...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 29, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                                   முக்கிய செய்திகள் 

    *சுழல் மாறுதல் 2022-23 ஆண்டிற்க்கான வழிகாட்டுதலை அஞ்சல் வாரியம் 28.01.2022 அன்று வெளியிட்டுள்ளது .

*வழக்கம் போலவே non -sensitive பதவிகளில் உள்ளவர்கள் ஒரு ஆண்டு extension வழங்கப்படும் 

*அதேபோல் sensitive பதவிகளில் உள்ளவர்கள் அவர்களுக்கான பழைய பணிக்காலங்களில் உள்ள நடத்தைகளை பொறுத்து வழங்கப்படும் 

*C மற்றும் B கிளாஸ் அலுவலகத்தில் தனியாக பார்த்தவர்க்ளுக்கு EXTENSION கிடையாது .இதில் கோவிட் பாதிப்பு போன்ற மிகவும் பாதிப்புள்ள ஊழியர்களுக்கு CPMG அவர்களால் 6  மாதம் EXTENSION வழங்கப்படும் 

*சென்ற ஆண்டு EXTENSIONபெற்றவர்களுக்கு இந்தாண்டு EXTENSIONகிடையாது 

*OUT OF SATATION இடமாறுதல் கிடையாது 

இந்த EXTENSION போன்ற வசதிகளை நாம் பெருகிறோமோ இல்லையோ அதிகாரிகள் STATIONT TENNURE மற்றும் EXTENSION சலுகைகளை பெற்றுக்கொண்டுதான் வருகிறார்கள் .......

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Thursday, January 27, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் 

              நெல்லையில்   இன்று 27.01.2022 நமது இரண்டாவது கட்ட இயக்கமான கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுதல் ----வெற்றிபெற செய்வீர் ! அதன் புகைப்படங்களை கோட்ட செயலர்களுக்கு அனுப்புங்கள் 

                                                              நன்றி ! நன்றி !நன்றி !

                    டார்கெட் நெருக்கடிகளுக்கு எதிரானநெல்லை கோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெற்ற 25.01.2022 ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் கூட்டு போராட்ட குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .பாளையம்கோட்டை மற்றும் அம்பாசமுத்திரம் கிளைகளில் தலமட்ட போராட்டம் என்பது ஒருசேர ஒற்றுமையாக நடைபெற்றது NELLAI --NFPE க்கு மேலும் புதிய உத்வேகம் தந்துள்ளது .அதேபோல் GDS ஊழியர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்ததும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மாபெரும் வெற்றியே !குறிப்பாக திசையன்விளை பகுதி தோழர்களின் பங்களிப்பு அவர்களை ஓரணியில் திரட்டி கொண்டுவந்த அன்பு தோழர் தொழிற்சங்க தீவிர பற்றாளர் சண்முகம் SPMதிசையன்விளை அவர்க்ளுக்கும் வள்ளியூர் பகுதிகளில் GDSதோழர்களை ஒருங்கிணைத்து அழைத்துவந்த தெற்கு கருங்குளம் -தோழர் ஐயப்பன் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..

                                                 மாநில சங்கங்களுக்கு நன்றி நன்றி 

நமது ஆர்ப்பாட்ட அறிவிப்பு கிடைத்த நாளில் இருந்து நமக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய அஞ்சல் மூன்றின் மாநில செயலர் தோழர் வீரமணி மண்டல செயலர் அண்ணன் R.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் R3 மாநில செயலர் தோழர் ரமேஷ் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..---அதேபோல் நமக்கு ஆதரவாக 25.01.2022அன்று ஆதரவு இயக்கங்களை அறிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிய அஞ்சல் நான்கு கிளை /கோட்ட சங்கங்களுக்கும் ஆர்ப்பாட்ட தினத்தன்று நம்மோடு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் G.கண்ணன் அவர்களுக்கும் ,CPMG மற்றும் தென்மண்டல அதிகாரிகளுக்கு கடிதங்களை கொடுத்து விரைந்து செயல்பட்ட பொறுப்பு மாநில செயலர் தோழர் வேதகிரி அவர்களுக்கும் தென்மண்டல செயலர்  ராஜசேகர் மற்றும் மாநில உதவி தலைவர் தோழர் சோலையப்பன் அவர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

                                     நன்றி ...போராட்ட வாழ்த்துக்களுடன் கூட்டு போராட்ட குழு 

                              

Tuesday, January 25, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

                        டார்கெட் நெருக்கடிகளை கண்டித்து இன்று மாலை 05.45 மணிக்கு பாளை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பங்கேற்குமாறு மீண்டும் நினைவூட்டுகிறோம் ..

                      அதேபோல்  27.01.2022 அன்று நடைபெறும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றிடவும் அதன் புகைப்படங்களை கோட்ட சங்கத்திற்கு அனுப்பிடவும் கேட்டுக்கொள்கிறோம் .கருப்பு பேட்ஜ் அனைத்து அலுவலகங்களுக்கும் கிளை அஞ்சலகங்கள் உட்பட அனைவருக்கும் இன்று அனுப்பிவைக்கப்படும் .27.1.2022 அன்று காலையில் அனைவருக்கும் கிடைக்கும் .

                இன்னும் மார்ச் இறுதிவரை நமது ஊழியர்க்ளுக்கு தொடுக்கப்படும் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவேண்டும் .பணிபுரிகின்ற இடத்தில அது GDS என்றால் என்ன ?தபால்காரர்களாக இருந்தால் என்ன ?SPM ஆக இருந்தால் என்ன ?அனைவரும் நிம்மதியாக பணியாற்ற வேண்டும் ..மணிக்கொருமுறை தொலைபேசி கணக்கில இருந்து விடுபடவேண்டும் ...அச்சமில்லாமல் பணியாற்ற வேண்டும் .

        நமது ஆர்ப்பாட்டத்திற்கு இன்று நாடு முழுவதும் ஆதரவு கிடைத்துள்ளது .மாநில சங்கங்கள் சார்பாக மாநில /மண்டல அதிகாரிகளுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன ...போராடும் எந்தவொரு கோட்டமாக இருந்தலும் அது தனித்து விடப்பட்டதில்லை ...கோடி கால் பூதமடா ! கோரிக்கைகளின் ரூபமடா !என்ற வரிகள் இன்று மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது ..

                   ஒற்றுமையே நமது பேராயுதம் ! போராட்டமே நமது தீர்வு !

போராட்ட வாழ்த்துக்களுடன் -கூட்டு போராட்ட குழு நெல்லை