...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, June 28, 2013

                                           இசக்கி முத்து வாழ்கவே வாழ்கவே 

இசக்கிமுத்து -எனும் 
இனிய முத்து 
இலாகா பணியில் இருந்து 
இனிதாய் ஓய்வு பெறுகிறார் 

பொறுமைக்கு பெருமை சேர்த்த 
பேரறிவாளன் 
திறமையை தனக்குள்ளே பூட்டி வைக்காமல் 
திறந்த வெளி பல்கலை கழகமாய் 
எளியர்களுக்கும் -எளிதாய் புரியும் வகையில் 
எழுதி கொடுத்தவர் 

அதிகாரிகள் மட்டத்திலும் 
அசையா நம்பிக்கை பெற்றவர் 
எதிரிகளே எவரும் இல்லையென்று 
எல்லோரையும் சமமாக பார்த்தவர் 
தொழிற் சங்கத்திடம் உதவி கேட்டு 
வருபவர்கள்  உண்டு -- ஆனால் 
தொழிற் சங்கமே இவரிடம்  உதவி கேட்டு 
உன்னத முடிவுகளை  எடுத்ததுண்டு 
பதவி கேட்டு ஒருநாளும்  நச்சரித் த தில்லை 
பகை கூட்டும் வார்த்தை   உச்சரித்தில்லை 
கணக்கு பார்த்து யாருக்கும் உதவியதில்லை -பழைய 
கணக்கை காட்டி -எவரிடமும் 
கேட்கும் உத்தேசமும் இல்லை 
  உன்  சேவையை  என்றும் 
எங்களுக்கு  அளித்திட  வேண்டும் 
என  விண்ணபத்தோடு 
விடை  கொடுக்கிறோம் 
அண்ணன்  இசக்கிமுத்து 
வாழ்க   வாழ்க   
                   வாழ்த்துக்களுடன் 
                                                   S .K .ஜேக்கப்ராஜ் 







  

0 comments:

Post a Comment