...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, January 2, 2015

                                                       முக்கிய செய்திகள் 

1.தமிழகத்தில் நடைபெற்ற எழுத்தருக்கான நேரடி தேர்வின் மதிப்பெண் பட்டியல் மாநில நிர்வாக அலுவலகத்திற்கு வந்து விட்டது .கோட்ட ரீதியாக அதை ஒதுக்கிடு செய்யும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது .கூடிய விரைவில் அதன் முடிவுகள் வெளிவரும் .

2.கடந்த 28.12.2014 அன்று நடைபெற்ற தபால் காரர் தேர்விற்கு வந்த விண்ணபங்கள் சுமார் 130000 தான் .(Vacancy 800)

3..Task force கமிட்டியின் அறிக்கை அரசு  வெளியிட்டுள்ளது .சுமார் 170 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் அஞ்சல் துறையை எப்படி corporation சட்டத்திற்குள் கொண்டு வரலாம் என்ற ஒரு வரைவு  திட்டமும் இருக்கிறது 
அன்று தொலைபேசி துறை !  இன்று அஞ்சல் துறை
 தனியாருக்கு   தாரைவார்க்கும்  முயற்சி தைரியமாக தொடங்க பட்டுவிட்டது
           என்ன செய்ய போகிறோம் ?

4.ED கமிட்டிக்கும் Terms of referance யை அஞ்சல் வாரியம் கொடுத்து உள்ளது . ஊதிய குழுவிலும் இடம் இல்லை ,நீதிபதி கமிட்டியும் இல்லை .அஞ்சல் துறை அதிகாரிகள் தலைமையில் தான் வரபோகிறது கமிட்டி 
             அட்டையிடமா இரத்த தானம் ?  

                                        தோழமையுடன் 
                                        SK .ஜேக்கப்ராஜ் 

    

1 comment:

  1. When can we expect the PA/SA-2014 results approximately?

    ReplyDelete