...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, August 31, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                          LGO தேர்வை எதிர்கொள்ளும் நமது தபால்காரர் தோழர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் விடுப்பு எடுத்து தேர்விற்கு தயார்படுத்த வசதியாக அவர்களது பணியிடங்களில் OFFICIATING பார்க்க நமது அலுவலகத்தில் உள்ள GDS ஊழியர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் குறித்து தகவல்களை தெரிவிக்கவும் .

                                                             வாழ்த்துக்கள் 
இன்று பணிநிறைவு பெறுகின்ற தோழியர் ஜெய கிரேஸ் தபால்காரர் கலக்ட்ரேட் அஞ்சலகம் அவர்களது பணி ஓய்வு காலங்கள் சிறக்க வாழ்த்துக்கள் .அவர்களது பணிநிறைவு விழா இன்றுமாலை சமாதானபுரம் ADM ஹாலில் நடைபெறுகிறது .
                                       ------------------------------------
நமது கோட்டத்தில் காசாளர் /உதவி காசாளர் பதவிகள் நிரப்புவது சம்பந்தமாக  கடந்தவாரம் அதற்கான TPC கூடியது .இன்று அதிகார பூர்வ உத்தரவுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ..
                                      -----------------------------------
 GDS ஊழியர்கள் தன் விருப்ப ஓய்வு போன்ற முன்கூட்டியே பணியில் இருந்து விடுவிக்கப்பட்டால் அவர்களுடைய பண பலன்கள் /NPS பரிமாற்றங்கள் எல்லாம் மூன்று மாதத்திற்குள் முடித்துவிடவேண்டும் என அஞ்சல் வாரியம் 16.08.2019 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது 
                                           --------------------------------
தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, August 28, 2019

                                                      முக்கிய செய்திகள் 
இந்த மாத இலாகா ஊழியர்கள் GDS ஊழியர்கள் சம்பளம் மற்றும் பென்ஷன் 30.08.2019 அன்று தங்கள் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது .இதுகுறித்து வந்த செய்தி -As per existing orders dated 28-06-2019 of Department of Posts, New Delhi...
Disbursement Day of Salary/Pension/ TRCA for August, 2019 will be on 30-08-2019....since 31st August,2019 will be holiday (Saturday) for PAOs.
                                           வாழ்த்துக்கள் 
நமது கோட்டத்தில் GDS TO PA மற்றும் போஸ்ட்மேன் /MTS TO PA தேர்விற்கு தயாராகும் தோழர்களுக்கு --இந்த தேர்வு சம்பந்தமாக NELLAI NFPE LGO EXAM என்ற புதிய வாட்ஸாப்ப் உருவாக்கப்பட்டுள்ளது .முழுக்க முழுக்க தேர்வு சம்பந்தமான வழிகாட்டுதல்கள் மட்டுமே இடம்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது .மேலும்  இளைய தோழர்களின் மேற்பார்வையில் செயல்படும் இந்த வாட்ஸாப்ப்யில்  இனைய விரும்புகிற /தேர்வை சந்திக்கும் தோழர்கள் நமது TRAINER தோழர் பாலகுருசாமி போஸ்ட்மேன் மஹாராஜநகர் அவர்களை  95977 15939 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும் .
                              GDS TO PA  தேர்வுக்கான காலியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  973 காலிப்பணியிடங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.நமது கோட்ட்டத்தில் காலியிடங்கள் 24. ஓரிருநாளில் தபால்காரர்கள் மற்றும் எம்டிஎஸ் ஊழியர்களுக்கான எழுத்தர் தேர்வின் காலிப்பணியிடங்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. LGO தேர்வில் நெல்லை கோட்டத்திற்கு காலியிடங்கள் ஒற்றை இலக்கத்தில் தான் இருக்கும் என தெரிகிறது .
             நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை                   

Tuesday, August 27, 2019

                                                     முக்கிய செய்திகள் 
 B.sc /Msc (Agri ) பட்ட படிப்புகள் தொழிற்சார் படிப்புகளாக அறிவிக்கப்பட்ட நிலையில் இனி     B.sc /Msc (Agri ) பட்டதாரிகளும் PLI EXTENDED CLIENT  என்கின்ற வரையறைக்குள் வருகிறார்கள் .அவர்களும் நமது PLI பாலிசிக்கு தகுதியாகிறார்க்ள என PLI இயக்குனரகம் 05.08.2019 அன்று விளக்க உத்தரவை பிறப்பித்துள்ளது .

           GDS இடமாறுதல் வழக்கில் நீதிமன்றம் கண்டனம்.
      GDS இடமாறுதல் குறித்த வழக்கில் நேற்று வழங்கிய     தீர்ப்பில்  
    நீதிபதி தனது கருத்தாக, GDS ஊழியர்களுக்கு பணியிட மாறுதல் பெற விதிகள் இருந்தும், இலாகா வேண்டுமென்றே பணி இடமாறுதல் விண்ணப்பங்களை  பரிசீலிக்காமல் இருந்துள்ளது என்றும், அவ்வாறு பரிசீலிக்காமல் இருந்ததற்கான முறையான காரணம் ஏதும் இலாகா  தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் மத்திய அமைச்சரகமே 15.04.2019 அன்று, 04.01.2019 அன்று அல்லது அதற்கு முன்பாக பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, பணியிட மாறுதல் வழங்க எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் பணியிடமாற்றம் வழங்காமல், அனைத்து பணியிடங்களுக்கும் புதிய நபர்களை பணியில் சேர்க்க, தமிழ் மாநில அஞ்சல் துறை நிர்வாகம் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டது, தன்னிச்சையாக செய்த அதிகார துஷ்பிரயோகம் என நீதிபதி தெரிவித்துள்ளார். பணியிட மாற்றம் கேட்டவர்களுக்கு கொடுக்காமல் அந்த இடங்களில் புதியவர்களை பணிக்குச் சேர்த்தால், பணியிடமாற்றம் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு அது பேரிடியாக அமையும் என்றும், பணியிட மாற்றங்களுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் ஊழியர்களே ஏற்கும் நிலையிலும், 150க்கும் மேற்பட்டவர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படாமல் உள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்
இறுதியாக தனது தீர்ப்பாக, 04.01.2019 அன்று அல்லது அதற்கு முன்பாக பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ள காலியிடங்களில், நீதிமன்றத்தின் ஆணையின்றி, புதிய நபர்களை பணியில் சேர்க்க கூடாது என்று ஆணையிட்டுள்ளார். அதோடு 28.10.2019 அன்று நீதிமன்றத்தில் இலாகா 04.01.2019 க்கு முன்னர் எத்தனை பணியிடமாற்றம் விண்ணப்பங்கள் வந்துள்ளன, ஏன் இது நாள் வரைக்கும் பரிசீலிக்க படாமல் வைக்கப்பட்டன என விளக்கத்தை சமர்பிக்குமாறு ஆணையிட்டுள்ளது.
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, August 26, 2019

Rent free accommodation is provided to Postmaster for proper discharge of the work of the Post office Directorate called report from the Heads of the Circles.


Saturday, August 24, 2019

                                                        முக்கிய செய்திகள் 
1.நமது அகிலஇந்திய மாநாட்டிற்கான சார்பாளர் /பார்வையாளர் கட்டணம் ரூபாய் 2500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது 

2.Directorate called information to merge/ close single hand Post office from the Division .Click here to see per-forma.


Friday, August 23, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
               புதிய தோழர் தம்பி ராமகிருஷ்ணன் அவர்களை வரவேற்கிறோம்       
     நமது நெல்லை அஞ்சல் நான்கின் முன்னனி தோழர் பொன்னுசாமி (ஓய்வு ) அவர்களின் அருமை புதல்வர் 
தம்பி .ராமகிருஷ்ணன் PA நாகப்பட்டினம் அவர்கள் நமது நெல்லை கோட்டத்திற்கு RULE 38 இன் கீழ் இடமாறுதல் பெற்று வருகிறார்கள் .தொழிற்சங்கத்தில் பல   இளைய தோழர்களின் பயிற்சி பட்டறையாக இருக்கும் நாகை கோட்டம் மெருகேற்றி தந்திருக்கும் மற்றுமொரு தோழரை வரவேற்பதில் நெல்லை பெருமிதம் கொள்கிறது .
                                  தோழர் மோகன் விடைபெறுகிறார் 
மிக நீண்ட காத்திருப்பிற்கு இடையே   நம்மிடம் கவிதைகளையும் கவலைகளையும் கலந்து தந்துகொண்டிருந்த இளைய கவி .தோழர் மோகன் MTS    அவர்களுக்கு ஆறுதல்   இடமாறுதலாக ஆறுமாதங்கள் தற்காலிக இடமாறுதல் அவரது சொந்த கோட்டமான ராமநாதபுரத்திற்கு செல்கிறார் .அவர்களையும் நாம் வாழ்த்தி வழியனுப்புவோம் .
                          நெல்லை அஞ்சல் நான்கின் மாநாடு வருகிற 22.09.2019 அன்று திருநெல்வேலி தலைமைஅஞ்சலகத்தில் வைத்து நடைபெறுகிறது .மாநாடு சிறக்க வாழ்த்துக்கள் .நமது தோழர்களுக்கும் மாநாட்டிற்கு உதவிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
 நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை   

Thursday, August 22, 2019

அன்பார்ந்த தோழர்களே ! 
 RPLI  PROPOSAL  புது பாரம் (படிவம் ) நமக்கு மேலும் ஒரு பாரம் 
               RPLI பிடிப்பதற்கு புது படிவம் மற்றும் புதிய முறை மாற்றப்பட்டுள்ளது .அதன்படி CONFIDENTIAL REPORT இனிமேல் உபகோட்ட அதிகாரிகள் எழுதவேண்டியதில்லை என்றும் சம்பந்தப்பட்ட ஏஜென்ட் /GDS அதை நிரப்பி நேரிடையாகவே சம்பந்தப்பட்ட தலைமை அஞ்சலக CPC க்கு அனுப்பிவிடலாம் .
இதுவரை மருத்துவ அறிக்கை உபகோட்ட அதிகாரிகள் மூலம் அனுப்பப்பட்டது .இனிமேல் சம்பந்தப்பட்ட ஏஜென்ட் /GDS  கள் தான் இந்த பணிகளையும் முடித்து அனுப்பவேண்டும் .இதற்காக புதிய PROPOSAL FORM வினியோகிக்கப்படும் .ஆகவே இனி மேளா நடக்கிற நாட்களில் அவசரஅவசரமாக ரசீதை போட்டு ASP களுக்கு அனுப்பினால் போதும் என்றில்லாமல் அனைத்து வேலைகளையும் ஏஜென்ட் /GDS தான் மேற்கொள்ளவேண்டும் .ஏற்கனவே உபகோட்டங்களுக்கு அனுப்புவதால் தான் PROPOSAL  CPC க்கு வர தாமதம் ஆகிறது என்பதனை   கருத்தில் கொண்டுதான் இந்த புதிய முறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாம் .ஆனால் இந்த கடினமான கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு நிர்வாகம எதிர்பார்பதைபோல் RPLI பாலிசிகளை GDS ஊழியர்களால் பிடித்து தரமுடியுமா என்பதே முக்கிய கேள்வியாகும் .பாவம் GDS தோழர்கள் இனி அவர்கள் பாலிசி பிடிக்கும் வேலையை காட்டிலும் மருத்துவரிடம் சென்று கையெழுத்து வாங்கவும் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்படும் .
ஏற்கனவே PLI க்கும் IP /ASP களுக்கும் சம்பந்தமில்லை என்ற நிலையில் இன்று RPLI யும் IP /ASP கண்காணிப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறது .போகிறபோக்கை பார்த்தால் PLI தனி வாரியம் தனியாக அஞ்சல் துறையை விட்டு மெல்லமெல்ல விலகி செல்கிறதா -விலக சொல்கிறதா ? 
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Wednesday, August 21, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
           நேற்று 20.08.2019 அன்று நடைபெற்ற நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டியின் சாராம்சத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன் .20 புதிய சுப்ஜெக்ட்ஸ் மற்றும் 12 பழைய  சுப்ஜெக்ட்ஸ்  என சுமார் 2 மணிநேரம் வரை நீடித்தது .
ஞாயிறு பணிசெய்வதில் உள்ள பிரச்சினையில் தீர்வு 
நேற்றைய விவாதத்தில் பிரதான பொருளாக ஞாயிறு பணிசெய்ய போடப்பட்ட உத்தரவு குறித்து மிக நீண்ட (சுமார் 20 நிமிடங்கள் )  விவாதத்திற்கு பிறகு யாரையும் கட்டாயப்படுத்தி ஞாயிறு பணிக்கு பணிக்க கூடாது என எழுத்துப்பூர்வமான உத்தரவு பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் அவர்களுக்கு பிறப்பிக்கப்படும் என்பதனை நாம் ஏற்றுக்கொண்டோம் .இந்த பிரச்சினையை நமது CPMG அவர்களிடம் தொலைபேசியில்  இரண்டு முறை பேசி ஒரு தீர்வை ஏற்படுத்துங்கள் என்று நமக்காக ஆதரவு கரம் நீட்டிய மாண்புமிகு 
மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் அவர்களுக்கும் இது தொடர்பாக CPMG அவர்களின் வழிகாட்டுதலை பெற்று நமது மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் அவர்களை அவர்களது இல்லத்திற்கே சென்று சந்தித்து பேசிய நமது கண்காணிப்பாளர் திரு R .சாந்தகுமார் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இதில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என பார்க்காமல் ஒட்டுமொத்த ஊழியர்களின் உணர்விற்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் என்றே நான் பார்க்கிறேன் .நமது கோரிக்கைகளுக்கு ஆதரவாக களம் இறங்கிய நெல்லை அனைத்து துறை தொழிற்சங்க அமைப்புகளுக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .அதனை தொடர்ந்து இதர பிரச்சினைகள் குறித்து வழக்கம் போல் மிக சுமுகமாகவே தொடர்ந்தது .பேட்டியின் முழுமையான விவரங்கள் நடவடிக்கை குறிப்புகள் வந்தவுடன் தெரிவிக்கப்படும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Tuesday, August 20, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                  இன்று 20.08.2019 அன்று நடைபெறும் மாதாந்திர பேட்டியில் நமது NFPE சார்பாக எடுக்கப்பட்ட பிரச்சினைகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன .


NFPE
     ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                 TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI—627002
No.P3-MM/ dated at Palayankottai- 627002 the 16.08.2019
To

The Sr. Supdt. of Post Offices,
Tirunelveli Division
Tirunelveli-627002

Sir,

            Sub:    Subjects for monthly meeting -reg
*****

              The following subjects may kindly be includedfor discussion during the monthly meeting.

1      Request to cancel the instructions ordering the staff work on sundays at Palayamkottai HO
2          Request to fill up the vacant posts of PA Mundradaippu ,Terku Karunkulam and Vadakankulam in the mean time it is requested to attach one PAs to these offices on temporary basis  
3          Request to fill up the vacant OA &Accountant posts of DO based on the willingness submitted.
4          Request to  change the MMS schedule and request augmentation of MTS/GDS posts to accompany mails sent through Vans
5      Request to  take early action to procure new MMS van in lieu of condenned one
6      Request to  redeploy a GDS posts to CPC Tirunelveli HO to work regular basis.
7      Request to  set right the faulty beareaus and provide locking facility
8      Request to  replacement of UPS Batteries of CPC Tirunelveli
9      Request to  take up the case with RO level to fill up the Wireman and electrician posts of Tirunelveli Division
10   Request to  disburse minimum wage to GDS as per rules who entrusted with IQ duty at Palayamkottai HO
11   Request to permit to follow the pre-revised timing at MPCM counter Tirunelveli HO
13   Request to send A4 papers and thermal paper for RICT device without indent by fixing a norms
14   It is seen that the systems are not properly working at Kulavanigarpuram SO further it is reported that some BSNL lines are damaged.
15   Early shifting of Kulavanigarpuram PO buildimg to a better one.
16       Request to fill up the vacant Treasurer /Asst Treasurer posts which volunteers were called already
17   Request to dequatreise Nalumukku S.O and Manjolai S.O. both the quarter's are unfit for occupation.During winter and rainy season the roof is in leaky condition and all the side walls are in wet condition. Hence presently stayal in this building is unsafe.
18   Request settle the rent issue of V.K .Puram  S.O. cycle shed which is pending in a months together.
19   Request supply Passbook printer to Kilaambr S.O..The existing printer is not in working condition and it was supplied during the year of 2009 and it is in unserviceable condition.

20   Request to set right the discrepancies reported in the Divisional Gradation List issued as on 01.07.2018.  c/o Smt S.Rajalakshmi PA Palayamkottai

                                                           Pending Subjects
1.      Request to fill up the vacant 11 HSG-II posts and 1 HSG-I posts on temporary basis by calling volunteers among the eligible PAs as per the instructions issued by the Circle Office.
2.        Request to set right the discrepancies reported in the Divisional Gradation List issued as on 01.07.2018.  For Example : Seniority is seen changed in the Confirmation order dated 19.07.2018.

3.    Request early posting of officials promoted to LSG in the recent orders approved.

4..    Request early disposal of the representations of the officials made in connection with discrepancies in their seniority.

6.      Request to allot a room for female staff for recreation/rest room purpose as the existing room is being utilised for BPC.  Further, majority of the staff are ladies and required amenities may please be done.

7.      Request grant/issue of MACP orders to the eligible officials for the current period.

8.      Request preparation of MDW for the general branch and SB branch of Tirunelveli HO with due consultation with the officials working in a fair manner.

9.      Request to fill up the vacant HSG-I posts on temporary basis by calling for volunteers.

10. It is requsted to provide hands on deputation for atleast 10 days each for every month to clear the pending works

a.      Mundradaippu
b.      Vadakankulam
c.      TerkuKarungulam

11. After RD Decentralisation, an additional hand was provided to Maharaja Nagar.  It is requested to permanently provide one PA to Maharaja Nagar SO to cope up the heavy work load.

12. It is requested to issue suitable instruction to Postmasters, Tirunelveli HO/Palayamkottai HO to rotate the officials working in General branches once in a year as per the extant instructions.
13.     Request to set right the discrepancies reported in the Divisional Gradation List issued as on 01.07.2018.  For Example : Seniority is seen changed in the Confirmation order dated 19.07.2018.
14.    Request to set right the discrepancies n the Divisional LRPA List issued on 10.05.2019
15  Request preparation of MDW for general &SB Branch of Tirunelveli HO
16.  It is requested to refund deducted for the LTC availed by the officials for J&K  based on the audit observations.

 The following officials will attend the meeting.

1.      S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA Tirunelveli HO
2.      K.S.Y.Sahul Hameed Driver MMS Tirunelveli
3.      R.V.Thiyadaraja Pandian SPM Kilambur& Br Sec Ambasamudram


             
                         Yours faithfully


[S.K.JACOBRAJ]



Monday, August 19, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                               நேற்றைய நிகழ்வுகள் 
18.08.2019 ஞாயிறு காலை இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் (BEFI) திருநெல்வேலி மாவட்ட 5 வது மாநாடு மற்றும் 12 வது மாநில மாநாடு வரவேற்பு குழு கூட்டம் நெல்லைமூட்டா  அலுவலகத்தில் நடைபெற்றது .நெல்லையில் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒன்றினைக்கும் விதமாக நடந்த நிகழ்வில் NELLAI NFPE சார்பாக கலந்துகொண்டு நமது பங்களிப்பை செலுத்தினோம் .வந்திருந்த அனைத்து சங்கத்தினரும் நமது போராட்டத்தின்இன்றைய நிலை குறித்து கேட்டறிந்தனர் .
 நேற்று இரவு மருதகுளத்தில் நடைபெற்ற மின்னொளி கபடி போட்டியில் தொழிற்சங்க செயலர் என்ற அந்தஸ்தோடு ஒரு போட்டியை துவக்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது .NELLAI NFPE புகழ் எல்லா அரங்கிலும் நிலைநிறுத்த படுவது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் .
                                       நாளைய நிகழ்வுகள் 
20.08.2019 அன்று காலை 10 மணிக்கு நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .ஏற்கனவே நாம் மாதாந்திர பேட்டியில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகளை அனுப்பியுள்ளோம் .அதன் விவரங்கள் நாளை பிரசுரிக்கப்படும் .
                                           ஆர்ப்பாட்டம் 
  20.08.2019 செவ்வாய் மாலை 6 மணிக்கு SSP அலுவலகம் முன்பு GDS ஊழியர்களை இலக்கு எனும் பெயரில் உபகோட்ட அதிகாரிகளால் துன்புறுத்தப்படும் கொடுமையை எதிர்த்து GDS ஊழியர்களின் சங்கங்களின் சார்பாக நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்பு .
                     அனைத்து இயக்கங்களையும் வென்றெடுக்க அணிதிரள்வோம் .
 போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கொட்ட செயலர் நெல்லை 



Saturday, August 17, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
மீண்டும் ஒரு வெற்றி --ஜூன் மாதம் பணிஓய்வு பெற்றவர்களுக்கு ஒரு INCREMENT வழங்கிடவேண்டும் என தோழர் ஐயம்பெருமாள் வழக்கில் உச்சநீதிமன்றம் அரசு தாக்கல் செய்த SLP மனுவை தள்ளுபடி செய்து உன்னத தீர்ப்பை வழங்கியுள்ளது 
வழக்கம் போல் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டுமே இந்த தீர்ப்பு பொருந்தும் என அரசு அறிவிக்கப்போகிறதா அல்லது ஒரு மாதிரி அரசாக (MODEL EMPLOYER)  இருந்து ஜூன் மாதம் ஓய்வுபெற்ற அனைவருக்கும் ஒரு INCREMENT வழங்கி ஓய்வூதியத்தை மறுநிர்ணயம் செய்ய DOPT முடிவெடுக்க ஆணை பிறப்பிக்கப்போகிறதா ? 
 MACP வழக்குகளில் கூட DEFENSE ஊழியர்களுக்கு பொருந்தும் தீர்ப்பை சிவில்  ஊழியர்களுக்கு அமுல்படுத்திட தயங்கும் அரசு -இந்த வழக்கில் என்ன சொல்லப்போகிறது ---பொறுத்திருந்து பார்ப்போம் ..
                            பாளையம்கோட்டை தலைமை அஞ்சலக ஊழியர்களின் கவனத்திற்கு ஞாயிறு பணிசெய்ய யாரையும் கட்டாயப்படுத்தமாட்டோம் -இதுவரை யாரையும் கட்டாயப்படுத்தவுமில்லை என்றும் ARRANGEMENT செய்வது பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் தான் என்று நிர்வாகம் எழுத்துப்பூர்வமாகவும் -கேட்கின்ற மேல்மட்ட அதிகாரிகளிடமும் சொல்லிவருகிறது .ஆகவே யாரையும் கட்டாயப்படுத்தமாட்டோம் என்கின்ற நிர்வாகத்தின் நிலையினை ஊழியர்கள் உணர்ந்து கொண்டு தொடர்ந்து நமது கோட்ட சங்க செயல்பாட்டிற்கு உங்கள் ஆதரவை நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
                                                   இறுதி வெற்றி நமதே !
                தோழமை வாழ்த்துக்களுடன் 
                                    SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, August 16, 2019

அன்பார்ந்த தோழர்களே !
               நாட்டிலேயே முதன்முதலாக DEFENCE ஊழியர்கள் ஒருமாத வேலைநிறுத்தம் செய்திட முடிவெடுத்துள்ளனர் -வருகிற 20.08.2019 முதல் வேலைநிறுத்தத்தை தொடங்குகிறார்கள் .அவர்களின் கோரிக்கைகளும் போராட்டங்களும் வெற்றிபெற NELLAI NFPE வாழ்த்துகிறது 
              41 பாதுகாப்பு தளவாடங்களை தயாரிக்கும் அரசு நிறுவனங்களை பொதுத்துறை நிறுவனமாக மாற்றிட முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து நடந்திடும் வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் வெல்லட்டும் !
            
                                                                        

Thursday, August 15, 2019

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
         உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய சுதந்திர தினவிழா வாழ்த்துக்கள்
               இந்திய சுதந்திர  போராட்டத்தில்   திருநெல்வேலி மாவட்டத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு .அந்த சிறப்பிற்கு உரியவர்கள் நம் தாய் நாட்டின் உரிமைக்காக இன்னுயிர் நீத்த   தியாகிகளை தலைவர்களை நாம் நினைவு கூறுவோம்   ஆம் .நம் மண்ணின் மைந்தர்களை நினைவுகூறுவோம் .
                                    வீர பாண்டிய கட்ட பொம்மன்
ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 1760 ஆம் ஆண்டில் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள் பிறந்தார்..வீரபாண்டிய கட்டபொம்மனது வீரமும், விவேகமும் சுற்றியுள்ள அனைத்துப் பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவி, அவர்கள் மனதிலும் வீரவித்தை விதைத்தது. ஜாக்சன் துரைக்குப் பின்னர், லூஷிங்டன் என்பவர் கலெக்டராகப் பதவியேற்றார். ஆங்கிலேய ஆதிக்கத்தில், ஆங்கிலேயர்களுக்கு பேரிடைஞ்சலாகக் கருதப்பட்ட மைசூர் மன்னரான திப்பு சுல்தான் அவர்களை மே மாதம் 1799 ஆம் ஆண்டில், பீரங்கிகுக்குப் பலி கொடுத்தப் பின்னர், ஆங்கிலேயர்களின் இலக்குக் கட்டபொம்மனாக இருந்தது. அவருக்கும் பிரித்தானிய அரசு நிர்வாகிகளுக்கும் முரண்பாடு அதிகரித்ததால், செப்டம்பர் 1 ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில், பானர்மென் என்பவர் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்தது. போருக்கு ஆயத்தமாகாமல் இருந்த போதிலும், கட்டபொம்மன் அவர்கள், ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கடுமையாக போராடினார். இந்தப் போரில், கோட்டையை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால், கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் கோரினார். ஆங்கிலேயர்களுக்கு பயந்து, அவரைப் புதுக்கோட்டை மன்னன் காட்டி கொடுத்ததால், ஆங்கில நிர்வாகிகள் அவரைக் கைது செய்தனர்.
மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட “குற்றங்களை’ கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. மேலும் கம்பீரத்தோடு “எனது தாய்மண்ணைக் காப்பதற்காக, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பாளையகாரர்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்” என்று முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.
                                                 மாவீரன் வாஞ்சிநாதன் 
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில், 1886-ம் ஆண்டு ரகுபதி ஐயர், ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் வாஞ்சிநாதன்.வாஞ்சி செங்கோட்டையில் பள்ளிப் படிப்பை முடித்ததும், திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியில் பி.ஏ.வரை படித்தார். கல்லூரியில் படிக்கும்போதே முன்னீர் பள்ளம் சீதாராமய்யாரின் மூத்த புதல்வியான பொன்னம்மாளை மணந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், புனலூர் காட்டிலாகாவில் [2] பணியாற்றினார்.
 1911 ஜூன் 17 காலை 6:30 மணிக்கு மணியாச்சித் தொடருந்து சந்திப்பில், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்துரை தனது மனைவியோடு கொடைக்கானலுக்குச் செல்ல வண்டியின் முதல் வகுப்புப் பெட்டியில் அமர்ந்திருந்தார். அந்நேரம் வெளியில் உலாவிக் கொண்டிருந்த வாஞ்சி, புகைவண்டியில் அமர்ந்திருந்த கலெக்டர் ஆஷ் துரையைத் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டுக் கொண்டு மரணம் அடைந்தார். இவரின் உடல் கங்கைகொண்டான் பாலத்திற்கு வரும் போது உயிர் பிரிந்தது, அதன் பின் இரண்டு நாட்கள் திருநெல்வேலி சந்திப்பு பாலம் காவல் நிலையத்தில் வைத்திருந்து பாளையங்கோட்டை மிலிடரி லைன் ஆங்கில சர்ச் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
வாஞ்சியின் பிரேத விசாரணையில், அவர் போட்டிருந்த உள்சட்டையில் இருந்த துண்டுக் கடிதத்தில் கலெக்டரைச் சுட்டுக் கொன்றதற்கான காரணமும், சென்னையில் 3,000-த்திற்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தன்னுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டு ஆர். வாஞ்சி ஐயர், செங்கோட்டை என்றெழுதி இருந்தது.
                                    வ .உ .சிதம்பரம் பிள்ளை 
 வ.உ.சிதம்பரம்பிள்ளை தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர், சுதந்திரப் போராட்ட வீரர் எனும் பன்முகத் தன்மை பெற்றிருந்தார். இவரது அரசியல் வாழ்க்கை உயர்ந்த ஒழுக்கமும், நேர்மையும், ஆற்றலும் நிறைந்ததாக இருந்தது. அவர் அன்பு, தைரியம், வெளிப்படையான குணம் இவற்றை உடையவராக இருந்தார்.
தமிழ் மொழியில் உள்ள அநேக இலக்கியங்களைப் படித்து அவற்றைப் பற்றி கட்டுரைகளையும், செய்யுள்களையும் எழுதியுள்ளார்,ஆங்கில நூல்களை மொழிபெயர்த்துள்ளார். விடுதலைப் போராட்டம் குறித்தும் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் நண்பர்களுடன் விவாதிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வ.உ.சி. 1892- ஆம் ஆண்டு பால கங்காதர திலகர் அவர்களின் ஆற்றல் மிகுந்த, வீரம் செறிந்த எழுத்தால் கவரப்பட்டு திலகரின் சீடரானார்.
இவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதோடு மற்றவர்களையும் பங்கு கொள்ளச் செய்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார். அவர்களின் கொடூரமான சட்டங்களைப் பற்றி மக்களிடையே வீர உரையாற்றினார்.40 ஆண்டு தீவாந்திரத் தண்டனை! யாருக்கும் கொடுக்கப்படாத கொடுமையான தண்டனை. ஆங்கில அரசுக்கு வ.உ.சி.யிடத்தில் அளவு கடந்த பயம். இந்தக் கொடுமையான தண்டனைக்கு அந்த பயமே காரணம். அவரைச் சிறையில் அடைத்தால்தான் அவர்களால் தொடர்ந்து இந்தியாவில் ஆட்சி செய்ய முடியும். வ.உ.சி.க்கு அப்பொழுது 36 வயது தான்.
                                         சுப்ரமணிய பாரதியார் 
சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார். சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
நன்றி வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் நெல்லை 




                             

Wednesday, August 14, 2019

                                   மீண்டும் நினைவூட்டுகிறோம் 
நமது கோட்ட கண்காணிப்பாளருடனான இந்த மாத மாதாந்திர பேட்டி வருகிற 20.08.2019 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .ஏதேனும் பிரச்சினைகளை விவாதத்தில் சேர்க்கவேண்டும் என்றால் கோட்ட செயலருக்கு உடனே தெரிவிக்கவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர்
 P 3நெல்லை &SK .பாட்சா கோட்டசெயலர் P 4

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                   கோட்டத்திற்கு ஒரு மகளீர் அஞ்சலகம் திறக்க கேரளா CPMG  உத்தரவு 

Tuesday, August 13, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                          இந்த மாதம் கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி வருகிற 20.08.2019 காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .மாதாந்திர பேட்டிகளில் விவாதிக்கவேண்டிய பிரச்சினைகள் ஏதும் இருப்பின் இன்று மாலைக்குள் கோட்ட செயலர்களுக்கு தெரிவிக்கவும் .
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை NFPE 
To
PMs/SPMs concerned

No. ASP(HQ)/Union Meeting/Dlgs dated at TVL – 2 the  07/08/2019

The proposed Monthly Meeting of representatives from Service Union and Associations with the Divisional Head will be held on 20/08/2019 at the O/o SSPOs Tirunelveli Division as per the below mentioned schedule. The subjects for discussion during the proposed meeting should be submitted to this office on or before 16/08/2019 along with the list of officials who are attending the meeting. It is requested to intimate the same to Divisional Secretaries of the Service Unions/Associations accordingly.
  1. AIPEU P3 & P4              1000 hours

அன்பார்ந்த தபால்காரர் /MTS தோழர்களே !
                          LGO தேர்விற்கு தயாராகும் உங்கள் அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக வாழ்த்துகிறோம் .இந்த தேர்விலும் நமது கோட்டத்தில் சுமார் 24 காலியிடங்கள் இருப்பதாக தெரிகிறது .இதில் எல்லாப்பிரிவுகளிலிலும் இருக்கிறது .மீண்டும் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .நன்றி .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, August 9, 2019

  அன்பார்ந்த தோழர்களே !
             மிக    நீண்ட இடைவெளிக்கு  பிறகு  நெல்லையில்  ஏனைய தொழிற்சங்க அமைப்புகளுடன் இணைந்து நமது கோரிக்கைகளுக்காக அனைத்து துறை சார்ந்த சங்கங்களுக்கும் நமக்கு ஆதரவாக 01.08.2019 அன்று நடைபெற்ற  ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர் .அதன் தொடர்ச்சியாக தென்மண்டல ஆயுள் காப்பீடு கழக ஊழியர்களின் கூட்டமைப்பு சார்பாக பொதுத்துறைகளை    பாதுகாக்க வலியுறுத்தி பாளையம்கோட்டையில் 09.08.2019 அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நமது   NFPE  இயக்கத்திற்கும் அழைப்பு விடப்பட்டு நாமும்       கலந்துகொண்டோம் .ஒரு ஒன்றுபட்ட இயக்கங்களை நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதனை அனைத்து சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தி பேசினார்கள் .




                                         

                                           முக்கிய செய்திகள்
C மற்றும் B கிளாஸ் SPM களுக்கு பெரும் சுமையாக இருந்த SMR முறை ரத்து செய்யப்படுவதாக வடக்கு கர்நாடக மண்டல PMG அவர்கள் தனது கீழுள்ள அனைத்து கோட்ட அதிகாரிகளுக்கும் 08.08.2019 தேதியிட்ட கடிதத்தில் தெரிவித்துள்ளார்கள் .

Discontinuation of SMR Report from Sub Post offices