...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, November 26, 2015

                            சிந்திக்க ......சிந்திக்க 

தோழர்களே !
                       இந்த ஆண்டில் மட்டும் நாம் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறோம் .மார்ச் 26 மற்றும் செப்டம்பர் 2.மீண்டும் ஒரு வேலைநிறுத்தமா ? ஊழியர்கள் மத்தியில் பேசப்படும் /கேட்கப்படும் கேள்வி இது .அப்படி என்ன முக்கிய கோரிக்கைகள் ?
          ஆம்      டிசம்பர் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் நடத்துவதாக NFPE சம்மேளனம் அறிவித்து இருந்தது .அதில் முக்கிய கோரிக்கை ஊதிய குழு அறிவிப்பிற்கு முன்பே அஞ்சல் துறையில் கேடர் சீரமைப்பு வேண்டும் என்பது .அடுத்த முக்கிய கோரிக்கை GDS ஊழியர்களையும் ஊதியக்குழு வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் .
இன்று ஊதியகுழுவும் வந்துவிட்டது .GDS ஊழியர்களுக்கு அதிகாரி தலைமையில் கமிட்டியும் வந்து விட்டது .இந்த சூழ்நிலையில் வேலைநிறுத்தம்  குறித்து சம்மேளனம்  விரைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் .முன்பெல்லாம் ஒரு வேலை நிறுத்த அறிவிப்பு வந்தாலே  IP முதல் SSP வரை பரபரப்பாக காணப்படுவார்கள் .ஆனால் இன்றோ எந்த பரபரப்போ --படபடப்போ ஏதும் இன்றி அதிகாரிகள் மிகவும் காசுவலக இருக்கிறார்கள் .
         நம்மை விட அதிகாரிகளுக்கு நன்றாக தெரிந்திருக்கிறது .
2006 இல் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறார்கள் .Sectional கோரிக்கைகளுக்காக சங்கங்கள் போராட்ட  அறிவிப்பு கொடுப்பது வாடிக்கைதான் --ஏனோ கடைசி நேரத்தில் விளக்கி கொள்வது வேடிக்கைதான் . அதே போல் தான் டிசம்பர் 1,.2 வரும் --  ஆனால் வேலைநிறுத்தம் வருமா ?
வாக்குறுதியா ? ஒப்பந்தமா ?நிர்பந்தமா ?  
       தலைவர்களே விரைந்து முடிவு எடுங்கள் !
                                                                SKJ 

0 comments:

Post a Comment