...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Thursday, January 2, 2014

அன்பார்ந்த தோழர்களே ! நமது கோட்ட சங்கத்தின் சார்பாக வெளிவந்துள்ள டைரி கிடைத்துவிட்டதா ? கிடைக்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும் .
நமது டைரியில் உள்ள கவிதை குறித்து மிக அதிகமான பாராட்டுக்கள் 
வந்தவண்ணம் உள்ளன .அனைவருக்கும் எங்கள் நன்றிகள் .இது ஒரு 
INCHARGE SPM நிலையினை கருவாக வைத்து எழுதப்பட்டது .

                                                      நமக்குள்ளே !
அடிச்சி பிடிச்சி -ஐந்து மணிக்குள் 
அலுவலக கணக்கை முடித்தாலும் -புது 
கணக்கு பிடிக்கலனா --அதுக்கும் 
ஏதாவது எழுதி கொடுக்கணும் 
பட்டுவாடா சதவிகிதம் நூறு வரலைனா 
இதுக்கும்  ஒரு கதையை அனுப்பி வைக்கணும் 
பன்னிரண்டு ரூபாய் அதிகம் என்றாலும் 
பக்கத்து வீட்டு EB பில்லை 
பிடுங்கியவது கட்டியாகணும் 
பாமரன் ஒருத்தன் வந்தா பதிவு தபாலை 
விரைவு தபாலாக்கி     -மாதம் ஒருத்தர் 
தலையி லாவது மிளகாய் அரைக்கணும் 
பெரிய மனுசன் பிறந்த நாளைக்கு -epost ல் 
கட்டாயமாக வாழ்த்தி  தொலைக்கனு  ம்   
அப்பதான் மேலிடத்தில் இருந்து --நமக்கு அழைப்பு 
வாராதாம் --நம்ம பிழைப்பு கெடா தா  ம்     
இப்படி பயந்தோ !பணிந்தோ ! பழக்கப்பட்டு 
போனதால் அவரவர் தகுதிக்கு 
அடுத்தவரை பயமுறுத்த தொடங்கி விட்டார்கள் 
சரக்குகளை சந்தைக்கு அனுப்பாமல் 
சக ஊழி யர்களிடமே சரிகட்டும் 
தற்காலிக சமரசத்தை ஏற்கமட்டோம் --என்று 
NFPE வைர விழா ஆண்டில் 
புது சபதம் ஏற்போம் --என்றும் 
ஊழியர் நலன் காப்போம் !
                                                                      SK .ஜேக்கப்ராஜ்   

0 comments:

Post a Comment