...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, March 16, 2022

 அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                                   இறுதி வெற்றி நமதே !

நமது முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் தோழர்                                         RN .பராசர் அவர்களுக்கு அவரது ஓய்வு நாள் அன்று கொடுக்கப்பட்ட விதி 14 குற்றப்பத்திரிக்கை பிறகு விதி 9   யின் கீழ் கொண்டுவரப்பட்ட  நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம் ..தொழிற்சங்க பணி செய்திட அவர் மேற்கொண்ட அயற்பணி விண்ணப்பித்ததில் ஏற்கனவே அயற்பணியில் அவர் இருந்ததை மறைத்து விண்ணப்பித்தார் என்ற அற்ப காரணத்தை சொல்லி மதுரா SSP தொடுத்திட்ட வழக்கு இன்று CPMG UP அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்திய குடியரசு தலைவர் அவர்களால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது .அற்ப காரணங்களுக்காக தொழிற்சங்க நிர்வாகிகளை முடக்கிவிடலாம் என தப்பு கனக்குபோடும் அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் ஒரு பாடம் .நமது பொதுச்செயலர் தோழர்  RN .பராசர்  அவர்களுக்காக களம் கண்ட அனைத்து தோழர்களுக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் .

நன்றி .தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் --E.அருண் குமார் கோட்ட செயலர்கள் நெல்லை 

Tuesday, March 15, 2022

                                             அஞ்சல் கூட்டுப் போராட்ட குழு நெல்லை கோட்டம் 

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                  எதிர்வரும் மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில்  பங்கேற்பது  குறித்து நமது அஞ்சல் துறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு NFPE --FNPO   சங்க நிர்வாகிகள் புதுடெல்லியில் கூடி மீண்டும் POSTAL JCA எல்லா மட்டங்களிலும் அமைப்பது என்றும் நமது துறை சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்ட போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுத்தார்கள் .

                     அதன் அடிப்படையில்  14.03.2022 திங்கள் மாலை பாளை தலைமை அஞ்சலகத்தில்  (NFPE ,FNPOமற்றும் AIGDSU  ) கோட்ட செயலர்கள்  கூட்டம் நடைபெற்றது .இதில் NFPE சார்பாக தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் E .அருண்குமார் மற்றும் T .புஷ்பாகரன் அகியோர்களும் FNPO சார்பாக தோழர் G.சிவகுமார் S .ராம்குமார் பால கிருஷ்ணன் ஆகியோர்களும் AIGDSU சார்பாக தோழர் I.ஞான பாலசிங் ஆகியோரும் கலந்துகொண்டனர் 

  நடக்கவிருக்க இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் நெல்லை கோட்டத்தில் முழுமையாக நடத்துவது என்றும் அதனை தொடர்ந்து  கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது  

1.நெல்லை அஞ்சல் கூட்டு போராட்ட குழுவின் தலைவராக தோழர் சிவகுமார் .G. கன்வீனராக தோழர் SK .ஜேக்கப் ராஜ் பொருளாளராக தோழர் I.ஞானபாலசிங்  ஆகியோர் செயல்படுவார்கள் 

2.வேலைநிறுத்த சுற்றறிக்கை அம்பைகிளைகள் (NFPE -FNPO மற்றும் AIGDSU )  ,RMS  R3 R4   PSD திருநெல்வேலி  P4  மற்றும் SBCO  ஆகிய அனைவரையும் இனைத்து வெளியிடுவது 

3.வேலைநிறுத்த சுற்று பயணங்கள் சேர்ந்து செல்வது 

24.03.2022  வியாழன் புறநகர் பகுதிகள் 

25.03.2022  வெள்ளி மாநகர் பகுதிகள் 

25.03.2022வெள்ளி மாலை 5.45 மணிக்கு பாளை தலைமை அஞ்சலகத்தில் வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் 

28.03.2022 அன்று முதல் நாள் வேலைநிறுத்தம் அன்று அனைத்து சங்கங்களையும்  உள்ளடக்கிய ஆர்ப்பாட்டம் --ஊர்வலம் 

 தோழர்களே !நடக்கவிருக்கும் போராட்டம் நமது துறையை காக்கும் போராட்டம் .ஏற்கனவே IPPB எனும் கம்பெனி நமது சேமிப்பு பிரிவினை கொள்ளை கொண்டு போக நெருங்குகிறது ,CEPT  எனும் தொழிற் நுட்ப அமைப்பு முற்றிலும் IPPB  பிடிக்குள் போக போகிறது ..ஆம் அஞ்சல் துறை தனியார் பிடிக்குள் செல்லாமல் இருக்க இனி ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டு  செயல்படுவோம் ஆதரவளிப்போம் !

விரிவான சுற்றிக்கையுடன் விரைவில் சந்திப்போம் !

நன்றி --அஞ்சல் கூட்டு போராட்ட குழு நெல்லை 

Monday, March 14, 2022

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !

அஞ்சல் வாரிய இடமாறுதல் கொள்கை 17.01.2019 குறித்தான விளக்க ஆணை ---நாள் 03.03.2022

*விதி 38 யின் கீழ் இடமாறுதல் பெற ஓராண்டு சேவை போதுமானது .முந்தைய உத்தரவில் probation காலத்தில் இடமாறுதல் விண்ணப்பிக்க முடியாது என்பது மாற்றப்பட்டுள்ளது 

*இனிமேல் category மற்றும் mode of recruitment (அதாவது direct recruit or promotive என மாநிலங்களுக்குள் நடக்கும் இட மறுதல்களுக்கு பார்க்க தேவையில்லை .பிற மாநிலஙக்ளுக்கு செல்லும் போது  category மற்றும் mode of recruitment பார்க்கவேண்டும் 

*இனி மாதாந்திர அடிப்படையில் இடமாறுதல்கள் பரிசீலிக்கப்படுவதால் temporary transfer என்ற முறை வேண்டுமா என்பதற்கு rule 38 என்பது நிரந்தரமானது temporary transferஎன்பது short term பயனுக்கானது .ஆகவே temporary transfer  முறையும் தொடரும் 

*ஏற்கனவே waiting list உள்ளவர்களின் நிலை அதே நிலையில் தொடரும் .2018க்கு முன்னதாக விண்ணப்பித்தவர்க்ளுக்கு விண்ணப்பிக்கப்பட்ட தேதியும் 2019முதல் 2021வரை விண்ணப்பித்தவர்களுக்கு சேவையின் காலம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 

*விதி 38  க்காக கணக்கில் எடுத்துக்கொள்ள முந்தையமாதம்  வரையுள்ள vacancy கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் composinate மற்றும் sports கோட்டாவிற்க்கான ஒதுக்கீடுகள் கழித்து தான் கணக்கில் எடுக்கப்படும் 

rule 38யின் விண்ணப்பிக்க இனி ஒரு வருடம் சேவை முடித்தால் போதும் மற்றும் மாதந்தோறும் விண்ணப்பிக்கலாம் என்கின்ற உத்தரவு நமக்காகவா ?இல்லை SSAமூலம் தேர்ச்சி பெற்றுவரும் மற்றவர்களுக்காகவா ?

நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை