டது. போராட்டம் மேலும்  தீவிரம் அடைந்தது . NFPE , FNPO ,BPEF ,SC /ST  FEDERATION  சங்கங்களின் ஊழியர்கள் உருக்கு போல ஒன்று திரண்டு போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. 
இதனால் வேறு வழியில்லாமல்  மாநில அஞ்சல் நிர்வாகம் இறங்கி வந்து, 
வீரம் செறிந்த இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்திய  CHENNAI GPO அஞ்சல் நான்கு தோழர்களுக்கும் , அதற்கு துணை நின்ற அஞ்சல் மூன்று தோழர்களுக்கும்  நம் மாநிலச் சங்கத்தின் வீர வாழ்த்துக்கள்.  
இந்த பேச்சு வார்த்தையில்  மாநில  அஞ்சல் நிர்வாகத்திற்கும்  போராடும் தோழர்களுக்கும் இடையே  ஒரு பாலமாக இருந்து , போராட்ட களத்திற்கே சென்று பேச்சு வார்த்தை நடத்திய PMG ,CCR  திரு. மெர்வின் அலெக்ஸாண்டர் அவர்களுக்கும் நம் மாநிலச் சங்கத்தின்  நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். 
தல மட்டப் போராட்டங்கள் மூலம் பிரச்சினைகள் உடனுக்கு உடன் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்கிற நம் தொழிற் சங்க வரலாறு   CHENNAI GPO போராட்டத்தின் மூலம்  மீண்டும்  நிரூபிக்கப் பட்டுள்ளது. 

0 comments:

Post a Comment