...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, April 30, 2021

அனைவருக்கும் மே -தின வாழ்த்துக்கள் 

                        தோழமையை நேசிப்போம் 



பணிக்கு வந்த  புதிதில் 
எங்கள்   நாட்கள் -பொத்தாம் பொதுவாக 
நட்போடு  நகர்ந்திருந்தன 
நட்புகள் மெல்ல மெல்ல  
தோழமைகளை  துளிர்த்திருந்தன 

தோழமைகள் ஒவொருநாளும் 
தேடலை தர தொடங்கிருந்தன 
தேடல்கள்  எங்கள் உள்ளங்களில் 
தெளிவை கான துடித்தன 

ஆம் நாங்கள் தோழர்களாகி விட்டோம்  
ஒருவரை ஒருவர் 
தோழர்களென்று விளிக்கவும் 
தொடங்கிவிட்டோம் 

தோழமை -இங்கு 
புதுப்புது உறவை கூட்டியிருக்கிறது 
 மதம் இனம் மொழி கடந்து 
வர்க்க உணர்வு அரும்பி கொண்டிருந்தது 

தோழமை மட்டும் தான் -உலகை 
உனக்கு காட்டும் 
மற்ற உறவுகள் எல்லாம் 
உன்னுள்ளே முடங்கும் என்ற 
உண்மையை காலம் எங்களுக்கு 
உணர்த்த தொடங்கியிருந்தது 

ஒற்றுமை என்பது  உலக 
அவசியமாகிவிட்டது 
உரிமை மட்டுமே தீர்வு என்று 
ஒலிக்கதொடங்கிவிட்டது 

அதிகாரவர்க்கத்தின் எச்சரிக்கைகளை 
அலட்சியம் செய்யம் நேரம்  வந்துவிட்டது
நிர்வாகத்தில் நீயும்  பாதி எனும் 
நீதி பலிக்க தொடங்கிவிட்டது 

அடக்குமுறை அடிமை 
இவைகளெல்லம் அடுத்த 
கிரகம் எற தயாராகிவிட்டது 

அடுத்தவனுக்கு வந்தால்
 நமக்கென்ன என்ற நினைப்பு 
விலக  தொடங்கிவிட்டது 

இழப்பதற்கு ஒன்றும் இல்லை -என்ற 
உண்மை உணர்த்த தொடங்கிவிட்டது 
இன்னும் தயக்கமா ? என 
கேள்விகள் எங்கும் கேட்க தொடங்கிவிட்டது 

புதிய அத்தியாயம் படைக்க 
புது புயலாய் புறப்படுவோம் 
தோழமைக்காய் சுவாசிப்போம் 
தோழமையை நேசிப்போம் 
                             (மீள் பதிவு -2020  )    மே தின வாழ்த்துக்களுடன் 
                                                          ----------   SK .ஜேக்கப் ராஜ்------------------











அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                           நெல்லையில்    மே தின கொடியேற்றம்  

நாள் --01.05.2021      நேரம் காலை 09.30 மணி 

இடம் --திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் 

தலைமை --தோழர் T .அழகு முத்து அவர்கள் (கோட்ட தலைவர் (அஞ்சல் மூன்று )

-------------------------------------------------------------------------------------------------------------

நாள் -01.05.2021      நேரம் காலை 10.00 மணி 

இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

தலைமை -தோழர் சீனிவாச சொக்கலிங்கம்  

(கோட்ட தலைவர் (அஞ்சல் நான்கு  )

அனைவரும் வருக ! வருக !

தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


 இப்பொழுதெல்லாம்

வாழ்த்து கவிதை எழுத

என் மனமும் விரும்பவில்லை

வாழ்த்தி பதிவிடுவதற்குள்

வந்து நிற்கிறது

வருந்துகிறோம் செய்திகள்

வரிசையில்....

இங்கு சாவுக்கும்

சடங்குக்கு கூட

சம்பத்தபட்டவனை தவிர  வேறு யாரும்

வந்துவிட போவதில்லை

: புதைக்க இடமில்லை

எரிக்க விறகில்லை

துணைக்கு ஆளில்லை

துயரத்திற்கோ முடிவில்லை. SKJ


 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                 இன்று பணி நிறைவு பெறுகின்ற நமது கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் திரு .L .துரைசாமி அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க NELLAI -NFPE சார்பாக வாழ்த்துகிறோம் ..மிக குறுகிய காலங்கள் பணியாற்றினாலும் மாதாந்திர பேட்டியை முறையாக நடத்தியது ,சுழல் மாறுதலில் சுமுகமாக வெளியிட்டது ,புதிதாக பதவியேற்ற தபால்காரர் தோழர்களுக்கு அவர்களின் விருப்ப இடங்களில் பணியமர்த்தியது ,நீண்டகாலமாக நிலுவையில் இருந்த LTC மற்றும் TRANSFER TA பில் களை சாங்க்ஷன் செய்தது GDS ஊழியர்களுக்குக்காக அனைத்து அலவன்ஸ் சம்பந்தமாக விரைந்து முடிவெடுத்தது இறுதியாக கொடுக்கப்பட்ட அனைத்து RULE 16 வழக்குக்களையும் CENSURE என முடிவெடுத்து உத்தரவிட்டது என ஒரு நேர்மையான அதிகாரியாக பணியாற்றியதை நாம் நன்றியோடு பாராட்டுகிறோம் .வாழ்த்தி வழி அனுப்புகிறோம் .

                                                   புதிய உறுப்பினர்களின் சேர்க்கை காலஅவகாசம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் நாம் ஏற்கனவே பெற்றிருந்த உறுப்பினர்கள் படிவத்தை முதற்கட்டமாக நேற்று சமர்பித்தோம் .அதன்படி அஞ்சல் மூன்றாம் பிரிவிற்கு 12 புதிய உறுப்பினர்களும் அஞ்சல் நான்காம் பிரிவிற்கு 35 புதிய உறுப்பினர்களும் கொண்ட பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது .மீண்டும் நம்மோடு இணைந்து பணியாற்ற NFPE பேரியக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்ட அத்தனை தோழர்களுக்கும் NELLAI -NFPE யின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள்  நெல்லை 

Thursday, April 29, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                   மீண்டும் lockdown அறிவிக்கப்போகிறார்கள் .வருகிற சனிக்கிழமை மே 1மற்றும் 2 தேதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது .பல தோழர்கள் ஊரடங்கு நாட்களில் பணிக்கு வருவது எப்படி சாத்தியம் என வினவுகிறார்கள் .சென்றவருடம் ஊரடங்கு நாட்களில் சொன்ன அதே அத்தியாவசிய சேவை செய்கின்ற துறைகளில்  நமது அஞ்சல் துறையும் ஒன்று என்ற பதிலை தருவார்கள் .குறைந்தபட்சம் ஊரடங்கு நாட்களில் அஞ்சலக பணிநேரங்கள் குறைப்பு -ரோஸ்டர் முறையில் ஊழியர்களை பணிசெய்ய அழைப்பது ,பட்டுவாடா இல்லாத C &B  அலுவலகங்களை மூடுவது ,அருகாமையில் உள்ள அலுவலகங்களில் ஊழியர்களை பணிசெய்ய அனுமதிப்பது ,மாற்று திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி  ஊழியர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு ,விடுப்புகளை தாராளமாக வழங்குவது உள்ளிட்ட குறைந்தபட்ச சலுகைகளையாவது ஊழியர்க்ளுக்கு பெற்றுத்தரவேண்டியது நமது சங்கங்களின் பொறுப்பு மட்டுமல்ல கடமையாகும் .நமது மாநிலச்சங்கமும் தொடர்ந்து கடிதங்களை எழுதி மாநிலநிர்வாகத்தை வற்புறுத்திவருவதை நாம் பார்க்கிறோம் .நமது மாநிலச்சங்கத்தின் முயற்சிகள் வெற்றிபெற துணை நிற்போம் .

*நமது கோட்டத்தில் அடுத்தடுத்து கொடுக்கப்பட்ட RULE -16 வழக்குகளில் ஒவ்வொன்றிலும்   ஊழியர்கள் தரும் விளக்கங்களை ஏற்று CENSURE கொடுத்து முடிக்கப்பட்டுவருகின்றன .அதற்காக நமது கண்காணிப்பாளர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் பல தோழர்களுக்கு CENSURE குறித்த எழும் சந்தேகங்களுக்கு சில விளக்கங்கள் ....

.(a) ஒரு அரசு ஊழியர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கை துவக்கப்பட்டாலே தண்டனை அளித்திட வேண்டுமென்றால் குறைந்தப்பட்ச கண்டனம் (censure )வழங்கிட வேண்டும் 

(b) censure மட்டும் தண்டனையாக இருந்தால் அதற்கு தனியாக காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படாததால் பதவி உயர்வினை மறுத்திடாமல் பதவி உயர்வினை வழங்கிடலாம் .(நன்றி விதி அறிவு களஞ்சியம் நூலிலிருந்து )

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 



Wednesday, April 28, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                                   முக்கிய செய்திகள் 

*நேற்று நமது மாநில நிர்வாகம் வெளியிட்ட உத்தரவை (கவுண்டர் 2 மணி வரை இயங்கும் ) என்ற எதற்கும் பயன்படாத உத்தரவை மாற்றிடக்கோரியும் கீழ்கண்ட மாற்றங்களை செய்திடக்கோரியும் நமது மாநிலச்சங்கம் CPMG அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இருந்து ......

*அனைத்து அஞ்சலகத்திலும் வேலைநேரத்தை 3 மணி நேரமாக குறைக்க வேண்டும் .

*கோவிட் உறுதிசெய்யப்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் அலுவலகத்தை MHA வழிகாட்டுதல் அடிப்படையில் ஒரே மாதிரியான நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் 

*பட்டுவாடா இல்லாத துணை அஞ்சலகங்களை மூடிவிட்டு அந்த ஊழியர்களை அருகிலுள்ள பெரிய துணை /தலைமை அஞ்சலகங்களில் பணியாற்றிட அனுமதிக்கவேண்டும் 

*50 சத ரோஸ்டர் முறை பின்பற்றப்படவேண்டும் .

*SANITIZERS ,MASKS .GLOVES மற்றும் இதர பாதுகாப்பு அம்சங்களை அனைவருக்கும் வழங்கவேண்டும் 

*விடுப்பு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தாராளமாக விடுப்பு வழங்கவேண்டும் 

*CONTAIMENT பகுதியில் வசிக்கும் ஊழியர்களுக்கு பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் .அதேபோல் மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கும்,கர்ப்பிணி ஊழியர்களுக்கும்   பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும்.

-------------------------------------------------------------------------------------------------------------------

விதி அறிவு களஞ்சியம் புத்தகம் வேண்டுவோர் POSB கணக்கு 4876043185 தோழர் ஆனந்தராஜ் PA பெருமாள்புரம் அவர்களது கணக்கில் ரூபாய் 450 செலுத்தி (வெளி கோட்ட ஊழியர்கள் தபால் செலவு சேர்த்து ரூபாய் 500 ) அதன் விவரங்களை 9442123416 என்ற எண்ணிற்கு தகவல்களை தெரிவிக்கவும் .மேலும் 20 புத்தகங்கள் தேவை என மாநிலசெயலரிடம் தெரிவித்துள்ளோம் .

நேற்று பணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்கள் அம்பை பகுதி தோழர்கள் முத்துலட்சுமி ,பாலகுருசாமி வனஜா சுபா PA செங்கோட்டை ...உங்கள் பிரதிக்கு இன்றே முன்பதிவு செய்திடுவீர் ...

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                   

Tuesday, April 27, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                                         முக்கிய செய்திகள் 

*கோவிட் -19 இரண்டாவது பரவலை தொடர்ந்து நேற்று நமது CPMG அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட வழிகாட்டுதலை பார்த்திருப்பீர்கள் .அனைத்து அஞ்சலகங்களிலும் மதியம் 2 மணிவரை கவுண்டர் செயல்படலாம் என்பதனால் யாருக்குநன்மை என தெரியவில்லை .

*திருநெல்வேலி மேற்கு அஞ்சலகத்தில்  பணிபுரிந்த  ஊழியருக்கு கோவிட் பாதிப்பு வந்தபின்பும் குறைந்தபட்ச SANITAISAR வசதிகள் எதுவும் செய்துகொடுக்காமல் மீண்டும் மீண்டும் ஊழியர்களை டெபுடேஷன் அனுப்புவதை நிர்வாகம் தவிர்த்து குறைந்தபட்சம் ஒருநாள் அலுவலகத்தை மூடிட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் .

*மாநில சங்கத்தின் தீவீர முயற்சிக்கு பின் மாநிலம் முழுவதும் ஆதார் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன .மாநில செயலருக்கு நன்றிகள் .

*தலைவர் KVS அவர்களின் விதி அறிவு களஞ்சியம் நூல் நமது கோட்டத்திற்கு வந்த 50 நூல்களும் விற்றுமுடிக்கப்பட்டுவிட்டன .இன்னமும் நிறைய தோழர்கள் நூல் வேண்டும் என கேட்கிறார்கள் .தேவைப்படுவோர் தங்களது பிரதிக்கு முன்பதிவு செய்துகொள்ளுங்கள் .அதற்கேற்ப மாநிலச்சங்கத்திடம் நூல்களை பெற்று விரைவில் அனுப்பப்படும் .

*புதிய உறுப்பினர்கள் சேர்க்கை படிவத்தினை கோட்ட நிர்வாகத்திடம் வழங்கிட ஜூன் 30 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது .

*நமது தொடர் முயற்சியின் காரணமாக பணகுடி அஞ்சலகத்திற்கு ஒரு PA ATTACH செய்யப்பட்டுள்ளார்கள் .சற்று தாமதம் ஆனாலும் நிலைமையை புரிந்துகொண்டு  உத்தரவிட்ட கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..

*சென்னையில் இருந்து தபால்காரராக பிறகு எழுத்தராக பதவி உயர்வு பெற்ற தோழியர் அன்புச்செல்வி PA  அம்பாசமுத்திரம் அவர்களது CGHS  சலுகை தொடர கோட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது .ஒருசில விளக்கங்களை பெற்றபின் இந்த முடிவுகளை நிர்வாகம் எடுத்துள்ளது .கோட்ட நிர்வாகத்திற்கு நன்றி .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ்  கோட்ட செயலர் நெல்லை 


Monday, April 26, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                    CGHS -குறித்த தோழியர் ஒருவரின் கேள்விக்கு இந்த பதில் ..(ஆதாரம் தோழர் KVS அவர்களின் விதி அறிவு களஞ்சியம் நூலில் இருந்து ......

     .CGHS திட்டத்தில் CGHS மருத்துவமனை இருந்திடும் பகுதியில் வசித்திடும் ஊழியர்களுக்கு CGHS சந்தாத்தொகை கட்டாயமாக பிடித்தம் செய்திடவேண்டும்

*பணியில் ஊழியர் ஒரு CGHS நகரத்தில் இருந்து மற்றொரு CGHS நகரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டால் அவர் CGHS  .எலகைக்குட்பட்ட பகுதியில் தன் குடிருப்பினை வைத்துக்கொள்வேன் என்ற உறுதிமொழியினை தந்து AD CGHS அவர்களுக்கு விண்ணப்பிக்கவேண்டும் .புதிய நகரத்தில் அவருடைய மேலதிகாரி அவரது CGHS சந்தா தொகை தொடர்ந்து பிடிக்கப்படுகிறதென்றும் CGHS எலகைக்குட்பட்ட பகுதியில் வசிக்கிறார் என்ற சான்றுடன் AD CGHS க்கு அனுப்பிவைப்பார் .அவர் CGHS எல்கைக்குள் வசிக்கவில்லை என்றால் அந்த கார்டு செயல்பாட்டிற்கு வராது .

                  இதுபோன்ற எண்ணற்ற குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் 50000 விதிகளின் தொகுப்புகள் அடங்கிய முற்றிலும் தமிழில் வெளிவந்துள்ள இந்த நூலை அனைத்து அஞ்சல் ஊழியர்களும் வாங்கி பயன்பெற கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Saturday, April 24, 2021

 அண்ணன் KVS அவர்க்ளின்  விதி அறிவு களஞ்சியம் ----நூல் குறித்து ....

*புத்தகமா ?பெட்டகமா ?

*தாய்மொழியில் இலாகா  சட்டங்கள் -அதுவும் 

தமிழிலே  அத்தனை விளக்கங்கள் 

தலை வணங்குகிறோம் தலைவரே ! 

அகிலஇந்திய   தொழிற்சங்க வரலாற்றில் 

 த (ம)ணி  மகுடம் சூட்டியவரே !


*அஞ்சல் ஊழியர்களை ஆழ் கடலில் 

அறிவு முத்தெடுக்க அழைத்த 

முதல் தலைவரே !

வேகத்தோடு விவேகத்தையும் 

கலந்திங்கு விதைத்தவரே !


*அச்சு ஏறும் போது அணி சாயம் பூசி 

அசட்டை செய்தவர்கள் மத்தியில் -இன்று 

தனி பிரதி கேட்டு நச்சரிப்புகள்--மீண்டும் 

தமிழகமெங்கும் NFPE எனும் உச்சரிப்புகள் 


*வெறும் விதிகளின் தொகுப்புதானே என 

வெற்று விமர்சனம் வைத்தவர்கள் கூட -இன்று 

விற்று தீர்வதற்குள் தனக்கு ஒன்று என 

வாங்கி கொள்ள வரிசையில் ....


*விதி அறிய துடிப்பவர்களுக்கு 

வழி காட்டும் -   அரைகுறை 

விதி காட்டி மிரட்டியவர்களுக்கு 

வலி கூட்டும் 

அடிமட்ட ஊழியருக்கும் --சட்டங்களின் 

உண்மை உணர்த்தும் --அதிகார வட்டத்திற்கோ 

உள்ளம் உறுத்தும் 


*அலமாரியில் அடுக்கிவைக்கும் 

அழகு சாதன பெட்டியல்ல 

அனுதினமும் அலுவலகத்தில் 

அலச படவேண்டிய பக்கங்கள் 

தத்தளிக்கும் ஊழியருக்கு -

தன் பலம் காட்டும் --

அறிவின் குவியலிது !

ஆற்றலின் புதையலிது !


*ஊரடங்கிய நாட்களில் -ஊழியருக்காய் 

உறங்காமல் உழைத்தவரே !

வெளிப்புற தோற்றத்தில் இது 

புத்தமாக தெரியலாம் --

கோட்ட/ கிளை செயலருக்கோ இது தான் 

பலமிக்க ஆயுதம்   --இதில் உள்ள 

வார்த்தைகள் எல்லாம் தோட்டாக்கள் 

வரிகளெல்லம் ஏவுகணைகள் 


குறிப்பறிந்து பேசவும் --குறிபார்த்து வீசவும் 

பேரவை  தோழர்களுக்கு போர் பயிற்சிக்கு ஒப்பானது 

உந்தன் பயிற்சி வகுப்புகள் 

பெருமைகொள்கிறோம் -

-பெருமைமிக்க பேரியக்கத்தில் 

ஆளுமைமிகு  தலைமையின் கீழ் 

தொழிற்சங்க பணியாற்றிட 

நாங்கள் பெருமை கொள்கிறோம் 

தொடரட்டும் உங்களது உன்னத சேவைகள் .

தோழமையுடன் ------SK .ஜேக்கப் ராஜ் ----------

























Wednesday, April 21, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                                  முக்கிய செய்திகள் 

* எழுத்தர் தேர்வுக்காக நமது NFPE பேரியக்கம் சார்பாக மாநிலந்தழுவிய ஆன்லைன் வகுப்புகளில் நமது கோட்டத்தில் இருந்து 15 தோழர்கள் பங்கேற்றுவருகிறார்கள் .ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக கலந்துகொண்டிருக்கின்ற தோழர்கள் தெரிவித்திருக்கிறார்கள் .பெயர் கொடுத்ததும் இணைப்பு கிடைக்காதவர்கள் (9442123416 --ஜேக்கப் ராஜ் ) எங்களை தொடர்புகொள்ளவும் 

* நமது முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS அவர்க்ளின் கைவண்ணத்தில் வெளிவரும் விதி அறிவு களஞ்சியம் புத்தகம் வினியோகம் தொடங்கிவிட்டது .இன்னும் இரண்டு நாட்களில் நமது கோட்டத்திற்கு வந்துசேரும் .புத்தகம் தேவைப்படுவோர் கோட்ட செயலரை (9442123416 --ஜேக்கப் ராஜ் )  தொடர்பு கொள்ளவும் 

*நேற்று நமது கோட்ட சங்கம் சார்பாக கொரானா இரண்டாவது பரவலை முன்னிட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்புகள் குறித்து விரிவான கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது .தங்களது அலுவலகங்களுக்கு  SANITISER- HANDWASH -மாஸ்க் தேவைகள் குறித்து அந்தந்த போஸ்ட்மாஸ்டர் அவர்கள் கோட்ட நிர்வாகத்திற்கு ஈமெயில் அல்லது கடிதங்களை அனுப்பிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

*இந்த ஆண்டும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையில் புதிய உச்சத்தை அடையவிருக்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Saturday, April 17, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                          முக்கிய செய்திகள் 

*நேற்று நமது கோட்டத்தில் MACP  பதவி உயர்வு தொடர்பாக DPC கூடியது .31.03.2022 வரையிலான பதவி உயர்வுகள் பரிசீலிக்கப்பட்டு உள்ளது .

*GDS TO தபால்காரர் தோழர்களுக்கான இடமாறுதல் கமிட்டடியிலும் ஊழியர்களின் விருப்ப வேண்டுதல்களின் படி இடமாறுதல்கள் முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது 

*மாநில அளவிலான நமது NFPE சார்பாக எழுத்தர் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சியில் கலந்துகொண்டுவரும் நமது கோட்ட தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள் .நேற்று நடைபெற்ற வகுப்புகள் குறித்து தங்களது பின்னோட்டங்களை 9442123416 என்ற எண்ணிற்கு தெரிவியுங்கள் .அடுத்த வகுப்பு வருகிற செவ்வாய் இரவு 7..15 க்கு நடைபெறுகிறது .

*நமது கோட்டத்தில் சமீபத்தில் பல தோழர்களுக்கு கொடுக்கப்பட்ட RULE -16 குறித்து கடந்த மாதாந்திர பேட்டியில் விவாதித்து கூடுமானவரை இந்தமாத இறுதிக்குள் நல்லதொரு முடிவெடுப்பதாக தெரிவித்தார்கள் .

*தோழர் சபரி மணிகண்டன் அவர்களுக்கு  2016 யில் திலி  மேற்கு அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு  WRONG POSTING என்பதற்காக ரூபாய் 38,195 பிடிக்கப்போவதாக கொடுக்கப்பட்ட நோட்டீஸ்க்கு தோழரின் மனு ஏற்றுக்கொள்ளப்படாமல் ஒரே தவணையில் முழுத்தொகையும் பிடிக்கப்பட்டு வெறும் 350 ரூபாய்தான் இந்தமாதம் ஊதியமாக கிடைத்த செய்தியும் நமக்கு தாமதமாகத்தான் தெரியவந்தது .கூடுதலாக வாடிக்கையாளருக்கு கொடுக்கப்பட்ட  தொகையை நிர்வாகம் வாடிக்கையாளரிடம் பிடித்திட எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் ஊழியரிடம் பிடித்தம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது .சம்பந்தப்பட்ட ஊழியர் நமது இயக்குநர் அவர்களுக்கு மேல் முறையிடு செய்துள்ளார் .கடைசி நேரத்தில் கருணை காட்டாவிட்டாலும் பரவில்லை கடுமை காட்டாமலாவது இருந்திருக்க கூடாதா ? இருப்பவருக்கு ஒருநீதி  இல்லாதவருக்கு ஒரு நீதியா ? 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Friday, April 16, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

*நேற்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியின் முடிவுகள் 

1.தோழர் நாராயணன் PA டவுண் அவர்களுக்கு WRILL விடுப்பு வழங்குவது ஏற்றுக்கொள்ளப்பட்டது 

2.தோழர் M .ஆசைத்தம்பி அவர்களின் TA பில் (PTC)மறுபரிசீலனை செய்யப்படும் 

3.CASH COUNTING மெஷின் கிட்டத்தட்ட 70 அலுவலகங்களுக்கு வாங்கப்பட்டுள்ளது .அவைகள் நேற்றிலிருந்து அனுப்பப்பட்டுவருகின்றன .பாளை HO விற்கு மூன்று மெஷின் வழங்கப்படும் 

4.சிறு விடுப்பை தவிர ஏனைய விடுப்பு காலத்திற்கு வேலைப்பளு அதிகமுள்ள மகாராஜாநகர் மற்றும் பெருமாள்புரம் அலுவலகத்திற்கு டெபுடேஷன் கொடுக்கப்படும் 

5.MMS வேனுக்கு புதிய டயர் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் 

6.தச்சநல்லூர் DEQUARTERS குறித்து பரிசீலிக்கப்படும் 

7.பணகுடி அஞ்சலகத்திற்கு ஒரு ஆள் அனுப்பப்படும் .முனைஞ்சிப்பட்டி அலுவலகத்திற்கு பரிசீலிக்கப்படும் 

8.பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு AOF படிவங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு மூன்று பீரோ வழங்கப்படும் 

9.MACP சிக்கான கமிட்டி ஓரிருநாளில் கூடுகிறது 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Thursday, April 15, 2021

 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

இன்று (15.04.2021) காலை 11 மணிக்கு நமது SSP அவர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .அதில் அஞ்சல் மூன்று சார்பாக விவாதிக்கவேண்டிய பிரச்சினைகளை நாம் 09.04.2021 அன்று கொடுத்துள்ளோம் .இதோ உங்கள் பார்வைக்கு...

                                                                     NFPE

              ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                 TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-MM/ dated at Torunelveli 627002 the 09.04.2021

To

The Sr.Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir

            Sub:    Subjects for monthly meeting -reg

*****

              The following subjects may kindly be included for discussion during the monthly meeting.

1. It is requested to depute PAs to Munanjipatti SO and Panagudi SO as an interim measure since

(a) The PA posted on Rule 38 transfer to Munanjipatti SO has cancelled this transfer and requested transfer to Chennai.

(b)  The relief of PA posted on Rule 38 transfer to Panagudi SO from Dindigul division seems to be get delayed.

2. It is requested for the additional supply of three steel cupboards  to Palayankottai HO for preserving the AOFs.

3. It was requested for the supply of Cash counting Machines for all SB counters,   but it was replied by the Administration that three machines are in working condition. Hence the Divisional Administration is requested to arrange for analysing  the actual condition by the concerned officers themselves.

4. Considering the conjesting space availability at Thatchanallur SO , it is requested to recommend for dequarterisation by shifting the Delivery branch and Sub Account branch to upstairs .

5. It is requested to exempt Maharajanagar SO and Perumalpuram SO, for managing shortage of staff arising out of leave sanctioned for PAs, under office arrangement , considering the work burden in these offices.

6. Requested to take immediate action for utilising the newly promoted PAs in a full-fledged manner

7.. Kindly arrange to fill up the vacant post of ATR, Palayankottai immediately.

8. Requested for issuing suitable orders to stop Adhar works due to the rapid spread of Covid 19 in recent days.

9. Inorder to fight against the second wave of Corona, it is requested for the supply of essential PPEs for all our officials.

10. It is requested to reconsider to grant  full TA i.e Rs.500/- per day  for the Postman to PA Induction trainees at PTC  as per orders circulated in the letter dtd 1.2.2018 from the Dept of Expenditure.- c/o Shri. Asaithambi,  then Postman, Radhapuram, now PA, Tisayanvilai.

11. Action may please be taken to replace the left side back tyre of the Mail Van No: TN 59 CF 4552 as it is in worn out condition.

12 Request to modify the maximum and minimum cash balance of mukkudal S.O. Since the current Cash balance is not enough to meet out actual requirements.

13. Request to modify the present working hours of Ravanasamudram S.O  from 0900 to 1700  to 08.30 to 1630 inorder to facilitate the customers.

14. Request to enable user ID for the LGO promoted officials. Though more than 8 PA s are working at Ambasamudram HO it is very difficult to manage during shortage of staff.

15. It is requested for the conversion of leave spells already availed as EL/ Commuted leave by Sri. S. Narayanan , PA, Tirunelveli Town SO as  special leave "WRILL "  since he met with the accident at PTC , Madurai, during his training period which is undoubtedly to be considered as happened "while the CGS  performing his duties."

The following officials will attend the meeting.

1.      S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA Palayamkottai  HO

2.      C.Vanna Muthu Malai  SPM TVL RS

3.       R.V.Thiyagarajapandian Branch Secretary &SPM Ravanasamudram

                         Yours faithfully

SK .JACOBRAJ 


Tuesday, April 13, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                                        முக்கிய செய்திகள் 

                              *  எழுத்தர் தேர்விற்கு தயாராகும் தோழர்களுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நமது அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS அவர்களின் தலைமையில் நமது ,மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களின் முயற்சியில் நாளை தொடங்குகிறது .ஏற்கனவே நமது கோட்டத்தில் இருந்து நான்கு தோழர்கள் இணைந்துள்ளார்கள் மேலும் ஆன்லைன் பயிற்சியில் சேரவிரும்புகிறவர்கள் 9442123416 (ஜேக்கப் ராஜ் )  என்னை தொடர்புகொள்ளவும் .

 *கோவிட் பரவலை தடுக்க ஒவ்வொரு துறையும் அந்தந்த துறை சார்ந்த சுற்றறிக்கையை வெளியிட்டுவருகிறது .நேற்று கூட DOT தனது இயக்குனரகத்திற்கு வழிகாட்டுதல் அணையை பிறப்பித்துள்ளது .ஆனால் அஞ்சல் துறையில் இன்னமும் ஆதாருக்காக அலைமோதும் கூட்டம் --பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் வழங்காமல் மௌனம் காக்கும் நிர்வாகம் --சமூகஇடைவெளி முகக்கவசம் மறந்துபோன வாடிக்கையாளர்கள் -என்ன செய்யப்போகிறது அஞ்சல் துறை ?

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.[புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, April 12, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                       முக்கிய செய்திகள் 

*POSB 1/2021-23.02.2021  உத்தரவு தொடர்பாக 09.04.2021 அன்று வந்துள்ள மேலும் சில வழிகாட்டுதல்கள் --அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் காசோலை வசதி கோரும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி , 20 செக்லீப்  books Stock  தீர்ந்து போகும் வரை 20 Cheq leaves per calendar year இலவசமாக வழங்கலாம்.  10 லீப்  உள்ள செக் புத்தகம் Stock supply செய்த பின்  10 Leaves மட்டுமே Free of cost  வினியோகிக்க வேண்டும்.

*அதிகரித்துவரும் கொரானா பரவல் ,அபராதம் விதிக்க துடிக்கும் காவல்துறை இவைகளை கருத்தில்கொண்டு நமது தோழர்கள் மீண்டும் மாஸ்க் அணிந்து கொண்டு வாருங்கள் .

*உடுப்பியில் ஏப்ரல் 18 முதல் 20 வரை நடைபெறவிருந்த அஞ்சல் நான்கின் அகிலஇந்திய மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து ஏற்கனவே நாம் விண்ணப்பித்த சிறப்பு விடுப்பை ரத்துசெய்திட அஞ்சல் நான்கு சார்பாக எழுதப்பட்ட கடிதம் 

        NFPE

                 ALL INDIA POSTAL EMPLOYEES UNION                                                    POSTMEN &MTS                                                                       TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P4-SCL / dated at Tirunelveli - 627002 the  12.04.2021

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

             Sub : Request for grant of Special Casual Leave for attending All India Conference of AIPEU-POSTMEN&MTS  reg

                                                ****

Kindly refer this union letter number P 4/SCL  dated 08.04.2021   In this regard, it is to inform that our all India Conference proposed to be held on18.04.2021  at Udupi Karnadaka stands postponed and hence our request may kindly be taken as cancelled.

                                               

                                                         Thanking you Sir

12.04.2021

Palayamkottai       

                                                                                                              Yours faithfully

                                                                                               / T.PUSHPAKARAN /

 

 

 

 


Saturday, April 10, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

HSG II  ஊழியர்களுக்கான சுழல் மாறுதல் அறிவிப்பினை தென்மண்டல அலுவலகம் நேற்று வெளியிட்டிருந்தது .அதில் நமது கோட்டத்தில் தோழியர் TK .மீனாகோமதி அவர்கள் TENNURE முடிவடைவதாகவும் ஆனால் HSG II நிரப்பப்படவேண்டிய இடங்களை காட்டும்போது போகாத ஊருக்கு வழிசொல்லுவதை போல UNFILLED HSG II பதவிகளை விட்டுவிட்டு  காசாளர் பாளையம்கோட்டை உட்பட மிக குறைவான பதவிகளை மட்டும் அறிவித்திருந்தது .இது குறித்து தோழியரின் நியாயமான கோரிக்கைகள் நம்மிடம் வந்ததை தொடர்ந்து நமது மாநில செயலருக்கு உடனே கடிதம் எழுதி HSG II VACANCY அனைத்தையும் அறிவிக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் .இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஊழியரும் உடனே தென்மண்டல தலைவருக்கு விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம் .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

        NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION –GR-C

TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3 –RT-HSGII  / dated at Tirunelveli - 627002 the  10.04.2021

 

To

Com.A.Veeramani

Circle Secretary

AIPEU GR C

T.N.Circle -600002

Dear Com

. Subject :  Rotational transfer 2021 for HSG II General line Cadre reg.

               Ref.      :  PMG, SR,  Madurai - 2, lr No: STA/ 102-2/ RT/ HSG II ( G/L/ 2021) / MA dtd 09.04.2021.

                A kind reference is invited to the letter cited above wherein notification has been issued for RT HSG II, Genl line.

                But the list of vacant posts has not been correctly prepared and many unfilled HSG II posts were not shown, particularly the HSG II  posts upgraded during the merger of Postmaster Cadre with General line Cadre. Many such posts which was filled up by LSG officials due to non availability of eligible HSG II officials , were not shown in this notification. 

                    For example,  from Tirunelveli Division,  RT 2021 is due for Smt.T.K.Meenagomathi, SPM, Vannarpettai SO. But in the list of vacant posts, the following HSG II posts in aTirunelveli Division filled up with LSG officials were not listed.

.(a)APM Genl. I & II  Palayankottai HO

(b)APM SB I& II, , Titunelveli HO

(c).ASPM Tvl Town(d)SPM,  Melapalayam.

                       So kindly take up the case with RO Madurai level to arrange for withhelding this notification as it limits the choices of senior officials who are due for this RT. Also arrange to ascertain the correct vacant position in all divisions, and a revised Notification may be issued.

 

                                                         Thanking you Sir

                                                                                                              Yours faithfully

                                                                                                            SK.JACOBRAJ

Copy to


Friday, April 9, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                                   முக்கிய செய்திகள்  

*15.04.2021 அன்று நடைபெறவிருக்கும் மாதாந்திர பேட்டியில் அஞ்சல் மூன்று சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் ,வண்ணமுத்து மற்றும் தியாகராஜ பாண்டியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள் .அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் புஷ்பாகரன் தங்கராஜ் இன்னும் ஒரு தோழர் விருப்பமுள்ளவர்கள் /தங்கள் பகுதி பிரச்சினைகளை தாங்களே நேரில் பேசவேண்டும் என நினைக்கின்ற அஞ்சல் நான்கு தோழர்கள் இன்று காலை 10 மணிக்குள் தகவல் தெரிவிக்கவும் .

*நமது கோட்ட சங்கத்தின் முயற்சியின் காரணமாக நமது கோட்டத்தில் உள்ள அனைத்து துணை /தலைமை அஞ்சலகங்களுக்கு CBS SB MANUVAL வழங்கப்பட்டுவருகிறது .விடுபட்ட அலுவலகங்கள் இருந்தால் தகவல் தெரிவிக்கவும் ..

*புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திட சாத்தியமில்லை என்று நமது JCM தலைவர்களுக்கு மத்தியஅரசு கடந்த 09.02.2021 அன்று பதில் கொடுத்துள்ளது 31.12.2020 நாளில் 13.99 மில்லியன் சந்தாதாரர்கள் இருப்பதாகவும் ரூபாய் 5,34,188 கோடி வைப்பிருப்பினிள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, April 8, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .நமது நெல்லை NFPE சார்பாக நாம் கீழ்கண்ட வாட்ஸாப்ப் குழுவை நடத்திவருகிறோம் .

குழு -1 NELLAI NFPE --256 பேர் இருக்கிறார்கள் .அஞ்சல் மூன்றின் கோட்ட சங்க உறுப்பினர்கள் 190 அஞ்சல் நான்கின் முன்னணி நண்பர்கள் 45 அம்பை கிளை நண்பர்கள் 25 .இதில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பொழுது சில நண்பர்களை  NELLAI NFPE II குழுவிற்கு இடம்பெயரவைக்கவேண்டியுள்ளது .ஆகவே அவ்வாறு மாற்றப்படும் நண்பர்கள் மனதில் எவ்வித வருத்தமும் இல்லாமல் தொடர்ந்து தங்கள் ஆதரவை தரும்படி கேட்டுக்கொள்கிறோம் .

குழு --2 NELLAI NFPE II -இதில் 162 பேர் இருக்கிறார்கள் நமது கோட்ட சங்க உறுப்பினர்கள் ஓய்வுபெற்றபின் அதில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள் .மேலும் மாநிலம் தழுவிய முன்னாள் சங்க உறுப்பினர்கள் ஊழியர்களின் நலம் சார்ந்து பணியாற்றிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளார்கள் 

குழு -3 NELLAI NFPE POSTMAN& MTS இதில் 120 பேர் இருக்கின்றார்கள் .இதில் அஞ்சல் நான்கு உறுப்பினர்கள் பிற கோட்ட அஞ்சல் நான்கு நிர்வாகிகள் இருக்கின்றார்கள் .இந்த மூன்று குழுக்களிலும் நமது NELLAI -NFPE செய்திகள் அனைத்தும் வரும் .ஆகவே குழு மாற்றப்பட்ட தோழர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவினை வழங்கிடும் படி கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் ஒருங்கிணைப்பாளர் NELLAI NFP

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                           முக்கிய செய்திகள் 

*இன்று மதுரையில் GDS/MTS TO POSTMAN பதவி உயர்வுக்கான கமிட்டி கூடுகிறது .தேர்ச்சியாளர்களுக்கு NELLAI NFPE யின் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ..

*கடந்த20.12.2020 அன்று நடைபெற்ற  LDCE தேர்வில் PAPER -1 யில் ஒரு வினாவிற்கு கொடுக்கப்பட்ட  ANSEWR KEY தவறானது என தோழியர் சுந்தரி போஸ்ட்மேன் அம்பாசமுத்திரம் அவர்களால் விண்ணப்பிக்கப்பட்ட மனு சென்னையில் கூடிய கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று நமது மாநிலசெயலர் அவர்கள் மூலம் தகவல் கிடைக்கப்பெற்றது  ஒரு வருத்தமான செய்தியே ! இருந்தாலும் மனம் தளராமல் முயற்சிகளை மேற்கொண்ட தோழியர் சுந்தரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் ..உங்கள் முயற்சிகள் தொடரட்டும் .

*.புதிய உறுப்பினர்களை நாம் வரவேற்கிறோம் .நமது கோட்டத்தில் PA ஆக பணியாற்றிய தோழர் சேதுராமன் இன்று HSG II -பதவியுயர்வு பெற்று மீண்டும் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்கு APM ஆக வருகிறார்கள் .தோழர் சேதுராமன் அவர்களை NELLAI -NFPE வாழ்த்தி வரவேற்கிறது ..

*இந்தமாத மாதாந்திர பேட்டிக்காக இதுவரை 10 சுப்ஜெக்ட்ஸ் வந்துள்ளது .SUBJECTS இருந்தால் இன்று மதியத்திற்குள் தெரிவிக்கவும் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, April 7, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                            நெல்லை கோட்ட செய்திகள் 

*அஞ்சலங்களில் நிர்ணயிக்கப்பட்ட /அனுமதிக்கப்பட்ட இருப்பு தொகையை காட்டிலும் அதிகமாக பணம் கையிருப்பில் இருக்கவேண்டாம் என்றும் அப்படி இருக்கும் அலுவலகங்கள் குறித்து நிர்வாகம் தீவிரமாக பார்க்கவேண்டும் என்றும் 06.04.2021  தேதியிட்ட அஞ்சல் வாரிய கடிதம் அறிவுறுத்துகிறது .அப்படி அனுமதிக்கப்பட்ட இருப்பை காட்டிலும் அதிகமான தொகை வைத்திருப்பது ஏன் ?அது ஏற்புடையதுதானா என ஆய்வுகளை மேற்கொள்ளவும் கோட்ட அதிகாரிகளுக்கு உத்தரவினை பிறப்பித்துள்ளது .

*தொடர் ஆட்பற்றாக்குறையால் அவதிப்படும் பணகுடி அஞ்சலகத்திற்கு ஒரு எழுத்தரை டெபுடேஷன் தரவேண்டும் என்ற நமது கோரிக்கையின் மீது கோட்ட நிர்வாகம் விரைந்துநடவடிக்கை எடுக்கவேண்டுகிறோம் .ஒருபுறம் வேலைப்பளு மறுபுறம் ஆதார் எடுக்கவில்லையென்றால் கோட்ட அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள சொல்லி பொதுமக்களுக்கு கோட்ட தொலைபேசி நம்பரை அறிவிப்பு பலகையில் ஒட்டவைத்து கூடுதல் சுமை ஏற்றும் நிர்வாகம் .இதனை தவிர்த்திடவேண்டுகிறோம் .இதுகுறித்து மீண்டும் நமது கோட்ட சங்கம் கொடுத்துள்ள கடிதம்

*இந்த மாத மாதாந்திர பேட்டியில் சேர்க்கவேண்டிய  பிரச்சினைகள் இருந்தால் இன்று மாலைக்குள் .தெரிவிக்கவும் .மாதாந்திரப்பேட்டி -15.04.2021 சப்ஜெக்ட்ஸ் கோட்ட அலுவலக்திற்கு கொடுக்கவேண்டிய கடைசிநாள் 09.04.201 

 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                                                NFPE

ALL INDIA POSTAL EMPLOYEES UNION

GROUP-C

TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3 org  / dated at Tirunelveli - 627002 the  07.04.2021

 

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

Respected Sir,

                       Subject :  Attachment of one PA to Panagudi  SO on deputation basis --reg

                       Ref:  1. O/o SSPOs, Tvl Dn,  Tvl -2 , Minutes of the monthly meeting with AIPEU  Gr- c , Tvl Dn dtd 4.3.21

                              This union wish to bring the following  few lines for favour of necessary action at the earliest please

                            A  kind reference is invited to the letters cited above and it is requested to depute a PA immediately to Panagudi office ,for the time being,  the  official posted at this office  got  relieved from Dindugul Division and join here.The volume of the workload in this office is much heavy, it is not able to complete the works with regular shortage .

Hence it is once again  requested that one PA may be deputed on warfoot basis to this office in order to manage the heavy transactions of this office.

 

Palayankottai ,                                                                                  Yours faithfully,

07.04.2021.

                                                                                                      ( S. K. JACOB RAJ),

 

                                                                             

Monday, April 5, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

* நமது தோழர் M .ஆசைத்தம்பி PA பணகுடி  அவர்களின் TRANSFER TA BILL இரண்டுநாட்கள் காலதாமதமாக சமர்பிக்கப்பட்டுவிட்டது என காரணத்தை காட்டி அன்றைய கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் 23.05.2019 அன்று மறுக்கப்பட்டது .அதனை தொடர்ந்து மீண்டும் அந்த பிரச்சினையை நாம் நிர்வாகத்திடம் இரண்டுநாட்கள் என்பதும் இடையில் நமக்கு ஒரு விடுமுறை வந்த காரணம் அவர் இரண்டுநாள் விடுப்பில் இருந்ததுமற்றொரு காரணம்  ஆகவே அதை நீங்கள் பரிசீலிக்கலாம் என வேண்டுகோள்விடுத்தும் மீண்டும் 27.09.2019 அன்று  நி ராகரிக்கப்பட்டது .இந்த சூழ்நிலையில் கடந்த மாதாந்திரப்பேட்டியில் இந்த பிரச்சனை சேர்க்கப்பட்டு விவாதித்ததின் விளைவாக தோழர் M .ஆசைத்தம்பி அவர்களின் TRANSFER TA BILL  நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு BILL PASS செய்யப்பட்டுவிட்டது .சுமார் 20000 க்குமேல் நமது தோழர் பயன்பெறுகிறார் .இதற்காக நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு .L .துரைசாமி அவர்களுக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இதை பதிவிட காரணம் ஒவ்வொரு மாதாந்திர பேட்டிகளிலும் நம்மால் எந்த அளவிற்கு ஊழியர்களின் நலனை பெற்றுத்தர முடிகிறது என்பதனை ஒவ்வொரு உறுப்பினர்களும் உணர்ந்து கொள்ளவேண்டும் நமது இயக்க செயல்பாடுகள் குறித்து புரிந்துகொள்ளவேண்டும் என்பதே !

*அதேபோல் பாளையம்கோட்டை DY.போஸ்ட்மாஸ்டர் அவர்களுக்கான மேஜை  முற்றிலும் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்தும் பாளையம்கோட்டை போஸ்ட்மாஸ்டர் அவர்களால் நிர்வாகத்திற்கு இரண்டுமுறை எழுத்துபூர்வமாக கொண்டுசெல்லப்பட்டும் முன்னேற்றங்கள் ஏதுமின்றி இருந்தது .இதுகுறித்து நமது கோட்ட சங்கம் சார்பாக கடந்த 11.03.2021 விரிவான கடிதம்கொடுத்து விவாதிக்கப்பட்டது .அதை ஏற்றுக்கொண்ட நமது SSP அவர்கள் மார்ச் இறுதியில் வழங்கப்படும் என்றார்கள் .அதன்படி புதிய மேஜை இரண்டுநாட்களுக்கு முன்பாக வந்துசேர்ந்தது .அதற்கும் நமது கோட்ட நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

மேலும் நாம் கேட்டுக்கொண்டபடி CASH COUNTING MACHINE வாங்குவதற்கு PURCHASE ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது .கிட்டத்தட்ட அனைத்து அலுவலகங்களுக்கும் புதிய தரமுள்ள சேர் வாங்கப்பட்டுள்ளது .78 அலுவலகங்களுக்கு SB CBS MANUVAL வாங்கிட அனுமதிக்கப்ட்டுள்ளது .PLI /RPLI பில் ஜனவரி 2020 வரை RPLI 1கோடியே 30 லட்சத்திற்கும் PLI 36 லட்சத்திற்கும் இன்சென்டிவ் வழங்கப்பட்டுள்ளது .TA பில் சம்பந்தமாக நமது ஒதுக்கப்பட்ட தொகையை காட்டிலும் கூடுதலாக நிதி வாங்கி அனைத்து TA பில் களும் PASS செய்யப்பட்டுள்ளதாகவும் நம்முடைய சந்திப்பின் போது நிர்வாகம் நமக்கு கொடுத்த தகவல்கள் இவை ...

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, April 3, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

*இந்த மாதத்திற்கான கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடன் நடக்கும் மாதாந்திர  பேட்டி 15.04.2021 அன்று நடைபெறுகிறது .தங்கள் அலுவலக /பகுதி பிரச்சினைகள் இருந்தால் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் கோட்ட செயலர்களுக்கு தெரிவிக்கவும் .

*அஞ்சல் நான்கின் 28 வது அகிலஇந்திய மாநாடு வருகிற 18.04.2021 முதல் 20.04.2021 வரை கர்நாடகா மாநிலம் உடுப்பியில் நடைபெறுகிறது .நமது கோட்டத்தில் இருந்து தோழர்கள் புஷ்பாகரன் நிஷாகர் செல்வின்துரை அருணாச்சலம் மற்றும் அருண்குமார் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்

பயண விவரங்கள் ---.17.04.2021 அன்று திருநெல்வேலி --திருவனந்தபுரம் வழியாக உடுப்பி செல்ல முன்பதிவு செய்யப்பட்டுள்ளது .17.04.2021.வண்டி எண் 06723 -நெல்லை -திருவனந்தபுரம் .17.04.2021 வண்டி எண் 06312 --உடுப்பி 22.04.2021 வண்டி எண்06345 உடுப்பி -திருவனந்தபுரம் 22.04.2021 வண்டி எண் 06730-திருவனந்தபுரம் --நெல்லை --சிறப்பு விடுப்பு 16.04.2021 முதல் 23.04.2021 ஆகிய 8 நாட்கள் விண்ணப்பிக்கவேண்டும் 

*தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக 06.04.2021 அன்றும் டாக்டர் .அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 14.04.201 அன்றும் நமக்கு விடுமுறை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

*புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து உறுப்பினர் படிவங்களை பெற்றவர்கள் விரைந்து புதிய உறுப்பினர்களிடம் கையெழுத்தை பெற்று அனுப்பிவைக்கவும் .இதுவரை அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கை சேர்த்து 25 புதிய உறுப்பினர்கள் நமது NFPE பேரியக்கத்தில் சேர்ந்துள்ளார்கள் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 




Thursday, April 1, 2021

 முன்னீர்பள்ளம் SPM தோழர் தங்கமணி அவர்களின் பணிநிறைவுவிழா முன்னீர்பள்ளம் மருதம்நகர் சமுதாய கூடத்தில் நமது கோட்ட மக்கள் தொடர்பு ஆய்வாளர் தோழர் S .கனகசபாபதி அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .விழாவில் அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் &மாநில அமைப்பு செயலர் தோழர் புஷ்பாகரன் AIGDSU கோட்ட செயலர் &மாநில அமைப்பு செயலர் தோழர் ஞானபாலசிங் NFPRA ஓய்வூதியர் சங்க செயலர் குருசாமி வணிக அலுவலர் ராஜேந்திரபோஸ் முன்னாள் செயலர் அந்தோணி சாமி தோழியர் சத்யா PA ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள் .சிறப்புரையாக தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் .இறுதியாக தோழர் தங்கமணி அவர்களின் ஏற்புரைக்கு பிறகு நிகழ்ச்சிகள் இனிதே முடிவடைந்தது .பணிஓய்வு பெற்ற தோழர் தங்கமணி அவர்கள் பல்லாண்டுகள் சிறப்புடன் வாழ NELLAI NFPE வாழ்த்துகிறது ---தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலாளர் நெல்லை 

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                      அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் வட்டி குறைப்பு --வாடிக்கையாளர்களை வாட்டி வதைக்கிறதா ? எட்டி உதைக்கிறதா ?

அஞ்சலக சேமிப்பு வட்டிகளை 3 மாதத்திற்கொருமுறை சந்தைநிலவரத்தின் அடிப்படையில் மாற்றிக்கொள்ளலாம் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திருமதி சியாமளா கமிட்டி கடந்த 07.06.2011 அன்று கொடுத்த சிபார்சுகளின் அடிப்படையில் சேமிப்பு வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு நாலுமுறை (காலாண்டிற்கொருமுறை ) மாற்றிக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது .அன்றைய நிதியமைச்சர் திரு .பிரணாப் முகர்ஜி (UPA ) .மேலும் இந்த கமிட்டி தான் அஞ்சலக சேமிப்பு முகவர்களுக்கு கொடுக்கப்படும் ஊக்கத்தொகையையும் குறைத்திட பரிந்துரை செய்திருந்தது .

இந்த வட்டி குறைப்பினால் சேமிப்பு ஆர்வங்கள் பொதுமக்களிடம் குறைகிறதோ இல்லையோ அவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படும் எதார்த்தத்தை நாம் பார்க்க முடிகிறது .அதிலும் குறிப்பாக பொதுமக்களிடம் நேரடி தொடர்புடைய நமது அஞ்சல் ஊழியர்களால் இதை நன்றாக உணரமுடியும் .உதாரணமாக 

1.மூத்த குடிமக்களின் வசதிக்காக கொண்டுவரப்பட்ட சீனியர் சிட்டிசன் திட்டம் 28.02.2004 யில் தொடங்கப்பட்ட போது வட்டி விகிதம் 9 சதம் .நடப்பில் இருந்தது 7.4    01.4.2021 முதல் 6.5 சதம் என குறைக்கப்பட்டுள்ளது 

2.பெண்குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க என பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டு தொடங்கப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டம் 02.02.2014 யில் அறிமுகப்படுத்தப்பட்ட போது கொடுக்கப்பட்ட வட்டி 9.10 சதம் நடப்பில் இருந்தது 7.6  01.4.2021 முதல் 6.9 சதம்  மாதம் ஒன்றிற்கு ரூபாய் 1000 செலுத்தினால் 18 வயதில் 6 லட்சம் என விளம்பரப்படுத்தப்பட்ட திட்டம் இது .

3.வயதான மற்றும் முதியவர்களுக்கு ஓய்வூதியத்திற்கு நிகராக வழங்கப்படும் என 1987  யில் கொண்டுவரப்பட்ட மாதாந்திர சேமிப்பு திட்டம் ஆரம்பத்தில் 12 சதமாகவும் 1992-1993 களில் 14 சதமாக உயர்ந்த வட்டி நடப்பில் இருந்தது 6.6 01.4.2021 முதல் 5.7  சதம் என குறைக்கப்பட்டுள்ளது 

4.அஞ்சலக தொடர் சேமிப்பு திட்டத்தில் 1971 களில் ரூபாய் 10 க்கு முதிர்வு தொகை 700 என்றும் பின்னர் 718 என உயர்ந்ததையும் இன்று  நடப்பில் இருந்தது 5.8  01.4.2021 முதல் 5.3 சதம் என குறைக்கப்பட்டுள்ளது 

5.TD கணக்குகள் கூட 10 சதம் வரை இருந்த வட்டி விகிதங்கள் இன்று 4.4 முதல் 5.8 என வெகுவாக குறைந்திருக்கிறது 

6.இந்த வட்டி மாற்றத்தில் சாதாரண சேமிப்பு கணக்கு கூட தப்பவில்லை என்பது கூடுதல் கவலை 

  இப்படி அஞ்சலகத்தை மட்டுமே நம்பியிருக்கும் வாடிக்கையாளர்களை தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் நிதியமைச்சக மற்றும் RBI முடிவுகளை எதிர்த்து நாம் இயக்கங்களை நடத்தவேண்டியது காலத்தின் கட்டாயம் .அஞ்சல் துறையின் அடிப்படைகள் ஒவ்வொன்றாக தகர்ந்து கொண்டிருக்கும் போது இன்னமும் நிர்வாகம் ஆதார் கேம்ப் AEPS பரிவர்த்தனை கங்கா ஜெல் பலப்பல ஆலயங்களின் பிரசாதங்கள் என தற்காலிக வணிகங்களை தேடிஅலைவது இயற்கை முரண் ...

வாருங்கள் ! அஞ்சலக வாடிக்கையாளர்களை காப்போம் -அஞ்சல் துறையை பாது காப்போம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலாளர் நெல்லை