...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, September 29, 2018

                                            முக்கிய செய்திகள் 
GDS JCA சார்பாக இரண்டாவது கட்ட போராட்டம் -சென்னை CPMG அலுவலகம் முன்பு 04.10.2018 அன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து மூன்று தோழர்கள் சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்கிறார்கள் .
---------------------------------------------------------------------------------------------------------------------
RULE 38 விதியின் கீழ் இடமாறுதல் பெறுவதற்கான புதிய வழிகாட்டுதல்களை நமது CPMG அலுவலகம் 27.09.2018 அன்று வெளியிட்டுள்ளது .அதன் முழுவிவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது .


                                            முக்கிய செய்திகள் 
 மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம் சார்பாக நவம்பர் 15 அன்று நடைபெற விருந்த ஒரு நாள் வேலைநிறுத்தம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது .
======================================================================
இன்று பணிநிறைவு பெறுகின்ற NFPE சம்மேளனத்தின் செயல்தலைவர் தோழர் A .மனோகரன் (முன்னாள் கோட்ட செயலர் விருதாச்சலம் ) அவர்களுக்கு நெல்லை NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் 
------------------------------------------------------------------------------------------------------------------------

Friday, September 28, 2018

                                              முக்கிய செய்திகள் 

Copy of CAT, Hyderabad Branch Order regarding declaration of AAO Result

The interim order dated 03.07.2018 is modified to the extent that the respondents shall proceed to declare the results and the promotions made in pursuance of the same, are subject to the result of the O.A. The respondents however, shall duly mention in the said appointments/promotion orders that the same are subject to the result of the OA No.619/2018
-----------------------------------------------------------------------------------------------------------------------
--Promotion and postings of Junior Administrative Grade (JAG) officers of Indian Postal Service, Group 'A'to Senior Administrative Grade (SAG) of the Service and transfers/ postings of regular SAG officers of Indian Postal Service, Group "A"
நமது முன்னாள் இயக்குனர் திரு .VS .ஜெயசங்கர் IPOS அவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் PMG ஆக பதவியுயர்வில் செல்கிறார்கள் 
--------------------------------------------------------------------------------------------------------------------

Thursday, September 27, 2018


  அன்பார்ந்த தோழர்களே !                           

Justice delayed is justice denied

  01.01.2004 க்கு முன்பு நடந்த தேர்வு -அதனுடைய செலேச்சன் ப்ராசஸ் தாமதத்தால் 2004 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கும்( BSF ஊழியர்களுக்கு )பழைய ஓய்வூதியம் தான் பொருந்தும் என்றும் நிர்வாக காரணங்களால் ஏற்படும் காலதாமத்தை வைத்து அவர்களை புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்க கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்  Ministry of Home Affairs/Border Security Force  உத்தரவு பிறப்பித்துள்ளது .இது நாம் ஏற்கனவே 2002 மற்றும் 2003 காலிப்பணியிடங்களுக்கு நடந்த தபால்காரர் /MTS நியமனங்களுக்கு பழைய ஓய்வூதியம் தான் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்தி கொண்டிருக்கும் வழக்கிற்கு மேலும் ஒரு வலு சேர்க்கும் .நெல்லை கோட்டம் சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் எட்டு தோழர்களில் இரண்டு தோழர்கள் ஒருவர் பணியின் போதும் மற்றொருவர் பணிஓய்வு பெற்ற சிறிது நாட்களுக்குள் இறந்து போனார்கள் என்ற நிலையில் இந்த வழக்கில் விரைவில் நல்லதொரு உத்தரவு வர காத்திருக்கிறோம் .தாமதமாகும் தீர்ப்பு மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் என்ற நியதியை புரிந்துகொண்ட நிர்வாகம் விரைந்து உத்தரவுகளை வழங்கிடவேண்டும் 
------------------------------------------------------------------------------------------------------------------------
தபால்காரர் /MTS தோழர்கள் எழுத்தர் தேர்வு எழுதுபவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 01.10.2018 முதல் தினமும் மாலை 5 மணிக்கு பாளையம்கோட்டை சமாதானபுரத்தில் (முன்னாள் ASP திரு .பாலசுப்ரமணியன் அவர்கள் இல்லத்தில் ) நடைபெறுகிறது .விருப்பமுள்ள தோழர்கள் இந்த வகுப்புகளில் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம் .சுமார் 55 வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .மேலும் விபரங்களுக்கு திரு .பாலசுப்ரமணியன் Retd ASP (OD )94421 49339 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, September 26, 2018

அன்பார்ந்த தோழர்களே !
       நேற்று 25.09.2018 நமது GDS கோரிக்கைகளுக்காக நெல்லையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு AIGDSU கோட்ட செயலர் தோழர் SK .ஐயப்பன் அவர்கள் தலைமை தாங்கினார்கள் .தோழர் RVT.பாண்டியன் கிளை செயலர் அம்பை அவர்கள் முன்னிலை ஏற்றார்கள் .அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்கள் .அதன் பிறகு பல்வேறு சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள் .வழக்கம் போலவே நெல்லையில் பத்திரிகையாளர்களின் பேராதரவும் -தொலைக்காட்சி நிறுவனங்களின் பேட்டியும் நமது உண்ணாவிரதத்தை மேலும் சிறக்க செய்தன .இதோ நெல்லை பத்திரிக்கை செய்திகள் 







Tuesday, September 25, 2018

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                       GDS மத்திய JCA அறைகூவலுக்கினங்க இன்று முதற்கட்டமாக நெல்லை கோட்ட அலுவலகம் முன்பு NFPE --AIGDSU சங்கங்களின் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது .இடம் -பாளையம்கோட்டை அஞ்சலகம் முன்பு 
நேரம் காலை 09.30 முதல் மாலை 05.30 வரை 
 தலைமை தோழர் SK .ஐயப்பன் கோட்ட தலைவர் AIGDSU 
 முன்னிலை தோழர் RV.தியாகராஜ பாண்டியன் கிளைசெயலர் P 3 அம்பை & V .தங்கராஜ் கிளைசெயலர் P4 அம்பை 
துவக்கி வைப்பவர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் ஒருங்கிணைப்பாளர் கூட்டு போராட்டக்குழு -நெல்லை 
 காலை முதல் மாலை வரை நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு விடுப்பு எடுத்து வர முடியாதவர்கள் அவரவர் பணி முடிந்தவுடன் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறோம் .
இரண்டாம் கட்டமாக சென்னையில் 04.10.2018 அன்று நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு பங்கேற்க விரும்பும் தோழர்கள் இன்றே தங்கள் பெயர்களை பதிவு செய்ய கேட்டு கொள்கிறோம் .
                                 தோழமை வாழ்த்துக்களுடன் 
I.ஞான பாலசிங் AIGDSU கோட்ட செயலர் 
E.காசிவிஸ்வநாதன் NFPE -GDS கோட்ட செயலர் நெல்லை 

Monday, September 24, 2018

                                                           வருந்துகிறோம் 
தோழர் வெங்கட்நாராயணன் தபால்காரர் மஹாராஜநகர் அவர்களின் தாயார் திருமதி ரெங்கநாயகி (80) அவர்கள் இன்று 24.09.2018 அதிகாலை இயற்கை எய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம் .அன்னாரது இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் கிருஷ்ணாபுரத்தில் நடைபெறுகிறது .தாயாரை இழந்து தவிக்கும்  தோழருக்கு நெல்லை NFPE தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
        25.09.2018 நடைபெறும் GDS மத்திய JCA சார்பாக நடைபெறும் உண்ணாவிரதம் வெல்லட்டும்
                மே 2018 திங்களில் தொடங்கி 16 நாட்கள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திய GDS மத்தியசங்கங்கள் --வேலைநிறுத்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அமைச்சரவை கூடி கோரிக்கைகையை ஏற்றுக்கொண்டதாக அரசால் அறிவிக்கப்பட்ட புரட்சிகரமான பெருமை எங்கள் அருமை GDS ஊழியர்களுக்கு உண்டு .ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற உன்னத தத்துவத்தை உண்மையிலே ருசித்து பார்த்த GDS மத்திய சங்கங்கள் இன்று வரை GDS-  JCA என்ற பெயரில் உறுதியுடன் போராட்ட அறிவிப்புகளை அறிவித்துவருவது பாராட்டுதலுக்குரியது .
 இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளுக்கு ஏற்ப இந்த GDS சங்கங்கள் வைக்கின்ற கோரிக்கைகள் நிச்சயம் வெற்றிபெறும் .விடுபட்ட கோரிக்கைகளை நாம் விட்டுவிட்டு செல்லமுடியாது .
 இடமாறுதலில் கோட்ட அதிகாரிகளே முடிவெடுக்கும் அதிகாரம் -தன்விருப்ப ஓய்வு -விடுப்பை சேர்த்துவைக்க வாய்ப்பு -01.01.2016 முதல் ஓய்வுபெற்றவர்களுக்கும் உயர்த்தப்பட்ட பணிக்கொடைகள் -குழந்தைகள் கல்விபயில அல வன்ஸ் -பணிக்கொடைகளை ரூபாய் 5 லட்சமாக உயர்த்துதல் -பதவி உயர்வுகள் என அரசால் நியமிக்கப்பட்ட கமிட்டி பரிந்துரைத்த சிபாரிசுகளை இந்த அரசும் அஞ்சல் துறையும் தானாகவே முன்வந்து செய்திருக்க வேண்டும் .
கமிட்டி அறிவிப்பிற்கு பிறகு மாநிலம் மாநிலமாக சென்று ஊழியர் சந்திப்பின் போது  மாண்புமிகு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் கொடுத்த வாக்குறுதி இதன் அடிப்படையிலாவது விடுபட்ட கோரிக்கைகளை அரசு பரீசீலித்திருக்க வேண்டும் .ஆனால் வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேறாததால் இன்று GDS மத்திய சங்கங்கள் மூன்று கட்ட போராட்டங்களை அறிவித்துள்ளன .இந்த  இயக்கங்களில் நாம் முழுவதும் பங்கேற்போம் .களம் கானும் GDS தோழர்களுக்கு எங்களின் புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
                                                 உண்ணாவிரதம் 
நாள் 25.09.2018 இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
கூட்டு தலைமை தோழர் SK .ஐயப்பன் AIGDSU --C .ராஜ்குமார் NFPE -GDS
                                                    அரசாங்கத்தின் கொடூர 
                                                    தாக்குதலுக்கு முன்னால்  
                                                    நம்மிடம் உள்ள 
                                                   ஒற்றுமை எனும் -கயிற்றை 
                                                    இறுக பற்றி கொள்வோம் .
                                                    பதவியோ -பட்டமோ 
                                                    பகட்டோ -பரிகாசமோ 
                                                     எங்களை ஒன்றும் செய்திட முடியாது -
                                                    உரக்க சொல்லுவோம்
                                                    உறுதியுடன் இறுதிவரை தொடரும் 
                                                    நாங்கள் சகாக்கள் 
                                                     நாங்கள் சகோதரர்கள் 
                                                    நாங்கள் தோழர்கள் 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, September 22, 2018

                                 நெல்லை கோட்ட செய்திகள் 
IPPB கணக்குகளை பிடிக்க  தபால்காரர்களையும் /GDS ஊழியர்களையும் இலாகா வழிகாட்டுதலுக்கு புறம்பாக வற்புறுத்தும் அஞ்சல் நிர்வாகத்தை கண்டித்து தமிழக அஞ்சல் நான்கு சங்கம் சார்பாக 28.09.2018 அன்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்த அறைகூவல் விடப்பட்டுள்ளது .இன்று IPPB கெடுபிடி பாளையில் தானே நமக்கில்லை என்றில்லாமல் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள கேட்டு கொள்கிறோம் 
------------------------------------------------------------------------------------------------------------------
 அஞ்சல் நான்கின் கோட்ட பொறுப்பு செயலராக தோழர் T .புஷ்பாகரன் போஸ்ட்மேன் பாளை அவர்கள் 22.09.2018 முதல் 06.10.2018 வரை பணியாற்றுகிறர்கள் .அஞ்சல் நான்கின் கோட்டசெயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் 15 நாட்கள் சொந்த விடுப்பில் சென்றுள்ளதால் இந்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
--------------------------------------------------------------------------------------------------------------------
நேற்று 21.09.2018 அன்று தூத்துக்குடியில் நடந்த அஞ்சல் நான்கின் தென்மண்டல கோட்ட செயலர்கள் கூட்டத்தில் நமது அஞ்சல் நான்கின் பொறுப்பு செயலர் தோழர் T .புஷ்பாகரன் அவர்கள் பங்கேற்று கோட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்தார்கள் .அவர்களுடன் தோழர்கள் ஜேக்கப் ராஜ் C.வண்ணமுத்து சாகுல் தோழர் KG.குருசாமி ஆகியோர் பங்கேற்றனர் .
-----------------------------------------------------------------------------------------------------------------



Thursday, September 20, 2018

                                                    முக்கிய செய்திகள் 
மாநில நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள வரைவு சீனியாரிட்டி பட்டியலில் உள்ள குறைபாடுகள் குறித்து விண்ணப்பிக்கும் ஊழியர்கள் விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம் .
குறிப்பாக மதிப்பெண் பட்டியல் கிடைக்காத தோழர்கள் அந்த ஆண்டின் கடைசி நபராக நிர்ணயம் செய்யப்படுவதால் எந்த அளவிற்கு சீனியாரிட்டி பாதிக்கப்படுகிறது என்பதனை பார்க்கும் போது தெரியவருகிறது .இது குறித்து மொத்த விண்ணப்பங்கள் வந்தவுடன் மாநிலச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படும் .இதோ ஒரு மாதிரி விண்ணப்பம் .மேலும் வேறு எந்தெந்த வகைகளில் சீனியாரிட்டி பாதிக்கப்பட்டுள்ளது என்பதனையும் தோழர்கள் தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறோம் .


From

               



                Tirunelveli– 627001

To

                The SSPOs
                Tirunelveli Division
                Tirunelveli – 627 002

                (through the proper channel)

Respected Sir,

                Sub:  Corrections in Draft Seniority list of PAs – reg

                Ref:  B1/CGL/Dlgs dated at Tirunelveli 627 002 the 17.09.2018

                I wish to submit the following few lines for your kind consideration and corrections.

                With reference to the Draft Seniority List of Pas, The following discrepancies are noticed.

                My date of Birth has been wrongly mentioned as _______________ instead of ______________.  I have enclosed my SSLC mark Sheet copy for your reference.

                As per the draft seniority list of PAs, my seniority is mentioned at Sl. No. __________, where my marks are noted as N/A.  But it is to bring your kind notice that my training mates at my parent division, ______________  appointed on ____________________  listed with their corresponding marks as follows:

Ser No
Name
S/S
Marks obtained as per the select list
Present Division













                The above mentioned officials are junior to me as per my appointment order ( copy enclosed) and I am sure that my marks would also be available at ________________  Division.  So, I request that marks may kindly be obtained from _________________ Division and be re-arranged my seniority in Draft Seniority List of PAs which I expect to be around Ser. No. __________________.

                Hence, I request you to kindly do the needful.

                Thanking you,

Encls:-   1.  Mark sheet copy
                2.  Appointment order copy
                                                                                                                                Yours Faithfully,


Date :   14.09.2018                                                                                            (                                   )



Wednesday, September 19, 2018

 நெல்லையில் நடைபெற்ற 1968 போராட்ட பொன்விழா -போராட்ட நாயகர்களுக்கு பாராட்டு விழா ---NJCA அறைகூவலுக்கு இணங்க ஆர்ப்பாட்டம் 
  இந்த முப்பெரும் விழா நிகழ்விற்கு பென்சனர் சங்க கோட்ட தலைவர் தோழர் A .பாலசுப்ரமணியம் (முன்னாள் கோட்ட செயலர் கோவில்பட்டி ) அவர்கள் தலைமை தாங்கி சிறப்புற நடத்தினார்கள் .1968 போராட்டத்தில் கலந்து கொண்ட13  போராளிகளுக்கு நெல்லை அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கங்கள் சார்பாக பொன்விழா நினைவு வெற்றி கேடயம் வழங்கப்பட்டது .
போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் 
தபால் பகுதி 
தோழர்கள் C .அருணகிரி DY போஸ்ட்மாஸ்டர் திருநெல்வேலி (R )
S .மந்திரமூர்த்தி APM SB PLC &போஸ்ட்மாஸ்டர் தென்காசி  (R )
S .வேலாயுதம் PA பாளையம்கோட்டை  (R )
RMS பகுதி 
தோழர்கள் SN .சுப்பையா  V .சண்முகம் 
தொலைதொடர்பு பகுதி 
தோழர்கள் S.சம்மன்சு M.பரமசிவன் தோழியர் VP.இசக்கியம்மாள் 
P.காளியப்பன் T.ஆவுடைநாயகம் P.பழனிவேலு S.முருகன் 
ரயில்வே பகுதி தோழர் J.கிளமண்ட் ஜோ .
 ஒவ்வொரு போராட்ட வீரர்களுக்கும் நமது முன்னணி தோழர்கள் நினைவு கேடயங்களை வழங்கி சிறப்பித்தார்கள் .இந்த தியாக வரலாற்றை நினைவு கூர்ந்து வருங்கால இயக்கங்களை வலுப்படுத்துவோம் .நன்றி 












 
 








                         1968 வேலைநிறுத்த பொன்விழா -
-நாள் 19.09.2018 இடம் பாளையம்கோட்டை HO நேரம் மாலை 6 மணி 
வாருங்கள் போராட்ட வீரர்களை வாழ்த்துவோம் 
 அன்பார்ந்த தோழர்களே !
            1968 செப்டம்பர் 19 யில் நடைபெற்ற ஒருநாள் வேலைநிறுத்தம் குறித்தும் அதன் மீது அரசு நடந்துகொண்ட மூர்கத்தனத்தை குறித்தும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் .அன்றைய ஒன்றுபட்ட திருநெல்வேலி கோட்டத்தில் (கோவில்பட்டி கன்னியாகுமரி நெல்லை ) இந்த வேலைநிறுத்தத்தில் நெல்லை கோட்டத்திலே பங்குபெற்ற ஒரே ஒரு தோழர் மாவீரன் துராபலி என்ற தோழர் மட்டும் தான் என்றிருந்தாலும் 1968 வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற பல தோழர்களை நம் கோட்டம் பிறகு பெற்றது .ஆம் பல்வேறு கோட்டங்களில் பணியாற்றி நெல்லைக்கு வந்த தோழர்கள் இன்றும் நம்முடன் இருகிறார்கள் .அவர்களால் நமது கோட்டத்திற்கு பெருமை .அவர்களைத்தான் இன்று நமது நெல்லை P3 P4 சங்கங்களின் சார்பாக பாராட்டி மகிழப்போகிறோம் .
1.தோழர் SN .சுப்பையா -இவர் திருநெல்வேலி RMS யில் பணிபுரிந்து R3 சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் .இன்று திருநெல்வேலி மத்தியஅரசு ஊழியர்கள் பென்ஷனர் சங்க மாவட்ட செயலராக ஒரு இளைஞரை போல் வலம் வருபவர் .மதிமுக கட்சியில் மாவட்ட அவைத்தலைவராக இருப்பவர் .திரு .வைகோ அவர்களை நாம் நமது கோரிக்கைகளுக்காக (150 PA களை மீண்டும் பணியில் சேர்க்கவும் -ED ஊழியர்கள் சம்பந்தமாக )சந்திக்க பலமுறை உதவி புரிந்தவர் .
2.தோழர் C .அருணகிரி -நமது கோட்ட சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் .1968 வேலைநிறுத்ததின் போது மதுரையில் பணிபுரிந்தவர் .அதற்காக இரு INCREMENT இரண்டு நிறுத்திவைக்கப்பட்டு பின்னர் ஆறுமாதமாக குறைக்கப்பட்ட விருதினை பெற்றவர் .
.தோழர் மந்திரமூர்த்தி மற்றும் தோழர் வேலாயுதம் அவர்களும் வேலைநிறுத்த காலத்தில் பிற கோட்டங்களில் பணியாற்றினாலும் பிற்காலத்தில் நமது கோட்டத்தில் பங்கேற்று பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்கள் .அதே போல் ரயில்வே மற்றும் தொலைதொடர்பு துறையில் பணியாற்றி வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தோழர்களையும் நாம் வாழ்த்துகிறோம் -வணங்குகிறோம் .
 1968 வேலைநிறுத்த போராட்டம் குறித்து பிரதமர் துணை பிரதமர் உள்துறை அமைச்சர்கள் என நாட்டின் முக்கிய அமைச்சர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்திய பெருமை அன்றைய நமது NFPTE தலைமைக்கு உண்டு .பாராளுமன்றத்தில் பலமாக விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது .அங்கீகாரம் பறிக்கப்பட்டது ஓராண்டுக்கு பிறகு ஏனைய சங்கங்களுக்குஅங்கீகாரம் மீண்டும் வழங்கப்பட்டது .NFPTE க்கு மட்டும் வழங்கப்படவில்லை  .அதை எதிர்த்து தோழர்கள் D.ஞானையா மற்றும் தோழர் OP குப்தா போன்ற தலைவர்கள் 8 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் (19.09.1969) மேற்கொண்டு ராணுவபலமிக்க அன்றைய அரசாங்கத்தை நம் பக்கம் திருப்ப வைத்தனர் .புதுபுது சங்கங்களுக்கு (FNPO)  அரசால் தானாகவே அங்கீகாரம் வழங்கப்பட்டது .கொள்கைரீதியான இரு பிரிவுகள் சங்கத்தில் இருந்தாலும் அவைகள் இயக்க செயல்பாட்டை ஊனமாக்கவில்லை -முடக்கவில்லை ஆரோக்கியமான ஜனநாயகத்தில் நமது இயக்கம் பூத்து குலுங்கிய பழைய நாட்களை நினைத்து பார்க்கிறோம் .JCM அமைப்பை ஏற்கவா வேண்டாமா என்றபோது உறுதியாக ஏற்று அதில் பங்கேற்று அரசாங்கத்துடன் முதன்முறையாக DIS-AGREEMENT என துணிச்சலான பதிவினை பதிந்ததுடன் அதன் பின் பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதும் JCM முடிவினை சுட்டிக்காட்டி பேச்சுவார்த்தைக்கு செல்ல மறுத்ததும் பொற்கால தலைவர்களின் மகத்தான முடிவுகள் .இந்த வரலாறு நமது இயக்கத்திற்கு மட்டும் தான் உண்டு .இதோ 1969 அன்றைய பாரத பிரதமர் திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்களை சந்தித்து பேசும் நமது தலைவர்கள் .இந்த மகத்தான தலைவர்களை பெற்ற நமது சம்மேளனத்தின் புகழை மென்மேலும் உயர்த்தி பிடிப்போம் .வாழ்க போராளிகள் .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 

Tuesday, September 18, 2018

                                              நெல்லை கோட்ட செய்திகள் 
கடந்த 06.09.2018 மாதாந்திர பேட்டிக்கு பிறகு நமது கண்காணிப்பாளர் அவர்களை நேற்று சந்தித்து சில விஷயங்களை விசாரித்தோம் -விவாதித்தோம்  .குறிப்பாக சமீபகாலமாக அதிகரித்திருக்கும் டெபுடேஷன் விஷயத்தில் நேற்றே நமது SSP அவர்கள் நமது கோரிக்கையின் அடிப்படையில் வழிகாட்டுதல் உத்தரவை பிறப்பித்துவிட்டதாக கூறினார்கள் .மேலும் IPPB பணிகளில் பாளையம்கோட்டையில் தபால்காரர் தோழர்களை இலாகா வழிகாட்டுதலுக்கு மாறாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதையும் சுட்டி காட்டினோம் .ATR பதவிக்கான விருப்பமனுக்கள் விரைவில் கோரப்படும் என்றும் LSG காலியிடங்களில் விருப்பமுள்ள ஊழியர்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள் .மிக நல்லதொரு POSITIVE  அணுகுமுறையை நேற்றைய சந்திப்பிலும் உணர முடிந்தது 
                           1968 வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்ட தோழர்களுக்கு நாளை 19.09.2018 பாளையில் நடைபெறும் கூட்டத்திற்கு தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்டசெயலர்கள் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                மாமதுரையில் நள்ளிரவு வரை ஊழியர்கள் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் -காவல்துறை விரைந்தது -SSP மதுரை மாலையிலே தலைமறைவு 
PMG அவர்களின் உத்தரவைக்கூட செயல்படுத்த மறுக்கும் SSP மதுரைக்கெதிரான போராட்டங்கள் வெல்லட்டும் !வெல்லட்டும் !
  பலமாதங்களாக தொடந்து கடிதங்கள் -மெமோரண்டங்கள் -சந்திப்புகள் என ஊழியர் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி மதுரை அஞ்சல் மூன்று சங்கம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் போனதின் விளைவாக நேற்று 17.09.2018 அன்று கண்காணிப்பாளர் அவர்களை சந்திக்க நிர்வாகிகள் சென்றால் அதற்கு முன்பாகவே மாலை 04.30 மணிக்கு அலுவலகத்தை விட்டு SSP அவர்கள் வெளியேறுகிறார் .SSP வரும்வரை காத்திருக்க முடிவெடுத்த நிர்வாகிகள் கோட்ட அலுவலகத்திலே தங்கியிருக்க SSP அவர்கள் வேண்டுமென்றே தலைமறைவாகிறார் .இந்த அதிகார ஆணவமிக்க போக்கை கண்டித்து மதுரை கோட்ட ஊழியர்களால் பொறுமையின் எல்லை கடந்து முற்றுகை போராட்டமாக மாறுகிறது .நிர்வாகம் வழக்கம்போல் காவல்துறையை வரவழைக்கிறது -கோட்ட அலுவலக ஊழியர்களிடம் NFPE நிர்வாகிகள் மீது புகார் கொடுக்க வற்புறுத்துகிறது -ASP களை விட்டு காவல் துறையிடம் புகார் அளிக்க வற்புறுத்துகிறது .ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு நிற்கும் எங்கள் தோழர்கள் முன் செல்லாக்காசாகிவிட்டது .இரவு 12 மணிவரை நீடித்த முற்றுகை போராட்டம் ஒரு முடிவுக்கு வந்து மீண்டும் நம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்க முடிவெடுத்துள்ளது .களம் கானும் தோழர் தோழியர்களுக்கும் தோழர் சுந்தர மூர்த்தி (முன்னாள் மாநில செயலர் )தோழர் கிருஷ்ணமூர்த்தி கோட்டசெயலர் மதுரை அவர்களுக்கும் நெல்லை NFPE சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
1968 வேலைநிறுத்த பொன்விழா நினைவுநாளை கொண்டாடும் இந்நேரத்தில் பழைய அடக்குமுறை -பழிவாங்கல் -கோரிக்கைகள் நிராகரிப்பு போன்ற சர்வாதிகாரம் இன்னும் மதுரை போன்ற கோட்ட அதிகாரிகளால் அரங்கேறுவது குறித்து வெட்கமும் வேதனையும் வருகிறது . நீதி கேட்டு போராடுவது மதுரைக்கு ஒன்றும் புதிதல்ல 
நீதி தடுமாறியவரின் நிலையினை அதிகாரிகள் உணர வேண்டும் .
                                   தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 





Monday, September 17, 2018

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
             16 நாட்கள் வரலாற்று சிறப்புமிக்க வேலைநிறுத்தம் செய்த GDS  ஊழியர்களுக்கு இன்னும் கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கையில் உள்ள விடுபட்ட சாதகமான அனைத்து பரிந்துரைகளையும் அமுல்படுத்தக்கோரி அனைத்து சங்கங்களின் சார்பாக வருகிற 25.09.2018 செவ்வாய் அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு நமது NFPE அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன .ஆகவே நெல்லையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுகொள்ளகிறோம் 
---------------------------------------------------------------------------------------------------------------------
தபால் காரர் /MTS யில் இருந்து எழுத்தர் தேர்விற்கு தயாராகும் தோழர்களுக்கு நெல்லை கோட்ட சங்கம் சார்பாக பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கப்படவுள்ளன .ஆர்வமுள்ள தோழர்கள் திரு .பாலசுப்ரமணியம் Retd ASP (9442149339) அவர்களை தொடர்புகொள்ள கேட்டுக்கொள்கிறோம் 
---------------------------------------------------------------------------------------------------------------------
போனஸ் இந்த ஆண்டும் அதிகபட்ச நாட்கள் 60 என்பதனை மாற்றும் நிலையில் அஞ்சல் வாரியம் தயாராக இல்லை .இதுகுறித்து ஒருசில சங்கங்கள் அஞ்சல் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளன 
---------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, September 15, 2018

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !.
             நெல்லை கோட்ட பட்டியல் இதோ !
 அஞ்சல் எழுத்தர்களுக்கான மாநில அளவிலான பணிமூப்பு பட்டியல் மாநில நிர்வாகத்தால் 12.09.2018 அன்று வெளியிடப்பட்டுள்ளது .இதில் ஏதேனும் விடுதல் -சேர்த்தல்  - சீனியாரிட்டி பாதிப்பு -இருப்பின் அதை 01.10.2018 குள் கோட்ட அலுவலகத்திற்கு எழுத்துபூர்வமாக தெரியப்படுத்தவேண்டும் .கோட்ட அளவில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தான் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது .சீனியாரிட்டி எந்த  அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதை annexure இல் குறிப்பிடப்பட்டுள்ளது .
 குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்கவும் .விண்ணப்பித்த தோழர்கள் கோட்ட சங்கத்திற்கு அதன் நகல் ஒன்றையும் அனுப்பி வைக்கவும் .சுமார் 850 பக்கங்கள் கொண்ட பட்டியலை நமது நெல்லைக்கோட்டத்திற்கு மட்டும் சுமார் 12 பக்கங்களாக தனியாக எடுத்து அனுப்பியுள்ளோம் .பார்க்க ...படிக்க ..கேட்டுக்கொள்கிரோம் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 
 19.09.1968 மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் --இந்த ஆண்டு 1968 வேலைநிறுத்த பொன்விழா ஆண்டாக அனுஷ்டிக்கப்படுகிறது .குறைந்தபட்ச ஊதியம் கேட்டு அதிகபட்சமாக உயிர் நீத்த ஊழியர்களின் தியாகத்தை போற்றுவோம் .பிகாங்கீர் பதான்கோட் உள்ளிட்ட நான்கு  இடங்களில் போலீஸ் காரர்களின் துப்பாக்கி சூட்டில் ஒன்பது ரயில்வே ஊழியர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தார்கள் .வேலைநிறுத்த முந்திய நாளிலே புது டெல்லியில் மட்டும் 1650 தபால் தந்தி ஊழியர்களும் 350 இதர மத்திய அரசு ஊழியர்களும் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர் .ரயில்வே பாதுகாப்பு துறைகளை விட தபால் தந்தி பிரிவில் வேலைநிறுத்த தாக்கம் அதிகமாக இருந்தது .8700 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் .44000 தற்காலிக ஊழியர்களுக்கு TERMINATION நோட்டீஸ் வழங்கப்பட்டது .10000  பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர் சுதந்திரத்திற்கு பிறகு நாட்டில் மூன்றாவது முறையாக ESMO (ESSENTIAL SERVICE ORDINANCE ) அமுல்படுத்தப்பட்டது .1960 வேலைநிறுத்தத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட JCM அமைப்பை நமது தலைவர் மிக  சரியாக பயன்படுத்தினார்கள் .1967 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் நடைபெற்ற JCM கூட்டத்தில் 1.தேவைகேற்ற குறைந்தபட்ச ஊதியம் 2.பஞ்சப்படியை அடிப்படை சம்பளத்தோடு இணைப்பது .3.பஞ்சப்படி கணக்கீட்டு முறையை மாற்றுவது என மூன்று கோரிக்கைகளை ஊழியர் தரப்பு வைத்தது .ஆனால் அரசு பிடிவாதமாக பஞ்சப்படி பார்முலா மாற்றுவதை அஜெண்டாவில் சேர்க்காமல் நிராகரித்தது .நாடுமுழுவதும் வேலைநிறுத்தத்தின் அவசியமும் ஊழியர்களிடையே கோபமும் அதிகரித்திருந்தது .அரசும் தன் பங்கிற்கு உள்துறை அமைச்சர் YB.சவான் மூலம் 25.08.1968 அன்று அரசு திறந்த மனதுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்தது .ஊழியர்களுடன் பேச்சுவார்தை என ஒருபுறமும் மறுபுறம் வேலைநிறுத்தத்தை முடக்க தலைவர்களை கைது செய்தும் தனது இயல்பான முகத்தை அன்றைய அரசு வெளிக்காட்டியது .ஆனாலும் திட்டமிட்டபடி 19.09.2018 அன்று காலை 06.00 மணிக்கு நாடுமுழுவதும் மத்திய அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது .நாடுமுழுவதும் 2.80 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றதாக அதிகாரபூர்வமாக செய்திகள் அறிவிக்கப்பட்டது .வேலைநிறுத்தம் ஒருநாள் என்றாலும் அதன் பாதிப்புகள் பல நாட்களாக நீடித்தது .பழிவாங்கல்கள் -கைது இவைகளை கண்டித்து கிட்டத்தட்ட ஒருமாத காலம் வரை விதிப்படி வேலை (WORK TO RULE ) கடைபிடிக்கப்பட்டது .பாரத பிரதமரின் நேரடி தலைஈ ட்டினால் விதிப்படி வேலை (WORK TO RULE ) முடிவுக்கு வந்தது .வேலை நிறுத்த நாட்களில் அரசு நடந்துகொண்ட மிகமோசமான அடக்குமுறைகளை குறித்து சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது .அன்றைய பிரதமர் திருமதி .இந்திரா காந்தி அம்மையார் அவர்களே ஊழியர்களின் வேலைநிறுத்தம்  எப்படி இந்த அளவிற்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தது என ஆச்சரியப்பட்டார்கள் . பெருமழைக்கு பின் வடிந்தோடும் மழைநீரை போல  ஓராண்டுக்கு பின் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற திரு VV.கிரி அவர்களிடம் வேலைநிறுத்த பழி வாங்குதலை முற்றிலுமாக நீக்கவேண்டும் என ஊழியர்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்று பழிவாங்குதலால் படிப்படியாக நீக்கப்பட்டன .19.09.2018  என்பது உயிர்பலி டிஸ்மிஸ் சஸ்பென்ஷன் என நம் முன்னோர்கள் அடக்குமுறைக்கு எதிராக விரும்பி ஏற்றுக்கொண்ட பதக்கங்கள் .ஆனால் இன்றோ NO WORK -NO PAY என்றாலும் ஊழியர்களை திரட்டுவது என்பது நமது நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தாலும் -தியாக தலைவர்களின் தியாகங்களை நெஞ்சில் நிறுத்தி முன்னேறுவோம் .
                                                       தொழிலாளி கையேந்தும் 
                                                      பிச்சைகாரனல்ல --சலுகை என்பதும் 
                                                      அரசு நமக்கு இடும் பிச்சையல்ல 
வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, September 12, 2018

                        நமது NFPE உறுப்பினர்களின் திருமண விழா 
தோழர் வேதமாணிக்கம் PA பாளையம்கோட்டை அவர்களின் திருமணம் இன்று 12.09.2018 அன்று சிவகிரி அருகில் நடைபெறுகிறது 
---------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் மணிகண்டன் PA திருநெல்வேலி HO அவர்களின் திருமணம் 13.09.2018 அன்று வேலூரில் நடைபெறுகிறது 
--------------------------------------------------------------------------------------------------------------------
தோழர் P .செல்வின் துரை மெயில் ஓவர்சியர் வள்ளியூர் அவர்களின் மகள் திருமணவிழா இன்று 12.09.2018 அன்று காவல்கிணறு அந்தோனியார் ஆலயத்தில் நடைபெறுகிறது 
---------------------------------------------------------------------------------------------------------------------------மணவிழா கானும் மணமக்கள் பல்லாண்டு வாழ்க என நெல்லை NFPE சார்பாக வாழ்த்துகிறோம் 

Monday, September 10, 2018

                                               வருந்துகிறோம் 
தோழர் P .மதனகோபால் GDSMD பத்மனேரி அவர்கள் இன்று பிற்பகல் பணிநேரத்திலேயே மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது இறுதி சடங்கு நாளை சிவசண்முகபுரம் களக்காட்டில் நடைபெறும் .தோழரின் மறைவிற்கு NELLAI NFPE மற்றும் GDS சங்கங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது .

                                              முக்கிய செய்திகள் 
அஞ்சல் துறையில் உள்ள இன்சூரன்ஸ் தனி நிறுவனமாக அறிவிக்கப்படும் என  .மீண்டும் நமது அமைச்சர் அறிவிப்பு .
 தும்பை  விட்டு வாலை பிடித்த கதையாக IPPB துவக்க நாளன்று விழாவை புறக்கணித்தோம் என்றில்லாமல் இதிலாவது நமது மேல்மட்ட அமைப்புகள் பிரச்சினையை அமைப்பு ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் .இதற்கும் IPPB போல் அதிக சம்பளத்திற்கு LIC யில் இருந்து கூட ஆட்கள் இறக்குமதி செய்யப்படுவார்கள் -மீதி வேலையை நம் ஊழியர்களேபயிற்சிகள் ஏதுமின்றி பார்ப்பார்கள் -மிச்சமிருக்கும் கட்டிடத்தில் பாதியை கொடுப்பார்கள் ...........
------------------------------------------------------------------------------------------------------------------------
நெல்லையில் GDS சங்கங்களின் சார்பாக நடைபெறும் கீழ்கண்ட இயக்கங்களுக்கு ஆதரவு கொடுப்போம் .
1.  25.09.2018- கோட்ட தலைமையிடங்களில்  ஒருநாள் உண்ணாவிரதம்.
2.   04.10.2018-  மாநில அஞ்சல்துறை தலைமை இடங்களில் ஒருநாள் உண்ணாவிரதம் .(சென்னை )
3.   10.10.2018- புதுடெல்லியில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Sunday, September 9, 2018

                                               நெஞ்சின்   நினைவலைகள் -1
2006 ஜூவாலஜி அகில இந்திய மாநாட்டு முடிவுகள் அஞ்சல் மூன்றின் தொழிற்சங்க வரலாற்றில் அவ்வளவு எளிதாக யாரும் மறக்க முடியாத திருப்பத்தை தந்தது .CHEMICAL CHANGE என்று சொல்வார்களே அந்த ரசாயனமாற்றத்தை மத்திய சங்கம் கண்டது .ஆம் தமிழகம் பொதுச்செயலர் பதவி (தோழர் KVS )செயல் தலைவர் பதவி (தோழர் K .ராகவேந்திரன் ) உதவி பொது செயலர் பதவி (தோழர் K .பன்னீர் செல்வம் ) என மூன்று முக்கிய பதவிகளை மொத்தமாக அள்ளியது .14.09.2006 முதல் 17.09.2006 வரை நடைபெற்ற அகிலஇந்திய மாநாட்டில் அண்ணன் பாலு அவர்களின் ராஜ தந்திரம் அதனை தொடர்ந்து அமைக்கப்பட்ட கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று தந்தது .பொதுச்செயலர் பதவியை நமது அணிக்கு பெற்று தருவதில் அண்ணன் காட்டிய தீவிரம் ஏன் பிடிவாதம் என்றுகூட சொல்லலாம் அந்த அளவிற்கு அந்த தலைவனின் உறுதியே வெற்றியாக உருமாறியது .அஞ்சல் மூன்றின் ALL INDIA KING MAKER BALU என வடபுலத்தவரும் மேற்கு வங்கம் மற்றும் கேரளா தோழர்களும் வாழ்த்திய காட்சிகள் இன்னும் நமக்கு பசுமையாக இருக்கிறது .இது குறித்து தமிழக அஞ்சல் முழக்கம் (தமிழ் மாநிலச்சங்கத்தின் அதிகாரப்பூர்வமான இதழ் )  செப்டம்பர் -அக்டோபர் 2006 இதழில் வந்த செய்தியை உங்கள் பார்வைக்கு தந்துள்ளோம் .மேலும் அண்ணன் பாலுவின் உற்ற தோழன் அண்ணன் BALM .ஆனந்தராஜ் அவர்களுக்கு நடைபெற்ற பாராட்டுவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படமும் இத்துடன்கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது . (தொடரும் )
 தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் 










Saturday, September 8, 2018

அன்பார்ந்த தோழர்களே !
 நமது மாநில சங்க நிர்வாகிகள் டெல்லி பேரணியை முடித்துவிட்டு 06.09.2018 அன்று அஞ்சல் மூன்றாம் பிரிவில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளை நமது சம்மேளன பொதுச்செயலருடன் நமது அஞ்சல் வாரியத்திடம் எடுத்து விவாதிக்க சென்றதையும் அங்கு சந்தித்து பேசிய விஷயங்களையும் நமது மாநில செயலர் அவர்கள் பதிவிட்டிருந்தார்கள் .கிட்டத்தட்ட 28 கடிதங்களை கொடுத்து விவாதித்திருக்கீறார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான் .ஆனால் அதில் பெரும்பகுதி நமது மத்திய செயற்குழுவில் (26.02.2018 மற்றும் 27.02..2018 ) விவாதித்து 20 அம்ச கோரிக்கைகளாக வடித்தெடுத்து அவைகளை வலியுறுத்தி நாம் மூன்று கட்ட இயக்கங்களை(12.03.2018-13.03.2018)உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் 20.03.2018-21.03.2018 கருப்பு பேட்ஜ் அணிதல் இறுதியாக 25.042018 அன்று CPMG அலுவலகம் முன்பு தர்ணா என்று தொடர் இயக்கங்களை  நடத்திய பிறகும் நமது கோரிக்கைகள் அப்படியே கிடப்பது தான் வருத்தமளிக்கிறது .ஆகவே இந்த அரசுக்கு நமது மனுக்கள் எந்த அளவிற்கு மாற்றத்தை கொடுக்க போகிறது என்பது நமக்கு தெரிந்ததே ! நமது ஒப்பற்ற தலைவர் 09.10.1921 லாகூரில் ஆற்றிய தலைமை உரை தான் நினைவுக்கு வருகிறது "Take it from me Brothers that petitions and memorials and supplications will count for nothing so long as you do not organise yourselves in a manner to convince the Government that will no longer stand nonsence  ...........
     நமது கோரிக்கைகளுக்காக தனித்த போராட்டத்தை ஊழியர்கள் எதிர்பார்கிறார்கள் .05.09.2018 பேரணி கூட ஊடகங்களில் வேறு விதமாகத்தான் சித்தரிக்கப்பட்டது .பொது வேலைநிறுத்தங்களோடு நின்று விடாமல் நமது அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை மட்டும் முன்னிறுத்தி போராட்டங்கள் நடைபெறவேண்டும் .எப்படி ஒன்றுபட்ட GDS போராட்டம் அரசையும் -அஞ்சல் வாரியத்தையும் அசைத்து கொடுத்ததும் நாம் கண்கூடாக பார்த்ததுதான் .நிச்சயம் நமது பகுதி கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலைநிறுத்தங்களை அறிவியுங்கள் .வேலைநிறுத்தமும் வெல்லும் -கோரிக்கைகளும் வெல்லும் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, September 7, 2018

                                          வருந்துகிறோம் 
தோழியர் D.ஹேனா ஜெயரத்னா PA நாங்குநேரி அவர்களின் அன்பு தகப்பனார் திரு .டேனியல் (72) அவர்கள் இன்று மாலை 5 மணி அளவில் இயற்கை ஏய்தினார்கள் என்பதனை வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறோம் .அன்னாரது அடக்க ஆராதனை நாளை 08.09.2018 மாலை 4 மணி அளவில் டக்கரம்ம்மாள் புரம் மறுரூப  ஆலயத்தில் நடைபெறும் .தந்தையை இழந்து வாடும் தோழியர் தம் குடும்பத்திற்கு நெல்லை NFPE இன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம் .
இல்லம் -ஜோதிபுரம் டக்கரம்ம்மாள் புரம்

                                             முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !
       நேற்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் கீழ்கண்ட 25 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன .சுமார் 1.30 மணிநேரம் நீடித்த இந்த சந்திப்பு முழு திருப்திகரமாக அமைந்தது .
1.டெபுடேஷன் பிரச்சினையில் 06.04.2016 அன்று வெளிவந்த கோட்ட அலுவலக உத்தரவை சில தலைமை தபால் அதிகாரிகள் தவறுதலாக பின்பற்றினார்கள் என்றும் விருப்பு வெறுப்புடன் செயல்பட்ட பழைய நிகழ்வுகளை சுட்டிக்காட்டி வருங்காலங்களில் எந்த விதமான விதி மீறல்களுக்கும் இருக்காது என்றும் LRPA தனியாகவும் Time scale PA தனியாகவும் MACP 1 என மூன்று அடிப்படையில் பிரிக்கப்பட்டு முதலில் LRPA  அடுத்து LRPA இல்லையென்றால் T /S PA என்றும் இந்த இரு பிரிவிலும் இல்லையென்றால்தான் MACP 1 ஊழியர்களை அனுப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது .
2.கோட்ட அலுவலகத்தில் இருந்து டெபுடேஷன் உத்தரவு பிறப்பிக்கப்படும் போதே LRPA உள்ள அலுவலகங்களுக்கு DIRECTION கொடுப்பது என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .
3.காலியாகவுள்ள ATR பதவிகள் உடனடியாக நிரப்பட மீண்டும் புதிதாக விண்ணப்பங்கள் கோரப்படும் .
4.HSG II பதவிகள் LOCAL ARRANGEMENT என்ற அடிப்படையில் CIRCLE OFFICE வழிகாட்டுதலின்படி நிரப்பப்படும் .
5.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக கட்டிட பராமரிப்பு பணிகள் குறித்து ஏற்கனவே மண்டல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது .
6.நிறுத்திவைக்கப்பட்ட SPM களுக்கான SPEEDPOST INCENTIVE வழங்கப்படும் .இதுவரை INCENTIVE விண்ணப்பிக்காத SPM ஊழியர்களும் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ள படுகிறார்கள் .
7.திருநெல்வேலி BPC க்கு நிரந்தர ஆள் நியமிக்கப்படும் .
8.பொட்டல்புதூர் SO விற்கு 28.09.2018 முதல் கூடுதல் ஒரு PA அனுப்பப்படுவார்கள் .
9.திருநெல்வேலி கணக்கு பிரிவிற்கு கூடுதலாக ஒரு சிஸ்டம் விரைவில் வழங்கப்படும் .
10.சங்கர்நகர் SO விற்கு லேசர் பிரிண்டர் விரைவில் கொடுக்கப்படும் .
11.பணகுடி SO வில் 1+2 பதவிகள் பராமரிக்கப்படும் .
12.திருநெல்வேலி CPC க்கு ஒரு GDS பதவி இணைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் .
13.பாளையம்கோட்டை BPC க்கு போதுமான கூடுதல் இடம் கொடுக்க உறுதி கொடுக்கப்பட்டது 
14.திருநெல்வேலி டவுன் SO விற்கு காலை மெயில் விரைந்துகிடைக்க பரிசீலிக்கப்படும் .
15.தொண்டர் பஜார் அலுவலகத்தை RELOCATE செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்டது 
16.1986 க்கு முன் பயிற்சிக்கு சென்ற ஊழியர்களுக்கு INDUCTION காலத்தை TBOP /BCR பதவி உயர்வுக்கு எடுக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது .இதற்காக விருதுநகர் மற்றும் சென்னை வடகோட்டத்தில் போடப்பட்ட உத்தரவுகளை எடுத்துக்காட்டி விவாதித்தோம் .
17.2011 கால கட்டத்தில் விடுபட்டுப்போன ஊழியர்களுக்கான CONFORMATION  உத்தரவு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்படும் .
18.PA  DGL பட்டியல் விரைந்து வெளியிட படும் என்றும் தெரிவிக்கப்பட்டது .
 இதுபோக திசையன்விளை முலைகரைப்பட்டி அலுவலக பிரச்சினைகளும் விவாதிக்கப்பட்டது .
 மேலும் விடுபட்ட அனைத்து செய்திகளும்  எழுத்துப்பூர்வமான மினிட்டிஸ் வந்தவுடன் தெரிவிக்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, September 6, 2018

தலைநகர் புதுடெல்லியில் மத்திய அரசு ஊழியர்களின் எழுச்சி பேரணி -05.09.2018"""""'""""'"''""""""""""""""""""""""""""""
Massive workers rally in New Delhi on 5.9. 2018.
""""''""""""""""""""""""""""""""""""""""""
A massive workers rally comprising various Trade unions under CITU and Confederation of Central Govt Employees & workers, All India State Govt Employees Federation, BSNLEU, AIIEA,  AIKS,  AIAWU etc. was conducted this day at New Delhisuccessfully.
Thousands  of workers have participated in the rally that rocks New Delhi Parliament street and Jantar Mantar area. 
Many of the common demands are focussed including control over 
the prices, raising of minimum wages, protection of labour rights, remunerative price for farm produce, etc 
and many of the sectional demands of Central, State Govt Employees are also focussed, including scrapping of NPS, raising the minimum wage, allowances on 7th 
CPC etc. 



Wednesday, September 5, 2018

                                               நெல்லை கோட்ட செய்திகள் 
1.தபால்காரர்களுக்கு ஐந்தாவது சம்பளக்குழுவில் அடிப்படை சம்பளம் ரூபாய் 3050 நிர்ணயம் செய்வது தொடர்பான நமது அஞ்சல் நான்கின் மாதாந்திர பேட்டியில் விவாதிக்க கொடுத்திருந்தோம் .அதன் அடிப்படையில் கோட்ட நிர்வாகத்திடம் இருந்தும் அதன் இன்றைய நிலை குறித்து தலைமை அஞ்சலகங்களுக்கு கேட்கப்பட்டுள்ளது .
2.டெபுடேஷன் அனுப்ப TURN REGISTER பராமரிக்கப்படுகிறதா என்ற விளக்கங்களும் கோட்ட  அலுவலகத்தால் கேட்டு பெறப்பட்டுள்ளன .
3.CPC (PLI &RPLI ) பிரிவுகளில் பணியாற்றும் OA மற்றும் PA களை டெபுடேஷன் மற்றும் இதர ARRANGEMENT களுக்கு எடுக்க கூடாது என்று மாநில நிர்வாக வழிகாட்டுதலின் படி மண்டல நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது .கோட்ட நிர்வாகமும் அதனை உறுதிப்படுத்திடுமாறு தலைமை அஞ்சலங்களுக்கு e mail மூலம் அனுப்பியுள்ளது .


                 நாளைகாலை 10 மணிக்கு  நடைபெறும் மாதாந்திர பேட்டியில் கலந்துகொள்ளும் தோழர்கள் ...
அஞ்சல் மூன்று 1.SK .ஜேக்கப் ராஜ் 2.C.சங்கர் 3.RV.தியாகராஜ பாண்டியன் 
அஞ்சல் நான்கு 1.SK .பாட்சா 2.சுபாஷ் சிந்து 3.தங்கராஜ் 
 தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, September 4, 2018

அன்பார்ந்த தோழர்களே !
                            மாதாந்திர பேட்டியின் மகிமை தெரிகிறது --தொழிற்சங்கத்தின் மகத்துவம் புரிகிறது .
             மாதாந்திர பேட்டி என்றால் வழக்கமாக ஒரு சடங்காக சம்பிரதாயத்திற்காக நடக்கும் கூட்டம் என்றும் -மேலே இருந்து கேள்வி கேட்பார்கள் என்பதற்காக சில அதிகாரிகள் கட்டாயத்தின் பேரிலும் நடத்திய கூட்டமாகவும் பல காலங்கள் இருந்திருக்கலாம் .நமது தோழர்கள் கூட மாதாந்திர பேட்டி என்றால் SSP அவர்களுடன் டீ குடிக்கத்தானே போகிறீர்கள் என கிண்டல் அடித்ததும் உண்டு .சிலகூட்டங்களில்  எடுக்கப்படும் முடிவுகள் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வருவதே கிடையாது -வழக்கமான தட்டிக்கழிப்பான பதில்களோடு முடிந்திருக்கும் கூட்டமும் உண்டு .ஆனால் இன்று நமது கோட்டத்தில் வருகிற 06.09.2018 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டிக்கு NFPE P 3 P 4 மற்றும் GDS சங்க சப்ஜெக்ட் களுக்கு நேற்றிலிருந்தே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய சப்ஜெக்ட் நகல் அனுப்பப்பட்டு அதன் தற்போதைய நிலை என்ன என்று மின்னல் வேகத்தில் மின்னஞ்சலில் கேள்விகள் கேட்கப்படுகிறது .ஆக நிச்சயம் 06.09.2018 நடக்கும் மாதாந்திரப்பேட்டி நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம் .01.09.2018 அன்று நடைபெற்ற செயற்குழுவில் கொடுக்கப்பட்ட பிரச்சினைகளை நாம் மாதாந்திர பேட்டிக்கு அனுப்பியுள்ளோம் .அதன் பிறகு வந்த திசையன்விளை அலுவலக பிரச்சினை -MIS பழைய பில்கள் -உள்ளிட்டவைகளும் விவாதிக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
NFPE
                  ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                               TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MM/ dated at Palayankottai- 627002 the 03.09.2018

To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,
            Sub:    Subjects for monthly meeting -reg
*****
              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.

1.      It is requested to depute officials for deputation from offices only after deputing the LRPAs attached to Palayankottai HO.

2.      It is requested to instruct the Head Postmasters to maintain turn register for deputation while deputing officials when no LRPA is available for deputation and the officials in the office should be permitted to peruse the same to ensure transparency in administration.

3.      The posts of Asst. Treasurer available at Tirunelveli HO and Palayankottai HO are vacant for more than a year.  It is requested to fill up the same after calling for the willingness among the eligible officials.

4.      It is requested to fill-up the vacant HSG-I and HSG-II posts on officiating basis by calling for volunteers from the eligible officials viz., LSG officials and who are in the erstwhile Grade Pay of Rs.4200/- & Rs.4600/- (now Pay matrix 6 & 7).

5.      It is requested to call for the willingness of the LSG Officials who are now working in LSG Treasurer Posts for the Class C Offices and post them according to their option.
6.      The quarters portion of the following offices are in dilapidated condition and lack of basic amenities to live with family and hence it is requested to take appropriate action to dequarterise the same.

a)     Vijayanarayanam SO
b)     Rajavallipuram SO
c)     Manimuthar Project SO
(d )Kulavanigarpuram 

7.      Request to carry out the civil maintenance work at Palayankottai HO.  We are constrained to bring the fact of damage of the sun-shade near WCTC which will fall anytime.

8.      It is requested to refund the amount deducted for the LTC availed by the officials for Jammu & Kashmir immediately based on the audit observations.

9.        It is requested to sanction the Speed Post incentive bills which was stopped earlier.

10.    It is requested to post a regular PA to BPC, Tirunelveli HO and supply required equipments and stationeries.

11.  Request   to fill up the vacant PA post of Pottalpudur and Pattamadai S.O. both the stations are having heavy workload.Hence it can't be managed by single handedly in the CSI environment.

12.  .Request  to supply of cash counting machine to Vickramasingapuram S.O.

13.  Request  to replace the Batteries attached with the UPS of the following offices (a)Vickramasingapuram  (b)Kadayam S.O.(c) Tirunelveli Town (d) CPC Tirunelveli  (e)Vannarpettai
14.  .Request to supply of one additional system to Accounts Branch Tirunelveli HO
15.  Request to supply of one lazar printer to Sankarnagar SO
16.    Request to maintain the staff strength of Panagudi 1+2
17.   Request to attach one GDS to CPC Tirunelveli as the partial arrrangenent of provoding MTS assistance is not sufficient
18.   Request to provide additional space for BPC Palayamkottai
19.   Request to make alternative morning mail arrangement to Tirunelveli Town
20.   Request to supply of sufficient SB Passbooks to needed offices.
21.   Request to relocate Tondar Bazar SO , the excising place is not suitable for in all aspects.
22.   Request for early Shifting of Tirunelveli South PO to a better one.
23. Early implementation of  recent Dte .orders on counting of induction training period prior 01.01.1986 for grant of financial upgradation of TBOP/BCR
24. Confirmation orders were issued on 19.07.2018 for the eligible PAs. The list contains only 19 officials whereas nearly 40 officials are deserves for the same. The remaining officials have also completed the prescribed service and fulfilled the conditions
25. The Divisional gradation list of PA Cadre is due for 2017 and the last one was issued during the year 2013.  Hence we request the SSPOs to consider release of the same at the earliest.
                         The following officials will attend the meeting.
1.      S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA Tirunelveli HO
2.      C.Shankker SPM Tirunelveli R.S.
3.      R.V.ThiyagarrajaPandiyan Br.Sec &SPM Alwarkurichi


             
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]