...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 7, 2012

சூப்பர் கவிதை by Com.S.K. J

                                                    ஆ(மா )ம் - ஆத்மிகள் 

நாளொரு கணக்கெடுப்பு-மணிக்கொரு உத்திரவு
நெருக்கடிகளுக்கு நடுவே-புழுவாய் 
நெளியும்  ஊழியர்கள் 
ஆளுக்கு ஐந்து கணக்குகள்
ஆணையிடும் -அதிகாரங்கள்
இலக்கை எட்டிவிட கிழவிகளையும்
விட்டு  வைக்காத புது கணக்குகள்

பாதி நேரம் மின்வெட்டு 
பழுதடைந்த கம்ப்யூட்டரால் கண் வெட்டு 
வேலை முடிந்து வீடு போக நினைத்தால் 
விரட்டி வரும்  இ-மெயில்

பழைய தேதியை குறிப்பிட்டு 
10 -ம் நம்பருக்கு வந்தது எத்தனை  ?
தந்தது எத்தனை ?

படாதபாடுபட்டு  சேகரித்த  தகவலை 
சொல்லி அனுப்பினாலும் 
ஓய்ந்த பாடில்லை  விளக்கங்கள் 
உங்கள் பதிலில் திருப்தி இல்லையென்று அடுத்த மெயில்
திருப்பவும் கூடாது: இருக்கவும் கூடாது என்றால் 
வந்ததை என்ன செய்ய !திருப்பி தந்ததை என்ன செய்ய !

விடை கானா  முடியா வினாக்களோடு 
விழி  பிதுங்கும்   ஊழியர்கள் 
இரவு  முதல் முடியும் வரை 
விளக்கு வெளிச்சத்தில்முட்டி -தோற்கும் 
விட்டில் பூச்சிகளாய் -வெறும் 
விளக்கம் மட்டுமே கேட்டு பழகிய 
இ-மெயில்கள் 

வெள்ளை யானையை தேடும் குருட்டு பார்வையோடு 
இன்னும் எத்தனை நாளைக்கு வேவு பார்பதிலேயே
இந்த  அதிகாரங்கள் ...!

-----S.K.J  ----







 

0 comments:

Post a Comment