...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, February 3, 2015

                      இலக்கை எட்டுவதற்கு அதிகாரிகளே ! ஏழை தொழிலாளி GDS ஊழியர்களின் வயிற்றில் அடிக்காதீர் !

                                       வறுமையின் நிறம் சிவப்பு 

ஈரோடு கோட்ட செயலர் தோழர் சுவாமிநாதன் நேற்று அனைத்து கோட்ட செயலருக்கும் ஒரு குறுஞ்செய்தியை  அனுப்பிஇருந்தார் .  அதாவது ஈரோடு தெற்கு உப கோட்ட அதிகாரி 25 GDS தோழர்களுக்கு RPLI மேளாவிற்கு வரவில்லை என்பதற்காக  ஒருநாள் ஊதியத்தை குறைக்க உத்தரவு போட்டு இருக்கிறார் .இதை எதிர்த்து நாம் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றும் கேட்டிருந்தார் .
                     அரசு துறையிலே மிக ,மிக குறைந்த கூலி தொழிலாளி தான் GDS. . RPLI தொடங்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரை GDS தொழிலாளியின் இரத்தத்தை டார்கெட் என்ற பெயரில் உறிந்தது போதாதா ? மார்ச் மாதம் முழு சம்பளத்தையும் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு பயந்து FOCUS பாலிசி போட்டது போதாதா ? வேலைப்பளுவை காரணம் காட்டி வாங்குகிற சம்பளத்திலும் ஊதிய குறைப்பு வேறு எந்த தொழிலாளிக்கும் உண்டா ?
GDS வறுமையின் அடையாளம் இல்லையா ? GDS எல்லா அதிகாரிகளாலும் சபிக்கபட்டவன் தெரியாதா ? குட்டி அதிகாரிகளுக்கு  மேல் அதிகாரிகளிடம் இருந்து  பாராட்டுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கொடுமையை   அரங்கேற்றலாமா ?
                                                               அதிகாரிகளே !                                
 GDS  வறுமையுடன் விளையாடாதீர்கள் ! - மேளாவை காட்டி  
GDS   வயிற்றில்         அடிக்காதீ ர் !  

   வழக்கமான ஆர்ப்பாட்டம் இனி வேண்டாம் --சம்பந்தப்பட்ட அதிகாரிகளை   முற்றுகை இடுவோம் !,

   வறுமையின் நிறம் சிவப்பு என்பதை 
உணர வைப்போம் !  

                                                                    வாழ்த்துக்களுடன் 
                                                                       SK .ஜேக்கப்ராஜ் 
---------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment