...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, January 13, 2018

நெல்லை அஞ்சல் கோட்டங்களில் நடந்த பொங்கல் விழா --அனைத்து நிகழ்ச்சிகளிலும் நமது SSP திரு .VPC அவர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள் .அவர்களோடுSP PSD திரு சொர்ணம்  திருநெல்வேலி ASPதிரு  செந்தில்குமார் பாளை ASP திரு குமரன் திருநெல்வேலி SRO திரு முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டது உள்ளபடியே நிர்வாகம் பாதி -தொழிற்சங்கம் பாதி என்ற உன்னத தத்துவத்தை நினைவு படுத்தியது .பொங்கல் விழாக்கள் உங்கள் இல்லங்களிலும் சிறக்க நெல்லை NFPE வாழ்த்துகிறது 
                                  திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் 

                                                  பாளை தலைமை அஞ்சலகம் 

                                         பெருமாள் புரம் அஞ்சலகம் 


Friday, January 12, 2018

                                        தை(ரியம் )  பிறக்கட்டும் !
பொங்கட்டும் --புரட்சி  பொங்கட்டும் 
தங்கட்டும் இன்பம் இங்கே தங்கட்டும் 
மங்கட்டும்  கவலை இனி மங்கட்டும் 
ஓங்கட்டும்  ஒற்றுமை ஒன்றே ஓங்கட்டும் 

நூற்பவன் நூலாக்குகிறான் 
நெய்பவன்   ஆடையாக்குகிறான் 
தொழிலாளிக்கு குறைந்த கூலியும் 
முதலாளிக்கு நிரம்ப  லாபமும் நிரந்தரமாகியது 

ஆண்டான் அடிமை இல்லை -
ஆட்சியாளர்கள் உருவில் தொடர்கிறது 
கொத்தடிமை பிரபுத்துவம் -புதிய பெயர்களில் 
கோலோச்சதான் செய்கிறது 

தை பிறந்தால் வழி  பிறக்கும் 
நம்பிக்கை ஒன்றும் குறையவில்லை 
எத்தனை தை-கள் -உழைப்பவனின் 
வலிகள் எங்கும் மறையவில்லை 

உழவுக்கும் தொழிலுக்கும் 
வந்தனை போதும் -
உழைப்பு சுரண்டலுக்கு எதிராக 
வாதிட வேண்டாமா ?

ஆர்ப்பாட்டம்  -போராட்டம் 
நடுவர் குழு -பேச்சுவார்த்தை 
வாக்குறுதிகளுக்கு குறைவில்லை 
மாநிலத்திலும் -மத்தியிலும் 

பொதுமக்கள் நலன் கருதி 
போராட்டம் தள்ளிவைக்கப்பட்டதாம் 
பத்திரிக்கைகள் பீற்றுகின்றன 
தொழிலாளியின் முற்றுகையால் 
அரசாங்கம் பணிந்ததாக செய்தி வருமா ?

பால் பொங்க வைத்த 
நெருப்புகளை அனைத்திவிட்டு 
புரட்சிகள் பொங்கும் 
கணைகளை எடுத்து வா !

தை பிறந்தால் மட்டுமல்ல 
தைரியம் பிறந்தால் தான் 
வழி பிறக்கும் 
வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 





Thursday, January 11, 2018

தோழர் M .சங்கரலிங்கம் LSG TRதிருப்பரங்குன்றம்  (முன்னாள் SPM தச்சநல்லூர் ) அவர்களின் பணிநிறைவு --12.01.2018

தன் விருப்ப ஓய்வில் செல்லும் 
என் விருப்ப தோழரே ! 
கண்டம் விட்டு கண்டம் பாயும் 
ஏவுகணைபோல் 
கோட்டம் விட்டு கோட்டம் சென்றாலும் 
குணம் மாறா கொள்கை குன்றே !
போராட்டம் என்றாலும் -
நன்கொடையென்றாலும் 
உன் பெயர் முதலில் இருக்கும் 
ஆர்ப்பாட்டங்கள் தோறும் -உன் மொத்த 
அலுவலக ஊழியர்கள் படை  திரண்டு நிற்கும் 
ஆரம்பத்தில் தென்காசியில் -ஓரமாய் நின்றாய் 
அண்ணனின் ஆள் என்று தெரிந்ததால் இருந்து 
உயரமாய் தெரிந்தாய் -அருகிலே அமர்ந்தாய் !
அன்று தொடங்கிய நட்பு -
இன்றுவரை தொடர்ந்தது --
நெல்லை வீதியெல்லாம் படர்ந்தது 
உனக்கென்ன எடுத்த முடிவை 
ஒருபோதும் மாற்றியதில்லை -நீ 
எடுத்தமுடிவும் ஒருநாளும்  
தவறியதில்லை 
பணிநிறைவு சிறக்கவேண்டுகிறோம் 
பழைய நாட்களின் பசுமை கொண்டு வாழ்த்துகிறோம் 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை