...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, July 10, 2013

HUNGER FAST

P 4 சங்கங்கள் சார்பாக  9.7.2013 அன்று சென்னையில் நடைபெற்ற 

உண்ணாவிரதம்  மாபெரும் வெற்றி 

நமது கோட்டத்தின் சார்பாக P 4 கோட்ட செயலர் தோழர் SK  பாட்சா 

மற்றும்  தோழர்  வேலு  அவர்கள்  பங்கேற்றனர் 

சென்னை CPMG  அலுவலக வளாகத்தில் நடைபெற்ற  உண்ணா விரதப் போராட்டத்திற்கு NFPE  அஞ்சல் நான்கின் அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் கோபு. கோவிந்தராஜன்  மற்றும் FNPO  அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் தோழர்.  குணசேகரன் கூட்டுத் தலைமை ஏற்றனர் .

NFPE  சம்மேளனத்தின் முன்னாள் மா பொதுச் செயலர் தோழர்.K .R ., FNPO  சம்மேளனத்தின் மா பொதுச் செயலர் தோழர். D . தியாகராஜன் , NFPE  சம்மேளனத்தின் உதவிப்  பொதுச் செயலர்  செயலர் தோழர். ரகுபதி , NFPE  அஞ்சல் மூன்றின் செயல் தலைவர் தோழர் NG , உதவிப் பொதுச் செயலர் தோழர் வீரமணி , NFPE  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் 
 J.R.,  FNPO  தமிழ் மாநில அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் முத்துக்கிருஷ்ணன் ,  NFPE  அஞ்சல் நான்கின் மாநிலச் செயலர் (எலெக்ட்) தோழர்  ராஜேந்திரன் , NFPE  R 3 மாநிலச் செயலர் தோழர் சங்கரன்,  FNPO  
R  3 மாநிலச் செயலர் தோழர்  குமார் ,  NFPE  SBCO  மாநிலச் செயலர் தோழர் அப்பன்ராஜ்  உள்ளிட்ட   தலைவர்கள் கலந்து கொண்டு  போராட்டத்தை வாழ்த்திப்  பேசினார் .

உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட  அஞ்சல் நான்கின்  மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும் கோட்ட / கிளைச் செயலர்கள்  அனைவரும்  அடுத்த கட்ட போராட்டமான  அரை ஆடை போராட்டத்தை தமிழகமெங்கும்  மிகப் பெரிய அளவில் நூற்றுக்கு நூறு விழுக்காடு  வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என்று  சூளுரைத்துப் பேசினார் . இறுதியில் லூயில் மணி அவர்கள் நன்றி கூற ,  ஆர்ப்பாட்ட கோஷங்களுடன்  போராட்டம்  மாலை 05.00 மணியளவில்  இனிதே முடிக்கப் பட்டது . 

பொதுக் கோரிக்கைகளுக்கு,  மத்திய அரசு ஊழியர் கோரிக்கைகளுக்கு  நாம் போராடி வரும் போதே  நம் அஞ்சல் பகுதியில்  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு  RMS  மூன்று,  RMS நான்கு மற்றும்  GDS  ஊழியர்களின்  பகுதி வாரிக் கோரிக்கை களுக்காகவும், நாம்  இணைந்தும்  தனித் தனியேவும்  தொடர்ந்து போராடி வருகிறோம் !

தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைக் களைந்திட  போராட்டம் ஒன்றே வழி  என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். ! நிச்சயம் போராடாமல் எந்த ஒரு வெற்றியையும் நாம் பெற்றதில்லை என்பது தெளிவு ! அந்த திசை நோக்கி நாம் பயணிப்போம் !

ஒன்று படுவோம் !  போராடுவோம் !  
போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !
வெற்றி கிட்டும் வரை போராடுவோம் !  இறுதி வெற்றி நமதே !

வாழ்த்துக்களுடன் 
J.R.  மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று  தமிழ் மாநிலம் .
நன்றி  JR 


0 comments:

Post a Comment