...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, January 17, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

POSB உத்தரவு 01/2022 ---13.01.2022 உத்தரவின் முக்கிய அம்சங்கள் 

*அஞ்சல் சேமிப்பு கணக்குகளில் ஏற்படும் முறைகேடுகளை தடுக்கவும் ,சேமிப்பு  பிரிவில் சுமுகமான செயல்பாடுகளை  உறுதிப்படுத்தவும் இந்த உத்தரவு சொல்லுகிறது .குறிப்பாக POSB உத்தரவு 17/2017  23.10.2017  உத்தரவு மீண்டும் வலியுறுத்துகிறது .அதாவது அஞ்சலகங்களில் தொடங்கப்படும் எல்லா வகையான சேமிப்பு கணக்குகளிலில் வாடிக்கையாளர் தொலைபேசி எண்களை சேர்த்துவிடுவது கட்டாயமாக்க படுகிறது .

*ரூபாய் 20000இக்கு மேல் பரிவர்த்தனை செய்யப்படும் அனைத்து கணக்குக்களிலிலும் தொலைபேசி எண்னும் ரூபாய் 50000 க்கு மேல் நடைபெறும் அனைத்து கணக்குக்களிலிலும்பான் எண் கட்டாயமாக்கப்படுகிறது 

\*கவுண்டர் PA  ஒவ்வொரு கணக்கிலும் பரிவர்த்தனையை தொடங்கும் பொழுது CICD மெனு மூலம் இதை உறுதிசெய்ய வேண்டும் .அதை அந்தந்த வவுச்சரில் குறிக்கவும் வேண்டும் .

* ரூபாய் 50000 க்கு மேல் நடைபெறும் அனைத்து கணக்குக்களிலிலும்பான் எண் இல்லையென்றல் படிவம் 60/61 பெற்றுக்கொண்டு அனுமதிக்கலாம் .அந்த வாடிக்கையாளர் 6 மாதத்திற்குள் பான் எண் கொடுத்திடவேண்டும் 

*வாடிக்கையாளர் தொலைபேசி எண்ணை மாற்றியிருந்தால் அதை அவரிடம் ஒரு கடிதம் மூலமாகவோ அல்லது AOF பெற்றுக்கொண்டு CMRC மெனுவில் மாற்றம் செய்து கொடுக்கவேண்டும் 

*இனிமேல் Cமற்றும் B கிளாஸ் அலுவலகங்களில் நடைபெறும் SB தவிர அனைத்து வகையான கணக்குகள் CLOSE செய்யப்பட்டாலோ /PMC செயயப்பட்டாலோ அந்த புத்தகத்தை வவுச்சர் உடன் இனைத்து SBCO விற்கு அனுப்பவேண்டும் 

*அவ்வாறு புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் போது HPR மெனுவில் சென்று CLOSUER ரிப்போர்ட் எடுத்து வாடிக்கையாளரிடம் கொடுக்கவேண்டும் 

*கோட்ட அலுவலகம் அந்தந்த SBCO விற்கு  Cமற்றும் B கிளாஸ்அலுவலகங்கள்   குறித்து தகவல்களை தெரிவிக்கவேண்டும் 

*CEPT இந்த பரிவர்தனைகளில் வாராந்திர ரிப்போர்ட் எடுத்து எந்தெந்த கணக்குகளில்தொலைபேசி எண்கள் இல்லையோ /PAN குறிப்பிடவில்லையோ  அதை CPC மூலம் கோட்ட அலுவலகத்திற்கு தெரியப்படுத்தும் 

*ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் இனிமேல் இதையும் ஆய்வு செய்வார்கள் .இந்த நடைமுறையினை பின்பற்றாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் .

வேலைப்பளு மற்றும் நெட்ஒர்க் பிரச்சினை இவைகளுக்கிடையில் இவையெல்லாம் செய்யமுடியுமா என நாம் மலைத்து நின்றாலும் நாம் மறுத்திட முடியாத பணிகளில் இதுவும் ஒன்று .எங்காவது முறைகேடு நடக்கும் பொழுது அதை சரிகட்ட யார் யாருக்கு பங்கு போடலாம் என நிர்வாகம் நினைக்கும் போதுதான் இதுபோன்ற உத்தரவுகளை காட்டி அப்பாவி ஊழியர்களையும் இதில் நிர்வாகம் எளிதில் சிக்கவைக்கும் .ஆகவே கவனமுடன் பணியாற்றுவோம் .

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment