...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, May 30, 2021

 அஞ்சல்  மூன்றின் மாநில தலைவர் தோழர் எம் .செல்வகிருஷ்ணன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு மடல் 

நாள் 31.05.2021      இடம் .திருநெல்வேலி HO

-------------------------------------------------------------------------------------------------------

உந்தன் பெயரின் தொடக்கமே 

உன்னை அடையாளப்படுத்தும் 

நீ  யார் என்று !

எங்கள்  என்று உன்னை என்னாலே அழைத்திட முடியாது 

உம் தோழர்கள் அழைப்பது தான் சரியான பதம் 

எம் செல்வ கிருஷ்ணன் வாழ்கவே !


கோவில்பட்டி எனும் கந்தக பூமி தந்திட்ட 

மற்றுமொரு செம்மலரே !

கொள்கை வழி பிறழாமல் வாளர்ந்திட்ட 

மிச்சமொரு தோழனே !


உன் உயரத்தை போலவே -பொறுப்புகளில் 

உச்சம் தொட்டாய் --

உன் எண்ணம் போலவே 

ஊழியர்களின் நலன் காத்தாய் !


பாலு -போஸ் அணியின் அனல் பறந்த 

நாட்களில் நீயும் நானும் எதிரெதிரே !

தலைவர் KVS வாகைசூடிய 

திண்டுக்கல் மாநாட்டிற்கு பிறகு 

நாமிருவரும் அருகருகே !


அடுத்தடுத்து மாற்றங்கள் மாநிலத்தில் 

அரங்கேறியபோதிலும் 

அடுத்துக்கெடுத்திடும் எண்ணம் -நம் 

இருவருக்குள்ளும் எழுந்ததில்லை 


மீண்டும் நாங்கள் பேரவைக்குள் வந்த பொழுதும் 

எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தி நின்றாய் 

கூட்டணி முறிந்திட்ட நாட்களில் கூட  --நம் 

தோழமையை முறியாமல் பார்த்துக்கொண்டாய் 


நெல்லை கோட்ட மாநாட்டில் 

நீயும் நானும் எதிரெதிர் வேட்பாளர்கள் 

தேர்தலில் நான் வெற்றிபெற்றேன் -காலப்போக்கில் 

தேர்ந்த அனுபவத்தால் என்னையும் நீ 

வெற்றிகொண்டாய் !


பணிதனிலே ஒரே அலுவகத்தில் 

பணியாற்றிட வாய்ப்புகள் கிடைத்திருந்தாலும் 

அவரவர் அணி சார்ந்த காரணத்தினால் 

அவ்வளவாய் அளாவிட முடியவில்லை 


இருந்தாலும் NFPE எனும் பேரியக்கம் 

நம்மை ஒரே கொடியின் கீழ் நின்று  

 உரிமை குரல் கொடுக்க ஒன்றுபடுத்தியது 

ஒற்றுமையாய் நெல்லையில் இயக்கத்தை 

கட்டி  காத்திட வைத்தது !


கருத்தை  முகத்திற்கு நேரே  சொன்னோம் ! 

களத்தில் கூட 

முதுக்கு பின்னால் 

ஒருநாளும் இல்லை  இல்லவே இல்லை ...

என்ற தோழமை பகிர்தலோடு வாழ்த்தி மகிழ்கின்றேன் .. 

தோழமையுடன்---- SK .ஜேக்கப் ராஜ் ----















 

Wednesday, May 26, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

கோவிட் -19 பெருந்தொற்றின் காலத்தில் பணிக்கு வராத நாட்களை ஒழுங்குபடுத்துவது சம்பந்தமாக குறிப்பாக எந்தெந்த நாட்களுக்கு ஊழியர்களின் ஆப்சென்ட்  நாட்களை  பணியாகவும் /விடுப்பாகவும் எடுத்துக்கொள்ளவேண்டும் என அஞ்சல் வாரியம் 24.05.2021 அன்று வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் ஆணை ..

a ) தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் என குறிப்பிடும் பொழுது ---கோவிட் பாசிட்டிவ்  உள்ளவர்களுடன்   தொடர்பில் இருத்தல்  அதாவது அலுவலக பணியின் போதோ அல்லது பணி சம்பந்தமான பயணம், இடமாறுதலின் போது ,டெபுடேஷன் செல்லும் போது அல்லது அவர்கள் வீட்டில் உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த போது (இதற்கான பரிந்துரையை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் பெற்றிருக்க வேண்டும் )

b ) மத்திய /மாநில அரசுகள் தடைவிதித்த பகுதிகளில் குடியிருப்பவர்கள் /நோய் தொற்று உள்ள பகுதி என அறிவிக்கப்பட்ட இடத்தில இருப்பவர்கள் ,போக்குவரத்து தடைப்பட்டிருபது அல்லது விடுப்பு ,LTC என அனுமதி பெற்று சென்றவர்கள் மீண்டும் தங்கள் தலைமை இடங்களுக்கு திரும்பமுடியாத நிலை 

C /வீட்டில் இருந்து பணியாற்றிய நாட்கள் என இந்த  மூன்று (a ,b ,c ) பிரிவில் வருகிறவர்களுக்கு அவர்களுடைய ஆப்சென்ட் நாட்கள் பணி நாட்களாக கருதப்படும் .

d) ஊழியர்கள் விடுப்பு /LTC முடிந்தபின் தனிமைப்படுத்துதல் /என சொல்லப்படும் நாட்கள் 

e)தனிமைப்படுத்தியதாக சொல்லப்படும் நாட்கள் ,தடைசெய்யப்பட்ட பகுதிக்கு பயணம் செய்தபின்பு, .அனுமதி இன்றி தலைமையிடத்தை விட்டு சென்று ஆப்சென்ட் ஆன நாட்கள் 

f )கோவிட் பாசிட்டிவால்  ஆப்சென்ட் ஆன நாட்கள்  என  இந்த மூன்று (d ,e,f ) பிரிவில் வருகிறவர்களுக்கு அவர்களுடைய ஆப்சென்ட் நாட்கள் விடுப்பு விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டு விடுப்பாக மாற்றப்படும் 

இந்த அடிப்படையில் விடுப்பு வழங்கும் அதிகாரி சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிபார்த்துவிட்டு விடுப்பு  வழங்கலாம் .ஒருவேளை விடுப்பு மறுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர் அதற்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிக்கு மேல் முறையீடு செய்யலாம் ..அவ்வாறு மேல்முறையிடு செய்யப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரி 15 நாட்களுக்குள் முடிவெடுக்கவேண்டும் 

இந்த  உத்தரவு முதலாம் ஊரடங்கு பிறப்பித்த 24.03.2020 முதல் மறு உத்தரவு வரும் வரை  பொருந்தும் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 



Friday, May 21, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                               LSG ,HSG II ,மற்றும் HSG I பதவிகளில் OFFICIATING பார்க்கின்ற ஊழியர்களுக்கு OFFICIATING PAY வழங்குவது குறித்து  இலாகாஉத்தரவினை  (137-64/2010-SPB II dtd 28.07.2011)  நமது மாநில நிர்வாகம் 19.05.2021 தேதியிட்ட வழிகாட்டுதலின் படி மீண்டும் வலியுறுத்தியுள்ளது .

*அதன்படி எழுகின்ற VACANCY ஒருமாதத்திற்குள் இருந்தால் தகுதியுள்ள ஊழியர்களை அந்த அலுவகத்திற்குள்ளாகவும் 

*ஒரு மாத்திற்கு மேல் நான்கு மாதத்திற்குள் இருந்தால் கோட்ட அளவில்  நியமன அதிகாரி தகுதியுள்ள பட்டியலில் இடம்பெற்ற ஊழியர்களை  OFFICATING  பார்க்க அனுமதிப்பார்கள் .

*இருந்தாலும் நிர்வாக .காரணங்களுக்காக தகுதியுள்ள ஊழியர்களை  பட்டியலில் இல்லாத ஊழியர்களையும் நியமிக்கலாம் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, May 20, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                      நாட்டில் நிலவிவரும் கோவிட் -19 தாக்கத்தினை கருத்தில்கொண்டு சுழல் மாறுதல் (2021) உத்தரவு குறித்து அஞ்சல் வாரியம் 19.05.2021 அன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது .அதன்படி 

சூழல் மாறுதலுக்கான கணக்கீட்டின் இறுதிநாள் -30.09.2021

*TENURE OF  NONSENSITIVE POSTS --நான்கு வருடங்கள் 

*TENURE OF  SENSITIVE POSTS ---மூன்று வருடங்கள் 

*STATION TENURE --6 வருடங்கள் (ASP மற்றும் அதற்கு மேல் உள்ள பதவிகளுக்கு பொருந்தும் )

*வெளியிடங்களுக்கு ஊழியர்களை இடமாற்றம் செய்திடக்கூடாது 

*TENNURE முடித்த அனைவருக்கும்  ஒருவருடம்  பணியிட நீட்டிப்பு வழங்கலாம் 

----------------------------------------------------------------------------------------------------------------------

*நமது மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு ரோஸ்டர் உள்ளிட்ட உத்தரவுகள் 24.05.2021 வரைமாநில நிர்வாகம் நீட்டித்துள்ளது 

*விடுப்புக்கோரும் ஊழியர்கள் கூடுமானவரை மருத்துவ சான்றிதழோடு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

*இதர EL  போன்ற விடுப்புகளை தொடர்ந்து மூன்று நான்கு முறை என  நீட்டிக்க வேண்டாம் எனவும் இடையிடையே பணிக்கு வந்து விடுப்பை விண்ணப்பிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Wednesday, May 19, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                          உன்னை சொல்லி குற்றமில்லை --என்னை சொல்லி குற்றமில்லை ..............

  கொரானா இரண்டாம் தாக்குதலின் முதல் பலியாக நமது கோட்டத்தில் தோழர் சிராஜுதீன் டாக்சேவாக் திருநெல்வேலி மேற்கு அஞ்சலகம் அவர்களும் பெட்டைக்குளம் SPM தோழியர் அவர்களும் நேற்று (18.05.2021)அடுத்தடுத்து பலியானார்கள் என்ற துயரச்செய்தியோடு உங்களை சந்திக்கிறேன் .இதற்கிடையில் பல தோழர்களுக்கு விடுப்பை நீட்டிக்ககூடாது உடனே பணிக்கு வாருங்கள்   என கோட்ட அலுவலக உத்தரவுகள் ஒருபுறம்.

 .   *சென்றைய  பரவலின் போது (மார்ச் 2020  )பாதிப்புகள் குறைவு பாதுகாப்புகள் அதிகம் .நமது மாநிலசங்கம்  CPMG அவர்களுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தி ஊழியர்கள் நன்மை அடைகின்ற வகையில் பல உத்தரவுகளை பெற்றுத்தந்தது .சென்றமுறை பிரதமரே அறிவித்த 21 நாட்கள் முதல் ஊரடங்கு ..அதில் அஞ்சல்துறை அத்தியாவசியத்துறை என்று பிரகடனப்படுத்தப்பட்ட தருணங்கள் ..சுழற்சிமுறையில் பணி .பணி முடிந்தவுடன் வீட்டிற்கு செல்லலாம் 50 வயது தாண்டியவர்கள் சர்க்கரை நோயாளிகள் மாற்று திறனாளிகள் என ஊழியர்களை வகைப்படுத்தி விடுப்பு உள்ளிட்ட சலுகைகளை பெற்றோம் .பணிக்கு வரமுடியாத ஊழியர்களுக்கு எந்தவகையிலும் ஊதியம் பிடித்தம் செய்திடலாகாது பின்னர் தகுதியுள்ள விடுப்பாக மாற்றிக்கொள்ளலாம் என்கிறவரை சென்றது ..

    ஆனால் இரண்டாவது அலையான இந்தக்காலகட்டத்தில் பாதிப்புகள் அதிகம் -பாதுகாப்புகள் குறைவு --ஒருஅலுவகத்தில் ஒருவருக்கு தொற்று உறுதிசெய்ப்பட்டால் அந்த அலுவலகத்தை மூடக்கூடாது உள்ளூர் சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையில் அலுவகத்தில் கிருமிநாசினி தெளித்துவிட்டு பணியாற்ற சொன்னது விடுப்புகள் வழங்குவதில் கடினமான நிர்வாக நிலை  இவைகளை குறித்து இந்தமுறையும் மீண்டும் மீண்டும் நமது மாநிலச்சங்கம் தலையிட்டு ரோஸ்டர் உள்ளிட்ட சலுகைகளை பெற்றுத்தந்தும்  தமிழகத்தில் குறிப்பாக  கோவை, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட கோட்ட அதிகாரிகளுக்கு நமது தொழிற்சங்கங்கள் எடுத்த போராட்ட  முடிவுகளுக்கு பிறகுதான்  CPMG உத்தரவுகள் அமுலாக்கபட்டுள்ளது .

     *இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டும் பணியில் உள்ள தோழர்களில் 60க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொரானாவிற்கு பலியாகியுள்ளனர் ..பெயர்மட்டும் நமக்கு கொரானா வாரியர்ஸ் ஆனால் முன்கள பணியாளர்களுக்கு கொடுக்கப்படும் எந்த சலுகையும் நமக்கு மறுக்கப்பட்டுவருகிறது .வங்கிகளில் வேலைநேரத்தை குறைத்து படிப்படியாக ஒருநாள் விட்டு ஒருநாள் வேலை என மாற்றப்பட்டுள்ளது ..ஆனால் அதைவிட மக்கள் அதிகமாக கூடும்  அஞ்சல் துறையில் ரோஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டாலும் அது அனைத்து ஊழியர்க்ளுக்கும் முழுமையாக சென்றடையவில்லை குறிப்பாக தபால்காரர்கள் மற்றும் MTS ஊழியர்களுக்கு ரோஸ்டர் எந்தவகையிலும் பலனில்லாத ஒன்றாகிவிட்டது .

  *இந்த சூழலில் நமது கோட்டத்தில் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதை போல ஊழியர்களின் விடுப்பு வழங்கும் விசயத்தில் நிர்வாகம் நடந்து கொள்வது வருந்தத்தக்கது .அதே போல் விடுப்பு விண்ணப்பிக்கின்ற ஊழியர்களும் சாதாரண நாட்களில் விண்ணப்பிக்கும் நாட்களை போல் அல்லாமல் SAP மூலம் விண்ணப்பித்துவிட்டு உண்மையான மருத்துவகாரணங்களை விரிவாக கடிதம் மூலமாகவும் தெரிவிக்கவேண்டும் .கூடுமானவரை மருத்துவ சான்றிதழுடன் விடுப்பை விண்ணப்பிக்ககேட்டுக்கொள்கிறோம் .அருகாமையில் உள்ள அலுவகத்தில் பணியாற்றிட நிர்வாகம் கையை விரித்துவிட்டது ..ஆகவே இந்தப்பேரிடர் காலத்தில் ஊழியர்களின் பாதுகாப்பு முக்கியம் .பணிக்கு வரும் ஊழியர்களுக்கு மனரீதியான உறுதி அவசியம் .இதைக்கருத்தில்கொண்டுதான் நாங்களும் தொடர்ந்து கோட்ட அலுவகத்திற்கு தினமும் சென்று நமது ஊழியர்க்ளுக்கு நம்மால் முடிந்த உதவிகளை (டெபுடேஷன் விடுப்பு ) செய்திட அதிகாரிகளை சந்தித்துவருகிறோம் .ஆகவே அச்சமின்றி பணியாற்றுங்கள் .சிறுகாய்ச்சல் என்றாலும் உடனடியாக விடுப்பை விண்ணப்பிக்க  தயங்காதீர்கள் .தோழியர் பார்வதி மூன்றுநாட்களாக காய்ச்சலுடன் பணி செய்ததன் விளைவு இன்று அவர் நம்மோடு இல்லை .....தோழமையுடன் SKJ 

NFPE

             ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                  TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-ORG / dated at Palayankottai- 627002 the 18.05.2021

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir 

It is nevertheless to say that during this Covid 19 Pandemic, several staff are facing body ailments either tested Covid 19 positive or having symptoms as pointed by ICMR. In this connection, rigid stand in granting leave will add fuel to the fire only. When an unprecedented lock down is imposed and lakhs of people are being affected by this epidemic, refusing leave is nothing but an inhuman approach. We can cite some example like the case of Smt Meenakshi SPM Alwarkurichi and Shri V Hariramakrishnan Accountant Tirunelveli HO and so on. Further, today Smt Parvathi SPM Pettaikulan lost her life. Whether the administration will take these into account?

Hence, this union humbly request our SSPOs to grant leave by taking a lenient view to ensure that our staff should not a victim of this cruel Covid-19.

                                            Awaiting favourable reply

                         Yours faithfully 

[S.K.JACOBRAJ]

 




Tuesday, May 11, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                                   கோவிட் பரவலை தடுத்திட மாநில அரசு வருகிற 24.05.2021 வரை பிறப்பித்துள்ள ஊரடங்கின் காரணமாக  நமது மாநில அஞ்சல் நிர்வாகமும் 20.05.2021 வரை கடைபிடிக்கவேண்டிய சில நடைமுறைகளை வழங்கியுள்ளது .அதை கூட சில கோட்ட அதிகாரிகள் முழுமையாக பின்பற்றிட தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது  .முதலாவது நிர்வாக அலுவகத்தில் தொடங்கி பெரிய அலுவலகங்கள் வரை 50 சத ஊழியர்களை பணியாற்றிட அனுமதித்தால் போதும் என ரோஸ்டர் அனுமதிக்கப்பட்டது .இதர அலுவலகங்களில் வேலைநேரம் குறைக்கப்பட்டுள்ளது .ஆனால் பெரிய அலுவலகங்களில் பணிபுரியும் தபால்காரர் MTS ஊழியர்கள் குறித்து நிர்வாகம் கவலைப்பட்டதாக தெரியவில்லை .முற்றிலுமாக பேருந்து வசதிகள் தடைபட்ட போதிலும் அருகில் உள்ள அலுவலகங்களில் ஊழியர்களை பணியாற்றிட இதுவரை அனுமதி கிடைத்திடவில்லை .மேலும் பாதுகாப்பு அம்சங்களை வழங்கிடவும் நிர்வாகம் முழு அளவில் முன் வந்ததாக தெரியவில்லை .ஆகவே நிர்வாகம் அஞ்சல் துறையில் பணியாற்றுகின்ற பொதுமக்களுடன் நேரடி தொடர்புடைய தபால்காரர் மற்றும் GDS ஊழியர்களின் நலனை கருத்தில்கொண்டு அவர்களுக்கும் கூடுமானவரை ரோஸ்டர் முறையை அமுல்படுத்திடவேண்டும் .OUTSIDER களை பணிசெய்ய அழைப்பதால் கூடுதல் செலவாகும் என நினைக்கின்ற நிர்வாகத்திற்கு ஒரு நினைவூட்டல் --தபால்காரர்களும் மனிதர்களே --GDS ஊழியர்களும் மனிதர்களே !

தோழமையுடன் ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் P-3 நெல்லை 

Saturday, May 8, 2021

                                 மலிவு விலையில் மரணங்கள் 

* வணக்கங்களும் வாழ்த்துக்களும் 

நின்றுபோய் -இன்று 

வருத்தங்களும் அனுதாபங்களுமாய் 

தொடங்குகிறது ஒவ்வொரு  பொழுதும் .


*உறவில் ஒன்று -உடன் பணிபுரியும் 

இடத்தில் ஒன்றென்று என அழுதே 

முடிகிறது அன்றைய  கணக்கும் . 


*அப்போதெல்லாம்

எப்போதாவது ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டு 

ஒதுங்கி நின்று வழிவிடுவோம்

இப்போதென்னவோ

வழி நெடுகஆம்புலன்ஸ்

வலியோடு நாம் 


*முந்தைய நாட்களில்

எப்போதாவது எங்கேயாவது

சாவு செய்தி வரும்--நேரில் சென்று 

துஷ்டி கேட்காமல் இருந்தால் தூக்கம் கூட வராது


*இப்போதென்னவோ

வருவதெல்லாம் துக்க செய்திதான்

இறப்பு செய்திகளை கேட்டும் கூட 

இதயத்தை இறக்கி வைத்துவிட்டு 

 இரங்கல் செய்திகளை பதிவிட்டு வருகிறோம் 


*மலிவு விலையில் உயிர்கள் 

வாங்கமுடியா நிலையில் உடல்கள் 

பிழைப்பதற்கும் வழியில்லை 

புதைப்பதற்கும் வகையில்லை 

சடங்கோ சம்பிரத்தையோ இல்லை -

 இறுதிச்சடங்கு கூட காணொளியில் தான் 


எல்லா பிராத்தனைகளும் ஏறெடுக்க பட்டாலும் 

எந்த கடவுளும் இறங்கி வந்ததாக தெரியவில்லை 

எல்லா காடுகளையும் களவாடிவிட்டு 

காற்றுக்கு கடவுளிடம் கையேந்தி நிற்பது என்ன ?

இனியாவது விதைத்துவிட்டு செல்வோம் 

யாராவது மிச்சம் இருந்தால் தண்ணீராவது ஊற்றட்டும் --SKJ 






Thursday, May 6, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                    நமது மாநிலச்சங்கத்தின்  தொடர் முயற்சியால் மாநில நிர்வாகம் நேற்று அஞ்சலகங்களில் ரோஸ்டர் மற்றும் ரோஸ்டர் சாத்தியமில்லாத அலுவலகங்களில் வேலைநேரத்தை 4 மணி நேரமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது .இதனை தொடர்ந்து மண்டல அலுவலகம் அதன்பின்பு கோட்ட அலுவலகம் முறையான உத்தரவுகளை பிறப்பித்தவுடன் ரோஸ்டர் அமுலாகும் .நேற்றே இதர மண்டலங்களில் ரோஸ்டர் அமுலாக்கப்பட்டுவிட்டது .இது மத்திய மண்டலம் மாயவரம் கோட்ட உத்தரவு 

Dear All..

நாளைமுதல் அனைத்து SO க்களுக்கும்...

09 மணிமுதல் 01 மணி வரை மட்டுமே அலுவலக நேரம்.

BO வேலை நேரம் 10 to 12 hrs..

வேலை முடித்தவர்கள் பதுகாப்பு கருதி உடன் வீட்டுக்கு செல்லலாம்.

BO உள்ள அலுவலகங்கள் BO bag வந்தவுடன் வேலை முடிந்து செல்லலாம்.

HO வில் ROSTER அமல் படுத்தப்படுகிறது,

ஒருநாள் விட்டு ஒருநாள் பணி புரிய உத்தரவு இடபடுகிறது.

போஸ்ட்மேன்  staff தங்கள் return ஐ கொடுத்து விட்டுச்செல்லலாம்.

Th is order will be in force up to 20.05.2021 or until further orders whichever is earlier...

By

SPOs., Mayiladuthurai-609001

                           ஒருஅலுவகலத்தில் ஊழியருக்கு கொரானா வந்தாலும் அலுவலகத்தை கிருமிநாசினி தெளித்து பராமரிப்பதும் அந்த அலுவலகத்தை மூடாவா அல்லது செயல்பட அனுமதிப்பதா என்பதை மாவட்ட மாநகராட்சி ஆணையர் /சுகாதார அலுவலர் பரிந்துரையின் பேரில் மட்டுமே இனி நடக்கும் என கடந்த 29.04.2021 தேதியிட்ட மண்டல அலுவலக உத்தரவு இருக்கிறது .ஆகவே இனி அந்தந்த போஸ்ட்மாஸ்டர்களே மேற்குறிப்பிட்ட கிருமிநாசினி தெளித்து பராமரிப்பது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் .நேற்று கூட திருநெல்வேலி தலைமைஅஞ்சலகத்தில் ஒரே வாரத்தில் மூன்று ஊழியர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து நிர்வாகத்திடம் திருநெல்வேலி அஞ்சலகத்தை குறைந்தபட்சம் 24 மணி நேரமாவது மூடினால் என்ன நாம் கேட்டபோது மேற்சொன்ன பதிவினை தந்தார்கள் .மேலும் அவ்வாறு மூடப்படும் அலுவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் கோவிட் பரிசோதனை எடுத்தபின்னேரே பணிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என நமது கோட்டத்தில்  கூடுதல் பொறுப்பேற்றுள்ள SSP அவர்கள் தெரிவித்ததாகவும் தெரிவித்தார்கள் .

                          மேலும்  அலுவலகத்தில் சமூகஇடைவெளியை கடைபிடிக்க நடவடிக்கை எடுப்பது  ,வருகின்ற வாடிக்கையாளர்களை ஒரே இடத்தில் குவியாமல் டோக்கன் கொடுப்பது ,முகவர்களுக்கு தனி நேரம் ஒதுக்குவது என எல்லாமே அந்தந்த போஸ்ட்மாஸ்டர் பொறுப்பு என நிர்வாகம் தெளிவாக கூறிவிட்டது .நேற்றுகூட பல இடங்களில் ஒரு வங்கி உட்பட பல நிறுவனங்களுக்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தால் சமூகஇடைவெளி கடைபிடிக்கவில்லை என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது ..

   விழித்து   கொண்டோரெல்லாம்  பிழைத்து கொண்டார் --இங்கே குறட்டை விட்டோரெல்லாம் கோட்டை விட்டார் ????????  

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Wednesday, May 5, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

                           நித்தம் நித்தம் தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்துக்கொண்டு வந்தாலும் இன்னும் கடமை தவறா அதிகாரிகள் தாங்கள் வந்துபோகும் அலுவகத்திற்கு மட்டும் (அனைத்து நிர்வாக அலுவகத்திற்கு ) ரோஸ்டர் முறையை அமுல்படுத்தியுள்ளார்கள் .சென்னை மண்டலத்தில் இரண்டு கோட்டத்தில் சென்னை தெற்கு ,சென்னை வடக்கு கோட்டங்களில் ரோஸ்டர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய செய்திகள் தெரிவிக்கின்றன .

          நமது கோட்டத்தில் கூட மாஸ்க் SANITIZER மற்றும் FACE SHIELD இவைகளை வாங்குவதற்கு 28.04.2021 தேதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகும் பல அலுவலகங்களில் இதை நடைமுறைப்படுத்தவில்லை என்பதையும் மொத்தமாக JEM மூலம் பெற்றுத்தர ஏற்படும் காலதாமதத்தை  கருத்தில்கொண்டு உடனடியாக அனுமதி அளித்திடவேண்டும் என்று நாம் நேற்று தொடர்ச்சியாக கடிதங்கள் வாட்ஸாப் மூலம் வேண்டுகோள் விடுத்ததின் பலனாக நேற்று பாதுகாப்பு அம்சங்களை வாங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .மேலும் சென்ற  ஆண்டில் வாங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர் தனது செயலை இழந்துவிட்டதாக (4000 வரை ஸ்கேன் பண்ண முடியுமாம் ) இருந்தால் புதிய  தெர்மல் ஸ்கேனர் மீண்டும் அனைத்து அலுவலகத்திற்கும் வழங்கப்பட வேண்டும் .

                  அத்தியாவசிய சேவை எனும் பெருமை ஒருபக்கம்---உயிர்காக்கும் அடிப்படை வசதிகளை கூட செய்துதர தாமதிக்கும் நிர்வாக செயல்பாடு மறு பக்கம் ---உதாரணமாக அனைத்து கவுண்டர் சேவையை மதியத்திற்குள் நிறுத்திவிட CPMG அவர்களின் உத்தரவை மீறி பாளையம்கோட்டை BPC இரவு 8 மணி வரை தொடரும் கொடுமை -இதுகுறித்து மாநிலச்சங்கத்திற்கு நாம் தகவல் கொடுத்துள்ளோம் .

                           மாற்ற கோரிக்கைகளில் தான் நிர்வாகம் நிர்வாக தாமதத்தை செய்யலாமே தவிர ஒரு பேரிடர் காலம் கொத்துக்கொத்தாய் மரணங்கள் இவைகளை கருத்தில்கொண்டாவது நமது இலாகா முதலவர் அவர்கள் தெரிவித்த கருத்தின் படி சேவை முக்கியம் அதைப்போல ஊழியர்களின் உயிர் முக்கியம் என்பதை மாநில /மண்டல /கோட்ட அதிகாரிகள் உணர்ந்து செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, May 4, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                 கொரானா கால  தடுப்பு மற்றும் பாதுகாப்புகள் குறித்து நமது கோட்ட நிர்வாகம் கடைபிடித்துவரும் நடைமுறைகள் மேலும்மேலும் தாமதத்தை தான் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது .மொத்தமாக GEM மூலம் PU RCHASE செய்யப்பட்டு விரைவில் வழங்குவதாக வழக்கமான பதில்கள் ஏற்புடையதல்ல .அஞ்சலகங்களில் நமது சேவையை பயன்படுத்திவரும் வாடிக்கையாளர்களின் கூட்டம் கிஞ்சித்தும் குறையவில்லை .சமூக இடைவெளியும் கேள்விக்குறியாகிவிட்டது .பட்டுவாடாவிற்கு செல்லும் தபால்காரர்களும் GDS ஊழியர்களும் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி சென்று வருகிறார்கள் .நிர்வாக அலுவலகங்களில் மட்டுமே வருகை பதிவுகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது .ஏனைய தலைமைஅஞ்சலகங்களில் அட்மின் பிரிவு இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்திட தலைமை அஞ்சலக அதிகாரிகளுக்கு நிர்வாகத்திடம் இருந்து தெளிவான உத்தரவுகளை வழங்கிடவில்லை . ஊழியர்கள் பாதுகாப்பு விசயத்தில் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம் .தவறும் பட்சத்தில் நேற்றே பல தோழர்கள் சொன்ன கருத்துக்களின் படி நாமே நமது ஊழியர்களுக்கு மாஸ்க் HANDWASH உள்ளிட்ட தேவைகளை பூர்த்திசெய்திட   தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சூழல் வந்துள்ளது ..

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் நெல்லை 

                                                   NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION GROUPC                                                           TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-ORG  / dated at Tirunelveli  627002  the 04.05.2021.

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

                   Subject :Supply of  sanitary items and  PPEs to all staff in the wake of covid 19 reg.

                    Ref       : SSPOs, Tvl Dn email  dtd 3.5.21.

                    It is obviously known that the Pandemic is more dreadful and its thirst for people lives shoots up every day in the most rapid phase. Even after witnessing menacing surge in the number of fresh cases, heavily crowded hospitals and frightening deaths in our district ,  the question raised in the above referred email  is felt to be much inhuman. 

                     Until those items are supplied by GEM, inevitably , it has to be arranged locally for its supply without any further delay as it is the necessity of the hour. Hope for standard orders by the SSPOs ,as a one time measure, on humanitarian grounds towards  the purchase of essential sanitary items to all offices ,  immediately without awaiting any untoward incidents among our staffs.

                                 

                                                                      Thanking you Sir,

                                        Yours Sincerely ,

                                            S.K.JACOBRAJ


Saturday, May 1, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                   உங்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் 

இன்று காலை 09.30 மணிக்கு திருநெல்வேலி HO 10.00 மணிக்கு பாளையம்கோட்டை HO வில் நடைபெறும் மே தின கொடியேற்று விழா நிகழ்வில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .

இதர செய்திகள் 

*SB ஆர்டர் 08/2021 இன்படி அரசாங்கத்தின் நல உதவி தொகை பெறுகிறவர்களுக்கு ஜீரோ BALANCE யில் இந்த BASIC கணக்கினை தொடங்கலாம் .

*MINOR ஆக இருந்தாலும் அவர் நலத்திட்ட உதவிக்கு பயனாளியாக இருந்தால் MINOR பெயரில் கணக்கு தொடங்கலாம் .

*ATM வசதியினை பெற குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூபாய் 500 இருக்கவேண்டும் 

*கணக்கு பராமரிப்பு தொகைGST சேர்த்து ரூபாய் 50-

-------------------------------------------------------------------------------------------------------------

SB ஆர்டர் 09//2021 இன்படிஅஞ்சல் சேமிப்பு வட்டி மற்றும் முதிர்வுத்தொகைகளை வங்கிக்கணக்குகளில் மாற்றிட ECS வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது .

*அஞ்சலக வாடிக்கையாளர்கள் தங்களது MIS/SCSS/TD வட்டித்தொகையினை இனி அவர்களது வங்கிக்கணக்கிற்கு ECS முறையில் மாற்றிட அதற்கான படிவத்தை நிரப்பி அஞ்சலகத்தில் கொடுத்தால் போதும் 

*அதேபோல் MIS/SCSS/TD /NSC /KVP இவைகளின் முதிர்வு மற்றும் முன்முதிர்வு தொகையினை கூட ECS    முறையில் மாற்றிட வசதிகள் வந்துள்ளது .

*இதற்காக அவர்கள் SB -7 உடன் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகலுடன் குறிப்பிட்ட படிவத்தை நிரப்பி கொடுத்திட வேண்டும் 

*இன்று கொடுத்தால் மறுநாள் அவர்களது வங்கிக்கணக்கிற்கு மாற்றப்படும் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் நெல்லை