...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 31, 2015

                                    கோட்ட அளவிலான செய்திகள் 

அன்பார்ந்த தோழர்களே !
      30.01.2015 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில்  தீர்க்க பட்ட பிரட்சினைகள் .
1.DGL இல் நாம்  கோரிய திருத்தம் ஏற்றுகொள்ளப்பட்டது .

2.ஜனவரி 2015 இல் கொடுக்கவேண்டிய MACP  I பதவி  உயர்வு விடுபட்ட ஊழியருக்கு வரும் DPC யில் சேர்த்து பரிசீலிக்க படும் .

3.RT NOTIFICATION ஓரிரு நாளில் வெளிவரும் 

4.திருநெல்வேலி காசாளர் பதவிக்கு மீண்டும் விருப்ப மனுக்கள் கோரப்பட்டு விரைவில் நிரப்பப்படும் 

5.Deputation முறைபடுத்த படும் .ப ர்கிட்மாநகரம் SO விற்கு மாதம் குறைந்தது 10 நாட்களுக்காவது 1+1 உறுதிபடுத்தபடும்  

6.CCL யை பொறுத்தவரை  மகப்பேறு விடுப்பை தொடர்ந்து மேலும் ஒரு மாத காலத்திற்கு CCL வழங்கப்படும் .இதற்கு மேலும் வழங்குவது என்பது அவர்களின் குடும்ப சூழ்நிலைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் .

7.SB கணக்குகள் தொடங்குவது குறித்து தங்களின் சொந்த காசுகளை போட்டு  யாரும் கணக்குகளை தொடங்க வற்புறுத்த வில்லை .

8.திருநெல்வேலி ஸ்டாம்ப் வெண்டர் பதவி POSTMASTER திருநெல்வேலியில் இருந்து கோட்ட அலுவலகம் கேட்ட  தகவல் வந்தவுடன் வழங்கப்படும் .

9.மெயில் ஓவர்சியர் பதவிக்கு இலாகாவின் சமிபத்திய உத்தரவான MACP II ஊழியர்கள் நிரப்பபடுவா ர்கள்  என்பதில் நமது தரப்பு ஆலோசனைகள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது .

10.2011இல் விடுபட்ட காசாளர்  அலவன்ஸ்  விரைவில் வழங்கப்படும் 
---------------------------------------------------------------------------------------------------
                                         வாழ்த்துகிறோம் 

 இன்று பணிநிறைவு காணும் தோழர் S .வேலையா  தபால் காரர் வள்ளியூர் அவர்களை கோட்ட சங்கங்கள் சார்பாக வாழ்த்துகிறோம் 
அவர்களின் பணிநிறைவு பாராட்டு விழா 31.01.2015 மாலை 5.30 மணிக்கு வள்ளியூரில் நடைபெறுகிறது 
                        
                                                                   நன்றி 
                                                            வாழ்த்துக்களுடன் 
                                                        SK .ஜேக்கப்ராஜ்  கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment