...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Monday, May 23, 2016

தூய்மை இந்தியா பிரச்சாரத்தை முன்னிட்டு நமது தோழியர் 
ச .முத்துலட்சுமி PA பாளையம்கோட்டை அவர்கள் எழுதிய கவிதைவரிகளில்  சில .....  
                   

அண்ணன் அணிந்த ஆடை 
கடைசி தம்பி சென்று 
கந்தையாகும் வரை கசக்கி கட்டி 
கடைசியில் செல்லும் அடுக்களைக்கு 
கைப்பிடி துணியாய் !
தேவையின்றி போனதில்லை 
எப்பொருளும் யாருக்கும் 
சில நேரங்களில் நாம் எறிந்தது 
குப்பையை அல்ல !
இன்னொருவரின் தேவையை !
--------------------------------------------------------------------
நதிகளில்
 பாவங்களை கழுவியவர்கள் நாம் --இன்று 
பாதங்களை கூட கழுவமுடியாமல் !
---------------------------------------------------------------------------
 தோழியர் ச .முத்துலட்சுமி PA பாளையம்கோட்டை அவர்களுக்கு நெல்லை NFPE ன் வாழ்த்துக்கள் !தொடரட்டும் உங்கள் இலக்கிய பணி ..                            
குறிப்பு -இதுபோன்ற நமது தோழர்களின் படைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள் ( எந்த கோட்டமாக இருந்தாலும் .).நிச்சயம் அங்கீகரிக்க படும்)தமிழகத்திற்கு அடையாளம் காட்டப்படும் .
தோழமையுடன்  ஜேக்கப்ராஜ்  கோட்ட செயலர்  நெல்லை 
-------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment