...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, March 15, 2022

                                             அஞ்சல் கூட்டுப் போராட்ட குழு நெல்லை கோட்டம் 

அன்பார்ந்த தோழர்களே !தோழியர்களே !வணக்கம் .

                                  எதிர்வரும் மார்ச் 28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில்  பங்கேற்பது  குறித்து நமது அஞ்சல் துறையில் நீண்ட நாட்களுக்கு பிறகு NFPE --FNPO   சங்க நிர்வாகிகள் புதுடெல்லியில் கூடி மீண்டும் POSTAL JCA எல்லா மட்டங்களிலும் அமைப்பது என்றும் நமது துறை சார்ந்த கோரிக்கைகளை வென்றெடுக்க ஒன்றுபட்ட போராட்டம் நடத்துவது என்றும் முடிவெடுத்தார்கள் .

                     அதன் அடிப்படையில்  14.03.2022 திங்கள் மாலை பாளை தலைமை அஞ்சலகத்தில்  (NFPE ,FNPOமற்றும் AIGDSU  ) கோட்ட செயலர்கள்  கூட்டம் நடைபெற்றது .இதில் NFPE சார்பாக தோழர்கள் SK .ஜேக்கப் ராஜ் E .அருண்குமார் மற்றும் T .புஷ்பாகரன் அகியோர்களும் FNPO சார்பாக தோழர் G.சிவகுமார் S .ராம்குமார் பால கிருஷ்ணன் ஆகியோர்களும் AIGDSU சார்பாக தோழர் I.ஞான பாலசிங் ஆகியோரும் கலந்துகொண்டனர் 

  நடக்கவிருக்க இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் நெல்லை கோட்டத்தில் முழுமையாக நடத்துவது என்றும் அதனை தொடர்ந்து  கீழ்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது  

1.நெல்லை அஞ்சல் கூட்டு போராட்ட குழுவின் தலைவராக தோழர் சிவகுமார் .G. கன்வீனராக தோழர் SK .ஜேக்கப் ராஜ் பொருளாளராக தோழர் I.ஞானபாலசிங்  ஆகியோர் செயல்படுவார்கள் 

2.வேலைநிறுத்த சுற்றறிக்கை அம்பைகிளைகள் (NFPE -FNPO மற்றும் AIGDSU )  ,RMS  R3 R4   PSD திருநெல்வேலி  P4  மற்றும் SBCO  ஆகிய அனைவரையும் இனைத்து வெளியிடுவது 

3.வேலைநிறுத்த சுற்று பயணங்கள் சேர்ந்து செல்வது 

24.03.2022  வியாழன் புறநகர் பகுதிகள் 

25.03.2022  வெள்ளி மாநகர் பகுதிகள் 

25.03.2022வெள்ளி மாலை 5.45 மணிக்கு பாளை தலைமை அஞ்சலகத்தில் வேலைநிறுத்த ஆயத்த கூட்டம் 

28.03.2022 அன்று முதல் நாள் வேலைநிறுத்தம் அன்று அனைத்து சங்கங்களையும்  உள்ளடக்கிய ஆர்ப்பாட்டம் --ஊர்வலம் 

 தோழர்களே !நடக்கவிருக்கும் போராட்டம் நமது துறையை காக்கும் போராட்டம் .ஏற்கனவே IPPB எனும் கம்பெனி நமது சேமிப்பு பிரிவினை கொள்ளை கொண்டு போக நெருங்குகிறது ,CEPT  எனும் தொழிற் நுட்ப அமைப்பு முற்றிலும் IPPB  பிடிக்குள் போக போகிறது ..ஆம் அஞ்சல் துறை தனியார் பிடிக்குள் செல்லாமல் இருக்க இனி ஒன்றுபட்ட போராட்டம் மட்டுமே சாத்தியம் என்பதை உணர்ந்துகொண்டு  செயல்படுவோம் ஆதரவளிப்போம் !

விரிவான சுற்றிக்கையுடன் விரைவில் சந்திப்போம் !

நன்றி --அஞ்சல் கூட்டு போராட்ட குழு நெல்லை 

0 comments:

Post a Comment