...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Friday, November 27, 2015

                         நெல்லை கோட்ட செய்திகள் 

                                                                வாழ்த்துகிறோம்  
தோழர் மணிகண்டன் PA திருநெல்வேலி HO அவர்கள் சமிபத்தில் சார்மினாரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான பளு தூக்கும் (62 கிலோ ) போட்டியில் முதல் பரிசை வென்றார் .அவரை நமது முதுநிலை கண்காணிப்பாளர் திரு VP .சந்திரசேகர் அவர்கள் வாழ்த்தினார்கள் .



                                                போராட்டம் தள்ளிவைப்பு 
டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .
                                                            MACP 
 நமது கோட்டத்தில் இன்று MACP க்கான கமிட்டி கூடுகிறது .

                                                                   ATM 
இப்பொழுதுதான் ATM கார்டு லேசாக எட்டிபார்கிறது .ஒவ்வொரு தலைமை அலுவலகத்திற்கும் 250 கார்டுகள் வந்துள்ளன .யார் அந்த அதிர்ஷ்டசாலிகள் பொறுத்திருந்து பார்போம் .
                                                 ஆர்ப்பாட்டம் 
நேஷனல் JCA சார்பாக இன்று மாலை 6 மணியளவில் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம் .
                                          மாதாந்திர பேட்டி 
நேற்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் 
 சேரன்மகாதேவி அஞ்சலகத்திற்கு ஒரு எழுத்தர் போடப்பட்டுள்ளார் .விரைவில் வீரவ நல்லுருக்கும் நிரப்பப்படும் .
காலியாகஉள்ள  காசாளர் பதவிகள் நிரப்பப்படும் 
இடையன்குடி அஞ்சலக பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்க பட்டுள்ளது .விரைவில் நல்ல தீர்வு ஏற்படும் .
மகாராஜநகர்  அலுவலக பிரட்சினையும் தீர்க்க நிர்வாகம் உறுதி அளித்துள்ளது 
                                                              நன்றி 
                               தோழமையுடன் 
SK .பாட்சா                         SK .ஜேக்கப்ராஜ் 
கோட்ட செயலர் P 4                               கோட்ட செயலர் P 3















0 comments:

Post a Comment