...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, December 30, 2020

 அன்பார்ந்த தோழர்களே! தோழியர்களே ! 

   நமது கோட்ட சங்கத்தின் சார்பாக  ஆண்டுதோறும் வெளியிடப்படும் டைரி தயார்நிலையில் இருக்கிறது .இது நாம் தொடர்ந்து வெளியிடும் 15 வது ஆண்டு டைரி ஆகும் .வழக்கம் போல் இந்த ஆண்டும் நமது உறுப்பினர்களின் படைப்புகளை தாங்கி இந்த டைரி வெளிவருகிறது .முதல் கவிதை தோழர் மோகன் தபால்காரர் கலெக்ட்ரேட்  அவர்களின் கவிதை ...அடுத்து நமது தோழியரும் மகிளா கமிட்டி நிர்வாகிகளில் ஒருவரும் சிறந்த கவி ஆளுமை மிக்கவருமான S .முத்துலட்சுமி PA திருநெல்வேலி HO அவர்களின் இரண்டுபக்க கவிதை, வழக்கம் போல் எனது பங்கிற்க்கும் சில கிறுக்கல்கள் என வருகிறது .படைப்பாளிகளை .உற்சாகப்படுத்தும் விதமாக முதலாவதாக தோழர் மோகன் (தமிழச்சிமகன்) அவர்களின் கவிதை இதோ ! .வாழ்த்துங்கள் 

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே! . .

                                  GDS TO MTS தேர்வில்  வெற்றிபெற்ற தோழர்/தோழியர்களுக்கு NELLAI NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .

1.N .மீனாட்சி 2.S.கிருஷ்ணா ராம்  3.BT .கதிரேசன் 4.V.மாரிமுத்து 5.G.காந்திமதி 

6.D.மணிமேகலை 7.C .சித்ரா 8.Aநிசாகர்  9.A .ஜெ யசுப்ரமணியம் 10.R .மகேஸ்வரி 

11.S .ஆனந்த முத்துகுமார் 12.S சங்கர்கணேஷ் 13.B பிரேமபிரியா

14A .சிவமுருகன் 

MTS ஆக தேர்வு பெற்ற தோழர்கள் அனைவரையும் NFPE-P 4 சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 10.01.2020 அன்று தபால்காரர் தேர்விலும் பங்கேற்க  அனுமதிக்கப்படுவார்கள் என்பதும் தபால்காரர் தேர்வில்வெற்றிபெற்றால் MTS பதவியை விடுத்து தபால்காரர் ஆக நியமிக்கப்படுவார்கள் என்பதும் மகிச்சியான செய்தியாகும்.நமது அஞ்சல் மூன்று /அஞ்சல் நான்கு தோழர்கள் புதிய தோழர்களை நமது NFPE பேரியக்கத்தில் உறுப்பினர்களாக்க இன்றே அவர்களை அனுகும்படி மீண்டும் நினைவு படுத்துகிறோம்..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் 

Saturday, December 26, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                    நமது மாநில சங்கத்தின் வழிகாட்டுதலின் படி நமது முன்னாள் அஞ்சல் மூன்றின் பொதுச்செயலாளர் அண்ணன் KVS அவர்களின் முயற்சியால் GDS TO போஸ்ட்மேன் தேர்விற்கான ஆன்லைன் வகுப்புகள் மாநில அளவில் வருகிற ஞாயிறு முதல் நடைபெறவிருக்கிறது .அதில் கலந்துகொள்ளவிரும்புகிறவர்கள் 

தங்களது பெயர் -------------------  பதவி -----------------------------தொலைபேசி ---------------வயது ---------------------கல்வித்தகுதி ----------------போன்ற தகவல்களுடன் எனக்கு (ஜேக்கப்  ராஜ் )  94421-23416 என்ற எண்ணிற்கு அனுப்பிவைக்கவும் .

.இதுவரை நமது கோட்டத்தில் சுப்புலக்ஷ்மி (உவரி ) சிவசங்கரி (கோபாலசமுத்திரம் ) முத்துச்செல்வி (அம்பை அங்காடி ) ரவி (குன்னத்தூர்) மைதீனிபீவி (தெற்குப்பட்டி ) சீதா (புலியுர் குறிச்சி )காந்திமதி (முன்னிறர் பள்ளம் )அம்பிகா (கட்டா ரங்குளம் )ஜெயராணி (உக்கிரன்கோட்டை ( செல்வ லக்ஷ்மணன் (சுத்தமல்லி ) ஆகியோர் இணைந்துள்ளனர் .இது மாநிலந்தழுவிய வகுப்பு என்பதால் விரைந்து ஆர்வமுள்ள GDS ஊழியர்கள் இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் ..

*நமது கோட்ட அலுவலகத்தில் இருந்து செயல்படும் வாட்ஸாப்ப் குரூப்பில் ஆதார் பணிகளை செய்திடவும் IPPB மற்றும் AEPS பரிவர்த்தனை செய்திடவும்  ஒரு பதிவை போட்டுவிட்டு  கடைசியாக PMS/SPMS  WILCOME TO DO/EXPLAIN  IN  PERSON  TO SSP  ;IF THE MINIMUM IS NOT DONE  என்ற எச்சரிக்கையோடு அனுப்பப்பட்ட செய்திகள் குறித்து நமது தோழர்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்திருந்தார்கள் .ஊழியர்களை விரட்டி மிரட்டி இலக்கினை எட்டிட நினைப்பது தேன்கூட்டில் கைவைப்பதற்கு சமம் .நமது கோட்டத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் உண்டு .கடந்த 2015 யில் இருந்து பார்த்தால் நமது கோட்டத்தில் எந்த உருட்டல் மிரட்டல் இல்லாமலே நாம் நமது இலக்கை அடைந்திருக்கிறோம் .வணிகத்தை  பொறுத்தவரை நாம் சிறப்பாக செய்துகொண்டிருக்கும் வேளை யில் இதுபோன்ற அதிகார மிரட்டல்கள் தேவைதானா ? SPM ஊழியர்களை நேரில் வந்து கோட்ட அலுவலகத்திற்கு விளக்கம் கொடுக்கவேண்டும் என்பதல்லெல்லாம் ஏற்புடையது தானா ? சிந்திப்போம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, December 18, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                நேற்று (17.12.2020 ) அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் கொண்டுசெல்லப்பட்டு அனைத்து பிரச்சினைகளிலும் நமது கண்காணிப்பாளர் அவர்கள் உடனடி தீர்விற்கும் தன்னால் தீர்க்கமுடியாத தனது அதிகாரத்திற்கு உட்படாத கோரிக்கைகளுக்கு மண்டல நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லவும் உறுதியளித்தார்கள் 

1.வருகிற ஜனவரி முதல் மாதாந்திர பேட்டி நமது வேண்டுகோள்களின் படி அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களுக்கு கூட்டாக பேட்டி நடைபெறும் என்றும் கொரானா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரு சங்கத்திற்கு இருவர் என்பதை மாற்றி மீண்டும் மூன்று நிர்வாகிகள் அனுமதிக்கப்படுவார்கள் 

2.நமது கோட்டத்தில் மட்டும் DSM தோழர்களுக்கு புதிதாக அமுல்படுத்தப்பட்ட சில நடைமுறைகளை கைவிடவேண்டும் என்று கேட்டபோது நமது SSP அவர்கள் அதன் நியாயத்தை ஏற்றுக்கொண்டு விசிட் ரிப்போர்ட் முறையை ரத்து செய்திட சம்மதித்தார்கள் .இரவு பகல் -பாராமல் பணியாற்றிடும் DSM ஊழியர்களின் அளப்பரியற்ற சேவைக்கு நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியது என்றும் வெகுவாக DSM ஊழியர்களின் அர்ப்பணிப்பை குறித்து தெரிவித்தார்கள் 

3.வள்ளியூர் மற்றும் திசையன்விளை பகுதிகளில் கூடுதலாக ஒரு எழுத்தர் நியமிக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது 

4.சமூகரெங்கபுரத்தில் தோழர் நியூட்டன் அவர்களுக்கு பிடிக்கப்பட்ட HRA குறித்து பாளை கணக்கு பிரிவிற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதையும் விரைவில் இதற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்தார்கள் .

5.MMS கோரிக்கைகளில் ஒன்றான மெயில் பியூன் கொடுப்பது குறித்து SSRM அவர்களிடம் பேசுவது என்றும் --GBRS கோளாறை சரிசெய்யாமல் நமது ஓட்டுனர்களுக்கு தேவையில்லாமல் மனஉளைச்சல் தரும் பிரச்சினை --ஓட்டுனர்களுக்கு பயணப்படி கணக்கிடுவதில் ஸ்டார்டிங் பாயிண்ட் என்பது MMS பாளையில் இருந்துதான் இருக்கவேண்டுமே என்றும் RMS அலுவலகம் அல்ல என்றும் பழைய DA பில்களில் உள்ள விஷயங்களை குறித்தும் பேசப்பட்டது 

6.MACP .LSG ACCOUNTATANT POSTING ,RULE 38 இடமாறுதல்கள் LRPA பட்டியல் இவைகள் அணைத்திற்கும் நடைபெற்ற கமிட்டியின் முடிவுகள் ஓரிருநாளில் வெளியிடப்படும் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 


.

.


Thursday, December 17, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .
                                                நமது கோட்ட சங்கத்தின் புத்தாண்டு டைரி 15 ஆண்டுகளாக தொடர்ந்து வெளியிட்டுவருகிறோம் .தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவிற்கும் உற்சாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ..250 க்குமேல் அஞ்சல் மூன்று உறுப்பினர்கள் 115 க்கு மேல் அஞ்சல் நான்கின் உறுப்பினர்கள் என மீண்டும் அதே வலிமையோடும் பொலிவோடும் நெல்லை NFPE மிளிர்கிறது .இந்தாண்டு RULE 38 கீழ் வந்த 9 ஊழியர்களும் நமது NFPE உறுப்பினர்கள் என்பது கூடுதல் பெருமை ..இந்த புத்தாண்டிலும் புதிய உறுப்பினர்களை எதிர்பார்க்கிறோம் ..வரவேற்க காத்திருக்கிறோம் ......
                                            மாதாந்திர பேட்டி 
நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுடனான மாதாந்திர பேட்டி இன்று நண்பகல் 12 மணிக்கு அஞ்சல் மூன்றிற்கும் பிற்பகல் 2 மணிக்கு அஞ்சல் நான்கிற்கும் நடைபெறுகிறது .

*தீபாவளி பண்டிகைக்காக விண்ணப்பிக்கபட்ட FESTIVEL PACKAGE பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் மட்டும் இன்னும் கிடைக்கவில்லை ..அடுத்த பண்டிகையும் நெருங்குகிறது ...நிர்வாகம் இதில் போர்க்கால நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம் 
இந்த  மாத மாதாந்திர பேட்டியில் அஞ்சல் மூன்று விவாதிக்கவிருக்கும் பிரச்சினைகள் 

NFPE

 ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                            TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI—627002

No.P3-MM/ dated at Palayankottai- 627002 the 10.12.2020

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

            Sub:    Subjects for monthly meeting -reg

                                      *****

              The following subjects may kindly be included for discussion during the monthly meeting

1.Request to extend the vehicle shed of Palauamkottai HO as it is not sufficient to accommodate all vehicles of the staff

2.Request to draw HRA for the TimeScale PA who was posted in the LSG SPM post of Samugarengapuram as he was posted in the interest of service

3.Request filling up of Treasurer ,Tirunelveli HO for which volunteers have already called for by the DO

4.Request to set right the table drawers of APM SB I&II  Palayamkottai and provision of lock and key for needy branche

5.It is requested to accord permission to hire Genset for Palayamkottai HO during power failure as the approved 65 KV Genset is yet to be supplied

6.Request to attach one PA to Tiaiyanvilai SO and Vallioor  Sos

7.Request to fil up the vacant Accountant HSGII post of Tirunelveli HO by posting eligible LSG Accountant

8.Request to make arrangement for civil work in front of Tirunelveli HO as  all the drainage water are passing in side the HO during rainy season

9.Request to engage mail peon for outstation DMMS schedules.

10. Reconsideration of starting place from vPalayamkottai HO instead of Tirunelveli RM during Covid -19 Period for DA Calclation

11.Request body building for the recently purchased Eicher mailvanand provision of garage for it

12.Request to make provision at Palayamkottai HO to handover MMS vehicle key after duty hour

                      The following officials will attend the meeting.

        1     S.K.Jacobraj  Divisional Secretary &LSG PA Palayamkottai

             2.    R.V.Thiyagaraja Pandiyan spm Ravanasamudra


                         Yours faithfully   

[S.K.JACOBRAJ]

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்டசெயலர்கள் நெல்லை  

 

 

 



Monday, November 23, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                     26.11.2020 வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம் 

மத்திய அரசு கடைபிடித்துவரும் பொருளாதார கொள்கைகளின் தாக்கத்தினால் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகவாகும்  பாதிக்கப்பட்டுவருவதை நாம் இன்று கண்கூடாக பார்த்துவருகிறோம் .அதையும் தாண்டி இன்று மத்தியஅரசின் கொளகை முடிவுகளால் நடைமுறைப்படுத்திட துடிக்கும் திட்டங்களிலானால் நாம் மட்டுமல்ல நமது சந்ததியினரும் பாதிக்கப்பட போவது என்பதும்  திண்ணம் .இந்த கொடுமைகளை களைய கடுமையான நடவடிக்ககைகளை நாமும் எடுத்தாக வேண்டும் .ஆம் தொழிலாளியின் முன் இருக்கும் ஒரே ஆயுதம் வேலைநிறுத்தம் மட்டும் தான் .இந்த வேலைநிறுத்தத்தை ஒன்றுபட்ட இயக்கமாக நடந்திடும் போது வேலைநிறுத்தத்தின் தாக்கம் அதிகரிக்கும் போது பல சந்தர்ப்பக்கங்களில் அரசு தனது முடிவை தளர்த்தியிருக்கிறது அல்லது தள்ளிப்போட்டிருக்கிறது .புதிய சலுகைகளை பெறப்போகிறோமோ இல்லையோ பெற்ற சலுகைகளை பேணிப்பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் நாம் இருக்கிறோம் .

1.கொரானா வை காரணம் காட்டி மூன்று பஞ்சபடிகள் ஜூலை 2021 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .இதில் நாம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளோம் .

2.அரசு ஊழியர்க்ளுக்கு TOUR TA /TRANSFER TA  தவிர்க்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது (இது அதிகாரிகளுக்கு ஏனோ பொருந்தாது )

3.மத்திய அரசு ஊழியர்களுக்கான கட்டாய ஓய்வு எனும் பழைய ஆயுதத்தை புதிதாக ஆயத்தம் செய்து வைத்ததைப்போல சுற்றறிக்கையை அனுப்பி ஊழியர்களை அச்சத்தில் வைத்திருப்பது 

4.வாரிசு அடிப்படையில் பணிவழங்குவதில் கடைபிடிக்கப்படும் இறுக்கமான நிபந்தனைகள் .நேற்றுகூட நமது கோட்டத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது .

5.அஞ்சல் துறையிலும் முதன்மை சேவைகளை பின்தள்ளிவிட்டு கமிஷன் அடிப்படையில் நடக்கும் பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது 

6.2004 க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் எனும் சமூகப்பாதுகாப்பை சீரழித்தது 

7.இன்னமும் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவது தொடர்பான அறிவிப்புகள் 

8.தொழிற்சங்கங்களை நசுக்கும் வகையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தொழிலாளர் சட்டங்களில் மாற்றம் -நமக்கு கூட யூனியன் என்பதை அஸோசியேஷன் என மாற்றம் செய்திட கொடுத்துக்கொண்டிருக்கும் நிபந்தனைகள் /நிர்பந்தங்கள் 

9.DOPT வரை சென்றும் கூட HSG II மற்றும் HSG I பதிவுயர்வில் ONETIME RELAXATION தள்ளிவைப்பு /அலட்சியம் 

10.GDS ஊழியர்களுக்கான WEIGTAGE ,EL சேமிப்பு .பதவிஉயர்வு /மருத்துவ காப்பீடு இவைகளை வழங்குவதில் இழுத்தடிப்பு  

                   இதுபோன்ற நம்மை பாதிக்கின்ற விஷயங்களில் நாம் போராடவில்லை என்றால் வேறு யார் போராடுவார்கள் ? தமிழகம் என்றுமே இதுபோன்ற பொதுவேலைநிறுத்தங்களில் பங்கேற்றிட  தயங்கியதில்லை .நமது மாநில சங்கமும்/மாநில செயலரும்  வேலைநிறுத்தத்தை பழைய நாட்களை போல வெற்றிகரமாக நடத்திட அழைப்பு விடுத்திருக்கிறார் .

நேற்று பணியில் சேர்ந்த ஊழியர்கள் முதல் நாளை பணி ஓய்வு பெறும் ஊழியர்கள் வரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்கலாம் .மேலும் சமீபத்தில் MACP பதவி உயர்வினை பெற்று ஜனவரி 2021 யில் INCREMENT OPTION கொடுத்த ஊழியர்கள் கோட்ட செயலரிடம் அதற்கான விளக்கங்களை கேட்கவும் .

வழக்கம் போல் கடைசி நேரத்தில் நிர்வாகம் கொடுக்கும் வேண்டுகோள்கள் /அச்சுறுத்தல்களை புறக்கணிப்போம் .

வேலைநிறுத்தத்தில் பங்கேற்போம் !அஞ்சல் துறையை பாதுகாப்போம் !

தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 



Saturday, November 21, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் 

                                                        முக்கிய செய்திகள் 

.*வருகிற 26.11.2020 அன்று நடைபெறும் ஒருநாள் பொதுவேலைநிறுத்ததை முன்னிட்டு நமது கோட்ட சங்கங்களின் சார்பாக 23.11.2020 அன்று தென்பகுதியில் 24.11.2020 அன்று மாநகர் பகுதியிலும் வேலைநிறுத்த பிரச்சார  பயணங்கள் நடைபெறுகிறது ..வேலைநிறுத்தத்தை வெற்றிபெற செய்வோம் .

*அஞ்சல் துறையில் ரோஸ்டர் முறை பின்பற்றுவது நவம்பர் வரை நீட்டிக்கப்ட்டுள்ளது என்றும் சூழ்நிலைக்குகளுக்கேற்ப அந்தந்த கோட்ட நிர்வாகமே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்றும் அஞ்சல் வாரியம் உத்தரவிட்டுள்ளது .

*Retirement ஆகும் பணியாளரின் service book ஆடிட்க்கு (audit) சரி பார்த்தலுக்கு அனுப்பபடும். service புக்கியில் retirement ஆகும் தேதியில் இருந்து 24 மாதங்களுக்கு முன்னர் இருக்கும் குறைபாடுகள் மட்டும் சுட்டி காட்டி சரி செய்யபட வேண்டும். அதற்கு முந்தைய காலத்தில் உள்ள எதையும் சுட்டி காட்ட வேண்டிய அவசியம் தேவையில்லை என்று 27.07.2020 தேதியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளது  .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T .புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 



Friday, November 20, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                     நேற்று நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து பல்வேறு ஊழியர்கள்  பிரச்சினைகள் குறித்து பேசினோம் .ஒருசில பிரச்சினைகளுக்கு உடனடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது .அதற்காக நமது SSP அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் தோழர் ரமேஷ் அவர்களின் Relief  குறித்தும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது .இறுதியாக MMS ஓட்டுனர்களுக்கு கொடுக்கப்பட்ட தேவையற்ற விளக்க கடிதங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது .ஓட்டுனர்களை தொடர்ந்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கும் செயல்களை SSP அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் .சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது தங்களுக்கு  கீழ் பணிபுரியம் ஊழியர்களை மனிதாபிமானத்தோடு நடத்திடவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் .

                 26.11.2020 வேலைநிறுத்தம் குறித்த சுற்றறிக்கைகள் இன்று உங்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் .வருகிற 23.11.2020 மற்றும் 24.11.2020 அன்று கோட்ட அளவிலான அமைப்பு சார்ந்த சுற்றுப்பயணங்கள் நடத்திடவுள்ளோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, November 19, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                              வேலைநிறுத்த கோரிக்கையும் -அஞ்சல் துறையின் வழக்கமான விளக்கமும் 

வருகிற 26.11.2020 அன்று நடைபெறவிருக்கும் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தை ஓட்டி நமது NFPE சம்மேளனம் கொடுத்துள்ள வேலைநிறுத்த கோரிக்கைகளுக்கு அஞ்சல் வாரியம் 17.11.2020 அன்று வழக்கமான சம்பிரதாய வேண்டுகோளை விடுத்துள்ளது .கொரானா பெருந்தொற்று காலத்தில் வேலைநிறுத்தம் என்பது அஞ்சல் துறையை வெகுவாக பாதிக்கும் என்பதால் வேலைநிறுத்த முடிவை கைவிடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது .ஆனால் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் கொடுத்துள்ள பதிலினை பார்த்தால் அடையாள வேலைநிறுத்தம் போதாது அழுத்தமான போராட்டம் தேவை என்பதை உணர்த்துகிறது ..

                                                  வேலைநிறுத்த விளக்க கூட்டம் 

நாள் -24.11.2020  செவ்வாய் கிழமை 

நேரம் மாலை 6 மணி 

இடம் -பாளையம்கோட்டை HO

கூட்டு தலைமை -தோழர்கள் T.அழகுமுத்து கோட்ட தலைவர் அஞ்சல் மூன்று 

                                           A.சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர் அஞ்சல் நான்கு 

                                  வேலைநிறுத்தம் வெற்றிபெற இன்றே தயாராகுவோம் .

                                                     முக்கிய செய்திகள் 

லக்ஷ்மி விலாஸ் வங்கி  காசோலைகளை CHEQUE கலெக்ஷன்க்கு  வாங்க வேண்டாம் என அஞ்சல் வாரியம் அறிவுறுத்தியு ள்ளது .ஆகவே துணை /தலைமை அஞ்சலகத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களை இதை கவண த்தில் கொண்டிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

தோழமையுடன் 

SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Monday, November 16, 2020

 

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                               26.11.2020 வேலைநிறுத்தம் வெல்லட்டும்

மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்துள்ள 26.11.2020  பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்போம் .அஞ்சல் துறையில் NFPE- FNPO மற்றும் AIGDSU சங்கங்கள் தனித்தனியாக வேலைநிறுத்த அறிவிப்பை அஞ்சல் வாரியத்திற்கு கொடுத்து பொதுவேலைநிறுத்ததோடு தங்களது பகுதி கோரிக்கைகளையம் இணைத்து போராட்ட அறிவிப்பை அறிவித்துள்ளது ..நாடு கடைபிடித்துவந்த கலப்பு பொருளாதார முறை கைவிடப்பட்டு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 1990 முதல்  கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொள்கைகளை எதிர்த்து 1991 முதல் 2020 வரை 19 பொதுவேலைநிறுத்தங்கள் நடைபெற்றுள்ளன .மத்திய அரசு துறையில் நமது அஞ்சல் துறையை தவிர வேறு எந்த துறையும் இதுபோன்ற பொதுவேலைநிறுத்ததில் முழுமையக பங்கேற்றிடவில்லை .ரயில்வே துறையில் கூட பொதுவேலைநிறுத்ததின் தடம் கூட இன்னும் பதியவில்லை .ஆகவே பொதுவேலைநிறுத்தங்களில் தொடர்ந்து முழுமையாக பங்கேற்ற பெருமை நமக்கிருந்தாலும் இந்த பொதுவேலைநிறுத்ததோடு நின்று விடாமல் நமது துறைசார்ந்த கோரிக்கைகளை முன்னெடுத்து போராடிடவேண்டும் என்று நமது சம்மேளன மற்றும் அகிலஇந்திய தலைமையை வலியுறுதுவதிலும் நமது தமிழ்மாநில சங்கம் என்றும் தயங்கியதில்லை .ஆரம்பத்தில் NFPE சம்மேளனம் மட்டுமே தனித்து போராட்டங்களை நடத்திவந்தது .அதன்பிறகு FNPO சங்கமம் இந்த பொதுவேலைநிறுத்ததில் பங்கேற்று வருகிறது .இன்று AIGDSU சங்கமும் போராட்டத்தில் பங்கேற்கிறது .இந்த பின்னணியில் 26.11.2020 பொதுவேலைநிறுத்தத்தை வெற்றிபெறச்செய்வோம் .நமது கோட்டத்தில் அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு சங்கங்களின் சார்பாக வேலைநிறுத்த சுற்றுப்பயணம் வருகிற 23.11.2020 தென்பகுதியிலும் 24.11.2020 அன்று நெல்லை மாநகர் பகுதிகளிலும் நடைபெற திட்டமிட்டுள்ளோம் .வரவிரும்புகிற தோழர்கள் கோட்ட செயலர்களிடம் தெரிவிக்கவும் .

நன்றி .போராட்ட வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                      

Thursday, November 12, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                  26.11.2020 ஒருநாள்  வேலைநிறுத்தம் --

மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுதிருக்கும் நாடுதழுவிய ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிட நமது NFPE சம்மேளனமும் அழைப்புவிடுத்திருந்தது தாங்கள் அறிந்ததே .அதனை தொடர்ந்து நமது துறையில் GDS ஊழியர்களின் AIGDSU சங்கமும் இறுதியாக FNPO சங்கமும் இந்த பொது வேலைநிறுத்தத்தில் பங்கேற்கப்போவதாக அறிவித்திருக்கிறது .12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் இந்த பொதுவேலைநிறுத்ததில் நமது அஞ்சல் பகுதியில் உள்ள  10  கோரிகைகளும்  சேர்த்து கொடுக்கப்பட்டுள்ளது.ஆகவே நமது உறுப்பினர்கள் இந்த பொதுவேலைநிறுத்தத்தில்  பங்கேற்றிடுவோம் .

                                     பொதுக்கோரிக்கைகள் 

1.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய் .கடைசிமாத  ஊதியத்தில் 50 சதம்  குறைந்தபட்ச பென்ஷன் என்பதை உறுதிப்படுத்து !

2. ஊழியர்சங்கங்களின் தகுதியை குறைக்கும் ASSOCCIATION முடிவை கைவிடு!

3.நிறுத்திவைக்கப்பட்ட பஞ்சபடியை வழங்கிடு !

4. ஆள் நியமன தடை  சட்டத்தை ரத்துசெய் !

5.அஞ்சல் பாதுகாப்பு  ரயில்வேயில் கார்ப்பரேஷன் மற்றும் தனியார் முயற்சியை கைவிடு !

6.GDS ஊழியர்களுக்கு சிவில் அந்தஸ்தை வழங்கிடு !

7.கோவிட்-19 கால விடுப்புகளை சிறப்பு விடுப்புகளாக அறிவித்திடு !

8.கருணை அடிப்படையில் வேலை வழங்குவதில் உள்ள 5 சத கட்டுப்பாட்டை நீக்கிடு !

9.5 கட்ட பதவி உயர்வினை வழங்கிடு 

10.தொழிற்சங்கத்திற்கு வழங்கப்பட்டுவந்த JCM அமைப்பை முறையாக நடத்திடு !

                                         PART -B பகுதி கோரிக்கைகள் 

1.கோவிட் -19 காலத்திற்கான சிறப்பு விடுப்பு -கொரானா பாதிப்பில் இறந்த ஊழியர் குடும்பங்களுக்கு நிவாரணமாக ரூபாய் 10 லட்சம் -குடும்ப உறுப்பினருக்கு கருணை அடிப்படையிலான வேலை வழங்கிட வேண்டும் ..ரோஸ்டர் முறையை தொடர்ந்திட வேண்டும் 

2.PSD/CSD இணைப்பு -ஒழிப்பு திட்டத்தை கைவிடு !

3.போஸ்டல் கணக்கு அலுவலர்களை Decentralization மற்றும் SBCO ஊழியர்களை PA கேடருடன் இணைக்கும் முயற்சியை கைவிடு !

4.IPPB மற்றும் ஆதார் பணிகளுக்கு கொடுக்கும் இலக்கை நிறுத்திடு !

5.Common Service Centres  திட்டத்தை நிறுத்திடு !

6.வெளியாட்களை OUTSOURCE  முறையில் பணியமர்த்தாதே !

7.தொழிற்சங்க உறுப்பினர் சரிபார்ப்பினை பழைய முறையில் நடத்திடு !

8.கமலேஷ் சந்திரா கமிட்டியில் உள்ள பயனுள்ள சிபாரிசுகளை அமுல்படுத்து !

9.கேடர் சீரமைப்பை அனைத்து பிரிவிலும் அமுல்படுத்து !

10.அஞ்சல் RMS அலுவலகங்களுக்கு வாரம் 5 நாட்கள் வேலைநாட்களாக மாற்றிடு 

அஞ்சல்  பகுதிகளில் இந்த வேலைநிறுத்தத்தை சிறப்பாக நடத்திடுவோம் .

போராட்ட வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலாளர்கள் நெல்லை 




Wednesday, November 11, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நேற்று (10.11.2020 ) நடைபெற்ற தென்மண்டல அதிகாரிகளுடனான இருமாதந்திர பேட்டியியில் நமது மாநிலசெயலர் சகோதரர் வீரமணி அவர்களும் தென்மண்டல செயலர் தோழர் .R .கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கலந்துகொண்டனர் .முன்னதாக நமது கோட்ட பிரச்சினைகள் சம்பந்தமாக குறிப்பாக திருமதி .பாப்பா  திருநெல்வேலி HO அவர்களின் இடமாறுதல் குறித்த மேல்முறையீட் டை  விரைந்து முடித்திட வலியுறுத்தினார் .நமது கோட்டத்தில் இருந்து மண்டல அலுவலகத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலில் மறைக்கப்பட்ட உண்மைகளை விளக்கமாக எடுத்துரைத்த பின் மீண்டும் AD STAFF அவர்கள் இதுகுறித்து  விரைந்து முடிவெடுக்கப்படும் என்று பதிலளித்தார்கள் .அதேபோல் LSG அக்கௌன்டன்ட் பதவிகளுக்கான கோட்ட ஒதுக்கீட்டை விரைந்து வழங்கிடவும் வலியுறுத்தப்பட்டது .மேலும் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்திற்க்கான 65 KV GENENSET மற்றும் திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் ஆண் ஊழியர்களுக்கான புதிய கழிப்பறை கட்டுவது சம்பந்தமாகவும் வலியுறுத்தப்பட்டது . நமது கோட்ட பிரச்சினைகளை மண்டல அளவில் எடுத்துச்சென்று தீர்விற்கு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுத்துவரும் நமது  மாநிலசெயலர் சகோதரர் வீரமணிமற்றும் மண்டலச்செயலர் தோழர் .R .கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும்  நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

        மீண்டும் நமது PMG அவர்களுடனான ஒரு இனிய சந்திப்பு 

BI -MONTHLY கூட்டம் முடிந்து உணவு இடைவேளைக்கு பிறகு நமது கோட்ட சங்க முன்னணி நிர்வாகிகள் தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட தலைவர் T.அழகுமுத்து மாநில சுப்ரிம் கவுன்சிலர் தோழர் C .வண்ணமுத்து மற்றும் நமது கோட்ட சங்க நிதிச்செயலர் தோழர் D.பிரபாகர் ஆகியோர் நமது PMG அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினோம் .அடுத்தடுத்து கூட்டங்கள் இருந்தாலும் அதற்கிடையில் நம்மை சந்தித்து தனது நெல்லை கோட்ட பழைய நினைவுகளை மகிழ்வோடு நினைவுகூர்ந்த நமது PMG திரு .G.நடராஜன் IPOS அவர்களுக்கு எனது தனிப்பட்ட முறையிலும் NELLAI NFPE சார்பிலும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நன்றி .தோழமையுடன் SK.ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை   

                              

Thursday, November 5, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                                 முக்கிய செய்திகள் 

*நமது தென்மண்டல தலைவருடனான (PMG ) இருமாதந்திர பேட்டி வருகிற 10.11.2020 அன்று காலை 10 மணிக்கு தென்மண்டல அலுவலகத்தில் நடைபெறுகிறது .நமது மாநில செயலாளர் மற்றும் தென்மண்டல செயலாளர் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் .

*ஆதார் பணிகளுக்கு OUTSOURCE முறையை நடைமுறைப்படுத்த அஞ்சல் வாரியம் ஏற்றுக்கொண்டுள்ளது 

*பண்டிகைக்கால முன்பணம் வழங்கிட தேவையான ப்ரீபெய்டு UTSAV கார்டு தீபாவளிக்கு முன் வழங்கிட அனைத்து DDO களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .

*SCSS கணக்குகளில் வட்டி  காலாண்டின் முதல் நாளில் (ஏப்ரல் ஜூலை அக்டோபர் ஜனவரி )  பெற்றிட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது .இது 01.11.2020 முதல் நடைமுறைக்குவருகிறது .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Wednesday, November 4, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! 

                             26.11.2020 ஒருநாள் வேலைநிறுத்தமும் -நமது மத்திய சங்க செயற்குழுவில் தமிழக அஞ்சல் மூன்றின் பங்கும் --

வருகிற 26.11.2020 அன்று மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள ஒருநாள் பொதுவேலை நிறுத்தத்தில் பங்கேற்றிட நமது சம்மேளனமும் அழைப்புவிடுத்த பின்னணியில் நேற்று 03.011.2020 அன்று காணொளி மூலம் நடைபெற்ற மத்திய சங்க செயற்குழுவில் நமது மாநிலச்சங்கத்தின் சார்பாக வெளிப்படையான கருத்துக்களை முன்வைத்து விவாதித்தது வரவேற்கத்தக்கது .நமது மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களின் கருத்துக்களில் இருந்து சில ---

இன்றைய சூழலில் தமிழக அஞ்சல் மூன்றை பொறுத்தவரை போராட்டத்தைக்கண்டு முகம் சுளிப்பவர்கள் அல்ல -பொதுக்கோரிக்கைகளையோடு நமது பகுதி (துறை ) சார்ந்த கோரிக்கைகளில் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு அடிமட்ட ஊழியர்களின் எதிர்பார்ப்பு .குறிப்பாக அஞ்சல் எழுத்தர்களின் பிரதான கோரிக்கைகளான அஞ்சல் எழுத்தர்களுக்கான உயர் ஊதியம் ,LSG ,HSG உட்பட ,ஆட்பற்றாக்குறை ,HSG II மற்றும் HSG I  பதவிகளை ONE TIME RELAXATION அடிப்படையில் நிரப்புதல் ,நெட்ஒர்க் பிரச்சினைகள் .அஞ்சல் வாரியம் கட்டவிழ்த்துவிடும் வணிக டார்ச்சர் ,ஆதார் பணிகளுக்கு நிர்ணயிக்கப்படும் இலக்குகள் என நமது எழுத்தர் பிரிவு ஊழியர்களின் பிரச்சினைகளை சொல்லிக்கொண்டே போகலாம் .இன்றைய சூழலில் தமிழகத்தில் இருக்கும் 25 சத கோட்ட /கிளை செயலர்கள் இந்த பொது வேலைநிறுத்தம் குறித்து பல்வேறு வினாக்களை கேட்கத்தொடங்கிவிட்டார்கள். தங்களது பகுதி கோரிக்கைகளை முன்னிறுத்தி சம்மேளனம் /மத்திய சங்கங்கள் செய்தது என்ன என்று விவாதிக்க தொடங்கியிருக்கிறார்கள் .மேலும் வேலைநிறுத்த பாதிப்புகளில் ஒன்றான MACP பதவி உயர்வின் போது தங்களது ஆண்டு ஊதிய உயர்வை ஜூலையில் இருந்து ஜனவரிக்கு மாற்றிய தோழர்களுக்கு 2017 வேலைநிறுத்ததினால் ஏற்பட்ட  பாதிப்புகள் அதிகம் .இன்றும்கூட சமீபத்தில் MACP வாங்கிய தோழர்கள் தங்கள் ஆண்டு ஊதிய உயர்வினை ஜனவரிக்கு மாற்ற OPTION கொடுத்தவர்களுக்கு ஒருநாள் சம்பள பிடிப்போடு நிற்கப்போவதில்லை மாறாக ஆண்டு ஊதிய உயர்வும் தள்ளிப்போகும்  .இருந்தாலும் நாங்கள் மத்திய தொழிற்சங்க பொதுவேலைநிறுத்தத்திற்கு எதிரானவர்கள் அல்ல என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

1991 முதல் தொடங்கிய இந்த பொதுவேலைநிறுத்தம் இன்று 19 வது வேலைநிறுத்தமாகும் .இதில் நமது NFPE சம்மேளனமும் முழுமையாக பங்கேற்றுவருகிறது .பொருளாதாரா கோரிக்கைகளில் நேரடி பாதிப்புகள் மற்றும் .இன்றைய ஆட்சியாளர்களின் தொழிலாளர் நல விரோத சட்டங்களுக்கு எதிராக மத்திய அரசு ஊழியர்களில் இன்று போராடிக்கொண்டிருக்கும் துறைகளில்  நமது அஞ்சல் துறையின்  பங்கு  முக்கியமானது -அஞ்சலிலும் NFPE யின் பங்களிப்பு என்பதும் பெரிதானது .பொதுவேலைநிறுத்ததோடு இணைத்து நமது பகுதிவாரியான கோரிக்கைளை முன்வைத்து போராடுவதால் எந்தளவிற்கு நமது கோரிக்கைகளின் மீது அரசின் கவனம் திரும்பும் என்ற ஒரு சராசரி உறுப்பினரின் கேள்விகளுக்கு பதில்சொல்ல வேண்டிய பொறுப்பும் நமக்கிருக்கிறது .வங்கிகள் தங்கள் கோரிக்கைகளுக்குகாக மட்டுமே எத்தனை போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது .நமது வரலாறு 1993 ,1998, 2000 .2008 என்று நிற்கப்போகிறதா ? நமது துறைசார்ந்த கோரிகளுக்காக போராட இன்றும் ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள் ..என்றும் ஊழியர்கள் தயாராக இருக்கிறார்கள் ..ஊழியர்களின் நியாமான கோரிக்கையில் இருக்கும் உண்மையை எடுத்துசசொல்லுவோம் ..

போராட்டங்கள் வெல்லட்டும் --வெல்லட்டும் 

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, November 3, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

*நமது கோட்ட சங்க பிரச்சினைகளை உடனுக்குடன் மண்டல /மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்கின்ற மாநில சங்கத்திற்கு குறிப்பாக மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்று மட்டும் மூன்று கடிதங்கள் நமது கோட்ட பிரச்சினைகள் குறித்து எழுதப்பட்ட கடிதங்களை உங்கள் பார்வைக்கு தந்திருக்கிறோம் .

*நேற்று நமது கோட்ட அலுவலகத்தால் வெளியிடப்பட்ட LSG இடமாறுதல்களில் ஊழியர்களின் விருப்பங்களின் அடிப்படையில் இடமாறுதல்கள் தந்திட்ட கோட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .பதவி உயர்வு பெற்று செல்கின்ற அனைத்து தோழர்களையும் /தோழியர்களையும் NELLAI NFPE வாழ்த்துகிறது ..LSG இடமாறுதல்களினால் ஏற்பட்டிற்குக்கும் இடங்களுக்கு உடனே T/S ஊழியர்களை விருப்பத்தின் அடிப்படையில் பணியாற்றிட அனுமதிக்கவேண்டும் என் நேற்று நமது ASP(HOS ) அவர்களை சந்தித்து கேட்டுள்ளோம் .இன்று அதற்கான உத்தரவுகள் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள் .

*நமது கோட்ட சங்க உறுப்பினர் தோழியர் JAB .மேரி PA மேலப்பாளையம் அவர்க்ளின் கணவர் திரு .கிறிஸ்டோபர் (இந்தியன் வங்கி) அவர்க்ளின் இசை பயணத்தை ஆதரிப்போம் .அவர்களின்  இசையினை கேட்க  

https://www.youtube.com/channel/UCWhEYsNhbuWHNKH3xSLCalw என்ற YOUTUBE சேனலுக்கு SUBSCRIBE செய்து ஆதரவு தந்திடுவோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Monday, November 2, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே !வணக்கம் .

                                                           முக்கிய செய்திகள் 

*நமது கோட்டத்தின் புதிய SSP ஆக (கூடுதல் பொறுப்பு ) திரு .K .லட்சுமணன் SSPOS மதுரை அவர்கள் கடந்த 29.10.2020 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்கள் .அவர்களை மீண்டும் NELLAI NFPE சார்பாக வாழ்த்திவரவேற்கிறோம் .

*இன்று நமது கோட்டத்திற்கு தென்மண்டல இயக்குனர் அவர்கள் வருகை தருகிறார்கள் .

*LSG RE-ALLOTMENT கிடைத்த ஊழியர்களுக்கான இடமாறுதல் உத்தரவுகள் இன்று வெளியாகிறது .விருப்பம் தெரிவிக்காத இரண்டு ஊழியர்களை தவிர அனைவருக்கும் அவர்களின் விருப்ப இடங்களில் ஒன்று கிடைத்திருக்கிறது 

*நமது நெல்லை கோட்டத்தில் ஓய்வூதியர்களின் தாய் அமைப்பான நமது தொழிற்சங்க ஆசான் திரு .M.பேச்சிமுத்து அவர்கள் நடத்திவந்த மத்தியஅரசு ஓய்வூதியர்கள் சங்கம் நேற்று தேசிய அஞ்சல் RMS ஓய்வூதியர் முன்னணி என்ற அமைப்போடு இணைக்கப்பட்டு ஒன்றுபட்ட இயக்கமாக செயல்பட தொடங்கியிருப்பது மகிழ்ச்சியான ஒன்று .வெளியில் இருந்தோ அல்லது மேலோட்டமாக பார்த்தால்  ஏதோஇருக்கின்ற சங்கத்தை உடைத்துவிட்டார்களோ என எண்ண தோன்றும் அதுவல்ல உண்மை .ஏற்கனவே ஆறு ஆண்டுகளுக்கு முன் உடைக்கப்பட்ட சங்கத்தை நாம் மீண்டும் இணைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்  அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு NELLAI NFPE தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு நிச்சயம் ஓய்வூதியர்களின் பிரச்சினைகளை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்ல நாங்களும் துணைநிற்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

அன்பார்ந்த  ஓய்வூதியர்களே ! வணக்கம் .

நெல்லை கோட்ட தேசிய அஞ்சல்  ஆர் .எம் .எஸ் ஓய்வூதியர்கள் முன்னனி (NATIONAL FRONT OF POSTAL RMS  PENSIONERS ) துவக்கம் .

அஞ்சல் RMS ஓய்வூதியர்கள் மற்றும் குடும்பஒய்வூதியர்க்ளுக்கான NFPRP எனும் புதிய அமைப்பு நேற்று நெல்லையில் தொடங்கப்பட்டது .இந்த அமைப்பு ஏதோ புதிய அமைப்போ அல்லது வேறு எந்த அமைப்பிற்கோ போட்டியாக துவங்கப்பட்டதல்ல .ஏற்கனவே நெல்லையில் நம்முடைய ஆசான் தோழர் M .பேச்சிமுத்து அவர்கள் தலைமையில் இயங்கி வந்த ஓய்வூதியர் சங்கமான மத்திய அரசு ஊழியர்கள் அமைப்பு நம்மோடு இணைக்கப்பட்டு அனைவரையும் ஒரு குடையின் கீழ் அரசியல் கேடர் வேறுபாடுகளைக்கடந்து தொழிற்சங்கத்தில் அணிசாரா கொள்கையான நடுநிலையாளர்களின் கொள்கைவழி நடக்கின்ற பேரமைப்பாகும் என்பதை நமது தோழர்கள் புரிந்துகொள்ளவேண்டும் .நேற்றைய துவக்க நாளிலே பெருமைப்பாண்மை தோழர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் .

                                        NELLAI NFPRP புதிய நிர்வாகிகள் 

தலைவர் .தோழர் A.ஆதிமூலம் 

உதவி தலைவர்கள் -A.ராமசுந்தரம் (RMS)-O.மூக்கையா -R.நடராஜன் M.கலிய பெருமாள் E.சுப்ரமணியன் (RMS) I.மகாராஜன் 

கன்வீனர் --KG.குருசாமி (PRIP ---RETD )

துணைகன்வீனர்கள்  -T.சுடலையாண்டி A.அமிர்தராஜ் -S .நமச்சிவாயம் (RMS)

பொருளாளர் -SK .பாட்சா 

உதவி பொருளாளர் -A.அந்தோணி 

நிர்வாக குழு உறுப்பினர்கள் -S.முருகன் V.சீனிவாசன் M.அந்தோணி சாமி E.மாணிக்க வாசகம் (RMS) PK .சுடலைக்கண்ணு A.பிரான்சிஸ் சேவியர் A.நீல்வின் M.பேச்சியப்பன் 

மகிளா கமிட்டி -கன்வீனர் -கிரேஸ் எலிசபெத் 

தலைமை ஆலோசகர் -தோழர் SN .சுப்பையா (RMS)

கவுரவ ஆலோசகர்கள் -தோழர்கள் S.சௌந்தரபாண்டியன் T.வெங்கட்ராமன் S.முத்துகிருஷ்ணன் 

                                                             தீர்மானங்கள் 

1.நெல்லை கோட்டத்தின் ஒருங்கினைந்த மாநாடு வருகிற ஜனவரியில் நடத்துவது 

2.மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டிற்கு திரளாக பங்கேற்பது 

3.ஓய்வூதியர்களுக்கு பண்டிகைக்கால முன்பணம் /LTC வசதிகள் அறிமுகப்படுத்தவேண்டும் 

4.ஓய்வூதியர்கள் /குடும்ப ஓய்வூதியர்களை CGHS திட்டத்தில் இணைப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது 

5.நிறுத்தி வைக்கப்பட்ட பஞ்சபடியை உடனே வழங்கிட வேண்டும் 

6..ஓய்வுபெற்ற தபால்காரர்கள் பிரச்சினைகளான 3050 அடிப்படை ஊதியத்தில் இன்னும் நிலுவைத்தொகை கிடைக்காதவர்களுக்காக மீண்டும் இயக்கங்களை நடத்துவது -அதேபோல் ஓய்வுபெற்ற GDS ஊழியர்களுக்கும் 01.01.2016 முதல் உயர்த்தப்பட்ட பணிக்கொடையினை விரைந்து வழங்கிட முயற்சிகள் எடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .புதிய உறுப்பினர்களை சேர்ப்பதில் அதிககவனம் கொண்டு மேற்கொண்டு எங்களோடு ஒத்துழைக்க உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் KG.குருசாமி  கன்வீனர் NFPRP-நெல்லை 




Wednesday, October 28, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

 நமது நெல்லை கோட்ட கண்காணிப்பாளர் திரு .S .கலைச்செல்வன் அவர்கள் இந்தமாதம் பணிஓய்வு பெறுகிறார்கள் .அவர்களுக்கு NELLAI -NFPE சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் .நமக்கு புதிய கண்காணிப்பாளர் திரு .L .துரைசாமி அவர்கள் வரும்வரை மதுரை கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் நம் கோட்டத்திற்கு மிகவும் பரிச்சயமானவர் திரு .K .லட்சுமணன் அவர்கள் கூடுதல் பொறுப்பேற்கிறார் .திரு KL .அவர்களை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம் .

*வருமானவரி தாக்கல் செய்ய கடைசி தேதி 31.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 

*போஸ்டல் ஆர்டர் கிளை அஞ்சலகங்கள் மூலம் விற்பனைசெய்வதற்கான வழிவகைகள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் இயக்குனரகம் கருத்துக்களை கேட்டுள்ளது ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, October 27, 2020

   அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நமது மத்திய சங்கத்தின் செயற்குழு வருகிற 03.11.2020 அன்று காணொளி காட்சி மூலம் நடைபெறுகிறது .இதில் முக்கிய பொருளாக 26.11.2020 அன்று நடைபெறும் பொது வேலைநிறுத்தம் குறித்து விவாதிக்கப்படுகிறது .ஒரே கோரிக்கைகளை வைத்து போராடினால் தான் அரசின் கவனம் நம் கோரிக்கைகளின் மேல் திரும்பும் .ஆனால் சமீபகாலமாக அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் எதிர்க்கட்சிகள் எந்த தேதியில் போராடுகிறதோ அதே தேதியை நமது சம்மேளனமும் தேர்ந்தெடுத்து பொதுக்கோரிக்கைகளை    PART -A என்றும் நமது  துறை சார்ந்த கோரிக்கைகளை PART -B எனவும் கொடுத்து போராடுகிறார்கள் .PART -A கோரிக்கைகளில் வழக்கம் போல் விலைவாசி அனைவருக்கும் ரேஷன் என்பதுடன்    இந்தாண்டு பஞ்சப்படி நிறுத்தம்     FR 56((j) & (i)     MACP க்கன பெஞ்சுமார்க் புதியபென்ஷன் ரத்து என்ற கோரிக்கைகளும் PART -B பிரிவில்(அஞ்சல் பகுதி ) கோவிட் கால சிறப்பு விடுப்பு      கமலேஷ் சந்திரா கமிட்டி வாரம் 5 நாட்கள் வேலை    CSC என நினைவில்   தோன்றியவைகளை கோரிக்கைகளாகவும்  வைத்துள்ளனர் .நமது மத்திய சங்க செயற்குழுவில் எத்தனை மாநில செயலர்கள் இந்த   பொதுவேலைநிறுத்ததில்  பங்கேற்க ஆதரவு தெரிவிக்கப்போகிறார்கள் எத்தனை மாநிலங்கள்    கூட்டத்தில் ஆதரவும்    மாநிலத்தில் மவுனமும் காக்க போகிறார்கள் என்று தெரியவில்லை .1991 முதல் நாம் இந்த பொது வேலைநிறுத்தங்களில்  பங்கேற்று வந்திருந்தாலும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில மாநிலங்களில் மட்டுமேஅஞ்சல் துறையில் இந்த பொதுவேலைநிறுத்தங்களில் ஊழியர்கள்  இறக்கப்படுகிறார்கள் என்பதும் மத்தியஅரசு துறைகளில் நமது அஞ்சல் துறையை தவிர ஏனைய துறைகளில் இந்த போராட்டம் குறித்த செய்திகள் கூட ஊழியர்களிடம் கொண்டுசெல்லப்படுவதில்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை .மத்திய   அரசு ஊழியர்கள்   மகா சம்மேளன அகிலஇந்திய -மாநில நிர்வாகிகள் பலபேர் ஓய்வுபெற்ற ஊழியர்கள் என்பதும்  வேறு விஷயம் .ஆரம்ப நாட்களில் நமது நாட்டில் கடைபிடிக்கப்பட்டுவந்த கலப்புபொருளாதார கொளகை கைவிடப்பட்டு காங்கிரஸ் காலத்தில் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார கொளகைகளை கண்டித்து வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன .நாளடவையில் ஊழியர்களிடம் ஆண்டுக்கொருமுறை வழக்கமான வேலைநிறுத்தம் என்கின்ற சலிப்பை புரிந்துகொண்ட  சங்கங்கள் இடைச்செருகலாக பகுதி கோரிக்கைகள் என பிரித்து ஊழியர்களை மிகவும் சிரமத்தின் நடுவே போராட்டத்தில் இறக்கிவிட்டார்கள் .அதிலும் பல கோட்டங்களில் இந்த பொதுவேலைநிறுத்தங்கள் குறித்து கோட்டமட்டத்தில் செயற்குழு /பொதுக்குழு முடிவுகளின் அடிப்படையிலும் போராட்டத்தில் பங்கேற்கவா  /வெளியில் இருந்து ஆதரிக்கவா என இருவேறு நிலைகளை எடுக்க தொடங்கினார்கள் .தமிழகத்தை பொறுத்தவரை ஊழியர்கள் போராட்டத்திற்கு சளைத்தவர்கள் அல்ல ..ஆனால் நமது துறைசார்ந்த கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் இதுபோன்ற பொது வேலைநிறுத்தத்தில் மட்டுமே பங்கேற்பது சர்மரோகநிவாரணம் என்பதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் சிந்திக்க தொடங்கியுள்ளார்கள் .ஆகவே மத்திய செயற்குழுவில் நமது தமிழகத்தின் குரல் ஊழியர்களின் உண்மை நிலையை எடுத்துரைக்கவேண்டும் என்பதே ஒரு சாதாரண சராசரி ஊழியர்களின் எண்ணம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Saturday, October 24, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                 தென்மண்டல தலைவருடன் ஒரு சந்திப்பு 

நேற்று மதியம் 2.30 மணியளவில் நமது கோட்ட பிரச்சினை சம்பந்தமாக நமது தென்மண்டல செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களலோடு நமது PMG திரு .நடராஜன் அவர்களை சந்தித்து பேசினோம் .நமது கோரிக்கைகளை மிகவும் பொறுமையோடும் கனிவோடும் கேட்டறிந்து ஆவண செய்வதாக உறுதியளித்தார்கள் .சந்திப்பின் இடையிலேயே நமது PMG அவர்கள் 2006 ஆம் ஆண்டு நமது திருநெல்வேலி கோட்டத்தில் பணியாற்றியபோது அந்த பழையநாட்களை நினைவு கூர்ந்து பேசினார்கள் .ஒரு நாள் இடைவெளியில் நமது PMG அவர்களை சந்திக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட்ட நமது மண்டல செயலர் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .நேற்று என்னோடு உடன்வந்த நமது கோட்ட நிதிச்செயலர் பிராபாகரன் அவர்களுக்கும் நன்றி ....

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, October 23, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

   போனஸ் உத்தரவு வந்துவிட்டது .இலாகா ஊழியர்களை போல நமதருமை GDS ஊழியர்களுக்கும் சேர்த்து ஒரே நாளில் உத்தரவு வந்துவிட்டது .வழக்கம் போலவே வெற்றியை பங்குபோட்டு கொள்ள மற்ற சங்கங்களும் போனஸ் தங்களால் தான் வந்ததாக தம்பட்டம் அடிக்க தொடங்கிவிட்டார்கள் .ஆனால் போனஸ் உத்தரவிற்குள்ளும் ஒரு நியாயமான நமது கோரிக்கை புதைந்துகிடக்கிறது அல்லது புதைக்கபட்டுக்கொண்டிருக்கிறது .ஆம் அதுதான் போனஸ் பார்முலாவை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை ...கடந்த சில வருடங்களாக தீபாவளி நெருங்கும் வேளையில் ஒவ்வொருஆண்டும் போனஸ் பார்முலாவை மாற்ற கோரி கடிதங்கள் கொடுப்பதுண்டு .ஆனால் இந்தாண்டு போனஸ் கிடைத்தாலே போதும் என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டதும் துரதிஷ்ட்டமான ஒன்று .இன்னும் எத்தனை வருடங்களுக்கு ADHOC போனஸ் என்று 60 நாட்களோடு திருத்தியாவது ? போனஸ் கணக்கீட்டு முறை சரிதானா அதை தொழிற்சங்கங்களுக்கு வழங்கவேண்டும் கணக்கீட்டில் மாற்றம் வேண்டும் என தோழர் RAP .சிங் அவர்கள் பொதுச்செயலாராக இருந்த காலத்தில் தொடங்கி அதனை தொடர்ந்து நம்முடைய தலைவர் அண்ணன் KVS அவர்கள் பொதுச்செயலராக இருந்த காலங்களிலும் வலியுறுத்தப்பட்டது . அதன் பின் ஏனோ இந்த  கோரிக்கையை வலியுறுத்தக்கூட  தயங்குவது ஏன் என்று தெரியவில்லை . கொடுத்தாலே போதும் என்றும் கிடைத்தால் லாபம் என்றும் இருக்கின்ற மனநிலைகளை மாற்றி போனஸ் கணக்கீட்டை மாற்றவேண்டும் என்ற நமது நியாயமான கோரிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க நமது தமிழ் மாநிலச்சங்கம் இந்த பிரச்சினையிலும் முன்கையெடுத்து மத்திய /சம்மேளன அளவிற்கு கொண்டு செல்லவேண்டும் ....

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, October 22, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

மாநில சங்கத்திற்கு குறிப்பாக மாநில செயலர் சகோதரர் வீரமணி அவர்களுக்கு நன்றி !நன்றி ! நமது கோட்ட செயல் தலைவர் N .கண்ணன் அவர்கள் HRA பிரச்சினையை மீண்டும் CPMG அளவில் எடுத்து இன்று CPMG அலுவகத்தில் இருந்து நமது தென்மண்டல அலுவகத்திற்கு விளக்கம் கேட்டு வந்துள்ளது .இந்த பிரச்சினையில் நிர்வாகம் முடியாது என மறுத்தத்தையும் மீண்டும் REOPEN செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது .

LSG  பதவிஉயர்வில் வெளி கோட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நமது தோழர்கள் மீண்டும் மறு ஒதுக்கீட்டில் நமது நெல்லைக்கோட்டத்திற்கே ஒதிக்கீடு பெற்றுள்ளார்கள் .அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .மறு ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றவர்கள் இன்றே தங்களது விருப்ப மனுக்களை கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கவும் ..

நமது கோட்ட SSP ஆக திரு .L.துரைசாமி அவர்கள் பொறுப்பேற்கவிருக்கிறார்கள் .1992-1993 காலகட்டத்தில் வள்ளியூர் உப கோட்ட அலுவகத்தில் ஆய்வாளாராக ,மதுரை பயிற்சி மையத்தில் ஆற்றல்மிகு பயிற்றுனராக தென்மண்டல அலுவாக்கத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் .அவர்களின் சேவை நெல்லையில் சிறக்க வாழ்த்துகிறோம் !வரவேற்கிறோம் !

HSG I மற்றும் HSG II  பதவிகளில் LOCAL ARRANGEMENT  குறித்து கோட்ட நிர்வாகம் வழங்கியுள்ள வழிகாட்டுதல் உத்தரவிற்கு நன்றி !நன்றி .தேவையில்லாமல் மூத்த தோழர் /தோழியர்களுக்கு இடையூறு செய்திட நடந்த முயற்சிகள் இத்துடன் முடிவுக்கு வந்துள்ளது .

போனஸ் உத்தரவுகள் வந்துவிட்டன ..ரயில்வே பாதுகாப்பு மற்றும் மத்தியஅரசு ஊழியர்கள் மகா சம்மேளனங்களின் போராட்ட மிரட்டலுக்கு பிறகுதான் இந்த அறிவிப்புகள் வந்துள்ளது என்பது உண்மை .நாடு முழுவதும் ஊழியர்களை திரட்டி ஊழியர்களிடையே நமது கோரிக்கையின் மீதான நியாயங்களை விளக்கி இமயம் முதல் குமரி வரை மத்தியஅரசு ஊழியர்களின் போராட்ட உணர்வை கூர்படுத்தி அதன்மூலம் மத்திய அரசுக்கு ஒருநெருக்கடிகளை தந்தபின் தான் போனஸ் கொடுக்க அரசு இசைந்துள்ளது என்பதனை நினைவில் கொள்ளுவோம் .தானாய் எல்லாம் மாறும் என்பதெல்லாம் பழைய பொய்யடா என்ற பாடல் வரிகள் நினைவிற்கு வருகிறது ..

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Sunday, October 18, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே!

                  அஞ்சல் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிட வேண்டி ஆர்ப்பாட்டம் 

நாள் --20.10.2020 செவ்வாய்   நேரம் மாலை 6.மணி 

இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் (PSD வாயில் )

அஞ்சல் மூன்று அஞ்சல் நான்கு மற்றும் GDS ஊழியர்கள் சங்கங்கள் இணைந்து நடத்தும் ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம் .ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நாம் ஏற்கனேவே அறிவித்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் .

இதுபோன்ற ஊழியர்களை நேரிடையாக பாதிக்கின்ற விசயங்களில் நம்மை தவிர வேறு எவரும்  போராட்டத்தை முன்னெடுக்கப்போவதில்லை.நாம் போராடுவது நமக்கு மட்டுமல்ல நம்மை  சுற்றியுள்ள அனைவருக்கும் சேர்த்துதான் என்பதும் மறுக்கமுடியாத உண்மை .அதே போல் போனஸ் குறித்தும் ஒரு நீண்ட நெடிய வீரம் செறிந்த வரலாறு நமக்கு உண்டு .நமது மகா சம்மேளனமும் போனஸ் குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் அரசு தனது முடிவை அறிவிக்காவிட்டால் ஒரு வேலைநிறுத்தத்திற்கு செல்ல நாம் தயாராக இருக்கவேண்டும் என்றும் ரயில்வே தொழிற்சங்கங்களும் போனஸ் அறிவிக்காவிட்டால் நேரடி தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்குவதாக அறிவித்துள்ளது .

---------------------------------------------------------------------------------------------------------------------

பஞ்சப்படி உயருமா ? கிடைக்குமா ?என கடந்த இருதினங்களாக பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன .அதாவது பஞ்சப்படி கணக்கீடு என்பதன் அடிப்படை வருடம் 2016 என மாற்றப்பட்டு அன்று 100 புள்ளி இருந்ததாக கருதப்பட்டு உயர்வு ஏற்படும் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்படும் என அதற்கான கமிட்டி தனது முடிவை அறிவிக்கவுள்ளது  .தற்சமயம் நமக்கு 2001 ஆண்டு அடிப்படை வருடத்தை  கணக்கிட்டு பஞ்சப்படி வழங்கப்பட்டு வருகிறது .மேலோட்டமாக பார்த்தால் பஞ்சப்படி உயர்வு 2016 ஆண்டின் அடிப்படையில் இருந்தால் உயரத்தான் செய்யும் ஆனால் ஏற்கனவே உள்ள நுகர்பொருளில் சிலவற்றை நீக்க மத்தியஅரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது .அதில் தான் நமக்கு அச்சமும் ஆபத்தும் தெரிகிறது .பழைய அடிப்படையில் நுகர்வோர் குறீயீட்டை  நிர்ணயிக்க லக்னோ மற்றும் கொல்கத்தாவில்  செயல்பட்டுவரும் ஆய்வு மையங்கள் அந்த கணக்கெடுப்பை செய்துவருகிறது .தற்சமயம் INDUSTRIYAL மற்றும் அரசு ஊழியர்க்ளுக்கு முறையே 3 மற்றும் 6 மாதங்களுக்கு ஒருமுறை நுகர்வோர் விலை குறீயீட்டின் அடிப்படையில் பஞ்சப்படி வழங்கப்பட்டுவருகிறது .அதில் நுகர் பொருளாக இருக்கும் சில பொருள்களில் மாற்றம் செய்துவிட அரசு முனைந்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன .ஆகவே பஞ்சப்படி தொடர்ந்து நமக்கு கூடுதலாக கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஊழியர்களுக்கு  போக்கவேண்டும் .ஆக நேற்றைய பத்திரிக்கை செய்திகள் ஏதோ முடக்கப்பட்ட பஞ்சபடியை அரசு முன் வந்து தருவதாக தவறுதலாக நினைத்துக்கொள்ளவேண்டாம் .சீர்திருத்தம் என்றாலே சீரழிவு என்று மற்றொரு பொருள் அதற்கு உண்டு என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது .

தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Saturday, October 17, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே 

                                  நமது கோட்டத்திலும் CSC (COMMON SERVICE CENTRES )  வந்துவிட்டது .ஆரம்பத்தில் தலைமை அஞ்சலகத்தில் மட்டுமே செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட CSC இன்று LSG  க்கு மேலான அனைத்து அலுவலகங்களிலும் செயல்படவிருக்கிறது .அனைத்து e -governance சேவைகளையும் கிராம புற மற்றும் remote பகுதிகளில் வசிப்பவர்களுக்கு நாம் இந்த சேவையை நடத்தவேண்டும் ..அதற்காக நமது கோட்டத்தில் இன்று சுமார் 50 ஊழியர்களுக்கு மேல் இரண்டுமணிநேரம் google meet மூலம் பயிற்சிகள் கொடுக்கப்படுகிது .மேலும் சிலருக்கு திங்களன்று பயிற்சிகள் நடைபெறுகிறது அனைத்துவகையான recharge தொடங்கி சுமார் 30 கும் மேற்பட்ட சேவைகளை நாம் செய்யவிருக்கிறோம் ..ஏற்கனவே ஆதார் பணிகளில் மற்ற துறைகளைவிட நாம் இழுத்துபிடிதுசெய்து  வருகிறோம் .அதேபோல் தங்கப்பத்திரம் விற்பனையும் நாம் அதிகளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் .ஒருகிராம் விற்றால் நமது துறைக்கு கிடைப்பதோ  50 ரூபாய் கமிஷன் .ஆனால் நாம் அதையும் தாண்டி பணியாற்றி கொண்டிருக்கிறோம் இருக்கிற அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்த முடியாமல் மேலும் மேலும் ஊழியர்கள் மீது சுமைகளை சுமத்திடவே இலாகா துடிக்கிறது .அகிலஇந்திய அளவில் அனைத்து சங்கங்களுக்கும் கடிதங்கள் எழுதி மட்டுமே  தங்கள் எதிர்ப்பை ?காட்டி வருகிறது .அஞ்சல் துறையின் முதன்மை சேவைகள் எங்கோ இன்று இவைகளை வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கிறது ........சிந்திக்கவேண்டிய தருணம் ..அஞ்சலக பகுதிக்கோரிக்கைகள் மீதான கவனத்தை நமது அகிலஇந்திய /சம்மேளனங்கள் கவனத்திற்கு கொண்டுசெல்லவேண்டியதும் நமது கடமை .ஆண்டிற்கொருமுறை அதுவும் பொதுவேலைநிறுத்ததில் மட்டுமே ஊழியர்களை இறக்கிவிட்டு மற்றவிஷயங்களில் தீவிரம் காட்டாமல் இருப்பது ஏற்புடையதல்ல ....

வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, October 16, 2020

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

மத்தியஅரசு ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய போனஸ் தொகையினை  பூஜா தொடங்குவதற்குள் வழங்கிடவேண்டும் என்றும் முன்னதாக இந்த நடைமுறைகள் அனைத்து ஆண்டுகளிலும் கடைபிடிக்கப்பட்டது என்று நமது மத்தியஅரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் மீண்டும் அரசை வலியுறுத்தியுள்ளது இதனிடையே போனஸ் குறித்த கோப்புகள் அஞ்சல் வாரியத்திடமிருந்து நிதியமைச்சக ஒப்புதலுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன 

----------------------------------------------------------------------------------------------------------------------

பண்டிகை முன்பணம்....

பண அட்டை சலுகைகள்....

மத்திய அரசு ஊழியர்களுக்கு...!😌

"பொருளாதாரத்தை முடுக்கி விடும் விதமாக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவதாக" நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார் !

⚡பொருளாதாரம் இயங்க வேண்டும் என்றால் நுகர்வோர் (மக்கள்) கையில் பணம் இருக்க வேண்டும் என்பதை நிதியமைச்சர் ஒத்துக்கிட்டாரா என்ன ?

⚡நிதியமைச்சர் அறிவிப்பின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் கையில் ரூ 9675 கோடி பணம்.... 

செலவழிக்கக் கிடைக்கும்.

⚡ஆனால்.....

இதே நிதியமைச்சர் தான்.... ஊழியர்களின் பஞ்சப்படியாக சம்பளத்தில் தரவேண்டிய 

ரூ.37,530 கோடியை தராமல் பிடித்து வைத்திருக்கிறார் 

நன்றி தோழமை வாழ்த்துக்களுடன் SK ஜேக்கப் ராஜ் -Tபுஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Thursday, October 15, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                             கூட்டு பொதுக்குழு கூட்டம் 

நாள் -20.10.2020 செவ்வாய் கிழமை  நேரம் மாலை 6 மணி 

இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

கூட்டுதலைமை --தோழர் T .அழகுமுத்து கோட்ட தலைவர் P 3  தோழர் A .சீனிவாச சொக்கலிங்கம் தலைவர் P -4 

பொருள் --1.நமது தபால்தந்தி சம்மேளனத்தின் தந்தை தோழர் பாபுதா ராபாதா -அவர்களின் லாகூர் மாநாட்டு உரை -நூற்றாண்டு துவக்க விழா -கருத்துரை 

                ---2.தமிழக அஞ்சல் மூன்றில் 19 ஆண்டுகளாக மாநில செயலராக பணியாற்றிய மறைந்த தோழர் பாலு அவர்களின் 5 -ம் ஆண்டு நினைவேந்தல் 

             --- 3.அஞ்சல் மூன்றின் கோட்ட செயலர் தோழர் SK .ஜேக்கப் ராஜ் அவர்களின் கவிதை நூல் வெளியிடு 

         ----4.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் ) அனைவரும் வருக !

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, October 14, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                                                 நம்மை  விடாது GST ?

SPECIAL FESTIVEL  PACKAGE குறித்து 12.10.2020 தேதியிட்ட உத்தரவிற்கு 13.10.2020 அன்று (SOP _எனும் விளக்க ஆணையை அதே அமைச்சகம் வெளியிட்டுள்ளது .அதன்படி பண்டிகை கால முன் பணம் விண்ணப்பிக்கிறவர்களுக்கு SBI மூலம் ரூபாய் 10000 க்கான UTSAV ப்ரீபெய்ட் கார்டு வழங்கப்படும் .இந்த ப்ரீபெய்ட் கார்டு 2021 மார்ச் வரை பயன்படுத்தமுடியும் .எல்லா பரிவர்தனைகளுக்கும் NOMINAL சார்ஜ் + GST வசூலிக்கப்படும் .எங்கே சுற்றினாலும் GST யி டமிருந்து மட்டும் நாம் தப்பிக்கமுடியாது .சம்பளம் வாங்கினால் வருமானவரி தொழில்வரி இன்று மேலும் GST .......?

 பஞ்சப்படி முடக்கம் கடந்த 01.01.2020 முதல் அமுலில் உள்ளது .இதற்குள் இரண்டு DA பெற்றிருப்போம் .தசரா பண்டிகை நெருங்குகிறது வழக்கமாக வந்துசேரவேண்டிய போனஸ் குறித்து மூச்சும் இல்லை பேச்சும் இல்லை நமது சம்மேளனமும் மகா சம்மேளனமும் நவம்பரில் நடக்கவிருக்கும் பொதுவேலைநிறுத்ததில் தான் முனைப்பாக இருக்கிறார்களே தவிர போனஸ் குறித்து  எந்த நடவடிக்கைகளையும் தீவீரமாக எடுத்திடவில்லை .இப்படி நேரடியாக ஊழியர்களை பாதிக்கும் பிரச்சினைகளிலாவது நமது சம்மேளனம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே எங்களது விருப்பம் .போனஸ் குறித்து பழம்பெருமை பேசியது போதும் .(ALL FOR BONUS -NONE FOR BONUS இந்த விவாதங்கள் நமது அமைப்பை பலப்படுத்தின ...ஆனால் இன்றோ கொடுத்தால் வாங்கிக்கொள்வோம் என்ற நிலையில் நாம் தள்ளப்பட்டிருக்கிறோமா ?என சுயபரிசோதனை அவசியம் ....

தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Tuesday, October 13, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! முக்கிய செய்திகள் 

                                     பண்டிகை முன்பணம் --ரூபாய் 10000

கடந்த ஊதியக்குழுவில் நீக்கப்பட்ட பல்வேறு முன் பணங்களில் பண்டிகைக்கால முன்பணமும் ஒன்று .ஒரு பத்து மாத தவனையோடு வட்டியில்லாமல் வழங்கப்பட்ட இந்த முன்பணம் என்ன காரணத்தினாலோ நீக்கப்பட்டது .இப்பொழுது நேற்று மத்திய நிதியமைச்சகதின் கீழ் இயங்கும் DEPARTMENT OF EXPENDITURE 12.10.2020 தேதியிட்ட உத்தரவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு SPECIAL FESTIVAL PACKAGE எனும் திட்டத்தை அறிவித்துள்ளது அதன்படி முக்கிய பண்டிகைகளுக்கு இந்த PACKAGE மார்ச் 2021 வரை வழங்கப்படும் வழங்கப்படும் தொகை ரூபாய் 10000 பிடிக்கப்படும் அதிகப்பட்ச தவணை 10.இந்தாண்டு தீபாவளிக்கு பெற்றுக்கொள்ளலாம் .

                                                      LTC SPECIAL CASH  PACKAGE 

கொரானா காலத்தில் LTC சலுகைகளை பெறமுடியாதவர்களுக்கு S PECIAL CASH  PACKAGE  திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ரயில் பயணம் தகுதியுள்ளவர்களுக்கு குடும்பத்தில் ஒருநபருக்கு ரூபாய் 6000 எகனாமிக் AIR தகுதியுள்ளவர்க்ளுக்கு ரூபாய் 20000 அடுத்தநிலை ரூபாய் 36000 (அதிகாரிகளுக்கு )  கிடைக்கும் .எத்தனைபேர் ஒருகுடும்பத்தில் தகுதி உள்ளார்களோ அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட தொகையில் இருந்து மூன்று மடங்கு மற்றும் லீவ் ENCASHMENT சேர்த்து பொருட்களை வாங்கி அதை GST ரசீதுடன் சேர்த்து கொடுக்கவேண்டும் .GST ரசீது முக்கியம் .ஆகவே LTC 2018-2021 ஆண்டுக்கான LTC வசதியை பெறாதவர்கள் இந்த LTC SPECIAL CASH  PACKAGE  பெற்றுக்கொள்ளலாம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Saturday, October 10, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

அஞ்சல் துறை  அஞ்சல் வாரத்தை கொண்டாடிக்கொண்டிருக்கிறது .நாமெல்லாம்  தோழர் பாபு தாரா பாதா முகர்ஜி அவர்களின் லாகூர் மாநாட்டின் தலைமையுரையின் நூற்றாண்டை வரவேற்றுக்கொண்டிருக்கிறோம் .எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு நமது கோட்டத்தில் தலைமை அஞ்சலகங்கள் மற்றும் மஹாராஜநகர் அஞ்சலகம் மின்னொளியில் ஜொலிக்கின்றன .அரசு ஒருபக்கம் அஞ்சல் வாரத்தை கொண்டாடட்டும் .நமது பார்வைக்கோ இந்த அலங்காரங்கள் எல்லாம் தோழர் பாபு தாரா பாதா அவர்களின் முழக்கத்திற்கு கிடைத்த வரவேற்புகள் என மனதிற்குள் நினைக்க தோன்றுகிறது ...

அன்றைய காலக்கட்டத்தில் அதிகாரிகள் காட்டிய இனவெறி அதாவது ஆங்கிலேயன் அடுத்து ஆங்கிலோ -இந்தியர் கடைசியாக இந்தியர் என ஊழியர்களை வகைப்படுத்தி பிரித்து வெள்ளைக்காரனுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை சீனியாரிட்டியில் சலுகை வருடாந்திர ஊதிய உயர்விலும் பாகுபாடு ஏன் கிரெடேஷன் பட்டியல் கூட பென்சிலால் எழுதப்பட்டு அதிகாரிகளுக்கு தேவைப்படுவோருக்கு அதை அழித்தோ திருத்தியோ எழுதிக்கொள்ளும் வழக்கம் என்பதுவரை மிக சர்வசாதாரணமாக இருந்தது .இந்த பின்னணியில் தான் தொழிலாளி கையேந்தும் பிச்சைகாரனல்ல என்று முழங்கினார் நம் தலைவர் --அன்றைய கால காட்டத்தில் (வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் )ஒன்றுபடுங்கள் என்பது தேச துரோக வார்த்தையாக இருந்தது .நமது தலைவரும் நம்மை ஒன்றுபடுங்கள் என்றுதான் அழைத்தார் ...அதற்ககாதான் நிர்வாகம் அவருக்கு கொடுத்த பரிசு பணிநீக்கம் ......நீங்கள் மிருகங்கள் அல்ல எது  நடந்தாலும் கண்டும் காணாமல் செல்வதற்கு -நாம்  மனிதர்கள் பல விசேஷ குணாதியசங்கள் நமக்கு உண்டு பின்பு ஏன் கையேந்தி நிற்கவேண்டும் என ஊழியர்களை சிந்திக்கவைத்தவன் ---(நேற்றைய ஒரு நிகழ்வில் தலைவர் KVS அவர்கள் ஆற்றிய ஒரு உரையில் இருந்து ....)

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் --T.பபுஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, October 7, 2020

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! வணக்கம் .

                                                        ஆர்ப்பாட்டம் -வெல்லட்டும் 

நாள் -07.10.2020   புதன்கிழமை 

இடம் -பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 

நேரம் -மாலை 6 மணி 

கூட்டுத் தலைமை -தோழர்கள் T .அழகுமுத்து (P 3) 

A .சீனிவாசசொக்கலிங்கம் (P 4)

அஞ்சல் பகுதி கோரிக்கைகளை முன்னிறுத்தி குறிப்பாக இந்தாண்டு வழங்கப்படவேண்டிய போனஸ் விரைந்து அறிவித்திட ,கொரானா காலத்தில் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிட ,GDS ஊழியர்களுக்கு விடுபட்ட பரிந்துரைகளை நிறைவேற்றிட ,அனைத்து காலி பணிஇடங்களையும் நிரப்புதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டம் வெல்லட்டும் .இந்த ஆர்பாட்டத்தில் தாங்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

                                                        போராட்ட வாழ்த்துக்களுடன் 

SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, October 6, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

                              07.10.2020 புதன் கிழமை ஆர்ப்பாட்டம் --

நேரம்--- மாலை 6 மணி  இடம் --பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் தலைமை தோழர்கள் T .அழகுமுத்து --A .சீனிவாச சொக்கலிங்கம் கோட்ட தலைவர்கள் நெல்லை 

தீபாவளி நெருங்குகிறது .அஞ்சல் துறைக்கு எத்தனை நாள் போனஸ் என்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் கடந்து இன்று போனஸ் கிடைத்தாலே போதும் என்ற சூழ்நிலை நிலவுகிறது .COMPULSORY RETIREMENT மற்றும் COMPULSORY DEPOSIT என முந்தைய மிசா காலத்து கொடுமைகளை காட்டிலும் இன்று ஊழியர்கள் படுகின்ற  நெருக்கடிகள் மனஉளைச்சல்கள் சொல்லிமாளாது .இந்தசூழலில் கொரானா பெருந்தொற்று காலத்தில் களப்பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களுக்கான நலன்களை கொடுப்பதிலும் அரசு மற்றும் நிர்வாகம் அலட்சியத்தை காட்டுகிறது .பெருந்தொற்று ஏற்பட்ட ஊழியர்க்ளுக்கு அல்லது அவர்க்ளின் குடும்பத்தில் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அந்த  ஊழியர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய சூழலில் ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கை நிர்வாகத்தின் காதுகளுக்கு இன்னும் சென்றடையவில்லை .கொரானா தொற்றால்  உயிரிழந்த ஊழியர் தம் குடும்பத்திற்கு கருணை அடிப்படையிலான பணி வழங்கிடவேண்டும் இழப்புத்தொகை ரூபாய் 10 லட்சம் உடனே வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கைகளும் இந்த பேரிடர் காலத்திலும் அஞ்சல் வாரியம் விதிக்கும் டார்கெட் IPPB ஒருபக்கம் AEPS ஒருபக்கம் அஞ்சல் வாரத்தை முன்னிட்டு இந்தமாதம் முதல் நிதி தன்னிறைவு முகாம் -சேமிப்பால் செழிப்பு என்ற அறிவிப்போடு ஒவ்வொரு தலைமை அஞ்சலகம் முதல் கிளை அஞ்சலகம் வரை நாளொன்றுக்கு இத்தனை கணக்குகளை பிடிக்கவேண்டும் என்ற அறிவிப்பு மேலும்  GDS ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா கமிட்டி சிபாரிசுகள் அனைத்தையும் நிறைவேற்றிடல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நமது NFPE சம்மேளனம் அறிவித்துள்ள முதல் கட்ட போராட்டமான கோட்டமட்டத்தில் நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்வோம் .புது உற்சாகத்தோடு உத்வேகத்தோடு தோழியர்களும் பெருமளவில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

                                                     


Saturday, October 3, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் ..

நெல்லை மாநகரத்திற்குள் குறிப்பாக பாளையம்கோட்டை பெருமாள்புரம் மஹாராஜநகர் உள்ளிட்ட முக்கிய அஞ்சலக்ளுக்கு SECOND MAIL  தொடர்ந்து தாமதமாக வருவதை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம் .பல அலுவலகத்தில் இருந்து SECONDMAIL எத்தனை மணிக்கு எவ்வளவு நேரம் கழித்துவந்தாலும் அதுவரை தாபலகாரர்களை காத்து கிடக்க வைப்பது முறையல்ல .நிலைமை இவ்வாறுஇருக்க  நமது ஓட்டுனர்களை குறிவைத்து அவர்களுக்கு வேலைநேரம் முடிந்தபிறகும் மீண்டும் பொறியியல் கல்லுரிக்கு செல் என கூடுதல் வேலைப்பளுவை சுமத்துவது ஏற்புடையது அல்ல ..தினமும்  ஆயிரக்கணக்கில் குவியும் தபால்களை குறித்தநேரத்தில் குறித்த இடத்தில கொண்டுசேர்ப்பதற்கு கூடுதலாக இன்னோரு ஷேடுலை தற்காலிகமாக அமுல்படுத்துவதில் என்ன தவறு ? ஓட்டுனர்களை எதிரிகளாகவும்  அடிமைகளாகவும் நிலைக்கும் மனநிலையை சம்பந்தப்பட்டவர்கள் மாற்றிக்கொள்ளவேண்டும் .இதுகுறித்து 01.10.2020 அன்று நமது ASP (OD ) அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளோம் .மாற்றங்கள் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம் ..

நன்கொடையாளர்களுக்கு நன்றி நன்றி 

திருமதி .ராஜலக்ஷ்மி மஹாராஜாநகர் --500  திருமதி ப்ரீத்தா --500 திருமதி ரம்யா 200

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 


Tuesday, September 29, 2020

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே ! 

கடந்த 26.09.2020 அன்று நடைபெற்ற நமது கோட்ட சங்க செயற்குழுவில் எடுக்கப்பட்ட  தீர்மானங்கள் நேற்று நமது கோட்ட அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது .நேற்று நமது SSP அவர்கள் தூத்துக்குடி கூடுதல் பொறுப்பேற்க சென்றுவிட்டதால் சந்திக்கமுடியவில்லை .இன்று இதுக்குறித்து விவாதித்து டெபுடேஷன் விஷயத்தில் ஒரு விளக்க ஆணையை பெற்றுத்தருவோம் .டெபுடேஷன் குறித்த நமது தீர்மானத்தின் நகல் உங்கள் பார்வைக்கு 

NFPE

                          ALL INDIA POSTAL EMPLOYEES UNION GR-C                                                  TIRUNELVELI DIVISIONAL BRANCH

TIRUNELVELI-627002

No.P3-EC/dlgs dated at Palayankottai- 627002 the 28.09.2020

 

To

The Sr. Supdt. of Post Offices,

Tirunelveli Division

Tirunelveli-627002

Sir,

Sub:  Resolution adopted in the Divisional Executive Meeting of AIPEU Group C, Tirunelveli Division which was held on 26.09.2020 at Palayankottai HPO premises – reg

*****

            The Executive Committee Meeting of this Union was held under the Presidentship of the Divisional President Com. T, Alagumuthu.  After deliberate discussions, the following resolutions are adopted and being submitted for the consideration of the Divisional Administration.

1.      This Executive Meeting urges the SSPOs., Tirunelveli Division to withdraw the cancellation of the instructions issued and in vogue for past 4 1/2 years which against the interest of the employees and avoid unrest among employees.

The new SSPOs., may not aware of the confusions created due to partial attitude of the Postmasters and in consequent of the attempts of this union to bring down the misdemeanour of the then Postmaster, a clear guidelines were issued by previous incumbent SSPOs., vide D.O letters cited below

a)      B1/Misc/Dlgs dated 06.04.2016

b)      B1/Misc/Dlgs dated 17.09.2106

c)      B1/Misc/Dlgs dated 20.02.2019

d)     B1/Misc/Dlgs dated 27.05.2019

After several discussions made in the monthly meetings and other unofficial meetings with several SSPOs., the above orders were issued to protect the interest of the employees working in this Division.  But, making mockery of these orders, the instructions issued by the SSPOs., now on 24.09.2020 without assessing the actual issues involved in the field offices is highly objectionable.  This executive meeting strongly demand the withdrawal of the said order dated 24.09.2020 as this was issued without any assessment / application of mind and seen issued to satisfy certain group of employees which is forbidden under rules.

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

 

 


Monday, September 28, 2020

அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

       நமது கோட்ட சங்கத்தின் அவசரச்செயற்குழுக்கூட்டம் 26.09.2020 அன்று பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது .30 க்கும் மேற்பட்ட நமது உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .தோழர்கள் N .  கண்ணன் தோழியர் முத்துபேட்சியம்மாள் மகிளா கமிட்டி கன்வீனர் வண்ணமுத்து முத்துமாலை நெல்லையப்பன் சுப்ரமணியன் புருஷோத் தமன் மாநில தலைவர் தோழர் செல்வகிருஷ்ணன்  உள்ளிட்ட  பல    தோழர்கள் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்தனர் .செயற்குழு தொடங்கும் முன்பே நமது SSP அவர்களுடன் தொடர்புகொண்டு நமது கோட்ட செயலர் இந்த செயற்குழுவின் நிலையை குறித்து தெரிவித்தார் .நமது SSP அவர்களும் நிச்சயம் இந்த DEPUTAION பிரச்சினையில் வரும் திங்கள்கிழமை ஒரு விரிவான விளக்க ஆணை பிறப்பிக்கப்படும் என்று உறுதிகூறினார்.நமது மாநிலத்தலைவரும் SSP அவர்களிடம் இந்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்கள்  .இதை நமது செயற்குழு தொடங்கும்போது முறையாக அறிவிக்கப்பட்டது .இருந்தாலும் டெபுடேஷன் விஷயத்தில் நமது கோட்டசங்கத்தின் நிலைபாடு பழைய நிலையிலேயே தொடரவேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன .அதேபோல் LSG /UNFILLED HSG II பதவிகளை நிரப்பிடும்போது நிர்வாகத்தின் பாரபட்ச நிலை கண்டிக்கத்தக்கது என்றும் NOTIFY பண்ணாத பதவிகளை நிரப்பியது தவறு என்றும் APMSB திருநெல்வேலி HO வில் தோழியர் பாப்பா அவர்களின் மனு அற்ப காரணங்களுக்காக பரிசீலிக்கப்படாததை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது .பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு இன்றே அப்பீல் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படும் .அதன்பிறகு நமது மாநிலச்சங்கத்தின் மூலம் இந்த முறைகேடுகள் மண்டல அலுவலக கவனத்திற்கு கொண்டுசென்று நிச்சயம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்க நமது கோட்ட சங்கம் உறுதியாக நடவடிக்கைகளை எடுக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் .இறுதியாக தோழர் S.ஆவுடைநாயகம் அவர்கள் நன்றிகூற செயற்குழு சிறப்பாக நடைபெற்றது .ஒருநாள் அவகாசத்தில் கூட்டப்பட்ட நமது செயற்குழுவில் கலந்துகொண்ட தோழர்களுக்கும் கருத்துக்களை மிக சுதந்திரமாக மற்றும் நம்பிக்கையோடு நம்மோடு வாட்ஸாப்ப் மூலம் பகிர்ந்து கொண்ட அனைத்து தோழியர்க்ளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

                                                 

Saturday, September 26, 2020

 அன்பார்ந்த தோழர்களே ! தோழியர்களே ! வணக்கம் .

நேற்று நமது கோட்டத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளை குறித்து நமது உறுப்பினர்கள் மிகவும் தீவீரமாக விவாதித்து கொண்டார்கள் .ஒன்று LSG பதவிஉயர்வில் NOTIFY பண்ணாத இடங்களை நிரப்பியது மற்றொன்று நமது கோட்டநிர்வாகம் 24.09.2020 அன்று பிறப்பித்த டெபுடேஷன் குறித்த உத்தரவுகள் .இவை இரண்டும் குறித்து நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாட்டினை உறுதிசெய்திட இன்று மாலை 6 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் நமது கோட்டசங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் கோட்ட தலைவர் தோழர் T .அழகுமுத்து அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது .இது செயற்குழு என்றாலும் அனைவரும் கலந்துகொள்ளவும் கலந்துகொள்ள முடியாதவர்கள் தங்கள் கருத்துக்களை நமது NELLAI NFPE வாட்ஸாப்ப் தளத்தில் பதிவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம் .நேற்றைய உங்கள் கருத்துக்கள் ஆதங்கங்கள் உள்ளபடியே நமது இயக்கத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள பற்றையும் பிடிப்பையும் காட்டுகிறது .இந்த பிரச்சினையை முன்மொழிந்து இறுதிவரை விவாதத்தில் பங்கேற்ற நண்பர் வண்ணமுத்து அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

நேற்றைய மாதாந்திர பேட்டியில் கூட இந்த பிரச்சினை குறித்து சுமார் இருபது நிமிடங்கள் விவாதிக்கப்பட்டது .2010 க்கு முன்னால்  டெபுடேஷன் எப்படி அனுப்பப்பட்டது ஏன் இத்தனை உத்தரவுகளை கோட்ட நிர்வாகம் போஸ்ட்மாஸ்டர்களுக்கு அறிவுறுத்தி வழங்கப்பட்டது என்பது குறித்து விளக்கினோம் .கண்காணிப்பாளர் அவர்க்ளின் பார்வையில் போஸ்ட்மாஸ்டர் என்பவர் விருப்பு வெறுப்பு இன்றி வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு காட்டாமல் நடப்பது தான் .ஆனால் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு ஒரு பாரபட்சம் காட்டப்பட்டதால் தான் கோட்ட நிர்வாகம் இத்தனை உத்தரவுகளை பிறப்பித்தது ..உதாரணமாக 06.04.2016 உத்தரவில் LRPA பிறகு PA பிறகு MACP  I என ஊழியர்கள் டெபுடேஷன்க்கு அனுப்ப அன்று முடிவெடுக்கப்பட்டது .அதுமட்டுமல்லாமல் TURN REGISTER முறையாக பராமரிக்கப்படவும் அதை ஊழியர்கள் கேட்கும் பொழுது அவர்களின் பார்வைக்கு கொடுக்கவேண்டும் என்றும் இதை மீறுகிற தலைமை/துணை  அஞ்சலக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கைக்கு பிறகு தான் டெபுடேஷன் முறைப்படுத்தப்பட்டது .அதன்பிறகு கூட தனக்கு வேண்டியர்களுக்கு TURN வந்தால் அந்த ஊழியர்களுக்கு முன்கூட்டியே தகவல்கள் கொடுக்கப்பட்டு அந்த ஊழியரை விடுப்பில் செல்ல சொல்லி அடுத்த நபரை அனுப்புவதாக வந்த குற்றசாட்டை நிருபித்தபிறகு டெபுடேஷன் உத்தரவு வந்தபிறகு யாருக்கும் விடுப்பு வழங்கக்கூடாது MACP II பெறாவிட்டாலும் 20வருடம் முடித்திருந்தால் டெபுடேஷன் இருந்து விலக்கு அளிக்கலாம் இன்றும் MACP II என்பது எழுத்தர் கேடரில் தான் என்பது என்று இவ்வளவு உத்தரவுகளை பெற்றுக்கொடுத்தபிறகும் டெபுடேஷன் அனுப்புவதில் பாரபட்சம் நீடிக்கும் பொழுது அனைத்து வழிகாட்டுதல்களையும் நீக்கிவிட்டது போஸ்ட்மாஸ்டர் நிச்சயம் நீதியை கடைபிடிப்பார் ஆகவே கோட்ட நிர்வாகத்திடம் இருந்து தனியாக உத்தரவுகள் பிறப்பிக்கவேண்டாம் எனவும் பழைய உத்தரவுகளை எல்லாம் நீக்குகிறேன் என்பதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என நாம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம் .இதேபோல் கடந்த 24.02.2020 அன்று அன்றைய பொறுப்பு கண்காணிப்பாளர் திரு VPC அவர்களும் அனைவரும் டெபுடேஷன் குறித்து தடாலடி உத்தரவை பிறப்பித்ததும் உடனே நாம் தலையிட்டு அந்த உத்தரவை நிறுத்திவைத்ததும் உங்களுக்கு நினைவிருக்கும் .நேற்று கூட நமது SSP அவர்களிடம் நிர்வாகம் செய்கின்ற சிலவிதிமீறல்களை சுட்டிகாட்டியுள்ளோம் .அவர்களும் ஒருவாரம் பாருங்கள் இதில் கிரிவென்ஸ் வந்தால் நாம் தீர்த்துக்கொள்வோம் என்ற உறுதிமொழியோடு மாதந்திர பேட்டியில் முடிவெடுத்தோம் .இன்னொன்று நேற்றைய LSG உத்தரவுகளில் உள்ள குறைபாடுகள் .இவைகளை கலைந்திட ஊழியர்கள் மனஉளைச்சல் இன்றி பணியாற்றிட  உங்கள் பங்களிப்பை கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் .நன்றி

தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Friday, September 25, 2020

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

மாநில சங்கத்திற்கு குறிப்பாகமாநிலசெயலர் சகோதரர் A .வீரமணி அவர்களுக்கு நன்றி !நன்றி !

நமது கோட்ட சங்கம் கொண்டுசெல்கின்ற பிரச்சினைகளை உடனுக்குடன் மாநில /மண்டல அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று பிரச்சினைகளின் தீர்வில் முழுகவனம் செலுத்தும் மாநிலசெயலருக்கு நன்றி .நன்றி .குறிப்பாக நமது மூத்த தோழர் N .கண்ணன் அவர்களின் HRA பிரச்சினை கணக்கு பிரிவு ஊழியர்களுக்கு LSG பதவிகளை நிரப்புதல் சம்பந்தமான பிரச்சினைகளில் அதிவிரைவாக செயல்பட்டமைக்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

*இன்று நண்பகல் 12 மணிக்கு நமது புதிய கண்காணிப்பாளருடனான மாதாந்திர பேட்டி நடைபெறுகிறது .கொரானா பரவலை முன்னிட்டு அஞ்சல் மூன்று மற்றும் அஞ்சல் நான்கு சங்கங்களுக்கு தனித்தனியாகவும் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை மூன்றில் இருந்து இரண்டாகவும் குறைக்கப்பட்டுள்ளது .இருந்தாலும் மாதாந்திர பேட்டியை நாம் முழுமையாக பயன்படுத்திக்கொள்வோம் .இன்று நிர்வாக கவனத்திற்கு கொண்டு செல்லும் பிரச்சினைகள் தனியாக உங்கள் பார்வைக்கு தனியாக கொடுக்கப்பட்டுள்ளது .

நன்றி .தோழமை வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் -T.புஷ்பாகரன் கோட்ட செயலர்கள் நெல்லை 

Wednesday, September 23, 2020

 Frequently Asked Questions about Senior Citizens Savings Scheme (SCSS)



1. What will be the share of the joint account holder in the deposit in an account?
The whole amount is attributed to the first depositor or applicant. The addition of a spouse as a joint account does not matter in this case.
2. Can both the spouses open separate accounts?
Yes, individual accounts can be opened as well, provided the deposit limit is a maximum of Rs.15 lakh. Of course, it has to adhere to the rules of the scheme.
3. Any income tax rebate / exemption is admissible?
No, not with this scheme.
4. Is TDS applicable to the scheme?
Yes if the interest exceeds Rs.10,000 per annum, TDS is applicable. In this scheme, interest payments are no exemption to deduction of tax at source.
5. Any minimum limit has been prescribed for deduction of tax at source?
As per government regulations, tax has to be deducted at source as per the minimum balance.
6. Can a person holding a Power of Attorney sign for the nominee in the nomination form?
No a person holding a Power of Attorney cannot sign in place for the nominee in the nomination form.
7. In case of a joint account, if the first holder / depositor expires before maturity, can the account be continued?
Yes, the nominee can hold the account of the expired depositor in case of a death, provided it pertains to the SCSS Rules.
8. Is there any fee prescribed for nomination and / or change / cancellation of nomination?
No fee is charged.
9. Can an account holder obtain loan by pledging the deposit / account under the SCSS, 2004?
Periodic withdrawals for loans is not possible in this scheme as it defies the very nature of the scheme.
10 Is premature withdrawal of the deposits from the accounts under the SCSS, 2004 permitted?
Yes, premature withdrawals are allowed, although a premature closure of the savings account is permitted only after a year, whereby the account holder will be charged 1.5% of the savings and 1% after two years.
11.Are Non-resident Indians, Persons of Indian Origin and Hindu Undivided Family eligible to invest in the SCSS, 2004?
No, it is not possible, though an Indian moving abroad and having a SCSS can continue to maintain it.
12. Can an account be transferred from one deposit office to another?
Using Form G, an account can be transferred from one deposit office to another.
13. Can an SCSS account be extended?
Yes, within one year after maturity a depositor can extend their SCSS for a period of three years.
14. What happens if an account is opened in contravention of the SCSS Rules?
The account will be close, interest deducted and the deposit money returned to the depositor.
15. Whether commission is payable to the agents under the Scheme?
Payments of commission under this scheme has been discontinued.
16. Why must I choose to open my SCSS account in a bank rather than a post office? Which is better?
The senior citizens savings scheme is an Indian government sponsored program that is administered to the general public through two mediums- a list of certified banks and the offices belonging to the Indian Postal Department. The latter are just the medium and do not possess any control over the terms, rules and regulation of the actual SCSS product. Thus, it will be wrong to put one medium over the next.
However, comparatively both bank and post offices have same features in recent past. One of the best feature in Post Office - easy accessibility and auto credit to Savings Bank Account in Post Office and Transfer the amount bank from Post Office Account through IPPB. So many technological implementation processed in Post Office too. 
17. What documents must be submitted when opening up a senior citizens savings scheme account?
Essentially, the documents that help the bank ascertain your age are required when opening up the SCSS account. These include, Passport/ Birth Certificate/ Voter’s ID/ Senior Citizen Card/ PAN, etc.
18. What will happen to my account if I were to pass away?
If you have opened an individual account (without any joint investor) and unfortunately, you were to pass away unexpectedly, the SCSS account will be primed up for closure. To affect such a termination, the account holder’s nominee must forward an application in Form ‘F’. The Annexures II & III of such a form must be attested by a public notary or the Oath Commissioner.
19.I keep hearing the term ‘retirement benefits’, what does this mean exactly?
When speaking of the eligibility for the senior citizens savings scheme, people belonging to the age group of 55 years- 60 years can apply, provided that they must open this account within one month of receipt of ‘retirement benefits’. Also, the invested amount must not exceed the net value of the ‘retirement benefits’.
What then is ‘retirement benefits’? In the context of the rules governing the SCSS accounts, retirement benefits are defined as any payment that is credited to the depositor post his/her retirement (on superannuation or otherwise) and includes such monetary components as PF dues, gratuity, encashment of unused leaves, earnings from Group Savings linked Insurance scheme, payments per the voluntary retirement scheme, etc. When applying for a SCSS account, the applicant must disclose such benefits in line with the regulations that govern the operation of such SCSS accounts.
Can I cancel or change my nomination?
When applying for the SCSS account, you are free to propose a nominee. This activity can also be completed after your account has been in existence for a specified duration of time. Alternatively, the nomination made by you can easily be canceled or edited by submitting a fresh nomination in Form-C to the bank/post office wherein said SCSS account is being maintained.
20.My wife is just 45 years old, can I appoint her as partner in a joint account?
Since you already have an SCSS account, you are free to appoint your spouse as the joint account holder. Its your age that is the qualifying factor here and not your wife’s. Thus, her age doesn’t affect her eligibility to act as your joint partner in the account. However, the converse of this isn’t possible as your wife is just 45 years old and the minimum age to be eligible to own a SCSS account is 60 years.
21. What to keep in mind before opening a SCSS Account
Before you open a Senior Citizens Savings Scheme account, ensure that you provide all the necessary information that has been requested. If it is found that the information provided by you is incorrect or false, the account shall be closed with immediate effect. The deposited amount will be refunded to the depositor after the deduction of interest that has already been paid into the account.
Share this article :