...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Sunday, November 15, 2015

                                GDS கமிட்டி --ஒருபார்வை 
ஏழாவது சம்பளகுழுவே GDS ஊழியர்களின் ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஊழியர் தரப்பு கோரிக்கைகள் நிராகரிக்கபட்டு மீண்டும் அஞ்சல் அலுவலக அதிகாரிகளை கொண்ட கமிட்டி ஒன்றை அஞ்சல் வாரியம் அமைத்துள்ளது .PMG ஆக்ரா திரு .T.Q   முகமது அவர்கள் கமிட்டியின் செயலராக நியமிக்க பட்டுள்ளார்கள் .விரைவில் கமிட்டியின் தலைவரும் நியமிக்க பட உ ள்ளார்.இந்த சூழ் நிலையில் பழைய கமிட்டிகளை பற்றி பார்போம் .முதலாவது ஊதிய குழுவை தவிர ஏனைய ஊதிய குழுக்கள் ED பிரட்சினையை சேர்த்து பரிசீலிக் கவில்லை 
                                     நடராஜ மூர்த்தி கமிட்டி 
23.07.07 அன்று அறிவிக்கப்பட்டு 29.10.08 அன்று தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது .அஞ்சல் வாரியம் 09.10.2009 அன்று அதை அமுல்படுத்தியது 01.01.2006இல் வாங்கிய TRCA  + 5 சதம் இதை 1.74 மடங்கால் பெருக்கி TRCA நிர்ணயம் செய்தது .இதில் தான் 3மணி நேரத்திற்கு என்று புதிய TRCA அறிமுகபடுத்த பட்டு அநேக ஊழியர்களுக்கு ஊதிய பிடித்தம் வர காரணமாய் இருந்தது .ஊதிய பாதுகாப்பும் (Pay protection ) இருந்தும் இல்லாமல் போனதும் இப்பொழுது தான் .20000 க்கு ஒரு புள்ளி என வேலைப்பளுவை இறுக்கி பிடித்ததும் இங்கே தான் .
ஊதிய விகிதங்கள்
GDSBPM 
1.2745-50-4245 2. 3200-60-5000 3. 3660-70-5760  4.4115-75-6365  5.4575-85-7125
GDSMD 
1.2665-50-4165   2.3330-60-5130  3. 4220-75-6470
GDS Packer /MC 
1.2295-45-3695  2. 2870-50-4370   3.3635-65--5585
                                       ஜஸ்டிஸ்  தல்வார் கமிட்டி 
முதன் முதலாக நீதிபதி ஒருவரை GDS கமிட்டிக்கு தலைவராக 31.03.1995 அன்று அஞ்சல் வாரியம் அமைத்தது .கமிட்டி தனது அறிக்கையை 30.04.1997 அன்று அரசிடம் சமர்ப்பித்தது பெப்ருவரி 2008 முதல் புதிய ஊதியம் அதாவது TRCA அமுலானது .பழைய ஊதியத்தில் 3.25 மடங்கு நிர்ணயம் செய்யப்பட்டது . ஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு TRCA அறிமுகபடு
த் தபட்டது 
EDMC 
1220-20-1600          2545-252020
EDDA 
1375-25-2125          1740-30-2640
BPM
1280-35-1960         1600-40-2400
 Leave with Allowance   ஆண்டுக்கு 20 நாட்கள் வழங்கப்பட்டது 
சிவரன்ஸ் மற்றும் கிராஜூ ட்டி  கணிசமாக உயர்த்தப்பட்டது 
குறைத்தபட்ச பென்ஷன் வழங்க பரிந்துரை செய்தது .அனால் அஞ்சல் வாரியம் இதை பரிகாசம் செய்தது .இதன் பிறகுதான் இனிமேல் EDகளுக்கு நீதிபதி தலைமையில் கமிட்டி கிடையாது என அரசும் /அஞ்சல்வாரியமும் ஒருசேர முடிவேடுத்த தாம்

                                           ( தொடரும்)  தோழமையுடன் ஜேக்கப்ராஜ் 

0 comments:

Post a Comment