...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 22, 2016

                                     வெல்லட்டும் !  வெல்லட்டும் !
 மாநில சங்கமே! முடிவெடுங்கள் !
 விரைந்து முடிவெடுங்கள் !
தொழிலாளி கையேந்தும்பிச்சைக்காரன் அல்ல ! 
இன்போசிஸ்  நமக்கு எஜமானும் அல்ல !

         அடிம(ப )ட்ட ஊழியர்களின் உணர்வுகளை ஏற்று உடனடியாக மாநில சங்க நிர்வாகிகள் கூட்டத்தை 24.03.2016 அன்று சென்னையில் கூட்டிய மாநில செயலர் தோழர் J .ராமமூர்த்தி அவர்களுக்கு நன்றிகள் ..கூட்டத்தில் நல்லதொரு முடிவினை எடுக்க வாழ்த்துகிறோம் .

குறிப்பு  :  எந்த ஊழியரும் இரவு நேரத்தில் காத்திருக்க வேண்டாம் என CPMG அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவு  கொடுத்துள்ளார்கள் .அந்தந்த கோட்ட செயலர்கள்  இதை உறுதிபடுத்தி ஊழியர்களை  மன  உளைச்சலில் இருந்து பாதுகாப்போம் .

நேற்றைய தேதியில்  நம்முடைய  மாநிலச் சங்கத்தின் மூலம் பேசிய பின்னர்  CPMG  அவர்கள்  FINACLE  SLOWNESS  காரணமாக எந்த ஒரு ஊழியரையும்  இரவு  காத்திருப்பு  செய்யக்கூடாது என்று  கீழ் மட்ட அதிகாரிகளுக்கு  ஈமெயில்  மூலம்  அறிவிக்கை  செய்துள்ளார். எனவே VOUCHER  POST  செய்ய  இயலவில்லை எனின்  உரிய அறிவிப்பு செய்துவிட்டு  அவரவர்கள்  இல்லம்  திரும்பலாம். மறுநாள்  காலை அந்த வேலையை தொடரலாம்.  கோட்ட அதிகாரிகள் செல்லக் கூடாது  என்று கூறுவார்களேயானால்   தங்கள்  பகுதி செயலர் மூலம்  மாநிலச் சங்கத்திற்கு  உடனே  தெரிவிக்கவும்.  உரிய  நடவடிக்கை உடன்  மேற்கொள்ளப்படும்.
                                         வாழ்த்துக்களுடன் 
                  SK .ஜேக்கப்ராஜ்  செயலர் நெல்லை 
--------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment