...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, September 29, 2021

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

நமது சம்மேளன அறிவிப்பின் படி 28.09.2021முதல் 30.09.2021வரை நடைபெறும் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கத்தை நமது கோட்டத்தில் வெற்றிகரமாக நடத்திட கேட்டுக்கொள்கிறோம் .நமது முந்தைய சுற்றைக்கையில் அனுப்பவேண்டிய விலாசங்கள் மற்றும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன 

GDS தோழர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு 

எதிர்வரும் நவம்பர் மாதம் (GDS)    கிராமிய அஞ்சலக ஊழியர்களுக்கு   தபால்காரர் தேர்வு பயிற்சி நடைபெற உள்ளதுகிராமிய அஞ்சலக ஊழியர்கள்(GDS) இந்த தபால்காரர் பயிற்சியில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறவாழ்த்துகிறோம். இந்த பயிற்சி எந்த ஒரு கட்டணமும் இன்றி NFPE தொழிற்சங்கசேவையாக நடைபெறும்.    தேர்ச்சி பெற்ற தோழர், தோழியர்கள் NFPE தொழிற்சங்கத்தில் இனைந்து தங்களின் பங்களிப்பு சேவையாக நடைபெற வாழ்த்துகிறோம்..தொடர்புக்கு தோழர் மகராஜன் OA கோட்ட அலுவலகம் திருநெல்வேலி அவர்களுக்கு    9786619090 தங்களின் பெயர், அலுவலகம், கோட்டம், அலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி இவைகளை தெரிவிக்கவும் .மேலும் உதவிக்கு தொடர்புகொள்ள SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் NFPE -P 3 திருநெல்வேலி  9442123416 

எனது தோழமைகளுக்கு தோழமையுடன் எனும் கவிதை நூலுக்கு நீங்கள் கொடுத்துவரும் ஆதரவுக்கு நன்றி .நன்றி .முந்தைய பதிவில் எனது IPPB கணக்கு எண் தவறாக பதிவிடப்பட்டிருந்தது .நூலுக்கான தொகையை அனுப்புபவர்கள் POSB 0072773482 அல்லது IPPB 100004720598 கணக்கில் செலுத்தலாம் .விலை ரூபாய் 80 

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

 

Monday, September 27, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

தோழமைகளுக்கு தோழமையுடன் எனும் எனது ஐந்தாவது கவிதை நூல் நேற்று 26.09.2021 அன்று திருச்சி SRMU  தொழிற்சங்க அரங்கில் நமது முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழுவில்  வெளியிடப்பட்டது .நமது மாநில தலைவர் அண்ணன் R .குமார் அவர்கள் வெளியிட முதல் பிரதியை அஞ்சல் மூன்றின் மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார்கள் .நூல் வெளியிடும் பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டு மாநில உதவி தலைவர் நண்பர் மாரிமுத்து சிவகாசி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .விலை ரூபாய் 80..தபாலில் பெற ரூபாய் 100.பழைய காலங்களில் நீங்கள் கொடுத்த ஒத்துழைப்பை போல் இந்த நூலையும் நீங்கள் வாங்கி எனக்கு நல்லதொரு ஆதரவினை தந்தருள கேட்டுக்கொள்கிறேன் .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் செல் --9442123416    POSB 0072773482    IPPB 10000472098

Friday, September 24, 2021

அன்பார்ந்த  தோழர்களே !

26.09.2021அன்று திருச்சியில் நடைபெறும் நமது பேரவையின் பொதுக்குழு கூட்டத்திற்கு வருகிறவர்கள் 2.09.2021  சனிக்கிழமை இரவு 10.மணிக்கு நமது யூனியன் அலுவலகம் முன்பு வரவும் .10.30 மணிக்கு வேன் கிளம்புகிறது .மறுநாள் காலை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தில் குளித்துவிட்டு சரியாக 10 மணிக்கு கூட்டம் நடக்கும் SRMU அரங்கிற்கு செல்கிறோம் .மாலை 5மணிக்கு கூட்டம் முடிந்தவுடன் நெல்லை திரும்புகிறோம் .கூட்டத்திற்கு வருகிறவர்கள் ஜேக்கப் வண்ணமுத்து பிரபாகர் சபாபதி சாகுல் இளங்கோ குருசாமி மகாராஜன் ஆனந்த் முத்துராமலிங்கம் வள்ளிநாயகம் தளவாய் சுப்ரமணியம் மந்திரம் செல்வின் ஆவுடை நாயகம் .நன்றி .தோழமையுடன் ஜேக்கப் ராஜ் 


 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !

இன்று மாலை 24.09.2021 அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்புமாலை 6 மணிக்கு  நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

இன்று காலை 10.00 மணிக்கு நமது SSP  அவர்களுடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .அஞ்சல் மூன்றின் சார்பாக தோழர்கள் ஜேக்கப் ராஜ் P .சுப்ரமணியம் மற்றும் RV.தியாகராஜ பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .அஞ்சல் நான்கின் சார்பாக தோழர்கள் புஷ்பாகரன் லிங்கப்பாண்டி மற்றும் தங்கராஜ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் .நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

 

Thursday, September 23, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

இலாகா தேர்வின் மூலம் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு MACP பதவி உயர்வுகளில் அதை சரிகட்ட கூடாது என்ற நமது துறையின் 06.09.2021தேதியிட்ட உத்தரவு குறித்து பல தோழர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை போக்கும் வகையில் சில பயனுள்ள தகவல்களை சிவகங்கை கோட்ட சங்கத்தின் முன்னாள் கோட்ட செயலரும் ஓய்வுபெற்ற சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசரும் ஆன தோழர் சேர்முகபாண்டியன் அவர்கள் தயாரித்துள்ள மாதிரி விண்ணப்ப படிவங்கள் தேவைப்படுவோர் கோட்ட சங்கத்தை அனுகவும் .அதன்படி இப்போது பணியில் இருக்கும் ஊழியர்கள் /01/09/2008க்கு பிறகு பணிஓய்வு பெற்ற ஊழியர்கள் விடுபட்ட MACP கிடைத்திட உடனடியாக விண்ணப்பிக்கவும் 

*2002 மற்றும் 2003அம் ஆண்டுகளில் நோட்டிபிகேஷன் செய்யப்பட்ட இடங்களில் 2004க்கு பிறகு இலாகா ஊழியர்கள் ஆனவர்களுக்கு பழைய ஓய்வூதியம் கொடுக்கலாம் என்கின்ற புதிய நீதிமன்ற உத்தரவினை சுட்டிக்காட்டி நமது மூத்த வழக்கறிஞர் திரு .மலைச்சாமி அவர்களின் ஆலோசனைப்படி ஏற்கனவே வழக்கு தொடுத்தவர்கள் புதிதாக விண்ணப்பம் ஒன்று கொடுத்துள்ளார்கள் .

மேலும் தொடர்புக்கு கோட்ட செயலரை அனுகவும் .94421-23416

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Wednesday, September 22, 2021

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

நீதிமன்ற வழக்குகள் மற்றும் இதர வெளியிட பணிகளுக்கு அஞ்சல் எழுத்தர்களை அனுப்பும் முறையை கைவிடவேண்டும்  என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தான் இதுபோன்ற பணிகளுக்கு அனுப்பி வைத்திடவேண்டும் என கோட்ட நிர்வாகத்திற்கு நாம் எழுதிய கடிதம் .

NFPE

                ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                        TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3 /org / dated at Tirunelveli 627002 the 22.09.2021

To

The Sr.Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

                  It is brought to the knowledge of this Union , that the operative side Staffs are being directed to attend court  cases and hearings in connection with Public complaints. While many field officers of various cadres are available in our division, and  if their services are utilized , they may be able to represent our department more elegant and efficient. 

                 Moreover it is pertinent to mention here that the post of Asst Supdt of POs (Public Grievances), which remained vacant over a long period in our division,  also got filled up recently , so that their services may be better employed for such kinds of field duty . Before that, the main duty of ASP(PG) is to attend court cases and present during the hearings.

                                    Further , it  is to note here that,  as per the standing instructions of the  DOPT, a nodal officer/liaison officer has to be identified and all such cases should be routed through and dealt in consonance with the policy of the Govt/Dept and no individual sub ordinate official should be directed to present anything in any court , on behalf of the department/Government, affecting Government interest. This should be taken into account while making such deputations for attending any case in the Courts on behalf of the Department                    

                 Hence this union strongly emphasis to set free the operative side staffs from such field duties and the  field officers may be entrusted with  such works. In particular  , Sri V.S.Krishnan, SPM , Panagudi, who was directed to attend hearing on 23.9.2021 may be exempted

           

 

                         Yours faithfully 

S.K.JACOBRAJ


Tuesday, September 21, 2021

      அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் 

மத்திய அரசே !அஞ்சல் நிர்வாகமே !

குரல்வளையை நெறிப்பதால் எங்கள் குரல்கள் என்ன ஓய்ந்தா போகிவிடும் ? தொழிலாளி இயக்கம் கோடிக் கால் பூத்தமடா ! கோரிக்கைகளின் ரூபமடா ?

வணக்கம் ..தொழிற்சங்கங்களில் ஒருவர் இரண்டுமுறை அல்லது 5 ஆண்டுகள் தான் நிர்வாகிகளாக இருக்கமுடியும் .போட்டியிடும் நிர்வாகிகளும் மண்டல அளவு வரை மண்டல தலைவரிடம் (PMG ) அவர்களிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்கின்ற ஒரு உத்தரவினை அஞ்சல் வாரியம் DOPT உத்தரவை மேற்கோள்கட்டி சுற்றுக்கு விட்டுள்ளது .உடனே பல மாநிலங்களில் அவ்வாறு தொழிற்சங்க பொறுப்புகளில் உள்ளவர்க்ளின் பெயர் பட்டியல் சேகரிக்க போர்க்கால அடிப்படையில் அஞ்சல் நிர்வாகம் களம் இறங்கியிருக்கிறது .

NFPE என்பது ஒரு ஜனநாயக அமைப்பு .இந்த அமைப்பில் கோட்ட அளவில் /கிளை மட்டங்களில் யாரை நிர்வாகிகளாக கொண்டுவருவது என்பது தலைவர்களின் முடிவல்ல மாதாந்திர பேட்டிகொடுக்கும் அதிகாரிகளின் விருப்பமுமல்ல .மாறாக தலமட்டத்தில் ஆண்டு சந்தா செலுத்துகின்ற ஊழியர்கள் ஒன்றுகூடி தங்களுக்குள் ஒருவரை தங்களின் பிரதிநிதியாக தேர்ந்தடுக்கும் பேரியக்கம் NFPE . வெவ்வேறு குழுக்களாக கொள்கையளவில் செயல்ப்பட்டு வந்த தோழர்களும் கூட தங்களுக்குள் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஒரு ஆரோக்கியமான ஜனநாயக முறையை கையாண்டுவந்தார்கள் .மாநாடு முடிந்த மறுகணமே தங்களுக்குள் ஏற்பட்ட போட்டியை மறந்து ஒற்றுமையாக நிர்வாகத்திற்கு எதிராக ஓரணியில் செயல்பட தொடங்கிவிடுவார்கள் .

அதைப்போலத்தான் மாநில /அகில இந்திய அளவிலும் கோட்ட /கிளைகளில் தேர்ந்தெடுக்கப்படும் சார்பாளர்கள் ஒன்றுகூடி மாநில /அகிலஇந்திய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்துவருகிறார்கள் .எந்த அதிகாரிகளின் ஆசியோ அல்லது அனுமதியோ தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க தேவை பட்டத்திலை .

ஆனால் அஞ்சல் வாரியம் இவ்வாறு தலமட்டங்கள் தொடங்கி அகிலஇந்தியா வரை ஒரு உயிரோட்டமாக செயல்பட்டுவரும் அமைப்பினை சீர்குலைத்திடவும் தங்களது கைபாவைகளாக இருக்கும் ஊழியர்களை நிர்வாகிகளாக செயல்பட அனுமதித்தால் நிர்வாக முடிவுகளை எந்த சிரமமும் இன்றி நிறைவேற்றிவிடலாம் என்கின்ற அற்ப ஆசைகளினால் DOPT உத்தரவை அதாவது விளையாட்டு மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இவைகளில் அதிகஅளவு பணப்புழக்கம் உள்ளதால் தொடர்ந்து ஒருவரை நிர்வாகியாக நீட்டிக்ககூடாது என்கின்ற உத்தரவை இயக்குனரகத்தில் உள்ள சில அதிகாரிகள் தங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் இந்த உத்தரவை தொழிற்சங்கங்களுக்கு நீட்டிக்க உத்தரவிட்டதை நமது சம்மேளனம் முதல் சாதாரண ஊழியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை .

இவைகளை எதிர்த்து நமது சம்மேளனம் விடுத்துள்ள அறைகூவலை ஏற்று வருகிற 24.09.2021 அன்று கோட்ட மட்டங்களில் நடைபெறும் ஆர்பாட்டத்தையும் அத்னை தொடர்ந்து தபால்கார்டு

1. SECRETARY DEPARTMENT OF POST NEWDELHI 

2. CABINET SECRETARY DOPT NEWDELHI மற்றும் 

3.SECRETARY DOPT NEWDELHI அனுப்பிடவும் கேட்டுக்கொள்கிறோம் .

                          தபால் கார்டில் இருக்கவேண்டிய வாசகம் 

WITHDRAW DRACONIAN ORDERS ISSUED BY DEPARTMENTOF POSTS UNDER F .NO.18-01/2017-SR DTD 15.09.2021FOLLOWED BY DOPT INSTRUCTIONS DOPT F-NO1101./1/2016-ESTT-A-IIIDTD 27.02.2020  PUTTING SO MANY RESTRICTIONS ON UNIONS AND UNDUE INTERFERENCE OF ADMINSTRATION 

தோழர்களே !நமது அடிப்படையை உரிமைகளின் மீது கைவைக்கும் நிர்வாக முடிவுகளுக்கு எதிராக அணிதிரள்வோம் ! வெற்றிபெறுவோம் !

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                       

Friday, September 17, 2021

 அன்பார்ந்த தோழர்களே !

தொழிற்சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுத்திட நிர்வாகத்திற்கு என்ன உரிமை ?என்ன கடமை இருக்கிறது ?தொழிலார்களின் குரலை அடக்கிட வேண்டும் தொழிற்சங்க சலுகையை முடக்கிடவேண்டும் என்கின்ற எண்ணத்தில் அஞ்சல் வாரியம் DOPT  உத்தரவினை தனது இஷடத்திற்கு அதை செயல்படுத்திட முனைந்துள்ளது கண்டிதத்தக்கது .மண்டல அளவிற்குள் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்திட PMG யிடம் அனுமதி பெறவேண்டும் என்பதும் OFFICER BEARERS என்றால் 15 பேரை நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கவும் நாம் மண்டல அலுவலகம் நோக்கி காவடி எடுக்கவேண்டுமா ? இரண்டு முறை அல்லது 5வருடம் என்றால் ஒவ்வொரு கோட்டத்திலும் 15 நிர்வாகிகளை அடையாளம் காட்டுவதே சிரமமாகிவிடும் .இதுகுறித்து நமது சம்மேளனம் ஆரம்பத்திலேயே எதிர்த்து போராடவேண்டும் (கடிதம் மட்டுமே எழுதிவிட்டு காத்திருக்க கூடாது )என்றும் வெறும் SR பிரிவில் உள்ள ஊழியர்கள் தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என்ற அற்ப காரணங்களை சொல்லாமல் இந்த உத்தரவில்  DOPT யின் வழிமுறையை மாற்றி கீழ்மட்ட நிர்வாகிகள் என மாற்றியமைத்ததில் அஞ்சல் வாரிய தலைமைக்கு தான் பெரும்பங்கு உண்டு என்பதை உணர்ந்து இலாக்காவிற்கு எதிரான போராட்டத்தை அறிவித்திடவேண்டும் .இதுதான் தீர்வே தவிர .SECTION ஊழியர்களை மாற்றுங்கள் என்பது மட்டுமே மத்திய /சம்மேளன தலைமைக்கு அழகல்ல ....நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Thursday, September 16, 2021

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே 1

நேற்று நமது அஞ்சல் மூன்று சார்பாக விடுக்கப்பட்ட அறைகூவலை ஏற்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் /தோழியர்க்ளுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .டார்கெட் நெருக்கடியால் தோழர்கள் சந்தித்த நெருக்கடிகளை ஆர்ப்பாட்ட கூட்டத்தில் அவர்கள் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தனர். .ஆர்ப்பாட்ட முடிவில் கீழ்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டது .

1.கோட்ட அலுவலகதின் மூலம் இயக்கப்படும் TVL DIVISION வாட்ஸாப்ப்யில் கேட்டகப்படும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டியதில்லை .உங்கள் PERFORMANCE குறித்தும் உடனுக்குடன் பதிவிடவும் தேவை இல்லை 

2.சில உபகோட்ட அதிகாரிகள் டார்கெட் மற்றும் லாகின் குறித்து தொலைபேசியில் அழைத்து மரியாதைக்குறைவாக பேசினால் /நடந்தால் அந்த நிகழ்வை ரெகார்ட செய்து கோட்ட சங்கத்திற்கு அனுப்புங்கள் 

3..டார்கெட் குறித்து அறிவிக்கப்படும் வாய்மொழி உத்தரவுகளை புறக்கணியுங்கள் 

4.எந்த கிளை அஞ்சலத்திலாவது LOGIN DAY அன்று தான் மொத்தமாக கணக்குத்தொடங்கவேண்டும் என வற்புறுத்தினால் அவர்களுக்கு உரிய அறிவுரையை கூறுங்கள் 

.5.உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல் எந்த கணக்கினையும் தொடங்கிட கிளை அஞ்சலகங்களில் OUTSIDER மற்றும் GDSஊழியர்களை அனுமதிக்காதீர்கள் 

6.டார்கெட் குறித்து எந்த ஊழியர்களும் அச்சப்பட தேவையில்லை .நமது ,மனச்சாட்சிக்கு உட்பட்டு இலாகா பணிசெய்வோம் .நமக்கு யாரும் எஜமானர் அல்ல !நாம் யாருக்கும் அடிமைகள் அல்ல 

நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் CPMG அலுவலகம் முழுமையாக முற்றுகையிடப்பட்டது .பல கோட்டங்களில் எழுச்சிமிகு ஆர்பாட்டங்கள் நடைபெற்றது .ஆம் ஒற்றுமையின் ருசியை நேற்றைய ஆர்ப்பாட்டம் நமக்கு உணர்த்தியது .தனித்து போராடுவது தான் தனக்கு பெருமை என எந்த சங்கமும் இனி நினைக்காமல் வருகின்ற நாட்களில் ஒன்றுபட்ட இயக்கத்தை மாநிலம் முழுவதும் நடத்திட முன்வரவேண்டும் ...இந்த கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுப்போம் ! வெற்றிபெறுவோம் 1

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Wednesday, September 15, 2021


    அன்பார்ந்த தோழர்களே 1 தோழியர்களே 1வணக்கம் .

டார்கெட் நெருக்கடிகளை முடிவிற்கு கொண்டுவந்திடவும்  கோட்ட மட்டங்களில் ஊழியர்களை LOGIN DAY என்ற பெயரில் ஒவ்வொருநாளும் இலக்குக்களை நிர்ணயித்து நமது தோழர்களை சொல்லன்னா துயரத்திற்கு ஆட்படுத்தும் கோட்ட மற்றும் உபகோட்ட அதிகாரிகளின் அத்துமீறல்களை கட்டுப்படுத்திடவும் நமது அஞ்சல் மூன்று தலைமையில் அமைந்துள்ள கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக நடைபெறும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் பங்கேற்றிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் .

                                            ஆர்ப்பாட்டம் 

நாள் --15.09.2021         நேரம் மாலை 6மணி 

தலைமை --தோழர் T.அழகுமுத்து கோட்டத்தலைவர் அஞ்சல் மூன்று 

அனைவரும் வருக !

போராட்ட வாழ்த்துக்களுடன் 

SK ஜேக்கப் ராஜ் கோட்டச் செயலர் நெல்லை 


Saturday, September 11, 2021

  

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

மாமியார் உடைத்தால் மண் குடம் ! மருமகள் உடைத்தால் பொன் குடமா ?

கணக்குகளை SPLITசெய்து தொடங்கக்கூடாது என்கின்ற இலாகா விதிகளை காற்றிலே பறக்கவிடும் ,உப கோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் ...

.SB LOGIN DAY என்றால் அன்று தான் கிளை அஞ்சலகங்கள் தோறும் நூற்றுக்கணக்கான கணக்குகளை தொடங்கவேண்டுமா ? அதுவும் நமது GDS பெயரிலே பலநூறு கணக்குகளை தொடங்கவேண்டுமா ?மூன்று வேளை சாப்பாட்டை ஒரே நேரத்தில் உண்ண சொல்லி கட்டளையிடம் உபகோட்ட அதிகாரிகளை என்ன செய்வது ?

அஞ்சல் வாரியம் மிக தெளிவாக சொல்லியிருக்கிறது .தேவையில்லாமல் கணக்குகளை SPLITசெய்து தொடங்கவேண்டாம் என்று  .அதனால் நிர்வாக செலவுகள் தான் அதிகமே தவிர வேறு எந்த பயனும் இல்லை என்று உத்தரவுகளை பிறப்பித்தும் கூட இலாகா உத்தரவுகளை காலில் போட்டு மிதித்துவிட்டு SPLITகணக்குகளை தொடங்கி எப்படியாவது நிர்ணயித்த இலக்குகளை தங்களது உபகோட்டம் அடைந்திடவேண்டும் என்கின்ற நோக்கத்தில் கிளை /துணை அஞ்சலக ஊழியர்களை கொடுமைப்படுத்தும் போக்கிற்கு முடிவுகட்டிடுவோம் .

உதாரணமாக கடந்த 09.09.2021 SB LOGIN DAY என்று பலநூறு கணக்குகளை SPLITசெய்து தொடங்கப்பட்டதன் விளைவு களக்காடு மற்றும் நான்குனேரி அலுவலக ஊழியர்கள் இரவு 10மணி வரை பணியாற்றிய அவலம் நமது கோட்டத்தில் அரங்கேறியிருப்பது சகிக்கமுடியாத ஒன்று .உண்மையிலே துறைமீது விசுவாசம் உள்ள அதிகாரிகள் ஏன் லாகின் தினத்தில் மட்டும் போலி கணக்குகளை தொடங்கி போலி புள்ளிவிவரங்களை மேல்மட்டத்திற்கு அனுப்பி போலியான வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் பெற்று என்ன செய்ய போகிறார்கள் .

ஆகவே இலாகா விதிகளை மீறி இலாகாவிற்கு தேவையில்லாத செலவுகளை ஏற்படுத்தும் உபகோட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என நமது மாநில சங்கம் மூலம் மண்டல /மாநில அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசெல்ல முடிவெடுத்துள்ளோம் .இலாகா விதி என்பது ஊழியர்களுக்கு தனியாகவும் /அதிகாரிகளுக்கு தனியாகவும் எழுதப்பட்ட புதிய வேதமா ?

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, September 9, 2021

அன்பார்ந்த தோழர்களே 1தோழியர்களே 1வணக்கம் .

 நமது போராட்டங்களினால் மற்றுமொரு மகத்தான வெற்றி 

மத்திய அரசு ஊழியர்களுக்கு முடக்கப்பட்ட மூன்று தவணை பஞ்சபடியை நமது தொடர் இயக்கங்களினால் பஞ்சபடியை நாம் பெற்றோம் .அப்பொழுது இந்த இடைப்பட்ட  காலத்தில் அதாவது 01.01.2020முதல் 30.06.2021வரை ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைக்கவேண்டிய விடுப்பு கால ஊதியம் மற்றும் கிராஜூட்டி இவைகளில் உள்ள வேறுபாடுகளையும் சேர்த்து வழங்கவேண்டும் என்ற கோரிக்கையினை மத்திய அரசு ஏற்று இன்று உத்தரவாக வெளியிட்டுள்ளது .இவைகள் எல்லாம் தானாக வந்து அவரவர் கைகளில் தேனாக சொட்டியதா இல்லை .தொடர்ச்சியான நமது போராட்டம் .அசராமல் நமது தலைவர்களின் பேச்சுவார்த்தை அரசாங்கத்தின் அலட்சியத்தை பொருட்படுத்தாமல் அரசாங்கத்தின் இறுக்கத்தை மெல்ல மெல்ல தளர்த்த வைத்த பெருமை நமது மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்திற்கு உண்டு .அதில் நாம் NFPE ஒரு அங்கம் என்பது மற்றுமொரு பெருமை மகிமை ...களம் கண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

அன்பார்ந்த தோழர்களே 1தோழியர்களே 1 வணக்கம் .

IPPB மற்றும் LIC HOUSING FINANCE  இனைந்து IPPB மூலம் வீட்டுக்கடன் வழங்கிட முடிவெடுக்கப்பட்டுள்ளது .4.5 கோடி வாடிக்கையாளர்கள் 650 கிளைகள் மற்றும் 1.36.000 BANKING வசதிகள் கொண்ட ஒரு பரந்த நெட்ஒர்க் கொண்ட IPPB மூலம் இந்த சேவையை எளிதாக செய்திடமுடியும் LICHFL நிறுவனம் பெருமிதத்தோடு அறிவித்துள்ளது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, September 7, 2021

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                                            முக்கிய செய்திகள் 
MACP பதவியுர்வுகளில் PAY -FIXATION குறித்த விளக்க ஆணையை அஞ்சல் வாரியம் 06.09.2021அன்று வெளியிட்டுள்ளது .இதன் மூலம் MTSTO POSTMAN/PA PA TO IP மற்றும் GR -B LDCEதேர்வுகளில் தேர்வாகிவரும் அந்த பதவி உயர்வினை ஒரு MACP ஆக கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்றும் அத்தகைய பதவி உயர்வுஅவரவரின் திறமைகளால்  பெறப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது .மேலும் MACP பெறுவதற்கு முன் பதவி உயர்வு (போட்டி தேர்வின் மூலம் )பெற்றவர்களுக்கு  எவ்வாறு ஊதியம் நிரனயம் செய்யவேண்டும் MACP பெற்றபின்  பதவி உயர்வு (போட்டி தேர்வின் மூலம் )பெற்றவர்களுக்கு  எவ்வாறு ஊதியம் நிரனயம் செய்யவேண்டும் என விரிவாக விளக்கப்பட்டுள்ளது .நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Saturday, September 4, 2021

 அன்பு தோழர் அஞ்சல் நான்கின் மாநில செயலர் தோழர் கண்ணன் அவர்களுக்கு ஒரு மனம் திறந்த மடல் .....

உங்களது அண்டைக்கோட்டம் என்ற ஆரம்பஅறிமுகம்  ,இருவரும் சக கால கோட்ட செயலர்கள் மேலும்  எதிரெதிர் கருத்துக்களை ஒரே மேடையில் பல கோட்டங்களில்  வீசிச்சென்ற அணிமேல் காட்டிய தீவிரம் காலம் கொடுத்த கட்டளை சில காலம் ஒத்த கருத்தோடு உலா வந்த நேரம்   என்கின்ற அடிப்படையில் ஒருசில வரிகளை வலிகளோடு பதிவிடுகிறேன் ..

தனித்திரு ..விலகியிரு என உங்கள் சகாக்களின் பதிவுகளை பார்த்தேன் 

ஆம் தனித்திருப்போம் விலகியிருப்போம் அவரவர் மாநாடுகளில் நிச்சயம் தனித்திருப்போம் .ஆனால் இன்றைய போராட்ட நேரங்களில் தனித்திருப்பது ஏற்புடையதுதானா ?எட்டுசங்கங்கள் அவர்கள் சந்திக்கின்ற பிரச்சினைகளை சேர்த்து வலுவான இயக்கங்கள் நடத்திட முன்வரும்போது டார்கெட் பிரச்சினையை முதன்மை படுத்தி நடத்திடுவோம் என நீங்கள் முன்மொழிந்திருக்கவேண்டும் ..மாறாக முடிவெடுத்ததை மாற்றமாட்டேன் என விலகியிருப்பது ஆரோக்கியம் தானா ? ஒற்றுமையை குறித்து எங்களைவிட அதிகமாக நீங்கள் தான் கொட்டி முழங்கக்கூடியவர்கள் .....இன்று அந்த ஒன்றுபட்ட போராட்டம் நடத்திட தடுப்பது யார் ?தயக்கம் ஏன் ?நாங்கள் ஒருநாளும் நீங்கள் ஒருநாளும் தனித்தனி போராட்டங்களை பார்த்தால் நிர்வாகம் இன்னும் வேகமாகவே நம் மீது தாக்குதல்களை தொடுப்பது உறுதியல்லவா ?ஒற்றுமையை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றாலும் சில வரிகளை உங்களுக்காக ?உங்கள் முடிவை மறுபரீசீலினை செய்திடுங்கள் ..தனிமனித தாக்குதலை தவிர்த்திடுங்கள் ...இன்குலாப் ஜிந்தாபாத் 

ஒற்றுமையே உன் 

விலை என்ன ?

நீ இல்லாத இடத்தில 

ஊழியர்களின் நிலை என்ன ?.


தனித்திரு !விலகி இரு 

தேர்தலுக்கு தேவைதான் 

போராட்டத்திற்கு ஒற்றுமை வேண்டாமா ?


என்ன கொடுத்தாலும் ஒற்றுமை 

என்னை கொடுத்தாவது ஒற்றுமை என 

முழங்கிய தலைவனின் சங்கமல்லவா ?


அதிகார வர்க்கத்தை 

அசைத்து பார்க்கும் ஆற்றல் 

ஒற்றுமைக்கு உண்டல்லவா ?


வர்க்க வேறுபாடுகளை கடந்து 

வெற்றி செய்தி தரும் 

வல்லமை உண்டல்லவா ?.


ஒருமுறை உடைத்தாலும் -

மறுமுறை சேர்ந்துகொள்ளும் 

ஆற்றல் ஒற்றுமைக்கு உண்டு !


அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு 

எதிராக தொழிலாளி 

ஏந்திநிற்கும் நம்பிக்கை 

ஆயுதம் தான் ஒற்றுமை ..


ஊழியர்களுக்காக போராட்டத்தை 

முன்னெடுக்கும் போதே 

புது போராட்ட பாதை தேவைதானா ?

எத்தனை நாட்கள் என்றாலும் 

நடத்துவோம் ---ஒன்றுபட்ட 

போராட்டமாக மாற்றுவோம் !

ஒற்றுமை ஒருவழி பாதையல்ல !

இரு கைகளை தட்டி கொள்கை ஓசை 

முழங்கிடுவோம் !

நன்றி .தோழமையோடு SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 












 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் . 

                           தமிழகத்தில் தலைவிரித்தாடும் டார்கெட் பிரச்சினைக்கு முடிவுகட்டிட கூட்டு போராட்டக்குழுவின் சார்பாக மூன்றுகட்ட போராட்டங்களை நடத்துவதாக அறிவித்திருப்பது நமக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது .மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மண்டல அலுவலகங்கள் முன்பு நமது போர்க்குரல் ஒலிக்கப்போகிறது .மதுரையில் நடைபெறவிருக்கும் (15.09.2021 ) தர்ணா போராட்டத்திற்கு நமது கோட்டத்தில் இருந்து பெருமளவில் நாம் கலந்துகொண்டு தர்ணாவை வெற்றிகரமாக்குவோம் 

நன்றி .போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


Friday, September 3, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                     நாம் யாருக்கும்  அடிமைகளல்ல ! நமக்கு யாரும் எஜமானாரும் அல்ல !

கணக்குப்பிடி ! பாலிசி பிடி ! AEPS நடத்து ! IPPB கொடு ! தங்க பத்திரம் வாங்கு அல்லது விற்றுக்கொடு !சரி இவைகளைக்கூட சகித்துக்கொண்டு நமது தபால்காரர்கள் மனச்சுமையோடு செல்வது போதாதென்று ஒவ்வொருநாளும் கண்டிஷன் பெயிலில் வந்த குற்றவாளி காவல்நிலையத்திற்கு சென்று கையெழுத்து போடுவதைபோல் உபகோட்ட அலுவகத்திற்கு சென்று ரிப்போர்ட் கொடுக்கவேண்டும் என்று எந்த சட்டம் சொல்லுகிறது ! தபால்காரர் /MTS விடுப்பு கேட்டால் ஆளை(GDS) ப்பிடித்துக்கொண்டு வா !இல்லையென்றால் விடுப்பு கிடையாது அல்லது COMBINED DUTY பார் என கட்டளைபோடுவது சரியா ? OFFICIATING பார்க்கின்ற GDS ஊழியர்களை அடிமைகளின் வாரிசுகளைப்போலவும் OUTSIDER களை கட்டாயப்படுத்தி கண்ணீர்வரவைப்பது ஏற்புடையது தானா ? அவர்களே பிழைக்க வழியின்றி அன்றாட கூலியைப்போல வறுமையின் விளிம்பில் நமதுஅலுவலகம் தேடி அண்டி கிடக்கின்றனர் உங்கள்   இலக்கு பாவம் அவர்களையும் விட்டுவைக்கவில்லையே ?ஒரு தலைமை அஞ்சலகத்தில் பணிபுரிகின்ற தபால்காரர்களை கண்காணிப்பது தலைமை அஞ்சல் அதிகாரியா ?அல்லது அதையும் தாண்டி உபகோட்ட அதிகாரிகளா ?  விரைவில் இதுபோன்ற குட்டி அதிகாரிகளின் அதிகார மீறல்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்திட அஞ்சல் நான்கின் மாநில செயற்குழு முடிவெடுத்துள்ளது .இதர சங்கங்களிடமும் கலந்தாலோசித்து நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டங்களை மிகப்பெரும் இயக்கமாக நடத்திக்காட்டுவோம் .

                     இதுபோன்ற தாக்குதல்கள் ஊழியர்கள் மீது தொடுக்கப்பட்ட போதெல்லாம் NFPE எனும் நமது  பேரியக்கம்  வீறுகொண்டெழுந்து ஒற்றுமை எனும் கவசம் தரித்து  எங்கள் தோழர்களை பாதுகாத்து தந்திருக்கிறோம் ..பழைய வரலாறு மீண்டும் படிக்கவேண்டிய அவசியம் அதிகரிகளுக்கும் பழைய வரலாறு மீண்டும் படைக்கவேண்டிய கட்டாயத்தில் நாங்களும் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை .அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்து போராடாது அநீதி களைய முடியாது .தேவையில்லை அனுதாபம் தேவையெல்லாம் நீதியும் சுதந்திரமும் தான் ...ஒன்றுபடுவோம் ..வென்று காட்டுவோம் ..ஆம் தோழர்களே நம்மில் யாரும் அடிமைகளல்ல ! நமக்கு யாரும் எஜமானாரும் அல்ல !

 இன்குலாப் ஜிந்தாபாத் !  தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                          

                                

Thursday, September 2, 2021

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

              கடந்த 25.08.2021 அன்று நடைபெற்ற  மாதாந்திர பேட்டியின் நடைமுறை குறிப்புகள் உங்கள் பார்வைக்கு தரப்பட்டுள்ளன. பெரும்பாலான பிரச்சினைகளில் சாதகமான முடிவுகளும் ,தனது அதிகார வரம்பிற்கு மேலான விஷயங்களை மண்டல நிர்வாகத்திற்கும் எடுத்துசெல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .ஓரிரு பிரச்சினைகளில் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இருந்து எந்தவித Request இல்லை என்று முடித்துவைக்கப்பட்டுள்ளது .மாதாந்திர பேட்டி தவிர நமது கோட்ட சங்கம் எழுதுகின்ற கடிதஙக்ளுக்கு உடனுக்குடன் நிர்வாகத்தால் பதில் வருவது பாராட்டிற்குரியது .அடுத்த பேட்டி 23.09.2021அன்று நடைபெறுவதாகவும் வருகிற 15.09.2021 குள் நாம் நமது பிரச்சினைகளை கோட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .ஆகவே நமது தோழர்கள் /தோழியர்கள் தங்கள் அலுவலக பிரச்சினைகளை எங்களிடம் தெரிவித்தால் மாதாந்திர பேட்டிக்கு செல்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அலுவகத்தில் இருந்து கடிதங்களை அனுப்ப நமது கோட்ட சங்கம் உதவி செய்திட தயாராக இருக்கிறது ..நமது கோரிக்கைகளின் மீது அலட்சியம் காட்டாமல் அலசி ஆராய்ந்து அதை நிவிர்த்திசெய்ய முனைப்பு காட்டும் கோட்ட நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நாமும் பூர்திசெய்வோம் .வெறும் வாய்மொழியால் மட்டுமே பிரச்சினைகளை சொல்லிக்கொண்டு இருக்காமல் கோட்ட நிர்வாகத்திற்கு எழுத்துபூர்வமாக பிரச்சினைக்ளை கொண்டு சேர்ப்போம் ....நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை