...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, August 31, 2020

 தோழர் V.கடற்கரையான்டி  DY POSTMASTER நாகர்கோவில் அவர்களின் பணி நிறைவு விழா சிறக்க வாழ்த்துகிறோம

நான் 31.08.2020   ---   இடம்.நாகர்கோவில

அஞ்சல் சேவையெனும் 

அற்புத சேவையை 

முத்து நகரில் தொடங்கி

வீரமிகு நெல்லை........

தீரமிகு கோவில்பட்டி  தொடர்ந்து 

நாஞ்சில் வரை விரிந்து கிடக்கும் எங்கள்

கடற்கரையே நீவிர் வாழ்க!

கள்ளம் கபடமற்ற உள்ளம் 

கொண்ட உன்னத தோழர் 

கடற்கரை அகலத்தை போல

 அகன்ற மனம் கொண்டவர்

 அதிகாரியாய் இருந்த நாட்களில் கூட 

எதிரியாய் எவருக்கும் தெரியாதவர்

நாட்டிலே பணிமூப்பு பட்டியலில் முதலில் இருந்தவரே!

பதவி ஏற்கும் போதும்

வந்த தடைகளை முறியடித்தவரே!

நீங்கள் சந்தித்த சவால்கள் எத்தனை? 

விளக்கங்கள் எத்தனை?

 விசாரணைகள் எத்தனை?

 அத்தனையும் சர்வ சாதாரணமாக 

எதிர்கொண்டவர் 

  அதிகாரிகளின் தொலைபேசிகளை 

அலட்சியமாய் பார்த்தது 

அவர்களின் கோபங்களையும் 

நிதானமாக ரசித்தது 

உங்களை தவிர

வேறு யாராலும் முடியாது

ஊழியர்கள் நலன் காப்பதிலும் 

உடனிருப்பவர்களுக்கு

உதவி கரம் நீட்டியதிலும்

நிகரற்றவர் -சமூகத்தில் நிறமற்றவர்

ஏற்றுக்கொண்ட சங்கத்தில்

 பற்றுக்கோண்டு பயனித்தாய்

ஏற்றத்தாழ்வு வந்த போதும் 

கெட்டியாகவே பதிலலித்தாய்

உங்கள் பணி ஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துகள்

தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை


Friday, August 21, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                    முக்கிய செய்திகள் 

.*நெல்லை ஷிபா மருத்துவமனைக்கு CGHS  பயனாளிகள் பயன்படுத்திட அங்கீகாரம் கிடைக்கப்பட்டுள்ளத்து .விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளிவருகிறது .

*இன்று அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது .நமது கோட்டத்தின் சார்பாக எடுக்கப்படவுள்ள பிரச்சினைகள் 

1.கொரானா காலத்தில் ENUMERATION உள்ளிட்ட எந்த கணக்கெடுப்பும் நடத்தக்கூடாது .

2.தபால்காரர் அனைவருக்கும் 4G இணைப்புடன் கூடிய புதிய மொபைல் வழங்கிடவேண்டும் 

3.அடுத்த தேர்வுக்கான அட்டவணை வெளிவந்துள்ளதால் LGO தேர்வுக்கான 2019  UNFILLED VACANCY களை உடனே நிரப்பிடவேண்டும் 

4.AEPS திட்டத்தில் நமது சொந்த பணியான POSB பரிவர்த்தனை செய்திட அனுமதிக்கவேண்டும் 

5.IPPB இலக்கை அடையாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உபகோட்ட அதிகாரிகளின் மிரட்டலை  கட்டுப்படுத்தவேண்டும் 

6.திருநெல்வேலி கோட்டத்தில் மெயில் ஓவர்சியர் பதவிகளை தகுதியான மூத்த ஊழியர்களை கொண்டு நிரந்தரமாக நிரப்பிடவேண்டும் .தற்காலிக ARRANGEMENT முறையை நீக்க வேண்டும் 

7.வள்ளியூர் அஞ்சலகத்திக்கு ஒரு CASH ஓவர்சியர் பதவியை நிரப்பிடவேண்டும் 

8.வேலைப்பளுவுள்ள அலுவலகங்களில் புதிய தபால்காரர் பதவிகளை நிரப்பிடவேண்டும் 

9.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு அனுமதிக்கப்பட்ட 65 KV ஜெனெரேட்டர் விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் 

10.கொரானா பாதிப்பு முற்றிலும் தீரும் வரை எந்தவகையான மேளா களும் நடத்த தடைவிதிக்கவேண்டும் 

                                             நேற்றைய நன்கொடையாளர்கள் 

1.திருமதி  S.பாப்பா APM SB  TVLHO   ரூபாய் --500

2.தோழர் சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் P4 ரூபாய் 500

3.ரமேஷ் போஸ்ட்மேன் பத்தமடை ரூபாய் 500

தொய்வில்லாமல் நன்கொடைகளை வழங்கிவரும் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, August 20, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                              முக்கிய செய்திகள் 

*PLI /RPLI  DEATH CLAIM  செய்வதற்கு புதியபடிவம் வந்துள்ளது .அதேபோல் சிட்டிசன் சார்ட்டர் படி NORMAL DEATH CLAIM  30 நாட்களுக்குள்  EARLY DEATH CLAIM 90 நாட்களுக்குள் முடித்துக்கொடுத்திட வலியுறுத்தப்பட்டுள்ளது .

*காலாவதியான PLI /RPLI  பாலிசிகளை புதுப்பிக்க நவம்பர் வரை காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது 

*இலாகா தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை 14.08.2020 அன்று இலாகா வெளியி ட்டுள்ளது .

*கோவிட 19 சிகிச்சை மற்றும் அதனையொட்டி QURANTINE செய்யப்பட்ட நாட்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிடவேண்டும் என மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் வலியுறுத்தியுள்ளது 

                                                    நேற்றைய நன்கொடையாளர்கள் 

1.தோழர் குமரகுருபரன்ரூபாய்  500 (தூத்துக்குடி கோட்டத்தில் இருந்து திசையன்விளை உள்ளிட்ட பகுதிகள் நெல்லையோடு இனைந்தபொழுது அந்தப்பகுதிகளில் மறைந்த தோழர் சுடலையாண்டி அவர்களோடு இணைந்து நமது இயக்கத்தை  வழிநடத்திய  மூத்த தோழர் )

2. தோழர் I.மகாராஜன் ( LSG SPM)  பணிஓய்வு ரூபாய் 500

3.தோழர் R.மருதுசாமி முன்னாள் மாநில உதவி செயலர் மயிலாடுதுறை அவர்கள் ரூபாய் 1600 க்கு 12 புத்தகங்களை அனுப்பியுள்ளார்கள் (பட்டியல் தனியே ) கொடுக்கப்பட்டுள்ளது .மூத்த தோழர்கள் அணைவருக்கும் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, August 19, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                               முக்கிய செய்திகள் 

நமது கோட்டத்தில் MACP  I .II & III பதவியுயர்விற்கான கமிட்டி நேற்றுகூடியது .நமது SSP அவர்கள் சேர்மனாகவும் தூத்துக்குடி கண்காணிப்பாளர் மற்றும் நாகர்கோயில் சீனியர் போஸ்ட்மாஸ்டர் ஆகியோர்கள் உறுப்பினர்களாகவும் கொண்ட இந்த கமிட்டி நடப்பு காலம் வரையிலான பதவியுர்வு வரை  பரிசீலித்தது .

*HSG II UNFILLED  இடங்களில் பணியமர்த்தப்படும் LSG ஊழியர்கள் ரெகுலர் HSG II  ஊழியர்கள் வந்தால் தொடர்ந்து அந்த பதவிகளில் நீடிக்கமுடியாது என்றாலும் நாம் நினைக்கிறபடி  HSG II ஊழியர்கள் புதிதாக வந்துவிடப்போவதில்லை .இடமாறுதலில் பழைய PM GRADE II  இன்றைய HSG II ஊழியர்கள் வருவது மட்டுமே  சாத்தியம் .

IPPB மெகா மேளா AEPS பரிவர்த்தனை குறித்து சில உபகோட்ட அதிகாரிகள் கொஞ்சம் கடுமையாகவே நடந்துகொள்வதாக தெரிகிறது .இந்த காலகட்டம் கோரானாவால் நாடே ஏன் உலகமே முடங்கிக்கிடக்கும் சூழலில் தபால்காரர்கள் GDS ஊழியர்களை இப்படி மேளா மேளா என துன்புறுத்துவது குறித்து தமிழக அஞ்சல் நான்கு சங்கம் CPMG  அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளது .

                                                நேற்றைய நன்கொடையாளர்கள் 

1.பெயர் சொல்ல விரும்பாத தோழியர் --ரூபாய் 3000

2. தோழர் ஷேக் மாதர் பணிஓய்வு சேரன்மகாதேவி ரூபாய் 1000

 அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, August 18, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                               நமது NELLAI NFPE மகிளா கமிட்டிக்கு வாழ்த்துக்கள் 

நமது தொழிற்சங்க செய்திகளை பகிர்ந்துகொள்ளவும் தங்களது பிரச்சினைகளை தயக்கமின்றி விவாதிக்கவும்  தொழிற்சங்க செயல்பாடுகளில் தோழியர்களை முழுமையாக ஈடுபடுத்தவும் நமது கோட்ட மகிளா கமிட்டி தனக்கென்று தனி வாட்ஸாப் குரூப்பை தொடங்கியயு ள்ளார்கள் 

NELLAI NFPE QUEENS BEES  என்ற பெயரில் மகிளா கமிட்டி முன்னணி தோழியர்களே அட்மினாக இணைந்து இந்த குழு செயல்படுகிறது .இந்த அரும்பணியில்  மிக ஆர்வமாக களமிறங்கியிருக்கும் நமது கோட்ட மகிளா கமிட்டி நிர்வாகிகள் குறிப்பாக கன்வீனர் தோழியர் S.முத்துபேட்சியம்மாள் அவர்களுக்கு NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .ஏற்கனவே கடந்த நமது கோட்ட மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் NFPE மகிளா கமிட்டி கோட்ட சங்க நிர்வாகிகளுக்கு இணையான ஒரு அமைப்பாக செயல்படும் என்பதனை மெய்ப்பிக்கும் வகையில் தங்களது சேவையை தொடங்கியுள்ள அனைத்து தோழியர்களுக்கும் மீண்டும் எங்கள் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறோம் ..நமது தோழியர்களில் கவிஞர்கள் கதை ஆசிரியார்கள் பேச்சாளர்கள் வர்ணனையாளர்கள் நடிகர்கள் என பன்முகம் கொண்ட தோழியர்கள் உள்ளார்கள் என்பது நமக்கு கூடுதல் பெருமை .

                                நேற்றைய நன்கொடையாளர்கள் 

1.தோழியர் MP.விஜயா LSG OA  (RETD) (இன்றுவரை நமது கோட்ட சங்க பதிவுகளில் தனது கருத்துக்களை பதிவிட்டுவரும் தொழிற்சங்க ஆர்வலர் )

ரூபாய் 2000

2.தோழர் V.சங்கரன் PA  RETD தச்சநல்லூர் ரூபாய் 500

3.தோழர் A.நயினார் PA  RETD பேட்டை ரூபாய் 500

                                        அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு 

தபால்காரர் மற்றும் MTS சங்கத்தின் மாநில செயற்குழு வருகிற 21.08.2020 வெள்ளியன்று காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது .

                                                வரவேற்கிறோம் 

நமது கோட்டத்திற்கு புதிதாக வந்துள்ள தோழியர் வளர்மதி (APMSB HSGII ) பாளையம்கோட்டை அவர்களை NELLAI NFPE வாழ்த்திவரவேற்கிறது 

                     நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


                                               


Monday, August 17, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

1.LSG புதியபட்டியலில் இடம் பெற்றிடும் ஊழியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் அடைப்படையில் பதவிஉயர்வு இடமாறுதல்களை அளித்திடவும் UNFILLED HSG II 

பதவிகளை முன்கூட்டியே அடையாளம்காட்டிடவும்  வேண்டி கோட்ட நிர்வாகத்திற்கு நமது கோட்ட சங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது .அதன் நகல் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .

2.காவிட 19 பாதிப்பிற்குள்ளானவர்கள் சிகிட்சை முடித்து QUARANTINE காலத்திற்கு அவர்களுக்கு அதற்கான  சிறப்பு விடுப்பை விண்ணப்பிக்கவும் .

SR-1ல் Nature of leave என்னும் பகுதியில் WRIIL - Work Related Illness & Injury Leave என பூர்த்தி செய்யவும்.

CCS leave rules விதி எண்.44 படி இந்த விடுப்பை எடுக்க சட்டம் உள்ளது. கொரொனா தொற்று ஏற்பட காரணம் நாம் பணிக்கு வருவதே ஆகும். மற்றவர்களை போல் நாம் வீட்டில் இருந்தால் நமக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு. அரசாங்கம் உத்தரவிட்டதன் பேரில் தான் இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் பணிக்கு வந்து நோய் தொற்றுக்கு ஆளாகிறோம். ஆகையால் இந்த WRIIL விடுப்பு எடுக்க நமக்கு முழு உரிமை உண்டு. 

எனவே கொரொனா சிகிச்சை காலம், சிகிச்சை முடிந்து quarantineல் இருந்த காலம் என அந்த முழு காலத்திற்கும்  WRIIL விடுப்பை விண்ணப்பிக்கவும்.

NFPE

                ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                         TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.LSG  - / dated at Palayankottai- 627002 the 17.08.2020

 

TO 

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sub : Suggestions to fill up the vacant LSG Posts during implemention of Directorate order dated 05.12.2018.

The following suggestions are put forth for the kind consideration of the SSPOs.

Before implementing the orders of the Directorate dated 05.12.2018,

1. Notify the unfilled HSG II posts for the information of the eligible officials.

2. Based on that, willingness may please be called for from the eligible LSG officials.

3. After that, remaining vacant LSG posts may be notified and filled up.

4. If feasible, the previous practice of conducting counselling to the officials may please be considered.


                         Yours faithfully 

[S.K.JACOBRAJ]

 

 

 

 

Friday, August 14, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

*LSG பட்டியலில் விடுபட்டபோன தோழியர் சண்முகசுந்தரி அவர்களின் பெயரினை சேர்த்திட மீண்டும் மாநிலச்சங்கத்திற்கு வலியுறுத்தப்பட்டது .அதேநேரத்தில் மாநிலநிர்வாகத்திற்கு நமது கோட்ட அலுவலகம் மூலம் நேற்றும் விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது 

*நமது மாநிலசெயலர் அவர்கள் வெளியிட்ட நேற்றைய அறிக்கையில் மேலும்  ஒரு LSG  பட்டியல் விரைவில் வரவிருக்கிறது .என தெரிவிக்கப்பட்டுள்ளது 

*ACCOUNTS பிரிவிற்கான LSG பட்டியல் அடுத்தவாரம் வெளிவருகிறது 

*நேற்று நமது ASP(HOS ) அவர்களை சந்தித்து LSG மற்றும் HSG II காலியிடங்களால் எழுகின்ற LSG பதவிகளை  கணக்கிடுவது சம்பந்தமாக விவாதித்தோம் .இன்று அதுகுறித்த கடிதமும் கோட்ட சங்கத்தின் மூலம் கொடுக்கவுள்ளோம் .மீண்டும் கவுன்சிலிங் முறையில் LSG பதவிகளை நிரப்பிடவேண்டும் என நாம் எதிர்பார்க்கிறோம் .

*நமது NELLAI NFPE அலுவலகத்திற்கான நன்கொடைகளை வழங்கிவரும் தோழர்கள் /தோழியர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் .அதிலும் ஓய்வுபெற்ற நமது மூத்த தோழர்களின் /தோழியர்களின் பங்களிப்பு அபாரமானது .அனைவருக்கும் எங்கள் நன்றியை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம் 

நேற்று 13.08.2020 நன்கொடை வழங்கியவர்கள் 

1.தோழர் V.விஜயராஜா மாவட்ட உதவி செயலர் அஞ்சல் RMS ஓய்வூதியர் சங்கம் ரூபாய் --1000

2.தோழியர் C .பொற்கொடி அவர்கள் ரூபாய் --1000

3.தோழர் முகமது பாரூக் அவர்கள் முன்னாள் கோட்ட உதவி தலைவர் --500

4.தோழர் R.நடராஜன் அவர்கள் முன்னாள் பாளை கிளை தலைவர் RETD போஸ்ட்மாஸ்டர் பணகுடி ரூபாய் --1000

5.தோழர் .T.சுடலையாண்டி அவர்கள் முன்னாள் பாளை கிளை செயலர் பணகுடி ரூபாய் -1000

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 



Thursday, August 13, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

  மீண்டும் திருத்தப்பட்ட LSG  பதவிஉயர்வு பட்டியல் வந்துள்ளது .இதில் LSG  ஊழியர்களை பணியமர்த்தும் போது  இதுவரை நிரப்படாத HSG II  பதவிகளை LSG பதவிகளாக கணக்கில்கொண்டு ஊழியர்கள் பணியமர்த்த படுவார்கள் .நமது கோட்டத்தில் மொத்தம் உள்ள 30 HSG II பதவிகளில் இதுவரை HSG II ஊழியர்கள்  அமர்ப்படாத பதவிகள் அனைத்தும் LSG பதவிகளாக எடுத்துக்கொள்ளப்படும் .இதில் எந்தெந்தபதவிகளில் இதுவரை HSG II ஊழியர்கள் பணியாற்றிடவில்லை என்று மண்டல /மாநில நிர்வாகத்திற்கு தெரிவித்த  விவரத்தை கோட்ட நிர்வாகம் தெரிவித்திடவேண்டும் .

கீழ்கண்ட பதவிகள் LSG ஊழியர்களால் .நிரப்பப்படும் .(உத்தேசப்பட்டியல் உங்கள் பார்வைக்கு )

1.Head Treasurer பாளை 2.APM (G) பாளை 3.APM (G)பாளை 4.PRI (P)பாளை 5.APM SB தி.லி 6.APM ((SB) தி.லி

7.PRI (P) தி.லி. 8.ASPM தி.லி.டவுன் 9.SPM பேட்டை 10.SPM மஹாராஜநகர் 11.SPM மேலப்பாளையம் 12.SPM திசையன்விளை 13.SPM ஏர்வாடி 14.APMSB அம்பாசமுத்திரம் 15.APMSB அம்பாசமுத்திரம்  16.APM(G) 

10 நாட்களுக்குள் கோட்ட ஒதுக்கீடும் அதிலிருந்து 5 நாட்களுக்குள் இடமாறுதலும் பிறப்பிக்கப்படவேண்டும் என்று மாநிலநிர்வாகம் வலியுறுத்தியுள்ளது 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை  



Wednesday, August 12, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நமது  நெல்லை NFPE தொழிற்சங்க அலுவலகத்திற்கு இன்று(12.08.2020) விடுமுறை நாளிலும் தோழர்கள் வருகைபுரிந்தார்கள் .

தோழர் எஸ் முருகன் அவர்கள் சிறிய வண்ண தொலைக்காட்சி பெட்டியை அன்பளிப்பாக தந்துள்ளார்கள் .அதேபோல் தோழர் புஷ்பாகரன் கோட்ட செயலர் அஞ்சல் நான்கு ஒரு நெட் மோடம் கொடுத்துள்ளார்கள் .தோழர்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் .அதேபோல் நமது தோழர்களிடம் உள்ள தொழிற்சங்க சம்பந்தமான புத்தகங்கள் இலாகா விதிகள் அடங்கிய புத்தகங்கள் இருப்பின் நமது அலுவலகத்திற்கு தர விரும்பினால் தாராளமாக தரலாம் ..மேலும் பல தோழர்கள் /தோழியர்கள் மிகுந்த ஆர்வத்தோடு என்ன செய்யவேண்டும் என கேட்கிறார்கள்நமது அடுத்த இலக்கு நமது அலுவலகத்திற்கு பிரிண்ட்ருடன் ஒரு சிஸ்டம் வாங்கவேண்டும் என்பதுதான் .நேற்றுவரை ரூபாய் 12000 வரை நம்மிடம் பிரிந்துள்ளது என்பதனை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் -புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 



Sunday, August 2, 2020