...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, January 7, 2014

                                                 முக்கிய செய்திகள் 

            ADR திட்டப்படி 2005--2008 வரை ஒழிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் 
வழங்கிட உத்தரவுகள் CPMG அலுவலகம் மூலமாக வந்துவிட்டன .
இது குறித்து 31.12.2013 அன்று நம்து கோட்ட சங்கம் சார்பாக நாம் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் நேற்று கோட்ட அலுவலகத்தில் விவாதித்தோம் .அலுவலக ரீதியாக CPMG உத்தரவு கிடைத்தவுடன் மேற்படி பதவிகள் திரும்ப கொடுக்கப்படும்  என்ற உறுதுமொழி நேற்றைய சந்திப்பில் கிடைத்தது .
                             அதன்படி நமது கோட்டத்தில் குறைக்கபட்ட 24 LRPA எழுத்தர் பதவிகளும் , 3 தபால் காரர் பதவிகளும் திரும்ப கிடைக்கும் .
                               மேலும் VKPURAM அலுவலகத்தில் இரண்டு ASP கள் கண்காணிப்பில் மீண்டும் கணக்கு எடுக்கப்பட்டு தேவைப்படும் பட்சத்தில் பதவிகள் கொடுக்கப்படும் என்றும் ,கணக்கெடுப்பு நடத்த நேற்றே கோட்ட அலுவலகத்தால் உத்தரவுகள் பிறப்பிக்க பட்டுள்ளது   என்பதனையும் மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம் .     நேற்றைய சந்திப்பில் நம்முடன் அஞ்சல் நான்கின் மாநில தலைவர் தோழர்   கண்ணன் அவர்களும் ,அஞ்சல் நான்கின் கோட்ட செயலர் தோழர் SK .பாட்சா அவர்களும் கலந்து கொண்டனர் . 
                                                                     வாழ்த்துக்களுடன் 
                                                                      SK .ஜேக்கப்ராஜ் 


0 comments:

Post a Comment