...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, December 31, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
              உங்கள் அனைவருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .NFPE NELLAI 


நேற்று(30.12.2019) அன்று  நடைபெற்ற எனது அக்கா சாந்தி =MC -ராஜன் முன்னாள் மண்டல சேர்மன் பாளையம்கோட்டை அவர்களின் புதல்வன் இல்ல திருமணவிழாவில் சில நினைவுகள் ...
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் அண்ணன் ஜான் பாண்டியன் ,முன்னாள் நெல்லை மாவட்ட செயலாளர் அண்ணாச்சி கருப்பசாமிபாண்டியன் மாநிலங்கவை உறுப்பினர் மற்றும் திருநெல்வேலி திருமண்டலத்தின் நிர்வாகக்குழு உறுப்பினர் மரியாதைக்குரிய விஜிலா சத்தியானந்த் ஆகியோருடன் ....






Friday, December 27, 2019

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     வருகிற 08.01.2020 வேலைநிறுத்தத்திற்கான நோட்டீசை நமது  CPMG அவர்களிடம் NFPE -FNPO மாநிலசெயலர்கள் நேற்று  கொடுத்தனர் .அதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது .
நமது கோட்டத்தில் வேலைநிறுத்த சுற்று பயணம் வருகிற 02.01.2020 மற்றும் 03.02.2020  மேற்கொள்ளப்படுகிறது .வேலைநிறுத்தத்தை நெல்லையில் முழு வெற்றியடைய செய்வோம் .  
*நமது அஞ்சல் மூன்றின்  மாநில மாநாட்டு நன்கொடை நமது உறுப்பினர்களிடம் தலா ரூபாய் 100 வசூலிக்க முடிவெடுத்துள்ளோம் .மேலும் .மாநில மாநாட்டிற்கு வரவிரும்பும்  தோழர்களும் வருகிற  30.12.2019  குள் தங்கள் பெயர்களை பதிவு செய்திட கேட்டுக்கொள்கிறோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                     முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                 மத்திய பட்ஜெட்க்கு முந்தைய பரிசீலனைக்கு மத்திய தொழிற்சங்கங்கள் இனைந்து தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி நமது மத்திய நிதி அமைச்சருக்கு 19.12.2019 அன்று ஒரு மெமோரண்டம் கொடுத்துள்ளனர் .அதில் குறைந்தபட்ச ஊதியத்தை 15 வது லேபெர் கமிஷன் வரையறுத்த அடிப்படையில் வழங்கிடவேண்டும் என்றும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூபாய் 21000 ஆக மாற்றிடவும் வலியுறுத்தப்பட்டுள்ளது .மேலும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கிராஜூடி கணக்கீடு ஒவ்வொரு ஆண்டிற்கும் அரைமாத ஊதியம் என்பதற்கு பதிலாக முழு மாத ஊதியத்தை கணக்கிற்கு எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது .மேலும் வருமானவரியை பொறுத்தவரை மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை வருமானவரி விலக்கு அளிக்கவேண்டும் .என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .
                                       ரயில்வே துறையில் சீரமைப்பு ?
   ரயில்வே துறையில் தற்சமயம் இருந்த 8 போர்டு உறுப்பினர்கள் அனைத்தையும் ஒருங்கினைத்து Chief Executive Officer (CEO ) என்கின்ற பதவியின் கீழ் 4 உறுப்பினர்களை கொண்ட நிர்வாகஅமைப்பு மாற்றிஅமைக்கப்பட்டுள்ளது .இது குறித்து அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை கடந்த 24.12.2019 ஒப்புதல் கொடுத்துள்ளது இந்த அமைப்பு தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்படும் .இதன்மூலம் அந்தந்த பகுதியில் இயக்கப்படவிருக்கிற தனியார் ரயில் உள்ளிட்ட முக்கியமுடிவுகளை எடுத்திட அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது .முதலில் சீரமைப்பு என்ற பெயரில் தொடங்கி சீரழிவை நோக்கி தடம் புரளாமல் இந்த ரயில்வே பயணிக்குமா ?
 நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -P..பாலகுருசாமி கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, December 26, 2019

                    நமது கோட்ட சங்க டைரி வெளி யீ ட்டு விழா --25.12.2019 புதுக்கோட்டை 
நமது மாநில மாநாட்டிற்கு முன்னோட்டமாக NCA -பாலு எழுச்சி பேரவை சார்பாக நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் 25.12.2019 அன்று புதுக்கோட்டையில் மிக சிறப்பாக நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியின் இடையே கிறிஸ்துமஸ் தினவிழாவை முன்னிட்டு நம்முடைய முன்னாள் பொதுச்செயலர் அறிவுஜீவி தலைவர் KVS அவர்கள் தலைமையில்கேக் கட்டிங்  நடைபெற்றது .அதனை தொடர்ந்து நமது கோட்ட சங்கத்தின் 2020 ஆண்டிற்கான டைரி தலைவர் KVS அவர்களால் வெளியிடப்பட்டது .நெல்லை கோட்டத்திற்கென்று புதிய அங்கீகாரம் வழங்கிய தலைவர் KVS ,மாநில செயலர் தோழர் வீரமணி மற்றும் முன்னாள் மாநிலசெயலர் தோழர் JR அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .




Tuesday, December 24, 2019

அனைவருக்கும் எங்கள் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ---NELLAI NFPE 




Monday, December 23, 2019

     National Small Savings Scheme (POSB) Rules 2019
Revised on 18/12/2019       
Government Savings Promotion General Rules 2018
Schedule-II
Fee to be charged for Services
(a) (i) Issue of duplicate pass book - ` 50.
(ii) Issue of statement of account or deposit receipt-` 20 in each case.
(iii) Issue of pass book in lieu of lost or mutilated certificate -` 10 per registration.
(b) Cancellation or change of nomination -` 50
(c) Transfer of account - ` 100
(d) Pledging of account - ` 100
(e) Issue of cheque book in Savings Bank Account – No fee for upto10 leafs in a calendar year and thereafter at `` 2 per
cheque leaf.
(f) Charges on dishonour of cheque- ` 100
Tax as applicable on the above service charges shall also be payable.
-----------------------------------------------------------------------------------------------------------------
     
Schedule-I
Forms to be used for operation of an account
1. GSPR-1 Opening of Account
2. GSPR-2 Pay in slip
3. GSPR-3 Loan/Withdrawal Form
4. GSPR-4 Pass Book
5. GSPR-5 Application for Transfer of Account
6. GSPR-6 Application for Extension of Account
7. GSPR-7 Application for Pledging of Account
8. GSPR-8 Application for Premature closure of Account
9. GSPR-9 Application for Final Withdrawal & Closure
10. GSPR-10 Form for making nomination or Change or Cancellation of nomination
11. GSPR-11 Claim Form (Deceased)
12. GSPR-12 Form for authorisation of operation of account
13. GSPR-13 Affidavit
14. GSPR-14 Letter of disclaimer
15. GSPR-15 Bond of Indemnity






(

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

வேலைநிறுத்தத்தில் பங்கேற்போம் !அஞ்சல்துறையை பாதுகாப்போம் !

               ஜனவரி 8-2020 ஒருநாள் வேலைநிறுத்தம் 
அஞ்சல் துறையில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கங்களும் (NFPE -FNPO-AIGDSU ) போராட்டத்தில் பங்கேற்கின்றன .இதற்காக இந்த மூன்று சங்கங்களுக்கும் 12.12.2019 அன்று நமது இலாகா முதல்வரிடம் தனித்தனியான போராட்ட நோட்டீசை முறைப்படி கொடுத்துள்ளனர் .நமது கோட்டத்தை பொறுத்தவரை வருகிற ஜனவரி 2 &3 ம் தேதிகளில் அனைத்து அலுவலகங்களுக்கும் வேலைநிறுத்த விளக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம் .
                                           முக்கிய    கோரிக்கைகள் 
1.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய் ! கடைசிமாத ஊதியத்தில் 50 சதம் ஓய்வூதியம் என்பதனை உறுதிப்படுத்து !..
2.GDS ஊழியர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இலாகா அந்தஸ்தை வழங்கிடு !
3.MACP பதவியுயர்வுக்கான பெஞ்சுமார்க் முறையை நீக்கிடு !
4.அஞ்சலகங்களுக்கு வாரம் 5 நாட்கள் வேலைநேரமாக அறிவித்திடு !
5.CIS/CBS /RICT/POSTMANAPP இவைகளிலுள்ள பிரச்சினைகளை சரிசெய்திடு !
6.கேடர் சீரமைப்பு பதவியுயர்வை தபால்காரர் /MTS பகுதிக்கும் அமுல்படுத்து !
                                            போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல் மூன்று 
P.பாலகுருசாமி கோட்டசெயலர் (பொ ) அஞ்சல் நான்கு 
---------------------------------------------------------------------------------------------------------------.

                          

Saturday, December 21, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                முக்கிய செய்திகள் 
*அரசு ஊழியர்கள் தேவைப்படின் பொது விடுமுறை நாட்களிலிலும் பணிக்கு வரவேண்டும் .அதற்கு ஈடாக அவர்களுக்கு 

 compensatory leave வழங்கப்படும் என்று ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றிக்கு Ministry of Personnel அவர்கள் பதிலளித்துள்ளார் .

*Assets of the Department of Posts:
Total No. of Handheld devices (BOs) = 129161 (DARPAN)
Total No. of Android Smart Phones = 40000 Registered (more in pipe-line)
Total No. of Sanctioned Strength of GDS = 310343
GROUP C (Excluding MTS) – 130119 (Sanctioned Strength) in 154965 Post Offices
Total No. of Mail Motor Service Operative Vehicles = 1386
Total No. of Parcel Hubs – 190
Integrated Parcel Centers – 8 
Total No. of letter Boxes - 485438
*மாதாந்திர பேட்டி -23.12.2019
  இந்த மாத மாதாந்திர பேட்டியில் அஞ்சல் மூன்றின் சார்பாக 
தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் ,V.சரவணன் மற்றும் RV.தியாகராஜ பாண்டியன் அவர்களும் அஞ்சல்நான்கின் சார்பாக தோழர்கள் 
P.பாலகுருசாமி ,E.ருக்மருக்மணி கணேசன் மற்றும் V.தங்கராஜ் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .
நன்றி .தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி  கோட்ட செயலர்கள் நெல்லை 

Friday, December 20, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                      முக்கிய செய்திகள் 
*22.12.2019 அன்று நடைபெறுவதாக இருந்த GDS TO MTS தேர்வு மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
* போஸ்ட்மாஸ்டர் கிரேடு பொதுபிரிவோடு இணைக்கப்பட்டபின்னணியில் அவர்களின் போஸ்டிங் குறித்து அஞ்சல் வாரியம் 19.12.2019 அன்று விளக்க ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது .
(a )அதன்படி கிரேடு III ஊழியர்கள் HSG I ஆகவும் கிரேடு II ஊழியர்கள் HSG II ஆகவும் கிரேடு I ஊழியர்கள் LSG ஊழியர்களாகவும் இருப்பார்கள் 
(b ) இப்பொழுதுள்ள கிரேடு I  ஊழியர்கள் தாங்கள் பணியாற்றும் LSG அலுவலகத்தில் தங்களது TENNURE முடியும் வரையிலும் அவர்களுக்கு HSG II பதவிஉயர்வு வந்தாலும் அவர்கள் விரும்பினால் அதே அலுவலகத்தில் (பழைய LSG அலுவலகத்தில் )TENNURE முடியும் வரை தொடரலாம் .அதே போல் கிரேடு II ஊழியர்களும் TENNURE முடியும் வரையில் அதே அலுவலகத்தில் தொடரலாம் .
* வருகிற ஜனவரி 8 அன்று நடைபெறும் வேலைநிறுத்தத்தில் அஞ்சல் துறையில் FNPO சங்கமும் AIGDSU -GDS சங்கமும் கலந்துகொள்கிறது .ஆகவே 08.01.2019 வேலைநிறுத்தத்தை நமது நெல்லை கோட்டத்தில் முழுவெற்றியடைய செய்வோம் .ஆகவே அனைத்து இலாகா ஊழியர்களும் -GDS ஊழியர்களும் இந்த இலாகாவை காப்பாற்றும் புனித போராட்டத்தில் பங்கேற்று வெற்றியடைய உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
 நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, December 19, 2019

                                                       முக்கிய செய்திகள் 
HSG 1 & HSG II பதவிகளை ONE TIME RELAXATION அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது .அதன்படி மாநில CPMGகளுக்கு அஞ்சல் வாரியம் 18.12.2019 அன்று அறிக்கைகளை அனுப்பும் படி கேட்டுள்ளது .இந்த முன்மொழிவை DOPT ஒத்துக்கொண்டால் நிச்சயம் பதவி உயர்வுக்காக 5 வருடங்கள் 6 வருடங்கள் காத்திருக்க வேண்டியதில்லை 
* PLI /RPLI  காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க கடைசி தேதியாக அஞ்சல் இயக்குனரகம் 31.12.2019 என  நிர்ணயித்திருந்தது .ஆனால் எதிர்பார்த்தபடி REVIVAL செய்யப்படாததால் அதன் கடைசித்தேதி 31.03.2020 க்கு மாற்றப்பட்டுள்ளது .
*தோழர் சங்கர்கணேஷ் தபால்காரர் திருநெல்வேலி HO அவர்கள் RULE 38 மூலம் சங்கரன்கோவில் செல்வதை ஒட்டி நேற்று அவருக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலக ஊழியர்கள் சார்பாக வழியனுப்புவிழா சிறப்பாக நடைபெற்றது .
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்ட செயலர்கள் நெல்லை 



அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                     ஜாதகம் சரியில்லையாம் யாருக்கு ?
நமது நெல்லை கோட்டத்தில் சில உப கோட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகள் நமக்கு ஏற்புடையதாக இல்லை அவர்கள் ஆய்வுக்கு செல்லும் இடங்களில் ஊழியர்களை அர்ச்சிக்கும் வார்த்தைகள் மிரட்ட்டல்கள் என நம் கவனத்திற்கு வந்தபொழுதெல்லாம் நாம் நமது SSP அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்று சில ASP களின் நடவடிக்கையை சரிபடுத்தியிருக்கிறோம் .ஆனால் வள்ளியூர் ஆய்வாளர் அவர்களின் சமீபத்திய நடவடிக்கைகள் ஊழியர்களுக்கு மன உளைச்சலை மட்டுமல்ல கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
இது குறித்து நேற்று நமது முக்கிய பொறுப்பாளர்களிடம் கலந்துபேசி வருகிற 23.12.2019 மாதாந்திர பேட்டியில் நமது SSP அவர்களிடம் முழுமையாக விவாதித்து அவரது நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்துவோம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது .
.வள்ளியூர் ஆய்வாளர் அவர்களின் நடவடிக்கைகளில் சில 
*செல்லும் இடங்களில் எனக்கு ஜோசியம் தெரியும் உங்கள் கையை காட்டுங்கள் என்று எல்லை மீறுகிறார் ?யாருக்கு ஜாதகம் சரியில்லை என்று விரைவில் தெரிய போகிறது ?
*விடுப்பு கேட்கும் ஊழியர்களிடம் 100 கணக்குகள் தொடங்கினால் தான் விடுப்பு என மிரட்டல் 
* தான் குறிப்பிட்ட கணக்குகளை பிடிக்காதவர்களை நேரில் அழைத்து விளக்கம் கேட்பேன் என்று வாட்ஸாப் அச்சுறுத்தல் 
*MTS தேர்விற்கு HALL டிக்கெட் வாங்க சென்றவர்களிடம் எத்தனை கணக்கு பிடித்திருக்கிறாய் ?நீ பரீட்சை எழுதி என்ன செய்யப்போகிறாய் என ஆசிர்வாதங்கள் ?
*பணகுடி மேளாவிற்கு மேளா எங்கு நடக்கிறது என முறைப்படி தெரிவிக்காமல்  புள்ளிமானை தேடி அலைய விட்டுள்ளார் ?(புள்ளிமான் என்பது ஒரு தனியார் பள்ளிக்கூடம் )
*விடுப்பு மறுக்கப்பட்ட ஊழியர் நமது மூலம் SSP அவர்களிடம் பேசி விடுப்பு பெற்றபின் அந்த ஊழியரை தொலைபேசியில் அழைத்து இனி  எல்லாம் SSP இடமே கேட்டுக்கொள் அடுத்தவாரம் நான் தான் இன்ஸ்பெக்ஷன்க்கு வருவேன் பார்த்துக்கொள்கிறேன் என்பது 
                   இப்படி தொடரும்  வள்ளியூர் உபகோட்ட கதைக்கு முடிவு ஏற்படாவிட்டால் புதிய ஆண்டின் துவக்கத்தில் வள்ளியூரில் ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
போராட்ட வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கூட்டு போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை 


Tuesday, December 17, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                                                  முக்கிய செய்திகள் 
 *இந்த மாத நமது கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி வருகிற 23.12.2019 அன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது .பேட்டியில் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள் இருப்பின் நாளை 18.12.2019 குள் தெரிவிக்ககேட்டுக்கொள்கிறோம் .
* இந்த ஆண்டின் நமது கோட்ட சங்க டைரியில் SBCO (NFPE ) ஊழியர்களும் இடம்பெறுகிறார்கள் .இதற்கான முயற்சிகளை எடுத்த தோழர் S .செல்வபாரதி அவர்களுக்கு நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .இது நமது கோட்டத்தின் சார்பாக வெளியிடப்படும் 14 வது ஆண்டின் டைரி என்பது குறிப்பிடத்தக்கது .
* கடந்த 14.12.2019 அன்று நெல்லையில் நடைபெற்ற  ஸ்க்ரீனிங் கமிட்டியில் பயிற்சிக்காலத்தை TBOP பதவி உயர்விற்கு பயிற்சிக்கான உத்தரவு இல்லை என்ற காரணத்தால் பல தோழர்களுக்கு TBOP தேதியை மாற்றியமைக்க கமிட்டி மறுத்துள்ளது .இதுகுறித்து மாநிலச்சங்கத்திற்கு மேல்நடவடிக்கை எடுத்திடக்கோரி நமது கோட்ட சங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது .
*அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் தனது சொந்தவேலைகாரணமாக பொறுப்பு செயலராக தோழர்   P.பாலகுருசாமி (கணித புலி ) தபால்காரர் மஹாராஜநகர் அவர்களை நியமித்துள்ளார்கள் .ஒரு இளைய தோழரின் தொழிற்சங்கப்பணி இனிதே தொடர்ந்திட வாழ்த்துவோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -P.பாலகுருசாமி கோட்ட செயலர்கள் நெல்லை 
NFPE
               ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C              TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002
No.P3-ORG/dlgs dated at Tirunelveli  627002 the 17.12.2019

To

Com. A.Veeramani
Circle Secretary
AIPEU GR C
Tamilnadu Circle
@Chennai-600002

Dear Comrade,

We bring to your kind notice that several officials in Tirunelveli Division are denied the recent order issued regarding counting of induction training period for TBOP on the ground that the training memo is not available in Service Book and the official failed to produce a copy of the same.
This is unfair and injustice on the part of Departmental Screening Committee to reject on these grounds.
Hence, it is requested to take the issue with the Chief PMG for a remedial action as nobody can be appointed without induction training in our department.


                                              Yours faithfully


                                                                         [S.K.JACOBRAJ]
 DA -1

Copy to


1..The  Regional Secretary, AIPEU Group C, Dindigul-624002

Monday, December 16, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                          அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் அதிரடி மாற்றம் -
ஒரே அறிவிப்பில் தலைகீழ் மாற்றத்தை கொடுப்பதில் இந்த அரசுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை .பணமதிப்பிழப்பில் தொடங்கி இன்றைய தேசிய கூடியு ரிமை வரை இதே நிலைதான் நீடிக்கிறது .இந்த வரிசையில் தான் அஞ்சலக சேமிப்பு கணக்குகளில் கொண்டுவந்துள்ள மாற்றத்திலும் பெரும் ரகசியம் காக்கப்பட்டுள்ளது .இதன்மூலம் கிராமப்புற மக்களின் ஒற்றை நம்பிக்கை அஞ்சலக சேமிப்பு என்பதும் மெல்ல மெல்ல தகர்க்கப்பட்டுள்ளது .12.12.2019 முதல் மாற்றத்தை 14.12.2019 இரவில் அறிவிக்கவேண்டிய அவசியம் ஏன் வந்தது ?1990 களில் பொருளாதார சீரமைப்பின் ஒருபகுதியாக அரசின் பங்குகளை பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து வெளியே எடுத்து விற்று பணமாக்கும் (Disinvestment ) கொள்கையை தொடர்ந்து (காங்கிரஸ் )அதற்கான ஒரு அமைச்சரை (Minister of disinvestment) அதன்பிறகு  அருண்ஜெட்லீ அவர்களை(BJP) தனி அமைச்சராக நியமித்ததுநினைவிருக்கும் .ஆரம்பத்தில் 26 சத பங்குகள் விற்கப்படும் என்பது படிப்படியாக பல நிறுவனங்களில் 70 சத பங்குகளை விற்க முடிவெடுத்தது .இந்த வரிசையில் அரசின் கண்களை உறுத்தும் அரசுத்துறை இன்னும் மிச்சமிருக்கிறதென்றால் அது நமது அஞ்சல்துறை மட்டும்தான் .முதலில் பொதுமக்களுக்கும் நமக்கும் இடையே  செயற்கையாகவே இடைவெளியை ஏற்படுத்துவது அதன்பின்னால்  சேவையில் குறைபாடுகளை புகுத்துவது நமது சேவையை நமது வளா கத்திற்குள்ளே  தனியாரை வைத்து செய்திட அனுமதிப்பது என ஒரு எதிர்கால ஆபத்திற்கு அஞ்சல்துறை அலங்கரிக்கப்பட்டுவருகிறது .
அரசின் இந்த தாக்குதல்களில் இருந்து அஞ்சல்துறையை பாதுகாக்கவேண்டிய கடமை நம்முன்னால் இருக்கிறது .நம்முன் இருக்கும் ஒற்றுமை எனும் கவசத்தை இறுகப்பிடித்து முன்னேறுவோம் !அரசின் அனைத்து சூழ்ச்சிகளையும் முறியடிப்போம் !
நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

NFPE
ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                 TIRUNELVELI DIVISIONAL BRANCH
TIRUNELVELI-627002
No.P3-EC/dlgs dated at Palayankottai- 627002 the 17.12.2019

To

Com. A.Veeramani
Circle Secretary
AIPEU GR C
Tamilnadu Circle
@Chennai-600002

Dear Comrade,

We bring to your kind notice that several officials in Tirunelveli Division are denied the recent order issued regarding counting of induction training period for TBOP on the ground that the training memo is not available in Service Book and the official failed to produce a copy of the same.
This is unfair and injustice on the part of Departmental Screening Committee to reject on these grounds.
Hence, it is requested to take the issue with the Chief PMG for a remedial action as nobody can be appointed without induction training in our department.


                                              Yours faithfully


                                                                         [S.K.JACOBRAJ]

Copy to


1..The  Regional Secretary, AIPEU Group C, Dindigul-624002

Friday, December 13, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 
                            NELLAI NFPE வாட்ஸாப்ப் குரூப்பில் சில மாற்றங்களை செய்துள்ளோம் .ஏற்கனவே நமது மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை P 3--243 P 4---94 SBCO -3 என மொத்தம் 340 உறுப்பினர்கள் சந்தாதாரர்கள் ஆவார்கள் .அவர்களில் பெரும்பாலோனோர் அதாவது 99 சதம் வாட்ஸாப்ப் உபகோகிக்கிறவர்கள் .ஒரு வாட்ஸாப்ப் குரூப்பில் அதிகபட்சமாக 257 பேர்கள் மட்டுமே இடம்பெறமுடியும் .ஆகவே நாம் ஏற்கனவே NELLAI NFPE II என இரண்டாவது வாட்ஸாப்ப் தொடங்கியுள்ளோம் .ஆகவே சில தகவல் தொடர்பு வசதிக்காக NELLAI NFPE வாட்ஸாப்ப் குரூப்பில் இருந்து சில தோழர்கள் NELLAI NFPE II வாட்ஸாப்ப் குரூப்பிற்கு மாற்றப்படவுள்ளார்கள் ..தாங்கள் தொடர்ந்து தங்களது ஆதரவை தொடர்ந்திட அன்போடு கேட்டுக்கொள்கிறேன் .நன்றி .தோழமையுள்ள SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் மற்றும் குரூப் அட்மின் NELLAI NFPE &NELLAI NFPE II 

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
     12.12.2019 அன்று நடைபெற்ற கூட்டு பொதுக்குழுவின் முடிவுகள் 
            நெல்லை அஞ்சல் மூன்று &அஞ்சல் நான்கு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு 12.12.2019 அன்று கோட்ட தலைவர்கள் T .அழகுமுத்து P 3 தோழர் சொக்கலிங்கம் P 4 ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது .கீழ்கண்ட முடிவுகள் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன .
1.அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்கள் விடுப்பில் செல்வதால் அஞ்சல் நான்கின் கோட்ட செயலராக (பொறுப்பு ) தோழர் P .பாலகுருசாமி போஸ்ட்மேன் மஹாராஜநகர் அவர்கள் செயல்படுவார்கள் .
2.வருகிற ஜனவரி 8 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திடவும் அதற்காக ஜனவரி முதல் வாரத்தில் அனைத்து அலுவலகங்களுக்கும் சென்று ஊழியர்களை சந்திக்கவும் முடிவெடுக்கப்பட்டது .
3.அஞ்சல் மூன்றின் கோவை மாநில மாநாடு நன்கொடையாக நமது உறுப்பினர்களிடம் ரூபாய் 100  பிரிப்பதுஎன்றும் மாநில மாநாட்டிற்கு நெல்லையில் இருந்து திரளாக பங்கேற்பது என்றும் மாநில மாநாட்டிற்கும் -மாநில சங்கத்திற்கும்  நமது கோட்டம் முழு ஆதரவு கொடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது .
                         இதர பிரச்சினைகளில் ......
1.நெல்லை கோட்டத்திற்கு இன்று MACP கான கமிட்டி கூடுகிறது 
2.LSG பதவிஉயர்வில் 22 இடங்களே உள்ளநிலையில் 33 தோழர்களுக்கு திருநெல்வேலி ALLOTMENT செய்தது குறித்து மண்டல அலுவலகத்திற்கு கோட்ட அலுவலகத்தால் கடிதம் எழுதப்பட்டுள்ளது .
3.நெல்லையில் தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகளை தீர்த்திட ஒருவாரத்திற்குள் கோட்ட நிர்வாகத்திற்கு விரிவான மெமோரண்டம் கொடுத்து விவாதிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது .(உதா .பாளையம்கோட்டையில் பெண் ஊழியர்களுக்கான RECREATION மற்றும் RESTROOM கொடுப்பதில் உள்ள தாமதம்  ,எந்த விதிகளையும் பின்பற்றாமல்  LSG (SPM) ஊழியர்களை வேறு அலுவலகத்திற்குக்கு டெபுடேஷன் அனுப்பியது ,கோட்ட அலுவலக உத்தரவுகளை கோட்ட நிர்வாகமே அமுல்படுத்திட முடியாத நிலை ,தெற்குகருங்குளம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு ADDITIONAL HAND கொடுப்பதில் காட்டும் சுணக்கம் ,மாதக்கணக்கில் ஊழியர்களை வேறு அலுவகத்தில் அட்டாச் செய்திருப்பது உள்ளிட்ட  பிரச்சினைகளில் பொதுக்குழுவில் உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோட்ட சங்கம் திட்டங்களை வகுத்தெடுக்கும் என்று உறுதி அளிக்கிறோம் 
நன்றி .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் P3 
P.பாலகுருசாமி கோட்ட செயலர் P4 (பொறுப்பு )

                  

Thursday, December 12, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                                         GDS மற்றும் போஸ்ட்மேன் TO எழுத்தர் தேர்வுக்கான 
                கணினி தேர்வுக்கு தேர்ச்சிப் பெறும் மதிப்பெண்கள் குறைப்பு --நமது தமிழக அஞ்சல் மூன்றின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி --
கணினி தகுதித் தேர்வில் 75% உயர் மதிப்பெண் பெற்றால்  மட்டுமே தகுதி  என்ற உத்திரவை இறுதியாக மாறிவந்துள்ளது .UR               50%    OBC/EWS  45%  SC ST         40%
இலாகா தன்னிச்சையாக எடுத்த முடிவல்ல --ஆரம்பம் முதல் நமது தமிழகம் கொடுத்திட்ட அழுத்தத்தினால் வந்த வெற்றி என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம் .
காலிப்பணியிடங்களை கணக்கீடுவதில் உள்ள கோளாறுகளை கண்டுபிடித்து அதை சரிசெய்வது முதல் அந்தந்த கோட்டங்களில் VACANCY இல்லையென்றால் மாநிலம்முழுவதிலும் உள்ள ஒதுக்கீட்டின் அடிப்படையில் VACANCY யை உருவாக்கியது RMS பகுதி VACANCY யிலும் நமது GDS ஊழியர்களுக்கு அனுமதி என்று ஊழியர்களின் எதிர்கால நலன்களை திட்டமிட்டு செயல்படுத்திவரும் நமது தலைவர்களுக்கு   நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...
நன்றி NELLAI NFPE 
                             
          

Wednesday, December 11, 2019

   அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                        08.01.2020 ஒருநாள்        வேலைநிறுத்தம் வெல்லட்டும்      
அஞ்சல் மூன்று -தபால்காரர் மற்றும் GDS ஊழியர்களின் சங்கங்கள் பங்கேற்கும் வேலைநிறுத்தம் வெல்லட்டும்  
                                  CHARTER OF DEMANDS
*CSI ,RICT, CBS.CIS குளறுபடிகளை நிவிர்த்திசெய் 
*GDS ஊழியர்களின் விடுபட்ட கோரிக்கைகளை நிறைவேற்று !
*NPS திட்டத்தை ரத்துசெய் ! 50 சதம் ஊதியத்தை பென்ஷன் என்பதனை உறுதிப்படுத்து !
*வாரத்தில் 5 நாட்கள் வேலைநாட்களாக அறிவித்திடு !
*MACP வழங்கிட பெஞ்சுமார்க் முறையை ரத்துசெய் !
*RTP /MACP வழக்குகளில் வந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்து !
*RMS/MMS மற்றும் அக்கௌன்டன்ட் ஊழியர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கு !
*அஞ்சல் துறையில் தனியார் மற்றும் OUTSOURCE முறையை புகுத்தாதே !
                     கோட்ட சங்க பொதுக்குழு 
நெல்லை P3 &P4 சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம் 12.12.2019 அன்று பாளையம்கோட்டையில் நடைபெறுகிறது .
                                  2020 புத்தாண்டு டைரி 
நமது கோட்டசங்கத்தின் சார்பாக வெளியிடப்படும் புத்தாண்டு  டைரி  பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன .புதிதாக நமது பகுதிகளில் RULE 38 இன் கீழ் நெல்லைக்கு வந்த தோழர்களின் தகவல்களை கோட்ட சங்கத்திற்கு தெரிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் .
தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, December 10, 2019

                                                               NFPE
       அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் குரூப் C மற்றும்                     தபால்காரர்கள் &MSE
                                         திருநெல்வேலி கோட்டம் --627002
--------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                                                    கூட்டு பொதுக்குழு கூட்டம்
நாள் -12.12.2019                       நேரம் மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை HO
தலைமை : தோழர்கள் T.அழகுமுத்து கோட்ட தலைவர் P 3
                                                 A.சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P 4
பொருள்  :   1. ஜனவரி 8 ஒருநாள் வேலைநிறுத்தம்
                        2.அஞ்சல் மூன்றின் 39 வது மாநில மாநாடு (பெப்ருவரி 9-11) கோவை
                       3.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
                                                       தோழமையுடன்
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை
குறிப்பு :மாநில மாநாட்டிற்கு வருகைதரும் ஊழியர்கள் ரயில் முன்பதிவிற்கு ரூபாய் 600 கொடுத்திட கேட்டுக்கொள்கிறோம்
05.12.2019  -நெல்லை 

Monday, December 9, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !
                     அனைத்து கேடர்களுக்கான RULE 38 விருப்பவிண்ணப்பங்களின் பட்டியல் மாநிலநிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது .அதன்படி 30.06.2019 இன் படி 
நமது கோட்டத்தில் இருந்து தபால்காரர்கள் தோழர் சரவணன் (சங்கர்நகர் ) C .மகேந்திரன் (டவுண் ) சங்கர்கணேஷ் (TVLHO ) மற்றும் மீனா (திசையன்விளை ) வெளிக்கோட்டங்களுக்கு செல்லவிருக்கிறார்கள் .அதேபோல் MTS ஜெயப்பிரபு மோகன் சுனிதா அகியோர்களுக்கும் வெளிக்கோட்டங்களுக்கு செல்லவிருக்கிறார்கள்.எழுத்தர்களை பொறுத்தவரை சுமார் 14 தோழர்களுக்குமேல் நெல்லைக்கு வரவிருக்கிறார்கள் .விரைந்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தோழர்கள் அனைவரும் அவரவர் விரும்பிய சொந்த கோட்டங்களுக்கு செல்ல NELLAI NFPE வாழ்த்துகிறது .

                              மணமக்களுக்கு நல் வாழ்த்துக்கள் 
நமது அன்பிற்குரிய  மூத்த தோழர் S .சுப்பிரமணியன் LSG PA அவர்களின் இனிய புதல்வனின் திருமணவிழா 08.12.2019 அன்று பாளையம்கோட்டையில் சிறப்பாக நடைபெற்றது .
                                                     மணமக்கள் 
S .தண்டாயுதபாணி BE --M .இசக்கியம்மாள் MA Bed 
மணமக்கள் பல்லாண்டுகள் வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது .





                                                

Friday, December 6, 2019

அன்பு அண்ணன் KVS அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தாமதத்திற்கு வருந்துகிறேன் -இந்த 
தாமதத்திற்கும்  வருந்துகிறேன் 
நேற்றைய அண்ணன் JR அவர்களின் 
முகநூல் பக்கத்தை பார்த்தேன் 
அதில் வெளியிடப்பட்ட உங்கள் 
புகைப்படத்தையும்  பார்த்தேன் !
என் நினைவுகள் என்னை மீண்டும் 
பின்னோக்கி அழைத்துச்சென்றன !
நீங்கள் மாநில செயலராய் 
வலம் வந்த நேரம் அ து !
நெல்லையில் இருந்து மதுரைக்கு 
நாம் இருவரும் பயணித்திருக்கும் போது 
நமக்குள் நடந்த பேச்சுக்களின் இடையே 
இலக்கியத்தின் பக்கம் போனீர்கள் 
செல்லி உள்ளிட்டிட உலகம் போற்றும் 
உன்னத கவிதைகளை 
சொல்லி தந்தீர்கள்-அதற்கு  ஈடாக 
கவிஞர் மீரா அவர்களின் கவிதைவரிகளை 
நினைவூட்டினீர்கள் .
'நீ முதல்முறை என்னை 
பார்த்தபோது -என் 
உள்ளத்தில் முள் பாய்ந்தது 
முள்ளை முள்ளால்தான் எடுக்கமுடியும் 
எங்கே இன்னும் ஒருமுறை பார் '
ஆம் முள்ளை ...........
அதுமட்டுமல்லாமல் அந்த 
கனவுகள் +கற்பனைகள் =காகிதங்கள் 
கவிதைநூலை எனக்காக 
தங்கள் அன்பு புதல்வன் மூலம் வாங்கி 
16.04.2005 அன்று எனக்கு பரிசளித்தீர்கள் 
அந்த நூலின் முதல் பக்க வரிகள் இது 
"என்னை மீண்டும் இசைக்க வந்துள்ளாய் 
என்னால் உனக்கு பெருமை வரவேண்டும் என்பதல்ல 
உன்னால் எனக்கு வாழ்வு வரும் :
தொலைத்துவிட்ட தருணங்கள் 
அப்படியே போகட்டும் 
இனி என் பயணமெல்லாம் 
நீ காட்டும் திசையில் தான் !
                                              அன்புடன் தம்பி ஜேக்கப் ராஜ் 



Thursday, December 5, 2019

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
* LSG பதவியுயர்வுக்கான கோட்ட ஒதுக்கீடு வந்துவிட்டது .விரைந்து PLACE OF POSTING  அளிக்கவேண்டும் என கோட்ட அதிகாரிகளுக்கு மண்டல நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது .
* தோழியர் பூங்குமரி அவர்களின் தன்விருப்ப ஓய்வுவிழா 04.12.2019 அன்று மாலை திருநெல்வேலி பேட்டை அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது .நமது கோட்ட தலைவர் தோழர் அழகுமுத்து வண்ணமுத்து ஆவுடைநாயகம் ரமேஷ் மற்றும் ஜேக்கப் ராஜ் அஞ்சல்நான்கின் சார்பாக தோழர் பாட்சா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .விழா நிகழ்ச்சிகளை பேட்டை அஞ்சல் ஊழியர்கள் சிறப்புற செய்திருந்தனர் .தோழியர்  பூங்குமரி அவர்களின் பணிஓய்வு காலங்கள் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது .
*CGHS நலமையத்தில் இன்னும் உறுப்பினராக சேராத தோழர்கள் விரைந்து உறுப்பினர்களாக உங்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறோம் .நன்றி நெல்லை NFPE








Wednesday, December 4, 2019

                                                      வாழ்த்துகிறோம்   

            
    அன்பு தோழியர் S . பூங்குமரிஆதிமூலம்  SPM பேட்டை அவர்கள் தன்விருப்ப        ஓய்வு --04.12.2019
    தோழியர் பூங்குமரி அவர்களும் 
    புறப்பட்டுவிட்டார்கள் 
   ஆளெடுப்பு தடை அமுலான நாட்களில் 
    அஞ்சலகம் வந்த தோழர்களில் முதன்மையானவர் 
    போராட்ட காலங்களில் -நாம் போகமலே 
    அலுவலகத்தை அடைப்பதில் இ(ரு )வரும் 
     ஒருவொருக்கொருவர் குறைந்தவரில்லை 
     இணையவர்களாகவே இணைந்து 
    இயக்க பணியை ஆற்றியவர் 
    1992  யில் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் 
     தம்பதி சகிதமாய் அலுவலகத்தை மூடி
    அண்ணன் ஆதியும் -அக்காவும் அன்றே 
    நிர்வாகத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியவர்கள் 
     இரண்டாண்டு  ஆண்டு ஊதிய வெட்டை 
   இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட இரும்பு உள்ளம் 
   தொழிற்சங்க பணிகளில் அன்றைய நாட்களில் 
   முழுமையாய் ஈடுபடுத்தி கொண்டவர் 
   என்ன செய்தது யூனியன் என்று சராசரி ஊழியரைப்போல் 
   எந்நாளும் கேட்டதில்லை -நமது சங்கத்திற்கு 
   தன்னாலான உதவிகளை 
   தயங்காமல் ஆற்றியவர் 
  அருமை தோழியரின் பணிஓய்வு காலங்கள் 
  சிறக்க வாழ்த்துகிறோம் ! வணங்குகிறோம் !
                                    தோழமையுடன் நெல்லை NFPE 

  

Tuesday, December 3, 2019

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                 நெல்லை அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்காம் பிரிவு சங்கங்களின் கூட்டு பொதுக்குழு கூட்டம் 
நாள் --12.12.2019 வியாழன் 
நேரம் --மாலை 6 மணி 
இடம் --பாளையம்கோட்டை HO
கூட்டு தலைமை -தோழர்கள் T .அழகுமுத்து கோட்டத்தலைவர் P3
                                                                     A .சீனிவாச சொக்கலிங்கம் P4
பொருள் ;  1.ஜனவரி 8 ஒருநாள் வேலைநிறுத்தம் 
                        2.அஞ்சல் மூன்றின் 39 வது மாநில மாநாடு (பிப்ரவரி 9-11 கோவை ) நன்கொடைகள் சம்பந்தமாக மற்றும் நமது கோட்ட சங்க நிலைப்பாடு குறித்த அறிவிப்புகள் 
                       3.தலமட்ட பிரச்சினைகள் 
                          (a ) மீண்டும் தலைதூக்கும் DEPUTATION குளறுபடிகள் 
                          (b ) அடிப்படை வசதிகள் சிறிதும் இல்லாத SPM குடியிருப்புகள் 
                          (C ) இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
  தோழர்கள் /தோழியர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் .
                                    நன்றி .
குறிப்பு ;கோவை மாநில மாநாட்டிற்கு வரவிரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை விரைவில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .ரயில் கட்டணம் ரூபாய் 600 விரைந்து அனுப்பிடுவீர் .
இதுவரை .......ஜேக்கப் ராஜ் .வண்ணமுத்து .அழகுமுத்து ,பிரபாகர் ,ஆசைத்தம்பி மற்றும் செல்வின்ஆகியோர்  தங்கள் வருகையை உறுதிப்படுத்தியுள்ளார் .
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, December 2, 2019

                                                   முக்கிய செய்திகள் 
அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
                            அஞ்சல் துறையின் மீது அடுத்த தாக்குதல் --
பாரம்பரியமிக்க நமது துறை பல்வேறு புது புது தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது .POSB இருக்கும் போதே  IPPB ,இன்சூரன்ஸ் பிரிவிற்கு தனி இயக்குனரகம் ,பார்சல் சேவைக்கு புது இயக்குனரகம் என மூன்று திட்டங்கள் நடைமுறையில் உள்ளன .இன்று அடுத்த நடவடிக்கையாக COMMON SERVICE CENTER என்று நமது அலுவலகதிற்குள்ளே நமது சர்வரை பயன்படுத்தி தனியார் சேவைகளை நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளதாம் .கிட்டத்தட்ட சுமார் 6000 அஞ்சலகங்களில் இந்த COMMON SERVICE CENTER  தொடங்கப்படவுள்ளதாம் .எப்படி ரயில்வே துறையில் அரசாங்க தடத்தில் தனியார் ரயில் இயக்கப்படுகிறதோ ,எப்படி தொலைத்தொடர்பு துறை கேபிள் வழியாக தனியார் செல்போன் நிறுவனங்கள் சேவையை பெற்றதோ அதேபோல் அஞ்சல்துறையிலும் இந்த ஆபத்துகள் நெருங்கிக்கொண்டு வருகின்றன .1991 முதல் அரசாங்கத்தின் புதிய பொருளாதார கொள்கையை   நாம் எதிர்த்து போராட்டங்களை நடத்தி கொண்டிருந்தாலும் போராட்டத்தின் தன்மையை பார்த்துதான் சிலஇடங்களில் அரசு பின்வாங்குகிறது 
(உதா .போர்தளவாடங்களை தயாரிக்க தனியாருக்கு அனுமதி ) பல இடங்களில் அமுல்படுத்துகிறது .இந்த தாக்குதலை எதிர்த்தும் குறிப்பாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும் புதிய தோழர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் எவ்வளவு என்பதை உறுதிப்படுத்தவும் நடைபெறவிருக்கும் ஜனவரி 2020  எட்டாம் தேதி ஒருநாள்  வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்திடுவோம் .
நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 
SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை 


Saturday, November 30, 2019

                                                     திருமண வாழ்த்துக்கள் 
நமது அன்பிற்குரிய ஆலோசகர் மறைந்த தலைவர் பேச்சிமுத்து அவர்களின் பேரனும் NFPE பேரியக்கத்தின் முன்னணி தலைவர் மறைந்த தோழர் டால்வி போஸ்ட்மேன் பாளை அவர்களின் புதல்வர்
                       D.சாய் முத்துக்குமார் -M .பசுமதி இவர்களின் திருமணம் 01.12.2019 அன்று VM.சத்திரம் ஸ்ரீனிவாசம ஹாலில்  நடைபெறுகிறது 
--------------------------------------------------------------------------------------
நமது கோட்டத்தில் எழுத்தராக பணியாற்றி இன்று ASST.ACCOUNTS OFFICER ஆக பதவியுயர்வு பெற்று சென்றிருக்கும் தோழர் 
விக்னேஸ்வரன் -சந்திரலேகா இவர்களது திருமணம் 01.12.2019 அன்று பழவூரில் நடைபெறுகிறது 
------------------------------------------------------------------------------------------------------------
தேனி கோட்ட முன்னாள் அஞ்சல் மூன்றின் கோட்டசெயலர் நண்பர் செல்லத்துரை அவர்களின் புதல்வி இந்துமதி -முத்துக்குமார் இவர்களின் திருமணம் 01.12.2019 அன்று ஆண்டிபட்டியில் நடைபெறுகிறது 
-----------------------------------------------------------------------------------------------------------------
இல்லறம் எனும் இன்ப சோலையில் இணையும் தம்பதியர்கள் அனைவருக்கும் NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .

                  அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !
மதுரா மாநகரில் (உத்தரபிரதேசம் )நடைபெற்ற 11 வது NFPE சம்மேளனக்குழு 
               நமது NFPE சம்மேளனத்தின் உட்சமட்ட அமைப்பான சம்மேளன குழு கூட்டம் (FEDERAL COUNCIL ) கடந்த 25.11.2019 முதல் 27.11.2019 வரை மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது ..சம்மேளனத்தின் தலைவராக தோழர் PV.ராஜேந்திரன்( R 3 கேரளா ) மாபொதுச்செயலராக மீண்டும் தோழர் RN .பராசர் (பொதுச்செயலர் P 3 UP )  நிதிச்செயலராக தோழர் அஸ்வின்குமார் (P 4 டெல்லி ) அகியோர்களுக்கு ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்கள் .உதவி பொதுச்செயலராக நமது அஞ்சல் மூன்றின் தமிழ்மாநில உதவி செயலரும் வேலுர் கோட்ட செயலருமான அன்புத்தோழர் வீரன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் .அகிலஇந்திய அளவில் மீண்டும் நமது தமிழக அஞ்சல் மூன்றின் ஆளுமை நிருபிக்கப்பட்டுள்ளதுஅகிலஇந்தியஅளவில் தொடர்ந்து தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டிவரும் அஞ்சல் மூன்றின் முன்னாள் பொதுச்செயலர் அண்ணன் KVS மற்றும் நமது முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் JR அவர்களுக்கும்  NELLAI NFPE யின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .சம்மேளன அளவில் தமிழகத்தின் ஒற்றை பிரதிநிதியாக வலம்வரும் நண்பர் வீரன் அவர்களின் பணிசிறக்கவும் வாழ்த்துக்களை NELLAI NFPE சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் .இறுதியாக தமிழகத்தின் சார்பாக NFPE சம்மேளன செயல்தலைவராக பணியாற்றிய அன்பு அண்ணன் விருத்தாச்சலம் மனோகரன் அவர்களுக்கும் உதவி பொதுச்செயலர் தோழர் ரகுபதி அவர்களுக்கும் பாராட்டி கௌ ரவிக்கப்பட்டது .