...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, October 4, 2017


Admissibility of DA for inhouse training

In all cases of Government sponsored training programs which are residential and where boarding & lodging at the training institute are compulsory and are provided at fixed rates, a special allowance in lieu of daily allowance will be admissible to Government servants deputed to undergo such training course. The special allowance irrespective of the period of training course, will be calculated as follows

a. Out station Participants - Actual expenditure on boarding and lodging plus 1/4th of full DA
b. Local Participants - Actual expenditure on boarding and lodging only


Tuesday, October 3, 2017

                           பணிநிறைவு வாழ்த்துக்கள் 
தோழியர் கலாதேவி GDSBPM நாரணம்மாள்புரம் -சங்கர்நகர் அவர்கள் இன்று பணிநிறைவு பெறுகிறார்கள் .அவர்கள் பணிநிறைவு காலங்களில் சிறப்புடன் வாழ நெல்லை NFPE வாழ்த்துகிறது .இவர்களது பணிநிறைவு விழா இன்று 03.10.2017 அன்று மாலை 4 மணிக்கு சங்கர்நகர் அஞ்சலகத்தில் நடைபெறுகிறது 
------------------------------------------------------------------------------------------------------------------
நமது முன்னாள் மாநிலசெயலர் அண்ணன் பாலு அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நெல்லையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் 
நாள் 20.10.2017  வெள்ளிக்கிழமை 
நேரம் மாலை 6 மணி 
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் 
தலைமை தோழர்கள் 
  KG குருசாமிP3                  -A.சீனிவாச சொக்கலிங்கம் P4
பொருள் 1.அண்ணன் பாலு நினைவாஞ்சலி 
                     2.மாநில மாநாடு 
                    3.புதிய பென்ஷன் குறித்த கலந்துரையாடல்
                    4.இன்னும் பிற (தலைவர் அனுமதியுடன் )
                                 தோழமையுடன் 
SK .ஜேக்கப் ராஜ்                                                           SK .பாட்சா 
கோட்ட செயலர் P3                                           கோட்ட செயலர் P4
-------------------------------------------------------------------------------------------------------------------------

                                 தோழர் ஏழுமலை பணிநிறைவு 
(தருமபுரி கோட்டத்தில் பல்லாண்டுகளாக கோட்ட செயலராக --தலைவராக வலம்வந்த தோழர் ஏழுமலை அவர்கள் 03.10.2017 அன்று தன் விருப்ப ஓய்வில் செல்கிறார் அவர்களுக்கு பேரவையின் சார்பாக வாழ்த்துக்கள் )

தருமபுரி தந்திட்ட மற்றுமொரு தன்னிகரில்லா தலைவன் 
தான் ஏற்றிருந்த கொள்கையில் சறுக்காத தோழன் 
நிர்வாகத்திற்கு எரிமலை -எங்களுக்கும் 
இயக்கத்திற்கும் கிடைத்த பனிமலை 
 இளையவர்களை  பொறுப்பினில் 
ஏற்றி அழகுபார்த்த அழகுமலை  
எங்கள் ஏழுமலை வாழ்க !

சோர்ந்து பார்த்ததில்லை --அடுத்தவரை 
சார்ந்து வாழ்ந்ததில்லை 
சமரசம் இல்லா  கொள்கை உண்டு 
சாமரம் வீச தெரியாத சரித்திரம் உண்டு 

அதிகாரிகளிடம் வாதிடும் போதும் 
அயலாரிடம் மோதிடும் போதும் 
எத்தனை தெளிவு -எத்தனை உறுதி 

CSI அமுலாக்கத்திற்கு நீதான் முதல் பலி 
பட்டியல் நீளும் முன் காணவேண்டும் புது வழி 

நீ கோட்ட செயலராய் மிளிர்ந்த நாட்கள் 
தமிழகத்தில் தருமபுரி  ஒளிர்ந்த நாட்கள் 
தலைமை பொறுப்பை ஏற்றபிறகுதான் 
தடையின்றி இளைஞர்களை தவழ விட்டாய் 

நீ சுயமரியாதைக்காரன் 
ஒருநாள் விடுப்புக்கும் -எவர் 
காலையும் பிடிக்கவேண்டாம் என 
தன் விருப்ப ஓய்வை 
தானாகவே தரித்து கொண்டாய் 
உன் முடிவு நிர்வாகத்திற்கு எச்சரிக்கையாகவும் 
எங்களுக்கு எரிச்சலாகவும் இருக்கத்தான் செய்கிறது 
உன் முடிவை மாற்ற உன்னாலே முடியாது 
எனக்கு தெரியும் --
வாழ்க அண்ணன் ஏழுமலை --உன் வேள்வியில் 
எங்கள் நெஞ்சுள் பிறக்கும் புது எரிமலை 
                        ------------தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --------------------------