...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 6, 2019

                                                                   மத்திய பட்ஜெட் -2019

பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 1,50,000 கோடி ரூபாய் நிதி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
ரயில்வே துறையில் பயணிகள், சரக்கு போக்குவரத்தில் தனியார் பங்களிப்பு ஈடுபடுத்தப்படும்
•    விமானத்துறை, இன்சூரன்ஸ், ஊடகம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை.

வாகன ஓட்டிகளுக்கு வேதனை அடையச் செய்யும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான வரி அதிகரித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதேபோல் தங்கத்திற்கும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. 
                                                நெல்லை  கோட்ட செய்திகள் 
  MACP அடுத்த பட்டியலுக்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன .அதன்படி ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2020 வரையிலான பதவியுயர்விற்கு தகுதியானவர்களின் விவரங்களை அனுப்பிடுமாறு தலைமை அஞ்சலகங்களுக்கு தாக்கீது வந்துள்ளது 
                                  நெல்லை NFPE 

Friday, July 5, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                                      டெபுடேஷன் -புதுப்புது அர்த்தங்கள் 
                             டெபுடேஷன் குறித்து நேற்றும் ஒரு வழிகாட்டுதல் உத்தரவு கோட்ட அலுவலகத்தில் இருந்து வெளியி டப்பட்டுள்ளது .கிட்டத்தட்ட இது ஐந்தாவது விளக்க கடிதம் .நமது தோழர்கள் கூட இது முறையாக அமுல்படுத்தப்படுவதில்லை என்று தங்கள் ஆதங்கங்களை தெரிவித்தார்கள் .நமது தோழர்களுக்கு நாம் சொல்லிக்கொள்வதெல்லாம் தலைமை/துணை  அஞ்சலகங்களில் TURN ரெஜிஸ்ட்ர் எந்தநேரமும் எல்லாரும் பார்வையிடலாம் .இதில் ஏதாவது வி திமீறல் இருந்தால்  சம்பந்தப்பட்ட போஸ்ட்மாஸ்டரிடம் முறையிட்டுவிட்டு உடனே கோட்ட சங்கத்திற்கு தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறோம் ..ஒரு டெபுடேஷன் முடித்துவிட்டு ஸ்டேஷன்க்கு வந்தபிறகுதான் அந்த ஊழியருக்கு TURN அடிப்படையில் டெபுடேஷன் அனுப்பவேண்டும் என்று முந்தைய உத்தரவுகள் தெரிவித்திருந்தாலும் கோட்ட அலுவலகத்தில் இருந்தே DIRECTION போவது வருத்தமாகத்தான் இருக்கிறது .
                                   கோட்ட அலுவலகத்தில் மீண்டும் LRPA --
பாளையம்கோட்டையில் இருந்து மீண்டும் ஒரு  LRPA   கோட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார் .ஏற்கனவே பாளையம்கோட்டையில் டெபுடேஷன் விஷயத்தில் தொலைதூரங்களுக்கு தொடர்ந்து சென்று வரும் ஊழியர்களுக்கு மேலும் இது பேரதிர்ச்சியாக இருக்கிறது .இதுகுறித்து கோட்ட அலுவலகத்தில் கேட்டால் தற்சமயம் கோட்ட அலுவலகத்திற்கு பணிபுரிய யாரும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .ஆகவே விருப்பமுள்ள தோழர்கள் கோட்ட அலுவலகத்திற்கு தங்கள் விருப்பமனுக்களை அனுப்புவிட்டு LRPA வை மீண்டும் பாளையம்கோட்டைக்கு திருப்பிஅனுப்ப நிர்வாகத்திற்கு உதவவேண்டும் ..
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

Thursday, July 4, 2019

அன்பார்ந்த தோழர்களே !
                           அக்கௌன்டன்ட்களுக்கான LSG பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது .தமிழகத்தில் மொத்தம் 40 தோழர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் .நமது கோட்டத்தில் 
தோழியர் அனுராதா அவர்களும் தோழியர் முத்துலதா சுப்பிரமணியன் அவர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் .தோழியர்கள் இருவருக்கும் நமது நெல்லை NFPE வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .சுமார் 52 பதவிகளுக்குமேல் LSG ACCOUNTANT பதவிகள் அடையாளம் காட்டப்பட்டிருந்தாலும் குறைவான ஊழியர்களே பதவி உயர்வு பெற்றுள்ளனர் .
                              நெல்லையில் அஞ்சலக தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் (போஸ்ட்மேன் TO எழுத்தர் ) எதிர்வரும் 08.07.2019 முதல் 31.07.2019 வரை நடைபெறுகிறது .இந்த வகுப்புகளை நமது கோட்டத்தில் ASP ஆக பணிபுரிந்து ஓய்வுபெற்ற தோழர் திரு .M.பாலசுப்ரமணியன் அவர்கள் தனது இல்லத்தில் (சமாதானபுரம் =பாளை ) வைத்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள் .மதுரை போன்ற வெளியூர்களுக்கு சென்று பயிற்சி வகுப்பிற்கு செல்ல முடியாத தோழர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .பயிற்சிக்கு செல்ல விரும்பும் தோழர்கள் 9442149339 மற்றும் 9486742990 என்ற எண்ணில் நேரிடையாக தொடர்புகொள்ளலாம் .தேர்விற்கு தயாராகும் அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
நன்றி தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் -SK .பாட்சா கோட்ட செயலர்கள் நெல்லை